Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Un Vaanam En Arukil
Un Vaanam En Arukil
Un Vaanam En Arukil
Ebook304 pages1 hour

Un Vaanam En Arukil

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100402900
Un Vaanam En Arukil

Read more from Rajesh Kumar

Related to Un Vaanam En Arukil

Related ebooks

Reviews for Un Vaanam En Arukil

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Un Vaanam En Arukil - Rajesh Kumar

    www.pustaka.co.in

    உன் வானம் என் அருகில்

    Un Vaanam En Arukil

    Author :

    ராஜேஷ்குமார்

    Rajeshkumar

    For other books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    மதிப்புரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    என்னுரை

    வணக்கம் வாசக உள்ளங்களே!

    'உன் வானம் என் அருகில்!' என்னும் தலைப்பில் உங்கள் கரங்களில் இடம் பிடித்துள்ள நாவல், படித்து முடித்ததும் உங்கள் இதயங்களிலும் நிச்சயமாய் ஒரு இடத்தைப் பிடித்துக்கொள்ளும் என்று நம்புகிறேன்.

    இந்த நாவல் 'வாசுகி' வார இதழில் தொடர்கதையாக வெளிவந்து 'ஒரு பெண்ணுக்கு அழகைக் காட்டிலும் ஒழுக்கம் முக்கியம் என்பதை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட கதை இது. ராகினியைப் போன்ற பெண்கள் இந்த சமுதாயத்தின் சில பக்கங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று செயல்பட்டு சில நிமிஷ வானவில்களாய் வாழ்ந்து மறைந்துபோய்விடும் பெண்களும் உண்டு. அதுமாதிரியான பெண்களை எச்சரிக்கும் வகையில் எழுதப்பட்ட நாவல்தான் 'உன்வானம் என் அருகில்!'

    இந்த நாவலுக்கு மதிப்புரை வழங்கியுள்ள டாக்டர் டி. சீனிவாசன் அவர்கள் நரம்பியல் நிபுணர், ஹிப்னாடிச மருத்துவர். ஆயிரக்கணக்கான மனித மனங்களைப் படித்தவர். அவர் இந்த நாவலுக்கு மதிப்புரை வழங்கியுள்ளார். மதிப்புரையில் அவர் சொன்னக் கருத்துக்களைவிட, புத்தகத்தைப் படித்துவிட்டு டெலிபோனில் நிறைய நேரம் பேசியபோது சொன்ன கருத்துக்கள் அதிகம். அவர்க்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த நாவலை மிகச் சிறப்பான முறையில் வடிவமைத்து, அழகிய புத்தகமாக்கி, இலக்கிய பூங்காவில் உலாவவிட்ட பூம்புகார் பதிப்பகத்தார்க்கு என் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மீண்டும் என் வணக்கம்.

    மிக்க அன்புடன்

    ராஜேஷ்குமார்.

    Dr. D. சீனிவாசன், M.D., D.P.M.

    மன நரம்புத் தளர்ச்சி நோய் நிபுணர்

    குடிபோதை நீக்கியல் நிபுணர்

    ஹிப்னாடிச மருத்துவ நிபுணர்

    கோவை மெடிக்கல் சென்ட்டர் அண்டு ஹாஸ்பிடல் (KMCH)

    தபால் பெட்டி எண்: 3209,

    அவினாசி ரோடு,

    கோவை - 641 014.

    மதிப்புரை

    'ஆஹா...!' என்று கதாநாயகன் விவேகானந்தன் கூறும் வசனத்தோடு ஆரம்பிக்கிற, 'உன் வானம் என் அருகில்' கதை நிறைவு பெறும்போது 'ஆஹா…!' அருமையான கதை, கதாபாத்திரப் படைப்பு, எதிர்பாரா திருப்பங்கள், என்று கூற வைக்கிறது.

    ரொமாண்டிக்கான ஆரம்பம். இப்படியொரு ஆதர்ஸ கணவன் நமக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தைப் பல வாசகியரிடம் ஏற்படுத்தக்கூடிய நிஜமான முழுமையான ஹீரோ.

    நாவலின், மென்மையான, கவிதையான அந்த ஆரம்பம், பன்னிரண்டாம் பக்கத்திலேயே படுவேகம் கொண்டு பந்தயக் காரை விட வேகமாக ஓடுகிறது. போட்டியாக நமது இதயத்தின் துடிப்பும்.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட இவரது நாவல்களைப் படித்திருந்தாலும், அடுத்து வருவதை யூகிக்க முடியாதபடி பயணிக்கிறது இவரது கற்பனை வளம்.

