Madurai Arasi
()
About this ebook
‘மதுரை அரசி’யாகத் திகழும் அன்னை மீனாட்சியை வணங்கி இன்றிலிருந்து மிகச் சரியாக 320 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று அன்று இந்த மதுரையை ஆட்சி செய்த ராணி மங்கம்மாளின் காலத்துக்குள் கரைந்திட விரும்புகிறேன்.
கி.பி.1689-ல் இருந்து 1706 வரை 18 ஆண்டுகள் பேரன் விசயரங்க சொக்கநாதன் பெயராலே மதுரையை ஆண்டவள் ராணி மங்கம்மாள்! நேரடியாகப் பட்டத்துக்கு வந்து ராணியாகப் பொறுப்பேற்க அளவது விதவைக்கோலம் இடம் தரவில்லை. இளம் வயதிலேயே கணவனையும், மகனையும், மருமகளையும் அவள் பறி கொடுத்துவிட்டது விதியின் சதியால் எனலாம். இந்த விதியின் சதியை சற்று விரித்துப் பார்ப்பதே இந்த நாவலாகும்.
நான் ராணி மங்கம்மாளின் வலிமையான பக்கங்களையும் அந்த அரசிக்கு வழிகாட்டும் அரசியாகத் திகழ்ந்த மதுரை மீனாட்சிஅம்மையைப் பற்றியுமே இந்த சிறு நாவலில் சிந்திக்க விரும்புகிறேன்.
பொதுவில் ஒரு வரலாற்றுப் புதினத்தில் எவ்வளவுதான் முயன்றாலும் சில கற்பனையான அல்லது பொய்யான விஷயங்கள் புகுந்துவிட வாய்ப்புகள் மிகுதி. இந்த நாவலும் அதற்கு விதிவிலக்கல்ல!
ஒரு சரித்திரப் பார்வையாளனாய் நான் கேள்விப்பட்ட செய்திகளின் பின்புலம் எப்படியெல்லாம் இருந்திருக்கக்கூடும் என்று யோசித்துப் பார்த்து – அது இப்படியெல்லாம் இருந்திருக்கலாம் என்று அனுமானித்து அந்த அனுமானத்தின் அடிப்படையில் புனையப்பட்ட ஒரு கற்பனைப் படைப்பே இது…
அதே சமயம் மங்கம்மாள் என்கிற ஒரு பெண்ணரசியை நான் மதிப்பு மிக்க பார்வை மட்டுமே பார்த்து வியந்தே இந்தப் படைப்பைத் தொடங்குகிறேன்.
இன்றும் ‘பெண் விடுதலை’ என்பது ஒரு கேள்விக் குறியாக உள்ள ஒரு நாளில் - 320 வருடங்களுக்கு முன்பே ஒரு பெண் பல கழுகுகள், வல்லூறுகளுக்கு நடுவில் துணிவாய் நாட்டை ஆண்டிருக்கிறாள் என்றால் - அது என்ன லேசுப்பட்ட விஷயமா?
ஆசாதாரண அந்த நாளைய காலகதிக்குள் நுழைமோமா?
-இந்திரா சௌந்தர்ராஜன்
Read more from Indira Soundarajan
Pei... Pisasu... Bootham Rating: 4 out of 5 stars4/5Markazhi Roja Rating: 5 out of 5 stars5/5Sivaragasiyam Rating: 5 out of 5 stars5/5Rajathanthiran Rating: 5 out of 5 stars5/5Sivam Rating: 4 out of 5 stars4/5Manam Oru Marmadesam Rating: 5 out of 5 stars5/5Asura Jathagam Rating: 5 out of 5 stars5/5Dhinam Oru Uyir! Rating: 5 out of 5 stars5/5Chidambara Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Nandhi Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Aranmanai Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Maayamaai Silar Rating: 5 out of 5 stars5/5Kannip Parunthu Rating: 5 out of 5 stars5/5Thiruvannamalai Rating: 3 out of 5 stars3/5Ezhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Yandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Kaatthiruntha Naagam Rating: 5 out of 5 stars5/5Thottathellam Pon Rating: 5 out of 5 stars5/5Aval Oru Savithri Rating: 5 out of 5 stars5/5Kaatru… Kaatru... Uyir Rating: 3 out of 5 stars3/5Mandhira Vaasal Rating: 5 out of 5 stars5/5Kannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Sithargal Raajyam Rating: 5 out of 5 stars5/5Oru April Puthisaali Rating: 5 out of 5 stars5/5Nooravathu Kadathal Rating: 5 out of 5 stars5/5Mandhira Valai Rating: 5 out of 5 stars5/5Oodathey Karuppu Rating: 5 out of 5 stars5/5Athirshtakkaatru Rating: 5 out of 5 stars5/5Athai Mattum Sollathe! Rating: 5 out of 5 stars5/5Ennodu Vaa Rating: 5 out of 5 stars5/5
Related to Madurai Arasi
Related ebooks
