Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manathin Nizhalgal
Manathin Nizhalgal
Manathin Nizhalgal
Ebook96 pages35 minutes

Manathin Nizhalgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

GA Prabha is a prolific writer of Tamil, and has written about 100 novels, 120+ short stories, 5 novelettes covering in family and romance category. Her works are published in various magazines. She has also won many prizes conducted by various magazines like Kalki and Anandha Vikatan.


Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352851119
Manathin Nizhalgal

Read more from Ga Prabha

Related to Manathin Nizhalgal

Related ebooks

Reviews for Manathin Nizhalgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manathin Nizhalgal - GA Prabha

    http://www.pustaka.co.in

    மனதின் நிழல்கள்

    Manathin Nizhalgal

    Author:

    ஜி.ஏ.பிரபா

    G.A.Prabha

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ga-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    காற்று காதோரம் குறுகுறுப்பாய் நீவிச் சென்றது. ‘சிவுக் சிவுக்’ என்று சின்னப் பெண்ணாய், கொலுசு சப்திக்க, பருவத் துடிப்புடன் ஓடியாடும் வயசுப் பெண்ணாய், வீடெங்கும் ஆடி வீசியது. திரைச்சீலைகளை, வாயிற்படி அலங்கார மணிச்சாரல்களை அசைத்துச் சென்றது. ‘டிங் டிங்’ என்ற மணிச்சரத்தின் ஒலி நித்ய கல்யாணியை அழைத்தது.

    ‘ஹலோ… குட்மார்னிங்"-நித்யா ஜன்னலைத் திறந்ததும் தென்பட்ட பூனைக் குட்டியிடம் கூறினாள்.

    ‘மியாவ்’-அது பதில் வணக்கம் கூறியது.

    நித்யா புன்னகையுடன், எல்லா ஜன்னல்களையும் திறந்தாள். பின்கதவைத் திறந்து, தேய்க்க வேண்டிய பாத்திரங்களை எடுத்துப் போட்டுவிட்டு, குழாயடியில், பல்தேய்த்து, முகம் கழுவினாள்.

    மதிற்சுவர் தாண்டி, ஒரு மின்சார ரயில் ‘பாம்’ மென்ற அலறலோடு பறந்தது. அந்த அதிகாலையிலும், தொத்திக் கொண்டு பிதுங்கி வழியும் ஜனம்.

    பிரமிப்பாய் இருந்தது.

    வந்த புதிதில், இரவில் கேட்கும் மின்சார ரயில் சப்தம் திடுக்கிட வைக்கும். இப்போது அந்த சப்தம் இல்லாமல் தூக்கம் வராது என்றாகிவிட்டது.

    அமைதியாய், சுற்றி தோட்டம். வாய்க்கால் என்று மூலனூரில் வளர்ந்த நித்யாவுக்கு, சென்னையின் பரபரப்பு, குச்சி குச்சியாய் உயர்ந்த வீடுகள், நமக்கென்ன என்று போகும் அக்கம் பக்கம், ஆவேசமாய் விரையும் மின்சார ரயில்கள் ஆரம்பத்தில் பயமுறுத்தியது.

    இப்போது பழகிவிட்டது.

    மூணு மாதத்தில் எல்லாம் பழகிவிடுமா? வைகாசியில் கல்யாணம். இதோ ஆடிக்கு அழைக்க அண்ணா வந்துவிட்டான். இந்த வீடு, சொந்தம், ஏன் தாலிகட்டிய புருஷன் முகமே சரியாக நினைவுக்கு வரவில்லை.

    ரவி ரவிசங்கர். எம். எஸ். ஸி. பப்ளிக் லிமிடெட் கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை. ஒரே பையன். தங்கை மேகலா. மாமனார், மாமியார். அடக்கமான குடும்பம்.

    ஆனால் ரவி! அஞ்சே முக்காலடி உயரம். சுருண்ட முடி. மாநிறம். உருவம் சரி. ஆனால் மனசு? நல்லவனா, கெட்டவனா? குணம், ருசி, ஆசை, அந்தரங்கம் எதுவுமே இன்னும் புரிபடவில்லையே!