    இது ஒரு நவீன ராமாயணம் என்றே தோன்றுகிறது. ராமனுக்கு நிகரான விவேகானந்தன் உண்டு. இராவணனும் மாரீசனும் கலந்த பாத்திரமும், அனுமனும், அசோகவனமும் கூட உண்டு. நவீன அக்னிப்பிரவேசமும் உண்டு.

    மனோதத்துவ ரீதியில் பிரச்னையை அணுகுகிற ராஜேஷ்குமார், சமுதாயக் கேடுகளால் மனம் வருந்தி அவற்றை மாற்ற விழைவது தெரிகிறது. இவர் நீதி வழுவாத நீதியரசர்; இவரது எழுத்து மன்றத்தில் குற்றத்திற்கு தண்டனை நிச்சயம்.

    சில கதைகளின் முடிவுகளைப் படித்த பின்பு யோசிக்கக்கூடிய பல அனுமானங்களில் அதுவும் ஒன்றாக இருக்கக்கூடும். ஆனால் தனது கதைகளில், முடிவினை யாரும் யோசிக்காத கோணத்தில் வைப்பது இவரது தனிச்சிறப்பு. அது ஆயிரம் பிறைகண்ட, மன்னிக்க ஆயிரம் நாவல் கண்ட இவரது இந்தக் கதையிலும் மிளிர்கிறது. நம்மை பிரமிக்க வைக்கிறது!

    - சீனிவாசன்

    1

    ஆஹா….! - என்றான் விவேகானந்தன்.

    என்னவாம்...? ராகினி காப்பி டம்ளரோடு - கணவன் அறைக்குள் நுழைந்தபடியே கேட்டாள். தலைக்குக் குளித்து - ஈரத்தை உறிஞ்சுவதற்காக டவலைச் சுற்றியிருந்த ராகினிக்கு நிஜமாகவே எலுமிச்சம்பழ நிறம். சந்தன வர்ணத்தில் 'க்ரிப்ட்' சேலை உடலைச் சுற்றியிருக்க - சொர்ண விக்கிரகத்தை நினைவுபடுத்தினாள்.

    விவேகானந்தன் திரும்பினான்.

    ராகினி....! அந்த கவிதை தொகுப்பை படிச்சுப் பார்த்தியா....?

    இன்னும் இல்ல………… நேத்துதானே வாங்கிட்டு வந்தீங்க... நீங்க டேம் ஸைட்டுக்கு போன பின்னால் எடுத்து படிக்கலாம்னு இருந்தேன். ஆமா…… கவிதை தொகுப்போட பேர் என்ன….?

    கருப்பு நெருப்பு….

    எழுதினது...?

    "வெற்றிப்போராளிங்கற கவிஞர்...

    சும்மா சொல்லக்கூடாது.

    ஒவ்வொரு கவிதையும் ஒரு நிலை. கவனமா எழுதியிருக்கார்……. 'அம்மா' என்கிற தலைப்பில் அவர் எழுதியிருக்கிற கவிதையை படிச்சுக் காட்டட்டுமா...?"

    என்னங்க.., மணி எட்டாகுது…. நீங்க டேம் சைட்ல இருக்க வேண்டிய நேரம். கவிதையை படிச்சுட்டு உட்கார்ந்திருக்கீங்களே...? காப்பியைக் குடிச்சுட்டு கிளம்புங்க...

    இரு... இரு... டேம் எங்கே போயிடப் போகுது...? இன்னிக்கு சி. இ. மத்தியானத்துக்கு மேல்தான் ஸைட்டுக்கு வருவார்… அந்தக் கவிதையைப் படிக்கிறேன்… கேளேன்...

    சரி, படிங்க...

    விவேகானந்தன் வார்த்தைகளை அழுத்தம் திருத்தமாய் உச்சரித்து கவிதையைப் படித்தான்.

    அம்மா!

    நீ என்னைச் சுமந்த அந்த

    முன்னூறு நாட்களும்

    என் வாழ்வின்

    பெளர்ணமி நாட்கள்.

    உன் கர்ப்பச் சிம்மாசனத்தில்

    என்னை ஏற்றி வைத்து

    கெளரவப்படுத்தியவள் நீ!

