Kodi Kodi Minnalgal
By Rajesh Kumar
()
About this ebook
‘கோடி கோடி மின்னல்கள்’ இது முழுக்க முழுக்க க்ரைம் கலக்காத சமூகக்கதை. கதையின் நாயகி பெயர் வைகை. இந்த சமுதாயம் சுத்தமாய் இருக்கவேண்டுமே என்று கவலைப்படுபவள். இந்தியாவில் எந்த நேரத்திலும் தற்கொலை பண்ணிக் கொள்ளக்கூடிய மனோபாவத்தில் முப்பது சதவீத இளைஞர்கள் இருப்பதாக ஹ்யூமன் ரிசோர்ஸ் சர்வே ஒன்றை வைகை படித்ததின் விளைவு ‘மனசுக்குள் மழையா?’ என்கிற ஒரு கவுன்ஸிலிங் அமைப்பைத் தொடங்கி ஆத்மார்த்தமாய் பணிபுரிகிறாள். இளைஞர்களின் மனங்களில் இருக்கிற விரக்தியையும், கோழைத்தனத்தையும் விரட்டியடிக்கிறாள். மற்றவர்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்கிற வைகைக்கும் ஒரு பிரச்சனை வருகிறது. அவள் அந்தப் பிரச்சனையிலிருந்து மீண்டு எப்படி வெளியே வருகிறாள் என்பதே கோடி கோடி மின்னல்கள் கதை. வைகையைத் தேடி காதலும் வருகிறது. அதை ஏற்றுக் கொள்கிறாளா என்பதையும் இந்த கதை சொல்கிறது.
பெண்கள் பொதுவாகவே உடலளவில் மென்மையானவர்கள். ஆனால் மனதளவில் எஃக்கைப் போன்றவர்கள். ஆணாதிக்கம் மிக்க இந்த சமுதாயத்தில் போராடி ஜெயிப்பவர்கள். வைகையும் அப்படிப்பட்டவள்தான். இந்த நாவலில் ஆதித்யா, இளஞ்செழியன் என்கிற கதாபாத்திரங்கள் வைகையின் வாழ்க்கையில் குறுக்கிட்டு பெரியதொரு பாதிப்பை உண்டாக்குகிறார்கள். அது எப்படிப்பட்ட பாதிப்பு என்பது கதையின் கடைசி சில பக்கங்களில் தெரியும்.
அவளுடைய வாழ்க்கை ஒரு இருட்டு வானம். அதில் கோடி கோடி மின்னல்கள். அந்த அற்பாயுள் மின்னல்களைக் காட்டிலும் ஓர் அகல் விளக்கின் வெளிச்சம் நிரந்தரமானது என்று நினைத்தாள். நினைப்பு பொய்த்துப் போயிற்று. ஏன்? விதியைக் கடவுள் கொஞ்சம் கண்டித்து வைக்க வேண்டும்.
மேற்சொன்ன வரிகளில் வைகையின் வாழ்க்கை ஒளிந்துள்ளது. படித்துப் பார்க்கப் பக்கங்களை புரட்டுங்கள். படிக்க படிக்க மின்னல் அடிக்கும்.
