Moongil Devathaigal
By GA Prabha
()
About this ebook
Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Read more from Ga Prabha
En Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratingsManasukkul Pozhiyum Mazhai Rating: 4 out of 5 stars4/5Uravai Naadum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsAasai Veedu Rating: 5 out of 5 stars5/5Veppamarathu Pookkal Rating: 5 out of 5 stars5/5Sol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsPeiyena Peiyum Mazhai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Moongil Devathaigal
Related ebooks
Veppamara Theankoodu... Rating: 0 out of 5 stars0 ratingsKarpizhantha Carbon Copygal Rating: 5 out of 5 stars5/5Sonthamena Nee Irunthal… Rating: 0 out of 5 stars0 ratingsThottathellam Penn Rating: 0 out of 5 stars0 ratingsAranmanai Kudumbam Rating: 0 out of 5 stars0 ratingsNetru Varai Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsSirakugal Murivathillai Rating: 0 out of 5 stars0 ratingsKannellam Unnodudhaan Rating: 2 out of 5 stars2/5Karumbai Nam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Varuvaal, Kaadhal Devathai… Rating: 3 out of 5 stars3/5Oru Mul Oru Malar Rating: 1 out of 5 stars1/5Nandhini 440 Voltz Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Irukkum Ponnaana Nimidangal Rating: 0 out of 5 stars0 ratingsMaari Varum Thalaimuraigal Rating: 0 out of 5 stars0 ratingsMarumagal Rajyathil... Rating: 0 out of 5 stars0 ratingsNaanthan Kolai Seithean Rating: 0 out of 5 stars0 ratingsபட்டு மாமி! Rating: 0 out of 5 stars0 ratingsThuppakki Vidu Thoothu Rating: 0 out of 5 stars0 ratingsYaaga Pasukkal Rating: 0 out of 5 stars0 ratingsMaalai Nera Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Theriniley... Rating: 0 out of 5 stars0 ratingsKanney, Nerungathey! Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Poomaalaiye Thol Serava Rating: 3 out of 5 stars3/59 Tharavum 9 Giragangalum Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Thotta Kaatru Rating: 4 out of 5 stars4/5Kangal Sollum Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsSorgathukku Kaditham Podu Rating: 0 out of 5 stars0 ratingsAruge Vandhu Pazhagu Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Malarkirathu! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Moongil Devathaigal
0 ratings0 reviews
Book preview
Moongil Devathaigal - GA Prabha
http://www.pustaka.co.in
மூங்கில் தேவதைகள்
Moongil Devathaigal
Author:
ஜி.ஏ.பிரபா
G.A.Prabha
For more books
http://www.pustaka.co.in/home/author/ga-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
1
"துங்கைநதி வாசகனே! தூயவனே சரணம்
குருராஜா சரணம், சரணம்"
விழிகளை, விரல்களால் மூடி, தியானித்து விழித்தாள் ரமா.
உள்ளங்கை பூவாய் விரிந்தது. மலர்ந்த கைகளில் மருதாணிச் சிவப்பு. அதன் வாசத்தை இழுத்து நுகர்ந்தாள். இன்னும் முழுதாக உதிராமல், பச்சை மருதாணி மிச்சமிருந்தது. பச்சையும், சிவப்பும் கலந்த நிறம், மருதாணி வாசமே மனதுக்கு சுகமாக இருந்தது.
கடந்து சென்ற மின்விளக்கின் ஒளியில் விரல்கள் ஜொலித்தது. இதமான காற்றும், ரெயிலின் ஆட்டமும் ‘தூங்கேன்’ என்றது. ஆனால் முடியவில்லை. நெஞ்சுக்குள் இருந்த குழப்பம், பயம், எதிர்காலம் பற்றிய கவலை எல்லாமே தூக்கத்தை பறித்தது.
எழுந்து உட்கார முயன்றாள். மேல் பெர்த் பலகை தலையில் இடித்தது. அதில் வீணா இழுத்துப் போர்த்தி மூட்டையாய் சுருண்டிருந்தாள். எதிரில் கலா. அவளுக்கும் மேலே ராணி, வாணி.
