Vinveli Odangal
By GA Prabha
()
About this ebook
Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Read more from Ga Prabha
En Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratingsAasai Veedu Rating: 5 out of 5 stars5/5Uravai Naadum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsManasukkul Pozhiyum Mazhai Rating: 4 out of 5 stars4/5Peiyena Peiyum Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsManathin Arathanai Rating: 5 out of 5 stars5/5Sol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vinveli Odangal
Related ebooks
Vinveli Odangal Rating: 0 out of 5 stars0 ratingsKaattrukkenna Veli? Rating: 5 out of 5 stars5/5Engey Enathu Kavithai Rating: 5 out of 5 stars5/5Thendral Rating: 0 out of 5 stars0 ratingsEnnulle Nirainthai Rating: 0 out of 5 stars0 ratingsKanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Sila Nerangalil Sila Manushigal Rating: 0 out of 5 stars0 ratingsMathana Moga Rooba Sundara!! Rating: 0 out of 5 stars0 ratingsVanna Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsPeiyena Peiyum - Kaadhal! Rating: 2 out of 5 stars2/5Kalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsPoo Vaasam Purappadum Penney Rating: 4 out of 5 stars4/5Kaadhal Vaibogame Rating: 2 out of 5 stars2/5Sol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsNaanaliley Kaaleduthu... Rating: 0 out of 5 stars0 ratingsVenpura Nesam Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsநிறம் மாறும் பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsUnnudane Naan Rating: 4 out of 5 stars4/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Nandha Rating: 0 out of 5 stars0 ratingsPon Maalai Mayakkam Rating: 4 out of 5 stars4/5Poomaalaiye Thol Serava Rating: 3 out of 5 stars3/5Ellaigalatra Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsKai Kotti Siriyaaro! Rating: 0 out of 5 stars0 ratingsPuthai Manal Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Banthalitten! Rating: 0 out of 5 stars0 ratingsAlamarathu Kiligal Rating: 0 out of 5 stars0 ratingsEnnavale... Ennavale... Rating: 0 out of 5 stars0 ratingsPoovukul Uyir Vaasam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vinveli Odangal
0 ratings0 reviews
Book preview
Vinveli Odangal - GA Prabha
http://www.pustaka.co.in
விண்வெளி ஓடங்கள்
Vinveli Odangal
Author:
ஜி.ஏ.பிரபா
G.A.Prabha
For more books
http://www.pustaka.co.in/home/author/ga-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
1
"வாழ்க்கையே ஒரு புதிர் நிறைந்த புதையல்தான்
அடுத்த நிமிஷம் என்னவென்று அதற்கே தெரியாது."
"நித்தம் நித்தம் பொழுது எல்லாம்
நிம்மதி ஆக்கி அருள்வாய்
நிமலனே! ஆனை முகத்தானே போற்றி"
கை கூப்பி நின்றாள் ஜானகி.
சொடீர்
என்று வெடித்துச் சிதறியது தேங்காய். ஆஹா அருமையான சகுனம்
உற்சாகத்துடன் கூவினார் அப்பா.
எல்லாரும் வரிசையா போய் கார்ல ஏறுங்கோ
உத்தரவிட்டார்.
ஜானூ நீ முன்னாடி போய் ஏறும்மா
பெரியண்ணா சொல்லவும் ஜானு முன்பக்கம் வந்தாள். படி இறங்கி, கேட்டைத் திறந்தாள்.
வாசலில் பெரிய தாமரைகள் கோல வடிவில் கலர், கலராய் மலர்ந்திருந்தது. நீலம், சிவப்பு, ரோஜா நிறம் என்று வர்ணம் காட்டியது. சுற்றிலும் பறக்கும் வண்டுகள் என்று கோலம் எதிர்வீடு வரை பவியிருந்தது.
ஜோரா இருக்கு
அண்ணி பாராட்டியதும் சின்ன அண்ணி மலர்ந்தாள்.
