Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poovey Punnagai Sindhu
Poovey Punnagai Sindhu
Poovey Punnagai Sindhu
Ebook94 pages42 minutes

Poovey Punnagai Sindhu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352852055
Poovey Punnagai Sindhu

Read more from Vidya Subramaniam

Related to Poovey Punnagai Sindhu

Related ebooks

Reviews for Poovey Punnagai Sindhu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poovey Punnagai Sindhu - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    பூவே புன்னகை சிந்து

    Poove Punnagai Sindhu

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    சீட்டுச்சேரி களை கட்டியிருந்தது.

    கல்யாண சத்திரத்தின் அமளிகள் எதுவும் அவர்களை

    துளியும் பாதித்ததாய்த் தெரியவில்லை ஆடிக் கொண்டிருந்த கூட்டம் முழுக்க மாப்பிள்ளை வீட்டின் உறவுக்காரர்களும் நண்பர்களும் அவர்களுக்குத் தேவையான உபசாரங்களை செய்து அவர்களை கவனிப்பதற்கென்றே பெண்ணைப் பெற்றவர் ஒரு ஆளை அங்கு நிற்க வைத்திருந்தார்.

    'ஹலோ பிரதர் ஓடிப்போய் ஒரு சொம்புல பஸ்ட் கிளாஸ் காப்பி வாங்கிட்டு வாங்க என்பதிலிருந்து ஆரம்பித்து அவர்கள் கேட்ட ஒவ்வொரு விஷயத்தையும் ஓடி ஓடிச் செய்தவன் பெயர் குருபரன். கல்யாணப் பெண்ணின் பால்ய சிநேகிதன். ஒரே தெருவில் ஓடி விளையாடி, ஒரே பள்ளியில் படித்தவர்கள். கல்லூரிப் படிப்பின் போது வெவ்வேறு திசையில் பிரிந்தவர்கள். அவன் சென்னைக்கும், அவள் மதுரையிலிருக்கும் சித்தப்பா வீட்டிற்கும் சென்று மேல் படிப்பைத் தொடர்ந்தாலும் அவர்களுக்குள் கடிதம் மூலம் நட்பு தொடர்ந்தது.

    திருச்சியில் இருவரும் ஒன்றாகப் படித்த பள்ளிக்கால அனுபவங்களின் சிலிர்ப்பு இருவரது கடிதங்களிலும் இருக்கும். கிருத்திகாவுக்குத் திருமணம் என்ற விஷயம் தெரிந்ததுமே முதலில் வாழ்த்தியது குருதான். உன் கல்யாணத்தில் அத்தனை இலைக்கும் பாயசமும் போளியும் அய்யாதான் பரிமாறுவேன் என்றவன் சொன்னபடியே கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன்பே திருச்சிக்கு வந்து விட்டான். கிருத்திகாவின் அப்பா கொடுத்த வேலைகளை எல்லாம் தலை மேல் தாங்கி கனகச்சிதமாக செய்து முடித்தான்.

    'தேங்க்ஸ்டா குரு, கிருத்திகாக்கு கூடப் பிறந்தவா யாருமில்லாத குறைக்கு ஓடிஓடி உழைக்கற போ. கீர்த்தியின் அப்பா பாராட்டினார்.

    'இது என் கடமை அங்கிள். '

    'பதிலுக்கு அவன் கல்யாணத்துல நா பாயச வாளி தூக்கி நன்றிக்கடனை செலுத்திடுவேம்ப்பா' கீர்த்தி சொல்ல அவன் புன்னகைத்தான்.

    மாப்பிள்ளை வீட்டு கோஷ்டி இரண்டு நாள் முன்பே திருச்சிக்கு வந்து இறங்கியது. அவர்களை வரவேற்று அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த இரண்டு பங்களாக்களில் அவர்களை தங்க வைத்ததும் குருதான்.

    'நீங்க யாரு? பெண்ணுக்கு என்ன உறவு வேணும்?' மாப்பிள்ளை வீட்டு உறவும் பெண்மணி ஒருத்தி கேட்டாள்.