-ராஜேஷ்குமார்
Read more from Rajesh Kumar
Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsVivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsNalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Thavarukkum Thavarana Thavaru! Rating: 5 out of 5 stars5/5Oomai Pullanguzhalgal Rating: 5 out of 5 stars5/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5Mudhal Nimisham Rating: 2 out of 5 stars2/5
Related to Kodi Kodi Minnalgal
Related ebooks
Kodi Kodi Minnalakal Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Maya Rating: 5 out of 5 stars5/5Piragu Oru Maalaiyil... Rating: 3 out of 5 stars3/5Kannai Nambathey Rating: 3 out of 5 stars3/5கண்ணை நம்பாதே Rating: 0 out of 5 stars0 ratingsUsha Subramanian Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsThiruvannamalai Rating: 3 out of 5 stars3/5Unnai Thotta Kaatru Rating: 4 out of 5 stars4/5Valarpirai Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Enge En Kannan Rating: 0 out of 5 stars0 ratingsYudha Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsKichu Kichu Rating: 0 out of 5 stars0 ratingsAagayam Kaanatha Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsVilaikku Oru Vanavil Rating: 0 out of 5 stars0 ratingsKutram Puthu Vitham Rating: 5 out of 5 stars5/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsThavam Rating: 5 out of 5 stars5/5Andha Maalai Mayakkam Rating: 0 out of 5 stars0 ratingsIranthavane, Vanakkam Rating: 5 out of 5 stars5/5Uyirin Uyire Rating: 5 out of 5 stars5/5Pattaampoochi Nenjukkulle Rating: 5 out of 5 stars5/5Iraval Uravugal Rating: 0 out of 5 stars0 ratingsSivam Rating: 4 out of 5 stars4/5Sathyavin Sapatham! Rating: 0 out of 5 stars0 ratingsVelicha Poove Vaa… Rating: 0 out of 5 stars0 ratingsTharisanam Rating: 0 out of 5 stars0 ratingsJanuary February Mortuary Rating: 0 out of 5 stars0 ratingsPashana Lingam Rating: 0 out of 5 stars0 ratingsManithargal Paathi Neram Thoongukirargal Rating: 5 out of 5 stars5/5
Reviews for Kodi Kodi Minnalgal
0 ratings0 reviews
Book preview
Kodi Kodi Minnalgal - Rajesh Kumar
http://www.pustaka.co.in
கோடி கோடி மின்னல்கள்
Kodi Kodi Minnalgal
Author :
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
முன்னுரை
அன்புள்ள வாசக உள்ளங்களுக்கு.
வணக்கம். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கல்கி’ வார இதழில் நான் எழுதிய தொடர்கதைதான் ‘கோடி கோடி மின்னல்கள்’ இது முழுக்க முழுக்க க்ரைம் கலக்காத சமூகக்கதை. கதையின் நாயகி பெயர் வைகை. இந்த சமுதாயம் சுத்தமாய் இருக்கவேண்டுமே என்று கவலைப்படுபவள். இந்தியாவில் எந்த நேரத்திலும் தற்கொலை பண்ணிக் கொள்ளக்கூடிய மனோபாவத்தில் முப்பது சதவீத இளைஞர்கள் இருப்பதாக ஹ்யூமன் ரிசோர்ஸ் சர்வே ஒன்றை வைகை படித்ததின் விளைவு ‘மனசுக்குள் மழையா?’ என்கிற ஒரு கவுன்ஸிலிங் அமைப்பைத் தொடங்கி ஆத்மார்த்தமாய் பணிபுரிகிறாள். இளைஞர்களின் மனங்களில் இருக்கிற விரக்தியையும், கோழைத்தனத்தையும் விரட்டியடிக்கிறாள். மற்றவர்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்கிற வைகைக்கும் ஒரு பிரச்சனை வருகிறது. அவள் அந்தப் பிரச்சனையிலிருந்து மீண்டு எப்படி வெளியே வருகிறாள் என்பதே கோடி கோடி மின்னல்கள் கதை. வைகையைத் தேடி காதலும் வருகிறது. அதை ஏற்றுக் கொள்கிறாளா என்பதையும் இந்த கதை சொல்கிறது.
பெண்கள் பொதுவாகவே உடலளவில் மென்மையானவர்கள். ஆனால் மனதளவில் எஃக்கைப் போன்றவர்கள். ஆணாதிக்கம் மிக்க இந்த சமுதாயத்தில் போராடி ஜெயிப்பவர்கள். வைகையும் அப்படிப்பட்டவள்தான். இந்த நாவலில் ஆதித்யா, இளஞ்செழியன் என்கிற கதாபாத்திரங்கள் வைகையின் வாழ்க்கையில் குறுக்கிட்டு பெரியதொரு பாதிப்பை உண்டாக்குகிறார்கள். அது எப்படிப்பட்ட பாதிப்பு என்பது கதையின் கடைசி சில பக்கங்களில் தெரியும்.
அவளுடைய வாழ்க்கை ஒரு இருட்டு வானம். அதில் கோடி கோடி மின்னல்கள். அந்த அற்பாயுள் மின்னல்களைக் காட்டிலும் ஓர் அகல் விளக்கின் வெளிச்சம் நிரந்தரமானது என்று நினைத்தாள். நினைப்பு பொய்த்துப் போயிற்று. ஏன்? விதியைக் கடவுள் கொஞ்சம் கண்டித்து வைக்க வேண்டும்.