தூங்குமூஞ்சிகளா
திட்டிக் கொண்டே நகர்ந்து, ஜன்னல் வழியே பார்த்தாள். இருட்டில் மினுக், மினுக் என்று மின்மினிப் பூச்சிகள் பறக்கும் வயல்வெளிகள். தூரத்தில் ஏதோ ஒரு குடிசை வாசலில் மங்கி எரியும் பல்பின் ஒளி.
இரவு நேரத்தில் தூங்காமல் ரெயில் பிரயாணம் செய்வது ரசனையாகத்தான் இருக்கிறது. கடந்து செல்லும் கிராமத்து புகைவண்டி நிலையம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அள்ளிக் கிடக்கும் இருள். வழித்துப் பூசிய இருள் கூட அழகுதான்.
ஆதாமிடம் சைத்தான் சொன்னது போல் இருளும் அழகுதான். அதன்பின் ஒரு அற்புத வாழ்க்கை மறைந்து கிடக்கிறது. வந்து பார் என்றது.
தானும் அதேபோல்தான் போகிறோமா?
இருந்த ஒரே உறவு தாத்தா. அவரும் இறந்து,ஈரோட்டில் கல்லூரிப் படிப்பை முடித்து, ஒரே ஆதரவாய் சுந்தரத்தை தேடி வருகிறாள். சுந்தரம், அவர் மனைவி ருக்மணி அன்பைத் தருவார்கள்.
அவரின் மகன் கோபிநாத் டாக்டர். மகள் மனோன்மணி கல்லூரி மாணவி. அவர்களுக்கு தன்னைப் பிடிக்குமா? ரமாவின் அப்பா, சுந்தரம் இருவரும் பால்ய நண்பர்கள். இறக்கும்போது அப்பாவுக்கு தந்த வாக்குறுதிக்காக சுந்தரம் ரமாவை அரவணைக்கலாம்.
மற்றவர்கள்?
ரமாவின் தாயாரும், தந்தையும் ஒரு விபத்தில் இறந்து போக ஒரே பெண் ரமா. தாய்வழிப் பாட்டி வீட்டில் வளர்ந்தாள். அடிக்கடி சுந்தரம் அவளை தன் வீட்டிற்கு அழைத்துப் போவார். பெற்றவர்களின் அன்பு அங்கு கிடைத்தது.
ஆனால் இது நிரந்தரமா?
பாட்டி, தாத்தா அடுத்தடுத்து இறந்துவிட, மாமா, அத்தைக்கு ரமா சுமையாகிப் போனபோதுதான் சுந்தரம் வந்தார்.
அம்மாடி ரமா! உன் அப்பாவுக்கு சாகறப்போ நான் சத்தியம் செஞ்சு தந்திருக்கேன். ரமாதான் என் மருமகள்னு கோபிக்கு நீதான் மனைவி. ஹாஸ்டல்ல சேத்து விடறேன். படிப்பு முடிஞ்சதும் கல்யாணம்
என்றார்.
அவளின் பொறுப்பு முழுதும் அவர்தான் என்றாலும் கோபி டாக்டர். எதுவுமில்லாத ரமாவை மருமகளாக ஏற்க மனம் வருமா? யாருமில்லாத அனாதை. தட்டிக் கேட்க யாருமில்லை என்று அகற்றி விடுவார்களோ?
ஜிலீர் என்றது பயம்.
‘சீச்சி... நல்லதே நினை’ தலையில் தட்டிக் கொண்டாள்.
ஏன்? தலைக்குள்ள என்ன குடையுது?
-வாணி.
முழிச்சிட்டியா?
எங்க தூங்கினேன். ஒரே லைட் வெளிச்சம். கிராஸ் பண்ற ரெயிலோட பேரிரைச்சல்
வாணி குதித்து இறங்கினாள்.
மருதாணி எப்படிச் சிவந்திருக்கு?
சூப்பர்
நேத்து நைட் மாட்டேன்னு சொன்னே!
டிரெய்ன்ல போறப்போ யாரானும் கைல மருதாணி இட்டுப்பாங்களா?