    'கிருத்தியோட ஃபிரண்ட் அவன் புன்னகையோடு சொல்லிவிட்டு யாரோ ஒருவரின் சூட்கேஸை உள்ளே கொண்டு போய் வைத்தான். அந்த பெண்மணி ஃபிரண்டு என்ற வார்த்தைக்கு அர்த்தம் யோசித்தாள்.

    'உங்களுக்கெல்லாம் என்ன வேணும்னாலும் ஜஸ்ட் குருன்னு ஒரு குரல் குடுத்தா போதும் வந்துடுவேன்' குரு அவர்களிடம் சொல்லி விட்டு வெளியில் வந்தான்.

    சத்திரம் அங்கிருந்து கூப்பிடு தூரம்தான் இருந்தாலும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்காக மூன்று ஆட்டோக்கள் ஏற்பாடு செய்திருந்தது. குரு பம்பரமாய் சுழன்றான். காண்ட்ராக்ட் கல்யாணம் என்றால் ஒரு வேலை இருக்காது மஞ்சள் பொடியிலிருந்து கட்டுசாதம் வரை எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் கிருத்திகாவின் அப்பா இதை காண்ட்ராக்ட்டில் விடவில்லை. கொஞ்சம் சிரமப்பட்டால் கணிசமாய் பணத்தை மிச்சம் பிடிக்கலாமே என்று நினைத்தார் கஞ்சத்தனம் என்று அர்த்தமில்லை. காசை வாரி விடுகிற ரகமில்லை அவர். பூவிலிருந்து மளிகை வரை தானே அலைந்து பேரம் பேசி வாங்கிப் போட்டார். பாதி வேலைகளுக்கு குருவை அனுப்பினார். அவனும் சலிக்காமல் அலைந்தான். ஊர்க்காரர்கள் மூக்கில் விரல் வைத்தார்கள்.

    "ஏம்பா குரு உன்னைப் பார்த்தா ஐ ஏ எஸ் பாஸ் பண்ணி பயிற்சிக்குப்போகப் போறாப்பலயே தெரியலயே. இப்டி எடுபிடி வேலை செய்துட்ருக்க! கோட்டும் சூட்டும் மாட்டிக்கிட்டு பந்தாவா நிக்கத்தெரியலயே உனக்கு ஊர்க்காரர் ஒருவர் வியப்புடன் சொல்ல குரு அதற்கும் புன்னகைத்தான் கிருத்திகா அவன் தோழி. ஆண் பெண் என்ற வித்யாசம் அறிவதற்கு முன்பிருந்தே அவனுடன் விளையாட்டுத் தோழியாய் ஆகி விட்டவள் அவள்.

    தன் வேலைகளுக்கு நடுவே அவ்வப்போது அவளது அறையில் தலை நீட்டி அவளைக் கிண்டல் செய்யவும் மறக்கவில்லை.

    "என்ன குரு ரொம்ப பிஸியோ? அப்பப்பொ வந்துதலை காட்டற!'

    ம். மாப்ளயோட பிரண்ட்ஸ் எல்லாம் சீட்டாடிட்ருக்காங்க இல்ல. அவங்களுக்கு காப்பி கொண்டு போறேன். '

    இதுக்கு வேற ஆளே கிடைக்கலயா? நீ எதுக்கு இந்த வேலையெல்லாம் செய்யற?

    "உன் கல்யாணம் கீர்த்தி இது. இதுல போய் யாராவது பிரஸ் டிஜ் பார்ப்பாங்களா? ' -

    அவன் சிரித்தபடி நகர, சற்று தள்ளி படுத்திருந்த அந்த பெண்மணி எழுந்து உட்கார்ந்தாள். தன் அருகிலிருந்த வளைதட்டி எழுப்பி உட்கார வைத்தாள்.

    ‘'என்ன..."

    நீ ஒண்னு கவனிச்சயாக்கா...?

    ‘'என்ன... "

    "ஒரு பையன் இங்க பம்பரமா சுத்தி சுத்தி வரானே நம்பளக்கூட பங்களால இறக்கி

    Enjoying the preview?
    Page 1 of 1