Naaloru Poo Malarum
By Devibala
()
About this ebook
Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Read more from Devibala
Koottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsThurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Theeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsBathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Mundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsKanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Kaanikkai Rating: 5 out of 5 stars5/5Kaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsKodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Amma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Unakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsManithan Paathi! Mirugam Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsChakkalathi Rating: 0 out of 5 stars0 ratingsUnakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsIruttin Nizhalgal…! Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Mounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratings
Related to Naaloru Poo Malarum
Related ebooks
Idhayam Pohuthe! Rating: 0 out of 5 stars0 ratingsJeevanaadi Rating: 0 out of 5 stars0 ratingsThirunthivittal Divya! Rating: 0 out of 5 stars0 ratingsJuly Malargale! Rating: 0 out of 5 stars0 ratingsKakitha Roja Rating: 5 out of 5 stars5/5Thendral Neethana? Rating: 3 out of 5 stars3/5Paniththirai Rating: 0 out of 5 stars0 ratingsAvasara Vaarisu Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire... Nee Enge! Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Kaathiru! Rating: 0 out of 5 stars0 ratingsUn Manaivi, En Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsOndru Serntha Ullam Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Manam Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsEthir Paarthen Rating: 0 out of 5 stars0 ratingsRaajinama! Rating: 0 out of 5 stars0 ratingsNaayagan Nizhal Rating: 0 out of 5 stars0 ratingsMummy Rammy Rating: 0 out of 5 stars0 ratingsArchanai Pookkal! Rating: 0 out of 5 stars0 ratingsThurathi Varum Thurogam Rating: 0 out of 5 stars0 ratingsPathini... Pattini Rating: 0 out of 5 stars0 ratingsIrul Vaakku! Rating: 0 out of 5 stars0 ratingsAmmavukku Oru Veedu Rating: 5 out of 5 stars5/5Penn Ondru Kandean! Rating: 5 out of 5 stars5/5Thirumbi Paar Rating: 0 out of 5 stars0 ratingsAlaikal Ointhuvidum! Rating: 0 out of 5 stars0 ratingsBaagirathi Rating: 0 out of 5 stars0 ratingsIru Vizhi Kavithai! Rating: 0 out of 5 stars0 ratingsAmma! Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjalil Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Naaloru Poo Malarum
0 ratings0 reviews
Book preview
Naaloru Poo Malarum - Devibala
http://www.pustaka.co.in
நாளொரு பூ மலரும்
Naaloru Poo Malarum
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
'வாசமில்லா மலரிது’ நாவல் பற்றி….
டாக்டர் ஞானசௌந்தரி எம். டி. டி. ஜி. ஓ.
(மகப்பேறு சிறப்பு மருத்துவர்) அவர்கள் கூறும்
கருத்துரை
"திரு. தேவிபாலா அவர்கள் ஒரு பெண் பூப்படையாததை கருவாக வைத்து ஒரு நாவலைத் தந்திருக்கிறார். கதைப்படி சிறப்பாக இருக்கிறது. ஆனால் இந்நாவலில் குறிப்பிட்டுள்ளதுபோல், பெண்கள் பூப்படையாமல் இருப்பதால் அவள் மண வாழ்க்கைக்கே பொருத்தமற்றவள் என்று ஒதுக்கிவிட முடியாது.
பொதுவாக இந்தக்குறை மிக அரிதாக சில பெண்களுக்கு ஏற்படுவதுண்டு. இந்தக் குறைக்கு 'பிரைமரி அமனோரியா’ என்று பெயர். இதில் இரண்டு வகை.
முதலாம் வகையில் பெண்களுக்கு மாதவிலக்கு மட்டும் ஏற்படுவதில்லை. உள் உறுப்புகளில் எந்தவித மாற்றமும் இருக்காது.