Rani Mangammal Rating: 0 out of 5 stars0 ratingsMadurai Nagara Kovilgal Rating: 0 out of 5 stars0 ratingsVallathu Ilavarasi Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Samyukthai Rating: 0 out of 5 stars0 ratingsMarava Mannin Meetpar Punithar Arulanandar Rating: 0 out of 5 stars0 ratingsKulothungan Sabatham Rating: 4 out of 5 stars4/5Kanchi Sundari Rating: 5 out of 5 stars5/5Thiruvizhaa Rating: 0 out of 5 stars0 ratingsRangarattinam Rating: 5 out of 5 stars5/5Nithilavalli Rating: 0 out of 5 stars0 ratingsMeera Yathirai Rating: 0 out of 5 stars0 ratingsMadhura Kaaviyam - Rajendra Chozhanin Varalaattru Novel Rating: 0 out of 5 stars0 ratingsNandhipurathu Naayagi - Chapter 21 Rating: 4 out of 5 stars4/5Paandimaadevi - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsMohini Kottai Rating: 0 out of 5 stars0 ratingsVandhiyathevan Vaal Rating: 4 out of 5 stars4/5Kannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Sithargal Raajyam Rating: 5 out of 5 stars5/5Thiruppugal Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsParthiban Kanavu - Part 3 Rating: 5 out of 5 stars5/5Veeramaadevi Sabatham Rating: 0 out of 5 stars0 ratingsSethunattu Vengai Rating: 0 out of 5 stars0 ratingsVaradha Varam Thaa Rating: 0 out of 5 stars0 ratingsTherodum Veethiyiley Rating: 0 out of 5 stars0 ratingsPallavan Pandiyan Baskaran Rating: 0 out of 5 stars0 ratingsSethupandhanam Rating: 5 out of 5 stars5/5Kannikottai Ilavarasi Rating: 0 out of 5 stars0 ratingsPonniyin Selvanudan Oru Payanam Rating: 0 out of 5 stars0 ratingsKrishnadaasi Rating: 5 out of 5 stars5/5Ponniyin Selvan - Part 4 Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Madurai Arasi
0 ratings0 reviews
Book preview
Madurai Arasi - Indira Soundarajan
http://www.pustaka.co.in
மதுரை அரசி
Madurai Arasi
Author:
இந்திரா செளந்தர்ராஜன்
Indira Soundarajan
For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
முன்னுரை
இ
ந்நாவலின் களமான மதுரை, நான் 25 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்துவரும் ஒரு களமாகும். மதுரையின் பூகோளம் எனக்கு மிகவே பரிச்சயமான ஒன்று. அதிலும் இன்று சரித்திர எச்சங்களாகத் திகழும் நாயக்கர் மகால், விளக்குத்தூண், மாரியம்மன் கோவில் தெப்பக்குளம், மாடக்குளம் கண்மாய், திருப்பரங்குன்றம் சமணர் படுக்கை கல்வெட்டுகள் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் சார்ந்த கிளி மண்டபம், புது மண்டபம் போன்ற பகுதிகள் நம்மை அந்த நாட்களுக்கே அழைத்துச் செல்பவையாகும்.
நானும், என்றும் ‘மதுரை அரசி’யாகத் திகழும் அன்னை மீனாட்சியை வணங்கி இன்றிலிருந்து மிகச் சரியாக 320 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று அன்று இந்த மதுரையை ஆட்சி செய்த ராணி மங்கம்மாளின் காலத்துக்குள் கரைந்திட விரும்புகிறேன்.
கி.பி.1689-ல் இருந்து 1706 வரை 18 ஆண்டுகள் பேரன் விசயரங்க சொக்கநாதன் பெயராலே மதுரையை ஆண்டவள் ராணி மங்கம்மாள்! நேரடியாகப் பட்டத்துக்கு வந்து ராணியாகப் பொறுப்பேற்க அளவது விதவைக்கோலம் இடம் தரவில்லை. இளம் வயதிலேயே கணவனையும், மகனையும், மருமகளையும் அவள் பறி கொடுத்துவிட்டது விதியின் சதியால் எனலாம். இந்த விதியின் சதியை சற்று விரித்துப் பார்ப்பதே இந்த நாவலாகும்.
இதற்கான ஆதாரங்களைப் பல்வேறு நூல்களில் இருந்து திரட்டினேன். அதில் அ. கணபதி அவர்கள் எழுதிய தமிழக வரலாறு (1565-1985) எனும் நூல் பேருதவி புரிந்தது. இது போக பல நூல்களில் பல அரிய தகவல்கள் கிடைத்தன.
மங்கம்மாள் பற்றி அறியப்புகும் வேளையில் சில மலிவான செய்திகளும் கிடைக்கவே செய்தன. ராணி மங்கம்மாள் எனும் கம்பீரம் மிகுந்த பெண்மணியை இழிவுபடுத்துவது போல அமைந்துள்ள அந்த செய்திகளில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது கடவுளுக்கே வெளிச்சம். நான் ராணி மங்கம்மாளின் வலிமையான பக்கங்களையும் அந்த அரசிக்கு வழிகாட்டும் அரசியாகத் திகழ்ந்த மதுரை மீனாட்சிஅம்மையைப் பற்றியுமே இந்த சிறு நாவலில் சிந்திக்க விரும்புகிறேன்.