மேற்சொன்ன வரிகளில் வைகையின் வாழ்க்கை ஒளிந்துள்ளது. படித்துப் பார்க்கப் பக்கங்களை புரட்டுங்கள். படிக்க படிக்க மின்னல் அடிக்கும்.
இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இன்னொரு நாவல் தீப்பிடித்த தென்றல். இதுவும் ஒரு தொடர்கதையாக தேவி வார இதழில் வெளிவந்தது. தேவியின் ஆசிரியர் திரு. இராமச்சந்திர ஆதித்தன் அவர்களை ஒரு விழாவில் சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது ‘தேவியில் தொடர் எழுதி நாளாச்சு! அடுத்து ஒரு க்ரைம் கலந்த சோசியல் தொடர் பண்ணுங்களேன்’ என்று கேட்டுக் கொண்டார். அடுத்த மாதம் எழுதுவதாக சொன்னேன். ‘எது மாதிரியான கதை… ஒரு ரெண்டு வரியில் சொல்லுங்கள்’ என்றார். நான் உடனே ‘கதையின் கருவை இனிமேல்தான் யோசிக்க வேண்டும். ஆனால் தொடர்க்கான தலைப்பினை தீர்மானம் செய்து விட்டேன்’ என்று சொன்னேன். ‘என்ன தலைப்பு’ என்று கேட்டார். ‘தீப்பிடித்த தென்றல்’ என்று சொன்னேன். அவர் முகத்தில் ஒருவித திகைப்பு பரவியது. ‘தலைப்புக்குள்ளேயே முழுக்கதையை சொல்லிவிட்டீர்கள்… ராஜேஷ்குமார். கதையை உடனேயே எழுத ஆரம்பித்து விடுங்கள்’ என்று சொன்னார். நானும் இரண்டு வார காலத்திற்குள் தேவியில் தொடர் எழுத ஆரம்பித்து 30 வாரங்கள் வரை வெற்றிகரமாய் போயிற்று.
இது சற்று நீண்ட தொடர்கதை. நாவலில் நிறைய பாத்திரங்கள். இதயா, சிவகாமி, நறுமுகை, சண்முகராஜன், ஜெயச்சந்திரன், அற்புதராஜ், தினேஷ்,மோகன் பிரசாத், தமிழரசி, குணசீலன், சுந்தரி என்று கதாபாத்திரங்கள் நிறைய வந்தாலும் குழப்பம் இல்லாமல் கதையை சொல்லி முடித்திருக்கிறேன்.
கதையில் வரும் சம்பவங்களில் சில உங்களை அதிர்ச்சியில் உறைய வைக்கலாம். சிறிது நிதானித்து பக்கங்களைப் புரட்டுங்கள்.
கோடி கோடி மின்னல்களையும், தீப்பிடித்த தென்றலையும் ஒரே புத்தகத்தில் அடைத்து வைத்த பெருமை பூம்புகார் பதிப்பகத்தையே சாரும். இரண்டு நாவல்களையும் பால் போன்ற வெள்ளைத்தாளில் சிறப்பாக அச்சிட்டு வாசகர்களுக்கு வழங்கிய பூம்புகார் பதிப்பகத்திற்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மீண்டும் என் வணக்கம்.
மிக்க அன்புடன்
ராஜேஷ்குமார்.
1
வைகை வாய்விட்டுச் சிரித்தாள். கையில் அன்றைய நாளிதழ்.
பக்கத்தில் உட்கார்ந்து அக்கௌண்ட் ஸ்டேட்மெண்ட் ஒன்றை கம்ப்யூட்டருக்குப் புகட்டிக் கொண்டிருந்த அர்ச்சனா வைகையைத் திரும்பிப் பார்த்தாள், வியப்பாய்.
"என்ன வைகை…! இன்னிக்கு உன்னோட சிரிப்பில் 70 எம்.எம். தெரியுது… பேப்பர்ல ஏதாவது ஜோக்கா!
