Nooru Kodi Roopai Vairam
()
About this ebook
He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Read more from Indira Soundarajan
Asura Jathagam Rating: 5 out of 5 stars5/5Dhinam Oru Uyir! Rating: 5 out of 5 stars5/5Sivaragasiyam Rating: 5 out of 5 stars5/5Rajathanthiran Rating: 5 out of 5 stars5/5Chidambara Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Kannip Parunthu Rating: 5 out of 5 stars5/5Pei... Pisasu... Bootham Rating: 4 out of 5 stars4/5Thottathellam Pon Rating: 5 out of 5 stars5/5Markazhi Roja Rating: 5 out of 5 stars5/5Thiruvannamalai Rating: 3 out of 5 stars3/5Nandhi Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Ezhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Aranmanai Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Sivam Rating: 4 out of 5 stars4/5Manam Oru Marmadesam Rating: 5 out of 5 stars5/5Kannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Yandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Sathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Aval Oru Savithri Rating: 5 out of 5 stars5/5Nooravathu Kadathal Rating: 5 out of 5 stars5/5Kaatru… Kaatru... Uyir Rating: 3 out of 5 stars3/5Mandhira Vaasal Rating: 5 out of 5 stars5/5Kaatthiruntha Naagam Rating: 5 out of 5 stars5/5Rudhra Veenai - Part 3 Rating: 4 out of 5 stars4/5Naga Vanam Rating: 5 out of 5 stars5/5Oru April Puthisaali Rating: 5 out of 5 stars5/5Maayamaai Silar Rating: 5 out of 5 stars5/5Sithargal Raajyam Rating: 5 out of 5 stars5/5Mandhira Valai Rating: 5 out of 5 stars5/5Neela Neela Oodi Vaa Rating: 5 out of 5 stars5/5
Related to Nooru Kodi Roopai Vairam
Related ebooks
Olivatharkku Vazhiillai Rating: 5 out of 5 stars5/5Jenma Jenmamai Rating: 0 out of 5 stars0 ratingsMaayap Punnaigai Rating: 0 out of 5 stars0 ratingsEnge En Kannan Rating: 0 out of 5 stars0 ratingsEttu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5Moondravathu Kan! Rating: 5 out of 5 stars5/5Mahadeva Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Abaya Vanam Rating: 0 out of 5 stars0 ratingsThedathey Tholayathey! Rating: 5 out of 5 stars5/5Maaya Nilavu Rating: 5 out of 5 stars5/5Sutri Sutri Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsThoondilil Oru Thimingalam Rating: 2 out of 5 stars2/5Mudhal Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsMoondraam Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsRoja Malarum Neram Rating: 4 out of 5 stars4/5Innum Sila Tajmahalgal Rating: 5 out of 5 stars5/5Irumbu Thottam Rating: 0 out of 5 stars0 ratingsUyiril Kalandha Uravey… Rating: 1 out of 5 stars1/5Naaga Panchami Rating: 0 out of 5 stars0 ratingsIrunda Veedu Rating: 0 out of 5 stars0 ratingsNaandhan Avan! Rating: 5 out of 5 stars5/5Naan Nee….Aathma! Rating: 5 out of 5 stars5/5Meendum Nilavu Varum Rating: 5 out of 5 stars5/5Oru Kaandhamum Oru Irumbu Thundum Rating: 0 out of 5 stars0 ratingsYandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Maanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Sorna Regai Rating: 5 out of 5 stars5/5Yezham Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsKaala Vettai Rating: 0 out of 5 stars0 ratingsVaira Bommai Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Nooru Kodi Roopai Vairam
0 ratings0 reviews
Book preview
Nooru Kodi Roopai Vairam - Indira Soundarajan
http://www.pustaka.co.in
நூறு கோடி ரூபாய் வைரம்
Nooru Kodi Roopai Vairam
Author:
இந்திரா செளந்தர்ராஜன்
Indira Soundarrajan
For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
1
வைரம்!
நவரத்தினங்களில் ஒளிக்கதிர்களை ஸ்வீகரித்து.அதை வெகுவேகமாய் திருப்புவதில் நிகரில்லாத ஒரு சாதனம். இதற்கு மனிதர்களின் எண்ணங்களை கலைக்கின்ற கூட்டுகின்ற, குழப்புகின்ற சக்தியும் உண்டு.
