Kaanal Neeril Neenthum Meengal
By Rajesh Kumar
()
About this ebook
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Read more from Rajesh Kumar
Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsSivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Vivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Thavarukkum Thavarana Thavaru! Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsVivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Mudhal Nimisham Rating: 2 out of 5 stars2/5Virpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Iruttile Rendu Per Rating: 4 out of 5 stars4/5
Related to Kaanal Neeril Neenthum Meengal
Related ebooks
Ellam Poi Rating: 0 out of 5 stars0 ratingsPuthaithu Vaitha Nila Rating: 0 out of 5 stars0 ratingsPoiyai Thavira Verondrumillai Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maarum Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsThik Thik December Rating: 0 out of 5 stars0 ratingsParappatharku Oru Vanam Vendum Rating: 4 out of 5 stars4/5Arai Vinaadi Aniyaayam Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maarum Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsOru Thuli Kadal! Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nizhal Illadhavan Rating: 0 out of 5 stars0 ratingsIthu Kadhal Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsThirakkaaatha Jannalgal Rating: 0 out of 5 stars0 ratingsNovember Raththirigal Rating: 0 out of 5 stars0 ratingsMannikkapatta Manaram Rating: 5 out of 5 stars5/5Ratthamillatha Manithan Rating: 0 out of 5 stars0 ratingsNewyork Nila Rating: 0 out of 5 stars0 ratingsOndrum+Ondrum=Ondru Rating: 0 out of 5 stars0 ratingsMenmaiyaai Oru Vanmurai Rating: 0 out of 5 stars0 ratingsSendra Idamellam Irappu and Kannukkul Oru Mul Rating: 0 out of 5 stars0 ratingsKattrai Kaithu Sei Rating: 0 out of 5 stars0 ratingsMeluguvatthigal Rating: 0 out of 5 stars0 ratings9-vathu Thisai Rating: 4 out of 5 stars4/5Varnam Izhantha Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsSivappu Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsVellai Nizhal! Rating: 0 out of 5 stars0 ratingsEn Nizhalukkum Urakkamillai Rating: 0 out of 5 stars0 ratingsOru Theeppantham Theebamagirathu and Pasparas Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsThinam Thinam Thigil Thigil Rating: 0 out of 5 stars0 ratingsPuthiyathaai Oru Puthir Rating: 0 out of 5 stars0 ratingsKashmeeril Oru Karuppu Naal Rating: 5 out of 5 stars5/5
Reviews for Kaanal Neeril Neenthum Meengal
0 ratings0 reviews
Book preview
Kaanal Neeril Neenthum Meengal - Rajesh Kumar
http://www.pustaka.co.in
கானல் நீரில் நீந்தும் மீன்கள்
Kaanal Neeril Neenthum Meengal
Author:
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
1
விஷ்வா...!
கடற்கரை மணலை அளந்து கொண்டே கூப்பிட்டாள் அஜந்தா.
ம்...
மறுபடியும் ஒரு தடவை அந்தக் கவிதையைச் சொல்லு... கேட்கலாம்!
ஏன் புரியலையா அஜந்தா...?
புரிஞ்ச மாதிரியும் இருந்தது... புரியாத மாதிரியும் இருந்தது.
சரி... சொல்லட்டுமா...?
சொல்லு...
அஜந்தா ஆர்வமாய் நிமிர, விஷ்வா சொல்ல ஆரம்பித்தான்.
"நீ என்னருகில் இல்லை
என்பது
எவ்வளவு உண்மையோ...
அவ்வளவு உண்மை
நீ எனக்குள் இருக்கிறாய் என்பதும்..."
அஜந்தா தனக்கு எதிரே உட்கார்ந்திருந்த விஷ்வாவின் கன்னத்தை ஒரு தட்டு தட்டிவிட்டு சிரித்தாள்.
இப்ப புரியுது...
தப்பில்லை அஜந்தா. ட்யூப்லைட் கொஞ்சம் லேட்டாத்தான் எரியும்...
வேண்டாம் விஷ்வா! உன்னோட உளறலையெல்லாம் நான் ஒருத்திதான் கவிதைன்னு சொல்லி அங்கீகாரம் கொடுத்து கெளவரப்படுத்திட்டு இருக்கேன். அதைக் கெடுத்துக்காதே...!
- ஆட்காட்டி விரலை உயர்த்தினாள்.
ஸாரி... ஸாரி...
கண்ணாடி வீட்டுக்குள்ளே இருந்துகிட்டு கல் எறியற வேலையெல்லாம் வெச்சுக்காதே விஷ்வா!
சரி… சரி! அதான் ஸாரி கேட்டுட்டேனே!
சொன்ன விஷ்வாவை அஜந்தா உற்றுப் பார்த்தாள்.
ஐந்து விநாடிகளுக்கு நிலைத்த பார்வை. மணலில் இருந்த ஒரு சிறு கல்லை எடுத்து அவள் மீது எறிந்து கொண்டே சிரித்தான்.
என்ன அஜந்தா அப்படிப் பார்க்கிறே...?
எனக்கு ஆச்சர்யமா இருக்கு!
எதுக்கு ஆச்சர்யம்?
"நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்க ஆரம்பிச்சு ஒரு வருஷம் இருக்குமா?
சரியா பத்து மாசம். டிசம்பர் மூணாம் தேதி வந்தாத்தான் ஒரு வருஷம் கம்ப்ளீட்டாகும்!
இந்தப் பத்து மாசத்துக்குள்ள நம்ம காதல் ஆரோக்கியமா வளர்ந்து எந்த எதிர்ப்பும் இல்லாம நிச்சயதார்த்தம் வரைக்கும் போயிடுச்சு. இன்னும் மூணு மாசம் கழிச்சு விஜயா மஹாலில் கல்யாணம். உன்னால நம்ப முடியுதா?
"நம்ப முடியலைதான்! உன்னை நான் காதலிக்கிற விஷயத்தை வீட்ல சொன்னபோது அம்மாவும், அப்பாவும் ஒரு பத்து நிமிஷத்துக்கு அப்செட் ஆயிட்டாங்க. உன்னோட போட்டோவைக் காட்டினதும் அம்மா பச்சைக் கொடி காட்டிட்டாங்க.
நீ படிச்ச பொண்ணு. ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறேன்னு சொன்னதும், அப்பாவும் ஓ.கே. சொல்லிட்டார்.
என்னோட காதல் விவகாரம் வீட்ல ஒரு பெரிய பூகம்பத்தையே உண்டாக்கும். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக ஒரு பெரிய போராட்டத்தையே நடத்த வேண்டியிருக்கும்னு நெனைச்சேன். அதுக்கு அவசியம் இல்லாதபடி ஆயிடுச்சு!
அஜந்தா தன் அழகான பல்வரிசையைக் காட்டிச் சிரித்தாள்.
விஷ்வா...! உன்னோட வீட்லயாவது பத்து நிமிஷத்துக்கு எதிர்ப்பு இருந்தது. என்னோட வீட்ல ஒரு சின்ன எதிர்ப்பு முனகல்கூட இல்லை. அப்பாவும், அம்மாவும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. எத்தனையோ எதிர்ப்புகளுக்கு மத்தியில் சொந்த பந்தங்களைப் பகைச்சுக்கிட்டு அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டதாலே என்னோட காதலுக்கு எந்த மறுப்பும் சொல்லாம ஓ.கே. சொல்ல வேண்டியதாயிடுச்சு!
எப்படியோ... இந்த விஷயத்துல நீயும் நானும் ரொம்பவே அதிர்ஷ்டம் பண்ணியிருக்கோம்.
இல்லை விஷ்வா. ஒரு வகையில் நாம ரெண்டு பேரும் அன்லக்கி பர்சன்ஸ்!
எப்படிச் சொல்றே?
நிச்சயதார்த்தத்தைச் சீக்கிரம் சீக்கிரமா நடத்தினவங்க கல்யாணத்தை மட்டும் மூணு மாசம் தள்ளி வெச்சுட்டாங்களே?
அதுவும் ஒரு வகையில் நல்லதுதான்!
எப்படி நல்லது...?
அஜந்தா... இன்னும் ஒரு மூணு மாசத்துக்கு நாம் காதலர்களாய் இருக்கிற இந்தக் காலகட்டம்தான் திரில்லா இருக்கும். உன்னோட கழுத்துல தாலி கட்டிட்டா அந்தத் திரில் போயிருமே...?
விஷ்வா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய சட்டைப் பாக்கெட்டில் இடம் பிடித்திருந்த செல்போன் ரிங் டோனை வெளியிட்டது.
எடுத்து அழைப்பது யாரென்று பார்த்தான். பிறகு காதுக்குப் பொருத்தினான்.
அவனுடைய அம்மா பாக்கியலட்சுமி பேசினாள்.
டேய் விஷ்வா... இப்போ நீ எங்கே இருக்கே?
விஷ்வா சிரித்தான். பொய் சொல்லட்டுமா... உண்மையைச் சொல்லட்டுமாம்மா?
பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் இல்லை.
அப்படின்னா உண்மையைச் சொல்லிடறேன்...
சொல்லு.
நானும் உன்னோட மருமகளும் பீச்சுல உட்கார்ந்து காத்து வாங்கிட்டு இருக்கோம்.
ஏன்டா...! உனக்கு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்... அஜந்தாவைக் கூட்டிட்டு கண்ட இடத்துக்கும் போகாதேன்னு...
இது கண்ட இடம் இல்லேம்மா... பீச்தான்! பெசன்ட் நகர் பீச்சுல நல்ல வெளிச்சத்துல உட்கார்ந்துதான் பேசிக்கிட்டு இருக்கோம்...
டேய்... விஷ்வா! சென்னை முன்ன மாதிரி இல்லைடா. ரொம்பவே கெட்டுப் போயிடுச்சு. போன வாரம் வில்லிவாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் தனியா உட்கார்ந்து பேசிட்டிருந்த ஒரு ஆணையும், பெண்ணையும் ஒரு ரெளடி கும்பல் தாக்கி...
