Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kangal Sollum Kavithai
Kangal Sollum Kavithai
Kangal Sollum Kavithai
Ebook89 pages30 minutes

Kangal Sollum Kavithai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352856541
Kangal Sollum Kavithai

Read more from Lakshmi Praba

Related to Kangal Sollum Kavithai

Related ebooks

Reviews for Kangal Sollum Kavithai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kangal Sollum Kavithai - Lakshmi Praba

    http://www.pustaka.co.in

    கண்கள் சொல்லும் கவிதை

    Kangal Sollum Kavithai

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    கண்கள் சொல்லும் கவிதை

    1

    வானம் பூப்பூவாய் துறிக்கொண்டிருந்தது.

    சீராகக் கிள்ளி பறிக்கப்பட்ட தேயிலைச் செடிகளின் மீது, பன்னிர் தெளிப்பதைப் போன்று பொழிந்த துறலை விழிகள் விரியப் பார்த்தாள் வேதா.

    இருபுறமும் சற்றே சாய்வாய் இழைத்து விடப்பட்ட சாலைகளும், அடிக்கடி பொழியும் மழை நீர் அச்சரிவில் வழிந்து இரு மருங்கிலும் ஒடையாய் ஒடும் அழகையும் கண்டு அவளது மனம் குளிர்ந்தது. இயற்கையில் லயித்தது.

    ஒரே ஒரு கணம்தான்!

    நின்று நிதானித்து ரசிக்கும் நிலையிலா அவள் இருக்கிறாள்?

    கவலை பாறாங்கல்லாய்மனதை அழுத்திக்கொண்டிருந்தது.

    பார்வையைத் தழைத்தபடி... சட்டென்று தனது நடையைத் துரிதப்படுத்தினாள்.

    சரிவில் இருந்து மேட்டை நோக்கி வந்துகொண்டிருந்த வயதான ஒரு மனிதர், யோசனையுடன் நெற்றியைச் சுருக்கி... வேதாவை ஆழ்ந்து கவனித்தார்.

    தோட்ட வேலைக்குச் செல்பவர் போலும்!

    கிழவர் தன்னை உற்று நோக்கியதைக் கண்ட வேதாவுக்கு 'திக்’கென்று இருந்தது.

    "கொஞ்சம் நில்லு தாயீ! உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே? போன மாசம்தான் நான் இந்த எஸ்டேட்டுக்கு வந்தேன். இதுக்கு முன்னால... சென்னையை அடுத்த மாங்காட்டுல இருந்தேன். அங்க இருந்த வரைக்கும் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்கு நான் அடிக்கடி சாமி கும்பிடப் போவேன் தாயீ!

    இப்ப ஞாபகம் வந்திருச்சு. அங்க பவுர்ணமி, வெள்ளிக்கிழமை, நவராத்திரி, புதுவருஷம் மாதிரி விசேஷ நாட்கள்லே நீ மேடையேறி அற்புதமா பாடுவியே?

    ஏகப்பட்ட கூட்டம் கூடும். அப்படியே உன் பாட்டைக் கேட்டு லயிச்சுப் போயி உட்காந்திருக்கும்.

    'தெய்வீகக் களையோட... மேடையில பிரமாதமா சாமிபாடல்களைப் பாடறாளே இந்தப் பொண்ணு...? இந்தக் காலத்துல, இந்த அளவுக்கு பக்தியா ஞானத்தோட அடக்க ஒடுக்கமா இருக்கிற பொண்ணை எங்கேயாச்சும் பார்க்க முடியுமா? அப்படின்னு கூட்டத்துல இருக்கிறவங்க உன்னைப் பத்தி ரொம்பவும் பெருமையா பேசிக்குவாங்க தாயீ!

    இப்ப நீ என்னத்துக்கு இந்த எஸ்டேட்டுக்கு வந்திருக்கே? ஒருவேளை உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?" முதியவரின் விழிகள் ஆர்வமாய் அவளது கழுத்தை ஆராய்ந்தன.

    மிகவும் உரிமை எடுத்துக்கொண்டு தனது அந்தரங்க விஷயத்தில் மூக்கை நுழைத்த அவரை மெல்ல ஏறிட்டாள் வேதா.

    உள்ளூர எரிச்சலும், திகிலும், வேதனையும் கிளைவிட்டுப் படர்ந்தன.

    "இ... இல்லைங்கய்யா! நீங்க நினைக்கிற பொண்ணு நான் இல்லை. நீங்க சொல்ற கோவில் எங்கே இருக்குன்னே தெரியாது.

    எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லே இருந்து, இந்த எஸ்டேட்டை விட்டு எங்கேயும் போனதே இல்ல.மன்னிக்கணும்... நான் அவசரமா ஒரு இடத்துக்குப் போக வேண்டியது இருக்கு" என்று சொன்னதும், இடைமறித்து நின்று கொண்டிருந்த முதியவர் சட்டென்று விலகி வழிவிட்டார்.

    அவள் சொல்வதை முழுமையாக நம்ப முடியாமல் அவளை ஏற இறங்கப் பார்த்தார்.

    அவர் மேற்கொண்டு பேசவாயைத் திறக்கும் முன்... அவசரமாக நடையை எட்டிப் போட்டு விரைந்தாள் வேதா.

    பெரியவரிடம் அப்பட்ட மான பொய்யைச் சொல்லிலிவிட்டேனே ?

    கண்ணில் விழுந்த மணலாய் மனசாட்சி உறுத்தியது.

    ‘அம்மா! மாங்காட்டு காமாட்சி தாயே... என்னைப் பொய் சொல்லும் நிலைமைக்கு ஆளாக்கிவிட்டாயே?

    பொய்சொல்லக்கூடாது. புறம் பேசக்கூடாது. அடுத்தவர்களுக்கு மனதாலும் தீங்கு நினைக்கவே கூடாது.

    முடிந்தவரை பிறருக்கு உபகாரமாக இருக்க வேண்டும்.

    கண்ணியமாக நேர்மையாக நடக்க வேண்டும்.

    'ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1