மிகச்சரளமாகப் பேசிக்கொண்டிருந்த ஒரு பித்த உம்புக்காரர் திடீரென்று பேசமுடியாமல் திணறி உளறத் தொடங்கினார்.
அவர் பேசிக் கொண்டிருந்த கூட்டத்தில் பருத்த வைர மோதிரம் தரித்திருந்த ஒருவர் நுழைந்தது தான் காரணம். இவரின் வைரக்கதிர் அலைகள் பேச்சாளரின் எண்ணக் கூட்டத்தை எவ்வளவு கலைக்க முடியுமோ அவ்வளவு கலைத்தது.
இன்றைய யுகத்து பாஷையில் சொல்வதானால் வைரம் ஒரு ரிமோட். இது நமக்குத் தெரியாத, புரியாத நிலையில் பல விஷயங்களை இயக்குகிறது. இதுதான் உண்மை.
இந்த வகையில் ஒரு கோல்ஃப்பந்தின் அளவுக்கு ஒரு வைரம் இருந்தது. இதற்கென்று பிரத்யேகமாக ‘லலாட வைரம்’ என்றே ஒரு பெயரும் இருந்தது.
புருவமையத்தில் இருக்கும் திரைக்கும் அதைச் சார்ந்த பகுதிக்கும் பேர்தான் ‘லலாடம்!’ இந்த லலாடம் யோகத்தால் மட்டுமே திறக்கும். இந்த வைரமும் அதை வைத்திருப்பவரின் லலாடத்தைத் திறந்து அவருக்கு யோக சித்தியை தரக்கூடியதாம்!
இந்த லலாட வைரத்திற்கு வேறு பல சக்திகளும் இருந்தன.
-நவரத்தின ஆராய்ச்சியாளர் ஸ்ரீவத்ஸவா
இண்ட்டர்வியூவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருதான் கதிர் இருப்பதில் சுமாரான வெள்ளைப் பேண்ட்டையும், அதற்கு மேட்ச்சாக ஒரு வெள்ளைச் சட்டையையும் தேடிப் பிடித்து எடுத்தான். அதில் உதிர்ந்து போயிருந்த ஒரு பட்டனையும் தைத்து முடித்து அதை அணிந்து கொண்டவன், நேராக ரசம்போன பழைய கண்ணாடி முன்னால் நின்று ஒரு பார்வை பார்த்தான்.
லட்சணமாகத்தான் இருந்தது!
முகத்தில் அனாவசியமாய் முடிக்கூட்டமில்லை. மீசை கிருதா எல்லாம் திருத்தமாய் வெட்டப்பட்டு ஒரு அமைதி யான- அழகான வாலிபன் அவன் என்று சொல்லாமல் சொல்லிற்று.
ஒரு மனிதனுக்கு தோற்றம் மிக முக்கியம். சுத்தமான உடை மெல்லிய விபூதிக் கீற்றுடைய நெற்றி, அடக்கி வாரப்பட்டிருக்கும் தலைமுடி- அளவான மீசை,வெள்ளையடித்தது போல மின்னும் பற்கள்- துறுதுறுவென்ற விழிகள்-இதெல்லாம் யாருக்கும் பிடிக்கும்.
கூடவே ஆப்கனில் அமெரிக்கா முதல் குண்டை என்று எப்பொழுது போட்டது என்பதில் இருந்து, மேயர் தேர்தலில் ஸ்டாலின் வாங்கிய ஒட்டு வரை தகவல்களைச் சொல்லத் தெரிந்த ஒரு நாக்கும் இருந்து விட்டால் எந்த இண்ட்டர்வியூவிலும் ஒரு ரவுண்டு கட்டலாம்.
இதற்கு மேல் நேரம் என்றும் ஒன்று இருக்கிறது.