அய்யோ அம்மா! ராத்திரி பதினொரு மணிக்குக் கூட்டம் இல்லாத ஒரு ரயில்வே ஸ்டேஷன்ல அந்தச் சம்பவம் நடந்தது. நானும் அஜந்தாவும் அது மாதிரியான இடத்துக்குப் போவோமா?
சரி...! பீச்சை விட்டு எத்தனை மணிக்குக் கிளம்பறதா உத்தேசம்?
இன்னும் ஒரு மணி நேரத்துல கிளம்பிடுவோம்...!
அவ்வளவு நேரமாகுமா?
ஆமா! அஜந்தா பீட்ஸா ஹட் போகணும்னு சொன்னா. அங்கே போய் ஆர்டர் கொடுத்தா அரைமணி நேரமாயிடும். அப்புறம் 'பான் பான்' ஐஸ்க்ரீம் பார்லருக்குப் போய் பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுட்டு வீட்டுக்கு வர எப்படியும் ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆயிடும்.
அவ்வளவு நேரமாயிடுமா?
ஏம்மா, ஏதாவது முக்கியமான விஷயமா?
இல்லை... கொஞ்ச நேரத்துக்கு முந்தி உன்கூடப் படிச்ச ஹரிதா நம்ம வீட்டுக்கு வந்திருந்தா...
என்னது... ஹரிதாவா?
ஆமா... ஆமா...
மும்பையிலிருந்து எப்ப வந்தாளாம்?
இன்னிக்குச் சாயந்தரம்தான் வந்தாளாம். ஏதோ ஒரு ப்ராஜக்ட் விஷயமா வந்தாளாம். அப்படியே உன்னைப் பார்த்துட்டுப் போகணும்னு வந்தா. நீ வீட்ல இல்லைன்னு தெரிஞ்சதும் அவளுக்கு ஏமாற்றம் ஆயிடுச்சு.
சென்னை வந்ததுமே எனக்குப் போன் பண்ண வேண்டியதுதானே... ஏன் பண்ணலையாம்?
உன்னோட செல்போன் நம்பரை எப்படியோ தவறிப் போய் டெலிட் பண்ணிட்டாளாம்.
சரி, நம்ம வீட்டுக்கு வந்ததுமே பேசச் சொல்லியிருக்கலாமே...?
நான் உன்னோட நம்பர் குடுத்துட்டேன். உன்னைக் கான்டாக்ட் பண்ணிப் பேசுவா...
இப்ப ஹரிதா எங்கே?
நம்ம வீட்டில ஒரு அஞ்சு நிமிஷம்தான் இருந்தா. உடனே புறப்பட்டுப் போயிட்டா...
அப்படி என்ன அவசரமாம்?
அதென்னமோ தெரியலைடா... போன தடவை ஆறு மாசத்துக்கு முந்தி நம்ம வீட்டுக்கு வந்தப்ப எவ்வளவு கலகலப்பாப் பேசினா... ஒரு நாள் முழுக்க நம்ம வீட்லயே இருந்தா. இந்தத் தடவை அந்தக் கலகலப்பெல்லாம் மிஸ்ஸிங். எதையோ பறிகொடுத்தவ மாதிரி உம்முன்னு இருந்தா...
நீ காரணம் கேட்டியா?
ம்... ஏம்மா இப்படி இருக்கேன்னு கேட்டேன். ஃப்ளைட்ல சாப்பிட்ட ஃபுட் வயித்துக்கு ஒத்துக்கலை. ரெண்டு தடவை வாமிட் பண்ணிட்டேன். அதான் டயர்டா இருக்கேன்னு சொன்னா...
சரிம்மா... ஹரிதாவோட போன் நம்பர் என்கிட்டே இருக்கு. நான் அவகிட்டே பேசிக்கறேன்.
பேசிடு...
அம்மா மறுமுனையில் செல்போனை அணைத்துவிட, விஷ்வா எதிரில் உட்கார்ந்திருந்த அஜந்தாவை ஏறிட்டான்.
அவள் கேட்டாள். ஃபோன்ல யாரு... அத்தையா?
ம்...
என்ன சொன்னாங்க?
ஹரிதாவை உனக்குத் தெரியுமில்ல?
நல்லாவே தெரியும். சொல்லியிருக்கே... போட்டோ கூட காட்டியிருக்கே... நீயும் ஹரிதாவும் ஒரே காலேஜில் எம். சி.ஏ. பண்ணீங்க. ஹரிதா இப்ப மும்பையில் ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறா. நான் சொன்னதெல்லாம் சரியா?
ரொம்ப ரொம்ப சரி. அவ இப்ப சென்னைக்கு வந்திருக்காளாம். என்னைப் பார்க்கிறதுக்காக வீட்டுக்குப் போயிருக்கா. நான் வீட்ல இல்லைன்னதும் உடனே புறப்பட்டுப் போயிட்டாளாம்.
"ஷி இஸ் வெரி வெரி ஜோவியல். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போற விஷயத்தைச் சொல்லி உன் போட்டோவை அவளுக்கு மெயில்ல அனுப்பி வெச்சேன். போட்டோவைப் பார்த்துட்டு அவ