இரண்டாவது வகையில் உடலில் உள் உறுப்புகளில் பெண்களுக்குரிய இயற்கையான அமைப்பே இருக்காது. அதுதான் பெரிய குறை. அதையும்கூட 'வெஜினோபிளாஸ்டி’ என்ற வடிவமைப்பு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்துவிடலாம். இவர்கள் குழந்தை பெறும் வாய்ப்பு இருக்காது என்பதைத் தவிர சராசரிப் பெண்களைப்போல் மகிழ்ச்சியான இல்லறத்தில் ஈடுபடலாம். எனவே பூப்பு அடையாத பெண்கள் வீணான மூட நம்பிக்கைக்கு ஆளாகாமல் தகுந்த மருத்துவ சிகிச்சை மூலம் உடல் குறையை நீக்கிக்கொண்டு மகிழ்ச்சியுடன் வாழலாம்."
1
வித்யாவுக்குத் தெரியும் இந்த முறை நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று.
மற்றவர்களைவிட அதிக விலை கொடுக்கத் தயாராக இருந்தாள், வித்யா. அதனால் அந்த எக்ஸ்போர்ட் ஆர்டர் இவள் கைக்கு சுலபமாகக் கிடைத்துவிட்டது.
சற்று முன்புதான் அந்தச் சேதி தொலைபேசியில் கிடைத்திருந்தது அவளுக்கு.
இன்டர்காமை அழுத்தினாள் வித்யா. ஜி. எம்மை தன் அறைக்கு அழைத்தாள்.
ஜி. எம். நடேசன் உள்ளே நுழைந்தார்.
வாழ்த்துக்கள் மேடம்.
நன்றிகூடச் சொல்லாமல் அவரை இடக்காக ஒருமுறை பார்த்தாள் வித்யா.
சாதிச்சிட்டீங்க கடைசில!
எதையும் நான் சாதனையா நினைக்கறதில்லை. இதெல்லாம் ரொம்ப சின்ன விஷயம். ஆஃப்டர் ஆல் ஒரு எக்ஸ்போர்ட் ஆர்டர். ஆம்பிளைங்க இத்தனைபேர் இந்தக் கம்பெனில பெரிய பதவிகள்ல இருக்கீங்க. யாராலும் இதை அடைய முடியலை. உங்களுக்கெல்லாம்…
ஜி. எம். நடேசனின் முகம் அவமானத்தால் சிறுத்தது.
மேடம் மூணு வருஷமா நீங்களே…
ஏன் அடைய முடியலைனு கேக்கறீங்களா? முடியாம இல்லை. மத்தவங்க என்னதான் குப்பை கொட்டறீங்கன்னு பார்க்கத்தான் விட்டுப் பிடிச்சேன். தெரியும், எனக்குத் தெரியும். உங்க யாராலும் எதுவும் முடியாதுன்னு போங்க.
மேடம்…
அவுட்.
நடேசன் எழுந்து வெளியே வந்தார். தன் கேபினுக்குள் நுழையாமல் நேராக வொர்க்ஸ் மானேஜர் கேபினுக்குள் நுழைந்தார்.
வாங்க நடேசன்.
ம்…
என்ன முகம் சரியா இல்லை. அம்மாகிட்ட அர்ச்சனையா?
நான் எதைன்னு சொல்லட்டும் டேவிட்?
எக்ஸ்போர்ட் ஆர்டரா?
ம். . . நமக்கெல்லாம் எந்த அதிகாரமும் தர்றது கிடையாது. யாரையும் நம்பறதில்லை. தனக்குத்தான் எல்லாம் தெரியுங்கற திமிர். என் வயது அம்பத்தி ஆறு. அவளுக்கு முப்பதுகூட ஆகலை. வயசுக்காவது ஒரு மரியாதை வேணாம்!
யாரையும் மதிக்கறதில்லைனு பளிச்சுனு தெரிஞ்சு போச்சே. வயத்துப் பொழப்புக்காக உட்கார்ந்திருக்கம். என்ன செய்ய முடியும் சொல்லுங்க?
அப்பா குணம் பொண்ணுக்கு.
இல்லை நடேசன் சார்! அப்பா அதட்டலா பேசினாலும் அன்பு காட்டவும் அவருக்குத் தெரியும் மத்தவங்க உணர்ச்சிகளை, வயசையும் மதிப்பார். இது, எதையும் மதிக்கறதில்லையே! சரி விடுங்க. சுவருக்குக்கூட காது உண்டு. இது ஆபீஸ்! நாம் ஜாக்ரதையா இருக்கணும்
ஜி. எம். எழுந்துவிட்டார்.