    என் அசைவுகளுக்கு அர்த்தங்கள்

    ஆயிரம் கண்டவள் நீ.

    என் முணுமுணுப்பையும்

    முகச்சுளிப்பையும் கூட

    மொழி பெயர்த்தவள் நீ.

    உலகில் கறுப்பை வெள்ளையாக்கும்

    கலையைக் கண்டிருக்கிறேன்.ஆனால்

    நீ மட்டுமே சிவப்பை

    வெள்ளையாக்கும் சக்தியைப்

    பெற்றிருந்தாய்.

    ஆம்!

    ரத்தச் சிவப்பை பால் வெள்ளையாய்

    பரிணாமப்படுத்தியவள் நீ

    கவிதை படிப்பதை நிறுத்திவிட்டு ராகினியை ஏறிட்டான் விவேகானந்தன், எப்படி ஒவ்வொரு வரியும் அமர்க்களமாய் இல்லை....?

    ராகினியின் பெரிய - கரிய கண்களில் நீரின் பளபளப்பு. பதறிப்போய் எழுந்தான்.

    என்ன ராகினி....? ஏன் அழறே...?

    நீ... நீங்க அந்த கவிதையைப் படிச்சதும்…

    படிச்சதும்...

    அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி செத்துப்போன என்னோட அம்மா ஞாபகம் வந்துடுச்சு... சேலைத் தலைப்பால் கண்களை ஒற்றிக் கொண்டாள் ராகினி.

    சரியாப் போச்சு... புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்தான் விவேகானந்தன். உன்னை என் வாழ்க்கையோட எந்த நிமிஷத்திலும் கண்கலங்க விட மாட்டேன்னு உங்கப்பாகிட்ட சத்தியம் பண்ணாத குறையாக சொல்லித்தான் கல்யாணம் பண்ணியிருக்கேன்... நீ அப்படி கண்ணை கசக்கினா நான் எடுத்த உறுதிமொழி என்னாகிறது...?

    ஸாரிங்க… என்று கொஞ்சலாய் சொன்னவளை அணைத்துக் கொண்டான் விவேகானந்தன்.

    இன்னைக்கி உனக்கும் எனக்கும் ஒரு விசேஷமான நாள் தெரியுமா....

    விசேஷமான நாளா...? ராகினி விழிக்க....

    ஆமா… இன்னைக்கு என்ன மாசம்...? தேதி...?

    மே... அஞ்சு.

    நமக்கு என்னைக்கு கல்யாணம் ஆச்சு...?

    ஜனவரி இருபத்தஞ்சு

    கல்யாணமாயி எவ்வளவு நாளாச்சுன்னு கணக்குப் போட்டுப் பாரு...

    அரை நிமிஷ நேரம் யோசித்து கணக்கு போட்ட ராகினி, ஆர்ப்பாட்டமாய் மலர்ந்தாள்.

    அட... இன்னைக்கு நூறாவது நாள்…

    கொண்டாடிடலாமா?

    இந்தக் காட்டுப் பகுதியில் எப்படி கொண்டாடுறதாம்? அக்கம்பக்கத்து குவார்ட்டர்ஸில் இருக்கிற எல்லாருமே குழந்தைகளை கூட்டிக்கிட்டு வெக்கேஷனுக்குப் போயிட்டாங்க. இல்லேன்னா அவங்களையாவது கூப்பிட்டு நம்ம வீட்லேயே சின்னதா பார்ட்டி வைக்கலாம்…

    நூறாவது நாளை கொண்டாடத்தான் போறோம்.

    எப்படி?

    சாயந்தரம் டேம் ஸைட் ஜீப்பைக் கொண்டு வர்றேன். ரெண்டுபேரும் கிளம்பி டவுனுக்குப் போலாம்... ஒரு நல்ல ஹோட்டல்ல டிபன், ஒரு நல்ல சினிமா, ஒரு நல்ல பட்டுப் புடவை... ஒரு நல்ல...

    போதும்... போதும்… எனக்கு அதெல்லாம் வேண்டாம்.

    பின்னே....?

    டேம் ஸைட்டுக்கு மேல ஒரு மலையைக் கொடஞ்சு கோயில் கட்டியிருக்கிறதாய் சொன்னீங்களே...?

    ஆமா... துர்க்கை கோயில்.

    அந்தக் கோயிலுக்கு போவோம்..?

    ரோடு சரியாய் இருக்காதே…?