இண்ட்டர்வியூ செய்யும் அதிகாரிக்கு விசாலமான மனசும் இருக்க வேண்டும். பாரபட்சமில்லாமல் மதிப்பெண் போடும் உதார குணமும் இருக்க வேண்டும். மிகமிக முக்கியம்- எந்த ஒரு மந்திரியோ இல்லை எம்.எல்.ஏ.வோ ‘நம்ம பையன் ஒருத்தன் வருவான்- கவனிச்சுக்குங்க...’ என்று சொல்லாமல் இருக்க வேண்டும்.
கூட்டிக் கழித்தால் கையில் ஒரு பாதியும், வெளியில் மறுபாதியும் இருப்பதுதான் உண்மை. அந்த மறுபாதி நமக்குச் சாதகமாய் இருப்பதையும், இல்லாததையும் தான் சிலர் அதிர்ஷ்டம் என்கின்றனர். இன்னும் சிலர் நேரம் என்கின்றனரோ?
கதிருக்கு அவன் வரையில் மிக நிறைவாகவே இருந்தது. பிரம்மன் கொடுத்த உடலை இதற்கு மேல் இம்ப்ரசிவாக வடிவமைத்துக் கொள்ள முடியாது. புத்தியும் சூரியப் பிரகாசம்.
ஆந்த்ராக்ஸ் கிருமியின் உட்கூறுகள் எப்படிப்பட்டது என்பதில் இருந்து அஜித் நடித்துக் கொண்டிருக்கும் ‘ரெட்’ படத்தின் கதை வரை எதைக் கேட்டாலும் பட்பட்டென்று பதில் சொல்ல முடியும்.
ஆனால் அந்த அதிர்ஷ்டம். அல்லது நேரம்?
அதை நினைக்கும்போது மட்டும் கவலையாக இருந்தது. இன்று அது எப்படி இருக்கப் போகிறதோ? என்ன பாடுபடுத்தப் போகிறதோ..? அதனாலான கவலை முகத்தில் ஓடியது. பவுடர் பூசியிருந்தும் மங்கின பேட்டரி டார்ச் போல ஒருவித கலக்கம் சன்னமாய் தென்பட்டது.
ஷூ ரேக்கில் நண்பன் கெளதமனின் புதிய ஷூ அடங்கி இருந்தது. கெளதமனும் நைட் ட்யூட்டி பார்த்துவிட்டு வந்து குறட்டையில் இருந்தான். இந்த ஷூதிரும்ப அவனுக்கு இரவு ட்யூட்டிக்கு போகும்போதுதான் தேவைப்படும். நடுவில் மூக்குத் துவாரத்தில் பட்டாசைக் செருகி அதன் திரியில் நெருப்பு வைக்க- அது காதைச் செவிடாக்கும்படி வெடித்தாலும் அசரமாட்டான் கெளதமன். ‘சத்தம் போடாதீங்கப்பா- மனுஷன் தூங்கறேன்ல’ என்று முணங்கிவிட்டு திரும்பப் படுத்துக்கொள்வான்.
‘மனுஷனாடா நீ…? நீ யெல்லாம் உன்னை மனுஷன்னு சொல்லக்கலாமா?’ -என்று உடன் இருக்கும் நண்பன் பிரபுவும், கதிரும் திரும்பக் கேட்டு சடைத்துக் கொள்வார்கள். எனவே தைரியமாக அந்த ஷூவை காலில் ஏற்றிக் கொண்டான்.
பிரபு, கெளதமன் இருவருமே கதிருக்கு நண்பர்கள். கெளதமனுக்கு ஒரு கெமிக்கல் தொழிற்சாலையில் உத்யோகம். பிரபு டி.வி. சிரியல்களில் ஒரஞ்சாரமாக நின்று நடித்து வருபவன்.
‘அடுத்த ரஜினி நான்தான்...!’ என்று தினமும் டயரியில் எழுதி வைத்துப் படிக்கறவன். அதற்கு சப்போர்ட்டாய் ரஜினியைப் போலவே கறுப்பாயும் ஒல்லியாயும், தாய்மொழியை தமிழாகக் கொள்ளாமல் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட மணவாள்ளு.
இவர்களுக்கு நடுவில் திருநெல்வேலி பக்கம் அம்பாசமுத்திரத்தில் இருந்து வந்திருக்கும் வீரதீர பராக்ரமன்தான் கதிர்.