அதே நேரம் பி. ஏ. வுக்கு இண்டர்காமில் அழைப்பு விடுத்தாள் வித்யா.
பி. ஏ. சுதாகர் உள்ளே நுழைந்தான்.
காலைல எட்டு லெட்டர் தந்திருக்கேன் நான். ஆச்சா?
ஒரு மணி நேரம்கூட ஆகலை. எல்லாமே பெரிய லெட்டர் எப்படி மேடம்?
என்ன உன் ஸ்பீட்?
40 வார்த்தைகள்…
மன்னிக்கணும்! இந்த ஸ்பீட் போதாது. இன்னும் பதினைஞ்சு நாள்ல நீ உன்னை உயர்த்திக்கலைனா, இந்த வேலைல நீடிக்க முடியாது. சரிதானா?
சுதாகரின் முகம் வெளிறியது.
வெளியே வந்தான்.
அவன் அவளுக்கு அந்தரங்கச் செயலாளராக வேலையில் சேர்ந்து ஒரு மாதம்கூட ஆகவில்லை. பதிவி ஆட்டம் கண்டுவிட்டது.
இவன் நாலாவது நபர். அப்பாவிடம் பி. ஏ. வாக இருந்த பெண் ஏதோ ஆபரேஷன் என்று வேலையை ராஜினாமா செய்துவிட்டதால் வந்த வினை.
இண்டர்காம் அழுத்தினாள்.
ஜி. எம். பேப்பர்ல ஒரு விளம்பரம் குடுங்க. பி. ஏ. இண்டர்வியூவுக்கு கால்ஃபர் பண்ணுங்க. இன்னும் ஒரு மாசத்துல நடக்கணும்.
பரபரவென தன் வேலையைத் தொடங்கிவிட்டாள்.
இந்த நேரம் வித்யா பற்றி:
மணிவர்மா பெரிய தொழிலதிபர். பல கோடி சொத்துக்கு சொந்தக்காரர். அவரது ஒரே மகள் தான் வித்யா. சிறு வயதில் தாயை இழந்துவிட்ட பெண். தகப்பனைத் தவிர வேறு உறவுகளைப் பார்த்து அறியாதவள்.
கொழுத்த பணம், பதவி, அளவுக்கதிகமான சலுகை, எல்லாமாகச் சேர்ந்து வித்யாவை திமிரும், அகம்பாவமுமாக வளர்த்துவிட்டது.
மணிவர்மாவே ஓரளவு தலைக்கணம் பிடித்த ஆசாமி தான். வித்யா அவரையே மிஞ்சும் அளவுக்கு வளர்ந்து வந்தாள்.
ஆனால் படிப்பு? விளையாட்டு, புலமை, பாட்டு, நடனம் என்று எதையும் விட்டு வைக்கவில்லை.
சகலத்திலும் முதலிடம். யாரும், எதிலும் தன்னைத் தாண்டிவிடக்கூடாது என்று வெறியோடு உழைத்து, வெற்றிக் கனியை பறிக்கும் பெண் வித்யா.
உள்ளூரில் பட்டப்படிப்பு முடித்து, லண்டனில் மானேஜ்மெண்ட் முடித்து, ஸ்டேட்சில் இன்னும் பல பட்டங்களை அள்ளிக்கொண்டு வித்யா தாயகம் திரும்பவே தாமதமாகிவிட்டது. அப்போது அவளுக்கு வயது இருபத்தி ஆறு. கம்பெனியின் நிர்வாகத்தை அவளுக்குப் பழக்கத் தொடங்கிவிட்டார் மணிவர்மா.
ஒருவருட காலமெல்லாம் சரியாகத்தான் ஓடியது. கம்பெனி பற்றி முழு அறிவு பெற்றுவிட்டாள் வித்யா.
அவளுக்குத் திருமணம் பேசும் முயற்சியில் மணிவர்மா இறங்கத் தொடங்கிய சமயம் ,