    ரோடு சரியா இல்லாமத்தான் எல்லாரும் போய்ட்டு வர்றாங்களா? அந்த சால்ஜாப்பெல்லாம் என்கிட்ட வேண்டாம்... உங்களுக்கு சாமி கும்பிடறது, கோயிலுக்கு போறது.... அதெல்லாம் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும். எனக்காக இன்னிக்கு நீங்க கோயிலுக்கு வந்தே ஆகணும்..

    உத்தரவு.... என்று கூறி வாய் பொத்தினான்.

    காப்பியை குடிச்சுட்டு டேம் ஸைட்டுக்கு கிளம்புங்க…..! மத்தியான சாப்பாட்டை அமர்க்களமா ப்ரிப்பேர் பண்ணப் போறேன். சரியா ஒரு மணிக்கெல்லாம் வந்துடுங்க...

    ம்... ம்... ராகினியை இழுத்து அணைத்து கன்னத்தில் மெல்ல முத்தமிட்டுவிட்டு ஸ்கூட்டர் சாவியை எடுத்துக்கொண்டான் விவேகானந்தன்.

    அணைக்கட்டை ஒட்டிய பகுதியில் இருந்த பொறியாளர் அலுவலக கட்டிடத்தின் முன்னால் ஸ்கூட்டரை நிறுத்தினான் விவேகானந்தன்.

    ரோஸ்நிற போஹன்வில்லா பூப்பந்தலுக்கு கீழ் நின்றிருந்த அஸிஸ்டெண்ட் என்ஜினியர் சேவியர் ஓடி வந்தான்.

    குட்மார்னிங் ஸார்...

    குட்மார்னிங்....! சி.இ. டவுனுக்கு போயிட்டாரா?

    காலையில ஆறுமணிக்கெல்லாம் போயிட்டார் ஸார்... மத்தியானத்துக்குள்ளே திரும்பிடுவேன்னார்...

    சரி ரிவர் இன்-கம்மில் ப்ளோ எப்படி இருக்கு? நார்மலா... அதிகமாயிடுச்சா?

    கொஞ்சம் அதிகமாயிருக்கு ஸார்... பில்லூர் பக்கம் சுமாரா மழை பெய்ஞ்சிருக்கு...

    வெதர் ரிப்போர்ட் ரிஸீவ் பண்ணீங்களா…?

    போன் பண்ணி கேட்டேன் ஸார்... அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளே ரிப்போர்ட் தர்றதா சொன்னாங்க...

    சோம்பேறிப் பசங்க...

    விவேகானந்தன் எரிச்சலாய் முனகிக் கொண்டே போய் நாற்காலியில் சாய்ந்தான். மேஜையின் மேல் சி.ஈ. கையெழுத்தோடு ட்யூட்டி ஷெட்யூல் சார்ட் காற்றுக்கு படபடத்துக் கொண்டிருக்க - அதன் முதுகின் மேல் கண்ணாடி பேப்பர் வெயிட் சவாரி செய்து கொண்டிருந்தது. அதை கை நீட்டி எடுக்க முயன்றான்.

    டெலிபோன் கிணுகிணுத்தது.

    ரிஸீவரை எடுத்தான்.

    ஹலோ...?

    நான்தாங்க... ராகினியின் குரல்.

    மலர்ந்தான். என்ன ராகினி…

    புறப்படறப்ப கேக்க மறந்துட்டேன்.

    என்ன?

    இன்னைக்கு மத்தியானம் என்ன அயிட்டம் பண்ணட்டும்?

    உனக்கு பிடிச்சதை பண்ணேன்…

    நோ... நோ... உங்க சாய்ஸ்தான் இதில் முக்கியம். ம்… அயிட்ட லிஸ்ட்டை சொல்லுங்க பார்க்கலாம்...

    தக்காளி பிரியாணி, வெங்காய சட்னி, உருளைக் கிழங்கு பொடிமாஸ், கோதுமை பாயசம்...

    போதுமா…?

    போதும்… போதும்…

    சரியா ஒரு மணிக்கெல்லாம் வந்துடுங்க...

    12:59க்கு உன் முன்னாடி இருப்பேன்.

    குட் பாய்...

    ஏ... ஏய்... என்னது?

    "ஸாரிங்க… கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்..! பழைய ஞாபகம், டிகிரி முடிச்சதும்

    Enjoying the preview?
    Page 1 of 1