    வைகாசி கடைசியில் கல்யாணம். பதினைந்து நாள் மாமனார், மாமியார், நாத்தனார், புடை சூழ விருந்து, வைபவம். இரவுகள்கூட பசித்தவன், பசியாறுவது போல்தான்.

    அப்பாடா, என்று வீட்டில் நுழைந்த அடுத்த நாள் ஆச்சு. ‘பெங்களூரில் எனக்கு புரோமோஷனுக்கு டிரெய்னிங்’ என்று கிளம்பிவிட்டான்.

    அடுத்த வாரம் வருகிறான். அதற்குள் ஆடி பிறந்து விட்டதால், அண்ணா வந்துவிட்டான். புருஷனை அறியவில்லையே!

    ரவி - என் புருஷனே! சீக்கிரம் வாயேன். அன்பும், நட்பும் மட்டுமே கலந்த ஒரு வாழ்க்கையை ஈகோ இல்லாத, விட்டுக் கொடுத்து, உறவுகளை மதித்து, இவர்களைப் போல் நாமும் வாழவேண்டும் என்று நம் குழந்தைகள் நினைக்கும் அளவுக்கு வாழலாமே! மனசு ஏங்கியது.

    நித்யா, அப்பா, அம்மாவை பார்த்ததில்லை. நித்யா பிறந்த உடனே அம்மா இறந்துவிட்டாள். அந்த செய்தி கேட்ட உடனே அப்பா ஓடி வந்தவர் கால் தடுக்கி விழுந்து மண்டையில் அடிபட்டு இறந்துவிட்டார்.

    ஆனால் பாட்டி வாய் ஓயாமல் பேசுவாள். பார்வதி-பரமேஸ்வரன் மாதிரி வாழ்ந்தாடி. உங்கமமா கண்ணைப் பாத்தே அத்தனையையும் புரிஞ்சுகிட்டு செஞ்சிடுவான் உங்கப்பன். அவன்தாண்டி புருஷன்.

    ஆனால்இஅண்ணா-அண்ணி…? எப்பொழுது பார்த்தாலும் சண்டை. அடிதடி. பாத்திரம் வீசிஇகை ஓங்கிஇகுழந்தைகள் கதறி அழுதுஇமௌனம் ஒரு அசிங்கமாய் படர்ந்துஇநேரம் குரூரமாய் நகரும்.

    அண்ணாவுக்கு பயம். இரண்டு தங்கைகளை எப்படிக் கரையேற்றுவோம் என்று!ஆனால் அண்ணா பயம் அனாவசியம். அம்மாவின் நகைகள் இருந்தது. வயல், சொந்த வீடு, பணம் என்று பாட்டி சேர்த்து வைத்து, அவள்தான் ஒரு பெண்ணுக்கு கல்யாணம் செய்தாள். அடுத்து அண்ணாவுக்கும் செய்தாள். கடைக்குட்டி நித்யா.

    என்றாலும் எல்லாவற்றையும் பெண்களுக்கே செய்தால் தனக்கு என்ன மிஞ்சும் என்ற பயம் அண்ணாவுக்கு. அதை உசுப்பிவிடும் அண்ணி.

    இயலாமைதான். காசே வாழ்க்கை என்று நினைத்ததில் அண்ணா, இதயத்தில் ஈரத்தை துடைத்துவிட்டான். ஏதோ காக்கும் தெய்வமாய் ரவி வந்தான்.

    எதுவும் வேண்டாம். செய்யறதைச் செய்யுங்க என்று மாமனார் சொல்லிவிடஇஅண்ணி நிறைய சாமான்களை பதுக்கிவிட்டாள். காது குத்து விழாபோல்தான் கல்யாணம் நடந்தது. இங்கே சென்னையில் ரிசப்ஷன்.

    மாமியார் கொஞ்சம் சிடுசிடுப்பு. ஆனால்

    Enjoying the preview?
    Page 1 of 1