Moondravathu Kan!
5/5
()
About this ebook
He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Read more from Indira Soundarajan
Dhinam Oru Uyir! Rating: 5 out of 5 stars5/5Asura Jathagam Rating: 5 out of 5 stars5/5Sivaragasiyam Rating: 5 out of 5 stars5/5Pei... Pisasu... Bootham Rating: 4 out of 5 stars4/5Rajathanthiran Rating: 5 out of 5 stars5/5Thiruvannamalai Rating: 3 out of 5 stars3/5Aranmanai Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Manam Oru Marmadesam Rating: 5 out of 5 stars5/5Nandhi Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Chidambara Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Kannip Parunthu Rating: 5 out of 5 stars5/5Ezhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Oru April Puthisaali Rating: 5 out of 5 stars5/5Kaatthiruntha Naagam Rating: 5 out of 5 stars5/5Yandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Sivam Rating: 4 out of 5 stars4/5Thottathellam Pon Rating: 5 out of 5 stars5/5Mandhira Vaasal Rating: 5 out of 5 stars5/5Aval Oru Savithri Rating: 5 out of 5 stars5/5Kannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Kaatru… Kaatru... Uyir Rating: 3 out of 5 stars3/5Sathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Ennodu Vaa Rating: 5 out of 5 stars5/5Rudhra Veenai - Part 3 Rating: 4 out of 5 stars4/5Sithargal Raajyam Rating: 5 out of 5 stars5/5Nooravathu Kadathal Rating: 5 out of 5 stars5/5Markazhi Roja Rating: 5 out of 5 stars5/5Ore Oru Vaarthai Rating: 5 out of 5 stars5/5Mandhira Valai Rating: 5 out of 5 stars5/5Maayamaai Silar Rating: 5 out of 5 stars5/5
Related to Moondravathu Kan!
Related ebooks
Thik... Thik... Thik... Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsJenma Jenmamai Rating: 0 out of 5 stars0 ratingsPon Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsEnge En Kannan Rating: 0 out of 5 stars0 ratingsEttu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5Jeeva En Jeeva Rating: 3 out of 5 stars3/5Vidave Vidathu! Rating: 5 out of 5 stars5/5Antha Onbathu Per Rating: 5 out of 5 stars5/5Pallavan Pandiyan Baskaran Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Nooru Kodi Roopai Vairam Rating: 0 out of 5 stars0 ratingsAbaya Vanam Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Kodi Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsSaagasa Mohini Rating: 2 out of 5 stars2/5Mandhira Vaasal Rating: 5 out of 5 stars5/5Tharisanam Rating: 0 out of 5 stars0 ratingsUyiril Kalandha Uravey… Rating: 1 out of 5 stars1/5Oru Uyirin Kural Rating: 0 out of 5 stars0 ratingsAnalai Kaayum Ambuligal Rating: 5 out of 5 stars5/5Aanandha Thaandavam Rating: 5 out of 5 stars5/5Moongil Kaattu Nila Rating: 0 out of 5 stars0 ratingsNandhi Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Krishnadaasi Rating: 5 out of 5 stars5/5Maaya Nilavu Rating: 5 out of 5 stars5/5Adhu Mattum Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsMaayap Punnaigai Rating: 0 out of 5 stars0 ratingsOru Kavirajanin Kathai: Kalamega Pulavanin Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsKoottirkkul Puhuntha Uyir Rating: 5 out of 5 stars5/5Amma... Athma... Anuppama... Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Moondravathu Kan!
1 rating0 reviews
Book preview
Moondravathu Kan! - Indira Soundarajan
http://www.pustaka.co.in
மூன்றாவது கண்!
Moondravathu Kan!
Author:
இந்திரா செளந்தர்ராஜன்
Indira Soundarajan
For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
இந்தக் கதையின் முன் பாகம் மாணிக்க நாகம்
நாவலாக வந்துள்ளது…
மூன்றாவது கண்!
1
ஜில்லென்று கொல்லி மலை மீது ஏறிக் கொண்டிருந்தது அந்த பேருந்து. உள்ளே கணேஷ்! வாலிப வசியக் காரனாட்டம் உருவம். விண்டோ வழியாக மலையழகை ரசித்துக் கொண்டே வருகிறான்.
அருகிலேயே அவனது மதிப்பிற்குரிய மனிதராக தேவராஜ். மெடீரியல் டெக்னாலஜியில் அமெரிக்கா வரை போய் எம்.எஸ். பட்டம் வாங்கி வந்திருப்பவர். இன்று கணேஷ் பணிபுரியும் ஃபாசனர்ஸ் கம்பெனியின் அதிகாரி.
அவர் எப்படி இவனோடு...?
கேள்விக்கு பதிலாக அவரே நிமிர்ந்து பார்த்து கேட்கிறார்.
கணேஷ் இன்னிக்கு நிச்சயமா நாம அந்த சாமியாரை பார்ப்போம்தானே?
நிச்சயம் சார். ஏன் சார் சந்தேகம்...?
இல்ல கேட்டேன்...