நான்தான் போட்டேன் ஜானு
எத்தனை மணிக்கு எழுந்தீங்க அண்ணி
ரெண்டு மணி. சரியா ஒரு மணி நேரம் ஆச்சு. ஆனா, இந்த அழகைப் பார்த்ததுல சலிப்பு தெரியல.
எதுக்கு அண்ணி சிரமம்?
என்ன சிரமம்? நம்ம வீட்டுப் பொண்ணு நீ. உனக்கு கல்யாண நிச்சயதார்த்தம். எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?
நோட் தட் பாயிண்ட் ஜானு. உன்னை வீட்டை விட்டு துரத்தறதுல எல்லோருக்கும் அத்தனை குஷி
சின்ன அண்ணா மணி கலாய்த்தான்.
போதும்
அம்மா அதட்டினாள்,கார்ல ஏறுங்க
வலது காலா? இடது காலா? எந்தக் கால்?
சீனு
உங்களுக்கு எல்லாம் கால் எதுக்குடா? ஜன்னல் வழியா எட்டிக் குதிக்கறவங்களாச்சே
என்றார் மாமா.
எனக்கு பயமே அதுதான்மாப்பிள்ளை வீட்டுல நிறைய மரங்கள் இருக்கு. இதுங்க அதுலதான் இருக்கும்
என்றார் அப்பா.
அப்பா இது டூ மச்
என்றான் மணி.
கரெக்ட் மச்சி
என்றார் மாமா.
சகிக்கலை
ஏறுங்கன்னா கதையா?"
எஜமானி உத்தரவு
அப்பா குனிந்து வணங்கினார்.
நீ ஏறு ஜானு
சின்ன அண்ணி பானு கைபிடித்து உள்ளே ஏற்றினாள். பின் சீட்டில் ஜன்னல் ஓரமாக அமர்ந்தாள். ஒவ்வொருவராக ஏற, அண்ணி ஜானகியின் அருகில் அமர்ந்தாள்.
பத்துபேர் அமரக்கூடிய மினிவேன். வசதியாக சீட் எல்லாம் மெத்தென்று இருந்தது. ஜன்னலை திறந்துவிட்டாள். பனிக்காற்று உள்ளே நுழைந்தது.
அதிகாலை பனி பிடித்திருந்தது.
இப்படி பனிக்காற்று முகத்தில் பட, பயணம் செய்வது ஜானுவுக்கு பிடித்த விஷயம். அதுவும் ஜன்னலோர சீட்டில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தபடி பயணிப்பது இனிமையான அனுபவம்.
தெரு அமைதியாக இருந்தது. பனி இருள் முழதாக மூடியிருந்தது. தெருக்கோடி விளக்கு கம்பத்தின் கீழ் படுத்திருந்த நாய் ஒன்று எழுந்து குரைத்துவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டது.
தெரு தாண்டி மெயின் ரோட்டுக்கு வந்ததும் நகரம் மின் விளக்குகளால் ஜொலித்தது. ஏதோ கட்சிக் கூட்டங்களுக்காக வரிசையாக கொடிக் கம்பங்கள், நட்டு, மின்விளக்குள் ஒளிர்ந்தன.
குளிரியது. ஜானு சால்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டாள். கண்மூடிச் சாய்ந்து தூங்க முயன்றாலும் முடியவில்லை.
இரண்டு நாளாக சரியான தூக்கமில்லை. கல்யாணம் முடிவான நாளிலிருந்தே தூக்கம் பறிபோய்விட்டது. இனம் புரியாத பயம், கவலை, குழப்பம், இயல்பாய் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் இனிமையான கனவுகளோ, உணர்வுகளோ அவளுக்குள் எழவில்லை.
பயம்.. கவலை.
எல்லோருக்கும் வர்றதுதான். தாலி ஏறினா சரியாயிடும்
என்றாள் அண்ணி பானு. அனுபவம் பேசுகிறதோ?
