Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irantha Kaalam
Irantha Kaalam
Irantha Kaalam
Ebook59 pages24 minutes

Irantha Kaalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த கதை காவேரியில் ஆரம்பிக்கும் போதே ஒன்றி விட முடிகிறது. கதையின் நாயகன் கனேசனை கடைசி வரை ஒழுக்கமுள்ளனவாக சித்தரித்திருப்பது மிகவும் பொருத்தமாக உள்ளது. விறுவிறுப்பாக செல்வதால் மிக எளிதில் படிக்க முடிகிறது.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352852123
Irantha Kaalam

Read more from Vidya Subramaniam

Related to Irantha Kaalam

Related ebooks

Reviews for Irantha Kaalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irantha Kaalam - Vidya Subramaniam

    https://www.pustaka.co.in

    இறந்த காலம்

    Irantha Kaalam

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    1

    கணேசன் அன்று எழுந்திருக்கும்போதே அர்ச்சனை ஆரம்பமாகி விட்டது. சகஸ்ரநாம அர்ச்சனை! சித்தி தன் பல் தேய்க்காத வாயினால் அவனுக்கு அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விட்டாள்.

    அவள் எழுந்திருப்பதற்கு முன்னேயே எழுந்து உமிப்பொடியை கையில் கொட்டிக் கொண்டு காவேரிக்குப் போய் விடுவதுதான் அவன் வழக்கம். ஆனால் இன்று அவனுக்கு அசதியா? அல்லது சித்திக்கு தூக்கம் கலைந்து விட்டதா புரியவில்லை. இன்னும் இருட்டு கலையவில்லை.

    கழுத்தைத் திருப்பி மணி என்ன என்று பார்த்தான். அது மூன்றைத்தான் காட்டியது. அப்படியானால் சித்திதான் சீக்கிரமாக எழுந்திருந்திருக்கிறாள்! ஏன், என்ன ஆயிற்று அவளுக்கு? ஒரு நாளைப்போல காலையும் கையையும் ஹாவென்று பரத்திக் கொண்டு நடுக்கூடத்தில் விடிந்தது கூடத் தெரியாமல் படுத்து உறங்கிக் கொண்டிருப்பவளுக்கு இன்று எப்படி மூன்று மணிக்கே முழிப்பு வந்தது, ஆச்சரியப்பட்டான்.

    ஆனால் அம்புஜம் கொஞ்ச நேரத்திற்கு முன்பு பட்டபாடு அவளுக்குத்தான் தெரியும். முதல்நாள் இரவு கோயில் உற்சவத்தை ஒட்டி அன்னதானத்திற்கு ஏற்பாடாகி இருந்தது. ஊர் முழுக்க கோயிலில்தான் சாப்பிட்டது. விதவிதமான சாப்பாட்டு வகைகளைப் பார்த்ததும் ராத்திரி வேளை என்று கூடப் பார்க்காமல், வாயையும் வயிறையும் கட்டுப் படுத்தத் தெரியாமல் ஒரு பிடி பிடித்தாள். போறாததற்கு இலையில் விழுந்த பட்சணங்களை மூட்டை கட்டிக்கொண்டு வந்து அதையும் தின்று தீர்த்தாள்.

    அத்தனையையும் வயிற்றில் அடக்கமாட்டாமல் அடக்கினதற்கு தண்டனை விடிவதற்குள்ளேயே கிடைத்து விட்டது. அஜீரணம் என்ற பெயரில். சாப்பிட்டதனைத்தும் ஜீரணமாகாமல் வயிற்றைப் புரட்டி எடுக்க, பெருங்குடல் எங்கும் கடாமுடா என்று ஒரே இரைச்சல். சீக்கிரம் எங்களை வெளியே தள்ளிவிடு என்று அலறத் தொடங்கின. ஓலம் அதிகமாக வயிற்றுவலி பொறுக்க முடியாமல் உறக்கம் கலைய, அவசர அவசரமாக ஒரு பக்கெட் தண்ணீருடன் கொல்லைப் பக்கம் ஓடினாள்.

    பதினைந்து நிமிட அவஸ்தைக்குப் பிறகு ஆயாசத்துடன் வெளியே வந்து ஈரக்காலை சாக்கில் துடைத்துக் கொண்டவள் கண்ணில் நிச்சிந்தையாக எந்தவிதக் கஷ்டமும் இல்லாமல் படுத்துத் தூங்கும் கணேசன் பட்டவுடன் அவளுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது.

    இருபத்தி இரண்டு வயது கணேசன் மார்பில் கைகளைக் கட்டிக் கொண்டு ஆறடி நீளத்திற்கு ஆஜானுபாகுவாக சித்தியின் அவஸ்தைகளோ எரிச்சலோ தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தான்.

    அம்புஜம் ஒரு வினாடி ஆச்சரியப்பட்டாள்.

    அந்த வீட்டிற்கு அவள் வரும்போது இதே கணேசன் பதினோரு வயது சிறுவனாக ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். சரியாக பதினோரு வருடம் - எப்படி வளர்ந்து விட்டான் இவன்!

    காலா காலத்தில் தனக்கும் ஒரு குழந்தை பிறந்திருந்தால் அதற்கு இப்போது பத்து வயதிருக்கும். ஹூம்! எதற்கும் குடுத்து

    Enjoying the preview?
    Page 1 of 1