என்று சொல்லிவிட்டு திரும்ப ஒரு குட்டிதூக்கம் போட ஆரம்பித்தார்.
கணேஷிற்கு சிரிப்பு வந்தது. கூடவே சற்று கலக்கமும் ஏற்பட்டது.
இப்படி தேவராஜோடு அவன் மலை ஏறுவது ஒன்றும் முதல் தடவையில்ல…
போன தடவை வந்தபோது மலை ஜனங்கள். ஒரு மகாத்மாவாக கருதிப் பேசிய சாமியாரை சந்தித்ததும், அவர் விக்கித்துப் போகும்படி தனக்கு தங்கம் தந்ததும் ஒரு கனவு போல தோன்றி மறைகிறது.
தங்கம் செய்யத் தெரிந்த சித்தர் அவர்...
ரசவாத ரகசியமறிந்த மகாத்மா...
மலைக்காட்டில் நூற்றி இருபது வருடங்களாக சலிப்பே இல்லாமல் சுற்றி வருபவர்.
கழுத்தில் சதா ஒரு மாணிக்க நாகம் பிணைந்தபடி இருக்கும்' என்று பலர் சொன்னதும் மிக்க இளம் பிராயத்திலேயே இறந்துவிட்டதன் அப்பா டைரியில் எழுதி வைத்திருந்ததும் அதை அறிந்து அவரை சந்திக்க கடந்த முறை கிளம்பி வந்ததும் அவன் நினைவில் ஆலவட்டம் கட்டுகின்றன.
திருட்டுத்தனமாக அருவிக்கரையில்தான் பார்க்க முடிந்தது அவரை.
முதலில் கோபித்துத் தள்ளி விட்டார்.
இருந்தாலும் கூட இருந்த ஒரு பெண் காரணமாகவோ, இல்லை வேறு என்ன காரணமோ அந்த கோபம் சாபமாகவில்லை.
ஆனாலும் கணேஷ் மனதில் அது ஒரு வசந்த மின்னலாகத்தான் படிந்துவிட்டது.
கேள்விப்பட்ட செய்தியில்தான் எத்தனை உண்மை? கூட நிற்கும் பொன்னியம்மாள் என்கிற பெண்ணும் ஒரு மலை ஜாதிக்காரியாக அந்த சாமியாரின் சிஷ்யையாகி அசாத்தியமான ஒரு பெண்ணாகத் தெரிந்தாளே...
நினைத்துப் பார்க்கிறான் கணேஷ். ஊர்ந்தபடி இருக்கிறது பேருந்து. அற்புதமான மலைநாடு. இதமான குளிர் மனதில் பிரமிப்பூட்டும் நினைப்புகள்.
அதை எவ்வளவுதான் அடக்கினாலும் எகிறிக் கொண்டு அந்த மலையில் ஃபாரஸ்டராக வாழ்ந்து திரிந்து பின் சில சமூக விரோதிகளால் கொல்லப்பட்ட அவனது அப்பா சிவகுருநாதன் பற்றியும் நினைத்துப் பார்க்கிறது.
ஒரு வகையில் இது மனதை மயக்கும் மலை மட்டுமல்ல... மனதை பிசையும் மலையும்கூட...
அப்பா சிவகுருநாதன்... ஒரு வித்தியாசமான மனிதர். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே இந்த மலைச்சாமியாரை பார்த்து பேசி தங்கம் தங்கம் என்று அரற்றியவர்.
அதற்கு பின் அவர் உயிரோடு திரும்பவேயில்லை. சாமியாரை சந்தித்த அதே நாளில் அவர் டைரி எழுதி முடித்த நிலையில் திரும்ப காட்டுப் பக்கம் சுற்றி வந்த போது சில சமூக விரோதிகள் ஒளிந்திருந்து அவரை சுட்டு வீழ்த்திவிட்டனர்.
சட்டையிலும் அந்த தோட்டா துளையிட்ட துவாரங்கள் இன்றும் நினைவுப் புள்ளியாக வீட்டில் இருக்கிறதே.
பஸ் ஒடிக் கொண்டேயிருக்கிற்து. நினைவு நினைத்துக் கொண்டேயிருக்கிறது. முக்கியமாக கடந்த சந்திப்பில் அந்த சாமியார் சொன்னதில் போய் நிலை கொள்கிறது அது.
உன் அப்பா சாவை நோக்கி போறத நான் உணர்ந்தேன். ஆனா தடுக்கலை போகட்டும்னு விட்டுட்டேன்
என்றார்.
எப்படி விட மனது வந்தது அவருக்கு... விடை தெரிய வேண்டிய ஒரு கேள்வியாக கணேஷை இறுக்குகிறது அது.
அப்படியே தங்கமும் தந்து, 'போய் உன் குடும்பச் சிக்கலை தீர்த்துவிட்டு வா...' என்றாரே எப்படி? ரசவாதம் தெரியுமோ? ரசவாதம் நிஜமோ?