ஏன் இட்டுகிட்டா என்ன?
சிரமமா இருக்கும்ல காரியம் செய்ய?
என்ன காரியம்? டிரெய்னை கூட்டி சுத்தம் செய்யப் போறியா?
ரமா புன்னகைத்தாள்.
அச்சோ! அழகே! என் அழகே!
வாணி கட்டிப்பிடித்து ரமாவை முத்தமிட்டாள். தன்மேலான வாணியின் அன்பு புரிந்ததால் ரமா மென்மையாக போதும்டி
என்றாள்.
எப்படி ரமா எந்நேரமும் மென்மையா இருக்கே! அமைதி, சாத்வீகம், பொறுமை. பட்டின் மென்மை.
அனாதைன்னா, இந்த குணங்கள் வந்துரும்.
அனாதைன்னு சொல்லாதே! நான் இருக்கேன்.
தேங்க்ஸ் வாணி.
என் நம்பர், அட்ரஸ் எல்லாம் இருக்குல்ல?
இருக்கு வாணி.
எப்பன்னாலும் உடனே போன் பண்ணு. பறந்து வந்துருவேன்.
கண்டிப்பா...
ஆவடி வந்தாச்சா?
கலா எட்டிப் பார்த்தாள்.
சென்னையைத் தாண்டியாச்சா?
-வாணி.
பைன்! எங்க போறது வண்டி?
ம்... பிசாசு லோகத்துக்கு. உன் ஊர்தானே அது.
அடடா, சொந்தபந்தங்களை பார்க்கப் போறேன். கைல எதுவுமே வாங்கலையே
கலா வருத்தப்பட்டாள்.
ஒரு கிலோ பன்றிக் காய்ச்சல் வாங்கிட்டுப் போயேன்.
தீர்ந்து போச்சாம். குரங்கு காய்ச்சல்தான் இருக்காம்.
ஏன்?
நாம்பல்லாம் போறோம்ல. குரங்கு காய்ச்சல்தான் வரும்.
வாடி! என் கிஷ்கிந்தைச் செல்வி
வாணி கைகளை அகல விரித்து நீட்டினாள்.
பிசாசுகளா?
வீணா கத்தினாள். தூங்க விடுங்கடி.
அம்மாடி... இறங்கு கீழே. அடுத்த ஸ்டேஷன் சீர்மிகு சென்னை மாநகராம். ராணி, இறங்கு தங்கம்
என்றாள் கலா.
ரமா தன் பைகளை இறக்கி வைத்தாள். இரண்டு லெதர் பைகள். கூடை. அதில் புத்தகங்கள். மூன்று வருட கல்லூரி படிப்பின் மிச்சம்.
இத்தனையையும் தூக்கிட்டு எப்படிப் போவே ரமா?
மாமா வருவார்னு நினைக்கிறேன்.
சுந்தரம்தான் வந்து அழைத்துப் போவதாக இருந்தது. ஆனால் திடீரென்று ஒரு சொற்பொழிவு ஒப்பந்தம் ஆகிவிட்டது. புராண சொற்பொழிவாளர். அவருடைய தொழில். எனவே அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை ரமா.
என் பிரண்ட்ஸ் சென்னை வர்றவங்க இருக்காங்க மாமா. அவங்ககூட வந்துடறேன். நீங்க ஸ்டேஷனுக்கு வந்துடுங்க.
பயமில்லையே!
என்ன பயம் மாமா. அஞ்சுபேர் வரோம்.
பத்திரமா வந்துடுவியா?
ஏகப்பட்ட கவலையுடன் சுந்தரம் கேட்டார். வாணி, கலாவிடம் திரும்பத் திரும்ப சொல்லிவிட்டுத்தான் கிளம்பினார். ஹாஸ்டல் காலி செய்யும் கடைசி தினம் மட்டும் அவளின் தாய் மாமா சண்முகம் வருவாரோ என்ற நப்பாசை. ஈரோடுதான் மாமாவுக்கு.
செல் நம்பரில் அழைத்தபோது அத்தைதான் எடுத்தார்.
கிளம்பறேன் அத்தை.