பானு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருகில் அமர்ந்து பேசுவாள். தைரியம் சொல்லுவாள். பானு அண்ணி இல்லை. அன்னை, தோழி, பெரிய அண்ணி நீலாவால் குடும்பமே நிலை தடுமாறி நின்ற சமயத்தில், தாங்கிப் பிடித்து, ஆறுதல் தந்து, நிமிர்த்தியவள் பானுதான்.
பானு சொல்வதுதான் சட்டம் என்று, குடும்பத்தின் தூணாகிப் போனவள். அண்ணி மாதிரி தானும் வாழவேண்டும், வாழுவோம்.
தனக்கு நிச்சயம் செய்த ஜெகனின் முகத்தை நினைவுக்கு கொண்டு வர முயன்றாள். கருநிழலாய் முகம் ஆடியதே தவிர, முழு உருவம் பதியவில்லை. பத்து நிமிஷம் பார்த்ததுதான். பெண் பார்க்க வந்த அன்று குனிந்து நமஸ்காரம் செய்து எழுந்தபோது பார்த்தது கேட்ட இரண்டொரு கேள்விகளுக்கு பதில் கூறினாள். அவ்வளவுதான்.
எப்படிப்பட்டவன் ஜெகன்?
பேசின வரைக்கும் நல்லவனா தெரியறாம்மா. எல்லோரும் நல்ல விதமாத்தான் சொல்றாங்க
அப்பா திருப்தியாகத்தான் பேசினார்.
பாங்க்ல வேலை ஒரே பையன். ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகிச்சு. மாமனார் பென்ஷன் வாங்கறார். நல்ல குடும்பம் நீ என்ன சொல்ற ஜானு?
நீங்க எது சொன்னாலும் சரிப்பா.
அப்பாவுக்கு பெருமையாக இருந்தது. சொல்பேச்சு மீறாத மரியாதையான குழந்தைகள். எத்தனை பேருக்கு இது கிடைக்கும்?
நீங்களும் எங்களுக்காகத்தானே வாழறீங்க...?
எத்தனை குழந்தைகள் அதை புரிஞ்சுக்கறாங்க
அன்பை எதிர்பார்ப்பு இல்லாம வழங்கினா போதும்.
என் சொத்தே நீங்கதாம்மா?
அப்பா கரைந்தார்.
அப்பா போதும் உணர்ச்சி வெள்ளத்துல மூழ்கி மூச்சு திணறது
மணி கையெடுத்துக் கும்பிட வீடே சிரித்தது, குதூகலித்தது. அம்மா ஓடிப்போய் உப்பும், மிளகாயும் எடுத்து வந்து சுற்றிப் போட்டாள்.
எத்தனை சந்தோஷமான குடும்பம் இது!
இதனுடைய மகிழ்ச்சியும், கலகலப்பும் ஜெகன் வீட்டில் கிடைக்குமா? சந்தேகமே மனதைக் குடைந்தது.
கிருஷ்ணா எழுந்துட்டாளா?
பானு கேட்டாள்.
அவளை எழுப்பி படிக்க வச்சிட்டுத்தான் வந்தேன். எங்க அத்தை அதெல்லாம் பாத்துக்குவார்
என்றாள் அம்மா.
பாவம், இந்த எக்ஸாம் மட்டும் இல்லைன்னா அவளும் வந்துருப்பா
தங்கை நிச்சயத்துக்கு வராதது கொஞ்சம் வேதனைதான் என்றாலும் பிளஸ் ஒன் முழு ஆண்டுத் தேர்வு என்பதால் அவள் வரவில்லை.
அம்மாவின் அத்தை ஒருத்தி துணைக்கு வந்திருக்கிறாள்.
இங்கேயே நிச்சயம் செய்திருக்கலாம். ஜெகனுக்கு கோவையில்தான் வேலையே. அதனால் சொந்த ஊரில்தான் நிச்சயம்