ஜோக் இல்லை… ஒரு ஹைக்கூ கவிதை…
ஒரு கவிதையைப் படிச்சா இவ்வளவு பெரிய சிரிப்பு வருமா…? என்ன கவிதை…! படி பார்க்கலாம்…
வைகை படித்தாள்;
"லஞ்சம் வாங்கினேன்.
பிடிபட்டேன்.
லஞ்சம் கொடுத்தேன்.
விடுபட்டேன்."
அர்ச்சனாவும் அண்ணாந்து சிரித்து விட்டுச் சொன்னாள்.சூப்பர்! இந்தியாவோட தேசியப் பறவை மயில், தேசிய விலங்கு புலி. இப்ப நீ படிச்சது ஒரு தேசியக் கவிதை. எழுதினது யாரு…!
ஒரு கல்லூரி மாணவி.
அந்த மாணவிக்கு ஏதாவது விருது கொடுக்கலாம்
அர்ச்சனா சொல்லிக் கொண்டிருக்கும்போது பக்கத்தில் இருந்த கிரஹாம்பெல் கண்டுபிடிப்பு கூப்பிட்டது. வைகை ரீஸீவரை எடுத்தாள். காதுகளில் பொருத்தி குரல் கொடுத்தாள்.
ஹலோ…
மறுமுனையில் ஒரு பெண் குரல் கேட்டது.
ஹன்ஸா ஹாஸ்பிடல்…?
எஸ்…
மிஸ். வைகை ப்ளீஸ்.
ஹோல்டிங்.
ஓ…! லைன்ல நீங்கதானா…? ரொம்ப சந்தோஷம்.
நீங்க…?
நான் மங்கையர்க்கரசி…‘மெட்டியோசை பெண்கள் மாத இதழின் ஆசிரியை. மெட்டியோசை படிப்பீங்கா…?
எப்பவாவது…
மங்கையர்கரசி சிரித்தாள். ஹன்ஸா ஹாஸ்பிடல் மிகப் பெரிய ஹாஸ்பிடல். அங்கே அக்கௌண்ட் செக்ஷனில் வேலை பார்க்கிற உங்களுக்கு. பத்திரிகைகள் படிக்க நேரம் கிடைக்காதுதான். அது தவிர சாயந்தர நேரங்களில் ‘மனசுக்குள் மழையா?’ சர்வீஸ் வேற…
வைகை ரிஸீவரில் மௌனம் காக்க, மங்கையர்கரசி தொடர்ந்தாள். நீங்க சத்தம் இல்லாமே பண்ணிட்டு வர்ற அந்த சமுதாயப் பணியைப் பத்தி, வெளியே யாருக்கும் தெரியலை. அதை வெளிச்சம் போட்டுக் காட்ட எங்க பத்திரிகை மெட்டியோசை விரும்புகிறது. உங்க எக்ஸ்க்ளுஸிவ் பேட்டி ஒண்ணு வேணுமே…?
பேட்டியா… அது… வந்து…
ப்ளீஸ், மாட்டேன்னு சொல்லிடாதீங்க… உங்க பேட்டி வெளியே வந்தால்தான் நீங்க பண்ணிட்டிருக்கிற ‘மனசுக்குள் மழையா…?’ சர்வீஸ் பற்றி எல்லாருக்கும் தெரியும். இந்தியாவில் எந்த நேரத்திலும் தற்கொலை பண்ணிக்கொள்ளக்கூடிய மனோபாவத்தில் முப்பது சதவிகித இளைஞர்கள் இருப்பதாக,‘ஹ்யூமன் ரீசோர்ஸ்’ சர்வே ஒண்ணு சொல்லுது. தமிழ்நாட்டில் இந்த சதவிகிதம் அதிகம். இந்த சதவிகித எண்ணிக்கையைக் குறைக்கணும்னா, உங்க முகமும் நீங்க பண்ணிட்டிருக்கிற சர்வீஸும் வெளியே தெரியணும்…
"ஸாரி…! ஒரு பத்திரிகைக்கு எக்ஸ்க்ளுஸிங் பேட்டி தர்ற அளவுக்கு பெரிசா ஏதும் நான் பண்ணிடலை. ‘SOCIETY FOR CARING AND SHARING’ என்கிற ஒரு தன்னார்வத்