கேள்வி ஊஞ்சலில் ஆடத் தொடங்குகிறான். எல்லாம் அவரை இன்று பார்த்தால்- பேசினால் புலப்பட்டு விடுமோ?
நீ திரும்பிவா… உனக்கு ஒரு முக்கிய வேலை இருக்கிறது என்றும் சொன்னாரே... அப்பொழுது அந்த பெண் மலைஜாதிக்காரி பொன்னியம்மாளோ கன்னியம்மாளோ முறைத்துப் பார்த்தாளே... இதற்கெல்லாம் அர்த்தம் என்னவாக இருக்கும்?
பழைய நினைவுகளில் மூழ்கி நடந்தவைகளை நினைத்து கலங்கியும் சிலிர்த்தும் அந்த மலைத் தலத்தை பார்த்தபடியே சிலிர்த்தபடி வந்து கொண்டிருக்கும் கணேஷை ஒரிடத்தில் பஸ்ஸை நிறுத்தி கண்டக்டர் கத்தி இறக்கினார்.
ஒடம்பள்ளம்... ஒடம்பள்ளம்...
-சப்தம் கணேஷை மட்டுமல்ல, தேவராஜையும் சேர்த்து இறக்கிவிட்டது.
அங்கிருந்து குறுக்கில் ஒரு ஒற்றையடிப்பாதை. அதில் நடந்தால் அந்த மலையின் பிரதான அருவி வரும். அருவியா அது... சொர்க்கம்... சொர்க்கம். அங்குதான் போன முறை அந்த மர்மச் சாமியாரை சந்தித்தான்.
இன்றும்...
கணேஷின் நம்பிக்கை வீண் போகவில்லை. அருவியில் ஒற்றைக்காலில் நின்றபடி துளியும் சலனம், சங்கடம், அசைவுகள் ஏதுமின்றி யோக நிலையில் குளித்துக் கொண்டிருந்தார் சாமியார். இருவர் வருவதைப் பார்த்து குளியல் நீங்கி கரைக்கு வந்தார்.
'சொன்னபடியே வந்துட்டீங்களே... அவரிடம் இதமான வரவேற்பு கூடவே கணேஷைப் பார்ப்பவர், வரும்போது பஸ்ஸுல உன் அப்பா நினைப்பு அதிகமா இருந்ததா?
என்றும் கேட்டுவிட்டு கண் சிமிட்டுகிறார். கணேஷ் மிடறுவிழுங்க, குறிப்பா நான் உன் அப்பா சாகப் போறது தெரிஞ்சும் தடுக்காம ஏன் விட்டேங்கற கேள்வி பிரதானமாக இருக்குமே?
என்று அவர் கேட்க, கணேஷாம் ஆமோதிப்பாய் தலை அசைக்க, சலங்கை சப்தம் ஊடுருவியது.
திரும்பினால் அந்த மலை ஜாதிக்காரி பொன்னியம்மாள். அவர்களைப் போலவே அவரை சந்திக்க விரும்பி அங்கு வந்தவள், அந்த சித்த சாமியாரைப் பார்த்து கைகூப்பி வணங்க, அவர் அவளை ஆசீர்வதிப்பது போல கையை அசைத்துவிட்டு மெல்லத் திரும்பச் சொன்னார்.
நான் மனசு வைச்சிருந்தா உன் அப்பாவை அன்னிக்கு காப்பாத்தியிருக்கலாம். ஆனா, ஏனோ செய்ய மனசு வரலே. அதுக்கு பரிகாரமா உனக்கு சில உதவி செய்ய விரும்பறேன். கூடவே நீயும் எனக்கு சில காரியம் பண்ணணும்..
என்று அவர் கூறக் கூற கணேஷின் கண்கள் கலங்கிப் போயின.
2
தான் மனது வைத்திருந்தால் சிவகுருநாதனை அன்று காப்பாற்றியிருக்க முடியும் என்று சித்தர் சொன்ன சொல் கணேஷை பிடித்து ஒர் உலுக்கு உலுக்கியது.
'சித்தர் மனது வைக்காமல் விட்டதால் அப்பா இறந்து போனாரா?' மனக்கேள்வியுடன் அவன் முன் நிமிர்ந்தான்.
சாமி... என் அப்பா சாவைப் பற்றின எதையும் என்கிட்ட மறைக்காதீங்க. என் மனசை நெடுநாளா தடைஞ்சுகிட்டிருக்கிற ஒரு விஷயம் அது. என் அப்பா -வுல மர்மம் இருக்கறதாகூட நான் நினைக்கறதுண்டு. இப்ப நீங்க என்னடான்னா, நான் மனசு வைச்சிருந்தா அன்னிக்கு காப்பாத்திருக்கலாம்னு சொல்றது எனக்கு ஆச்சரியம் தருது. எங்க அப்பா எப்படிச் செத்தார்? நீங்க ஏன் -ன் அப்பாவை தெரிஞ்சே சாகவிட்டீங்க?
கணேசா... பதட்டப்படாதே. சாமி எல்லாத்தையும் சொல்வார்
என்று செல்வராஜன்