பொதுவில் ஒரு வரலாற்றுப் புதினத்தில் எவ்வளவுதான் முயன்றாலும் சில கற்பனையான அல்லது பொய்யான விஷயங்கள் புகுந்துவிட வாய்ப்புகள் மிகுதி. இந்த நாவலும் அதற்கு விதிவிலக்கல்ல!
நூறு சதம் இது ஆதார பூர்வமானது என்று கூறி விட முடியாது.
ஒரு சரித்திரப் பார்வையாளனாய் நான் கேள்விப்பட்ட செய்திகளின் பின்புலம் எப்படியெல்லாம் இருந்திருக்கக்கூடும் என்று யோசித்துப் பார்த்து – அது இப்படியெல்லாம் இருந்திருக்கலாம் என்று அனுமானித்து அந்த அனுமானத்தின் அடிப்படையில் புனையப்பட்ட ஒரு கற்பனைப் படைப்பே இது…
அதே சமயம் மங்கம்மாள் என்கிற ஒரு பெண்ணரசியை நான் மதிப்பு மிக்க பார்வை மட்டுமே பார்த்து வியந்தே இந்தப் படைப்பைத் தொடங்குகிறேன்.
இன்றும் ‘பெண் விடுதலை’ என்பது ஒரு கேள்விக் குறியாக உள்ள ஒரு நாளில் - 320 வருடங்களுக்கு முன்பே ஒரு பெண் பல கழுகுகள், வல்லூறுகளுக்கு நடுவில் துணிவாய் நாட்டை ஆண்டிருக்கிறாள் என்றால் - அது என்ன லேசுப்பட்ட விஷயமா?
ஆசாதாரண அந்த நாளைய காலகதிக்குள் நுழைமோமா?
- இந்திரா சௌந்தர்ராஜன்
1
1690
சித்திரை பௌர்ணமி!
வா
னில் வட்ட நிலா வெற்றி உலா வந்து கொண்டிருந்தது… மாநகர் மதுரையிலும் எங்கு பார்த்தாலும் ஜனக்கூட்டம்! அவ்வளவு கூட்டமும் மதுரை சித்திரைத் திருவிழாவைக் காணவும் அன்னை மீனாட்சி திருக்கல்யாணம் கண்டு, கள்ளழகர் அருளைப் பெற்றிடவும் திரளாக வந்திருந்தது.
வைகையிலும் சுமாரான கதியில் நீரோடிக் கொண்டிருந்தது. கோடை காலமானதால் வைகையிடம் வெள்ள ஆர்ப்பாட்டமோ, துள்ளும் திமிரோ துளியும் இல்லை. மதுரை நகரும் சரி, மதுரையைச் சுற்றியுள்ள சர்வமய கிராமத்து மனிதர்களும் சரி - வைகைக் கரையில் தான் கூடியிருந்தனர். வண்டி கட்டி வந்த கூட்டம் ஒரு பக்கம், வளர்ப்புக் குதிரைகளின் மேல் ஏறிவந்திருந்த இளைஞர்களின் கூட்டம் ஒரு பக்கம், இது போதாது என்று பாதயாத்திரையாக வந்திருந்த கூட்டமும் வைகைக் கரை வெளியில் ஒன்று கூடித் தாங்கள் கட்டி எடுத்து வந்திருந்த சித்ரான்னங்களைக் கூட்டமாகக் கூடி அமர்ந்து உண்டுகளித்துக் கொண்டிருந்தனர்.
வைகைக் கரையின் இப்பக்கத்தில் மீனாட்சி திருக்கல்யாணம் காணவந்த கூட்டம் என்றால், அந்தப் பக்கத்தில் அதாவது வடபுலத்தில் கள்ளழகரைக் காண வந்திருந்த கூட்டம் கரையை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது.
அவர்களில் பலர் தங்கள் உருவத்தை மாற்றிக் கொண்டு தங்களையும் கள்ளழகர் போலவும் வேட்டைக்குச் செல்பவர்கள் போலவும் மாறுவேடம் பூண்டிருந்தனர். எருமைத் தோலால் செய்த பையில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு அந்த தோலின் ஒரு பாகத்தில் சிறு துளை போட்டு அதன் மூலமாகத் தண்ணீரைப் பீய்ச்சியடித்துக் கொண்டு தங்கள் சகாகளுக்கு விளையாட்டும் காட்டிக் கொண்டிருந்தனர்.
அந்தக் கூட்டத்தில் ரங்கதுரையும் இருந்தான். அது யார் ரங்கதுரை...? அவனுக்கென்ன பெரிய விலாசம்?
என்று கேள்விகள் எழலாம். ரங்கதுரை, நாயக்க