Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Santhosa Samrajyam
Santhosa Samrajyam
Santhosa Samrajyam
Ebook84 pages33 minutes

Santhosa Samrajyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100703021
Santhosa Samrajyam

Read more from Indira Soundarajan

Related to Santhosa Samrajyam

Related ebooks

Related categories

Reviews for Santhosa Samrajyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Santhosa Samrajyam - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    சந்தோஷ சாம்ராஜ்யம்

    Santhosa Saamrajyam

    Author:

    இந்திரா சௌந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    கல்யாண வீடு என்றாலே ஒரே குதூகலம்தான்!

    இத்தனைக்கும் கடன்பட்டுத்தான் பலர் திருமணத்தையே நடத்துகின்றார்கள். கல்யாண மண்டப வாடகை, சாப்பாட்டுச் செலவு, பட்டுத் துணிமணி, நகை நட்டு என்று கணக்குப் போட்டால் குளோரோஃபார்ம் இல்லாமலே மயக்கம் வரும்.

    ஆனாலும் அதைப்பற்றி நினைக்காமல் இரண்டு பேர் புதியதாக குடும்ப வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்க இருப்பதை மனதில் கொண்டு அதற்காக செலவழிப்பதை நினைக்கும்போது விஸ்வ நாதனுக்கு சிரிப்பாக இருந்தது.

    விஸ்வநாதன் எப்பொழுதுமே இப்படித்தான்.

    எதிலும் வித்யாசமான பார்வை அவனுக்கு.

    அதுதான் நண்பன் பிரபாகரின் கல்யாணத்துக்கு வந்த இடத்திலும் இப்படி சிந்திக்க ஆரம்பித்துவிட்டான்.

    யார் ரசிக்கிறார்கள் ரசிக்கவில்லை என்கிற கேள்விக்கோ, பார்வைக்கோ துளிகூட இடம் கொடுக்காமல் நாதஸ்வரக்காரர் வாசித்துக்கொண்டிருந்தார். அங்கும் இங்குமாக பிரபாகர் வீட்டுப் பெண்களும் நடந்து கொண்டிருந்தார்கள். அதில் சிலரிடம்தான் வேலை நோக்கம் இருந்தது. பலர் கூடியிருக்கும் இடத்தில் தங்களது பட்டுப்புடவைக்காகவே சிலர் நடந்துகொண்டிருந்தார்கள். கல்யாணம் என்று ஒன்று நடப்பதே பட்டுப்புடவை கட்டிக்கொண்டு, நகைகள் எல்லாம் போட்டுக்கொள்ளத்தான் என்கிற மாதிரிகூட தோன்றியது.

    பிரபாகரும் மாப்பிள்ளை அழைப்புக்கு தயாராகிக்கொண்டு இருந்தான். அவனுக்கு கோட்டு சூட்டைப் போட்டு மேலும் கீழும் இழுத்து விட்டு அழகு பார்த்துக்கொண்டிருந்தார்கள் சிலர். நீ உன் உடம்பை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு சும்மா இரு என்கிற மாதிரி அவனைச் சுற்றி சுற்றி வந்து பௌடர் போடுவதும் பின் அது கூடி விட்டதாக நினைத்து எச்சில் ஒற்றிய கர்ச்சீப்பால் துடைத்து விடுவதும் பார்க்க வேடிக்கையாக இருந்தது.

    கழுத்திலும் நல்ல விரல் பருமனின் சங்கிலி!

    சாதாரண நாட்களில் போட்டுக்கொண்டு நின்றால் பைத்தியக்காரன்கூட வெறுத்துப்போய் முறைப்பான். ஆனால் இப்போது அதெல்லாம் போட்டால்தான் மாப்பிள்ளை லட்சணமே தித்திக்கும் என்கிற மாதிரி அதை மாட்டிவிட்டு ஒரு இரண்டடி பின்னால் போய் அது எப்படி இருக்கிறது என்கிற பார்வை வேறு.

    இந்தக் கூத்தை எல்லாம் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்த விஸ்வநாதனின் அருகில் ஒருவர் சிரித்தபடி வந்து உட்கார்ந்தார். ஆள் கன்னங்கறுக்க தோண்டி எடுத்த நிலக்கரி மாதிரி இருந்தார். இருந்தாலும் பட்டு வேட்டி சட்டை, விரலில் மோதிரம் என்று கொஞ்சம் டாலடித்தார்.

    தம்பி யார்... மாப்பிள்ளைக்கு உறவா? என்று கேள்வி வேறு.

    இல்ல... நான் மாப்பிள்ளை கூட வேலை பாக்கறேன்.

    அப்படியா சேதி... ரொம்ப சந்தோஷம். நான் பொண்ணுக்கு மாமா முறை.

    -அவன் கேட்காமலே அவர் அறிமுகத்தில் புகுந்தார்.

    அப்படியா...?

    ஆமாம்... ஏன் இப்படி தனியா உட்காந்துகிட்டிருக்கீங்க. உங்க ஃபிரண்ட்சுங்களோட சேர்ந்து சீட்டுக் கச்சேரி போட வேண்டியதுதானே?

    -அவர் எதற்காக வந்திருக்கிறார் என்பது விஸ்வநாதனுக்கும் சன்னமாக புரிந்தது.

    இல்ல... எனக்கு சீட்டாடத் தெரியாது! என்றான் நிதானமாய். அடுத்த நொடி அவர் பார்த்த பார்வையே ஒரு தினுசாக இருந்தது.

    என்ன தம்பி நீங்க... சீட்டாடத் தெரியாதுங்கறீங்களே. இந்தக் காலத்துல இப்படி ஒரு புள்ளையா... ஆமா மாப்ளை எப்படி?

    அவனுக்கும் சீட்டாடத் தெரியாதுன்னுதான் நினைக்கிறேன்.

    -அவர் முகத்தில் உள்ள சொல்ல முடியாத ஒரு பரவசம். அப்படியே ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே... - என்று பீடிகை போட்டார். விஸ்வநாதனும் இணக்கமாகப் பார்த்தான்.

    உங்களுக்கு இந்த சிகரெட் பீடின்னு, ஏதாவது...

    இல்ல... அதெல்லாம் எதுவும் கிடையாது!

    பான்பராக் - ஜர்தா பீடான்னு அப்படி ஏதாச்சும்...

    அதுவும் கிடையாது!

    மாப்பிள்ளைக்கு?

    -விஸ்வநாதன் இப்பொழுதுதான் அவரது பீடிகைக்கு பொருள் தெரிந்தது.

    "பிரபாகர் தங்கமான பையன்க. அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. நானாவது கொஞ்சம் சைட் அடிப்பேன். அவனுக்கு அதுகூடத்

    Enjoying the preview?
    Page 1 of 1