தினமும் இண்ட்டர்வியூவாய் அட்டெண்ட் பண்ணுவதுதான் இப்போதைக்கு வேலை. மிச்ச நேரத்தில் நண்பர்களுக்காக சமைத்து வைப்பது. அவர்கள் துணிக்கு இஸ்திரி போடுவது, அவர்கள் குடித்துவிட்டு போட்ட சிரெட்டைக் கொண்டு திருட்டு தம் அடிப்பது என்பதெல்லாம் எக்லெக்ட்ரா… எக்லெக்ட்ரா…
இதோ இப்பொழுது கூட ஒரு பிரபல நிறுவனத்தில் வேலைக்கா இண்ட்டர்வியூவிற்கு புறப்பட்டு விட்டான். எதிரில் வேலைக்காரி தனம் வந்தாள். ஒரே ஒருவேளை கூட்டி தண்ணீர் பிடித்து வைத்துவிட்டுச் செல்ல இவளுக்கு மாசம் நூத்தம்பது ரூபாய்!
வெள்ளையும் சொள்ளையுமான கதிரைப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்தாள்.
சிரிக்காதே தனம்... தினம் இப்படி சிரிக்கறதே உனக்கு வழக்கமாப் போச்சு…
-கதிரும் முணங்கினான்.
சிரிக்காம என்னத்த பண்ண…? நீயும் தினம் தினம் இப்படி சலவை பண்ணின பட்டுத் துணியாட்டம் தான் போறே. ஆனா எவனும் உன்னை சீந்த மாட்டேங் கறானே…"
அதுக்கென்ன பண்றது. எல்லா இடத்துலையும் காசு வேலை செய்யுது. திறமையை யார் பார்க்கரா?
தெரியுதுல்ல… அப்பால எதுக்கு நம்பிகிட்டு போறே... பேசாம வேற ஏதாவது தொழில் பண்ணலாம்ல?
என்ன பண்ணச் சொல்றே...? செரைக்கறதா இருந்தா கூட ஐநூறு ரூபா அறுநூறு ரூவாய்க்கு சீப்பு கண்ணாடி சோப்பு பிளேடு வாங்கணும். நான் எங்கே போவேன் அதுக்கு...?"
கதிர் அவளிடம் வருத்த முழக்கம் புரிந்துவிட்டு நடக்கத் தொடங்கினான்.
தன் வீட்டு வாசலில் ஒரு பிரம்பு நாற்காலியை போட்டுக் கொண்டு அதில் அமர்ந்தபடி பேப்பர் படித்துக் கொண்டிருந்த அருணாசலம் என்பவர் கதிரின் முழக்கத்தை கேட்டு பேப்பரைப் படித்தபடி திரும்பிப் பார்த்தார். எனன் நினைத்தாரோ, அவனை கூப்பிட்டார்.
ஹலோ தம்பி... இப்படி கொஞ்சம் வாங்க!
அவனும் நெருங்கினான்: என்ன சார்?
உங்க பேர்தானே கதிர்?
ஆமாம் சார். உங்களுக்கு என்னைத் தெரியுமா?"
கேள்விப்பட்டிருக்கேன். தனம் உங்க மூணுபேரையும் பத்தி அடிக்கடி சொல்வா... குறிப்பா உங்களைப் பத்தி நிறையவே சொல்லியிருக்கா.
அப்படியா?
ஆமாம்_டெய்லி இப்படி பளிச்சின்னு இண்ட்டர்வியூக்கு போறீங்களே -ஒருத்தர் கூடவா கன்சிடர் பண்ணலை?
"பண்ணியிருந்தால் நான் ஏன் சார் இப்படி அலையப் போறேன்? -செத்த குரலில் திருப்பிக் கேட்டான் கதிர்.
அவர் உடனே அவனை தீவிரமாய் பார்த்தார்
"உன்களைப் பார்த்தா எனக்கு பரிதாபமா இருக்கு. நான் உங்களுக்கு ஒரு உதவி செய்யறேன். நிச்சயமா இந்த முறை வேலை