Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aasai Kiliye! Azhagiya Rani!
Aasai Kiliye! Azhagiya Rani!
Aasai Kiliye! Azhagiya Rani!
Ebook173 pages1 hour

Aasai Kiliye! Azhagiya Rani!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110002956
Aasai Kiliye! Azhagiya Rani!

Read more from Anuradha Ramanan

Related to Aasai Kiliye! Azhagiya Rani!

Related ebooks

Reviews for Aasai Kiliye! Azhagiya Rani!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aasai Kiliye! Azhagiya Rani! - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    ஆசைக் கிளியே! அழகிய ராணி!

    Aasai Kiliye! Azhagiya Rani!

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    எதிர்த்தாற் போல், இடுப்பில் இரு கைகளையும் பதிய வைத்தபடி, ஆடத் தயாராக இருக்கும் பெண்ணையே உற்றுப் பார்க்கிறான் பாலா.

    இந்தப் பெண்ணையா சொன்னான் திலீப்? இவளையா?

    அவன் பார்வையைத் தாங்க மாட்டாதவளாக அந்தப் பெண், கூடத்து விட்டத்தில் விழிகளைப் பதிக்கிறாள்.

    பதினேழு வயசுக்கும் - இன்னமும் குழந்தைத்தனம் மாறாத முகம். கதுப்புக் கன்னங்களில் மாசு மரு கிடையாது. சரசரவென அவசரமாய் இறங்கிய மூக்கு. சற்றே பெரிய, மாவடு போன்ற கண்கள். சிவந்து, அரளி மொட்டுப் போலக் குவிந்த இதழ்கள். மஞ்சள் பளபளக்கும் கன்னத்தில், லேசாகப் படர்ந்திருந்த பூனை ரோமம் கூட அவளுக்குத் தனிச் சோபையைத்தான் அளித்தது.

    பாவாடை தாவணியில் இருந்தாள் அவள். ஒரு சில நிலைகளிலிருந்து பார்த்தால் - இவளுக்குத் தாவணி கூட அனாவசியம் என்றுதான் தோன்றுகிறது பாலாவுக்கு.

    யூனிபார்ஃமை மாட்டி, இரட்டைப் பின்னல்களைப் போட்டு, கான்வென்ட்டுக்கு அனுப்பலாம்.

    அத்தனை சின்னப் பெண்.

    பாலா, திலீபனைக் கோபத்துடன் பார்க்கிறான். அவனோ மிகச் சுவாரசியமாக, அந்தப் பெண்ணின் அம்மாக்காரியிடமே பேசிக் கொண்டிருக்கிறான்.

    உம். அப்புறம்?

    அப்புறம் என்னங்க? கதையா சொல்றேன். அட நானும் உன்னைப் போல கோயம்புத்தூர்காரன் தாண்டீ. உம் பொண்ணைச் சினிமாவுல நடிக்க வைக்க நானாச்சுன்னு சொன்னான். அவன் வார்த்தையை நம்பி, நாலு வடம் சங்கிலி, நாகொத்து, காப்பு, காசு மாலையின்னு கிட்டத் தட்ட எழுபது பவுன் நகையை விற்று, பொண்ணுக்கு டான்ஸ் என்னா, பாட்டு என்னான்னு சகலமானதையும் சொல்லிக் கொடுத்து மிச்சச் சொச்சப் பணத்தையும் அந்தத் திருவாழத்தான் கையிலே கொடுத்து, அவன் பின்னாடி பட்டணத்துக்குப் போனோம். ஏதோ பீச்சு, கோடம்பாக்கம்னு நாலு இடம் சுத்திக் காட்டினான். ஒரு நாள் - இதோ, இங்கேயே இருங்க இப்ப வந்திடறேன்னு ஒரு முச்சந்தியில் நிக்க வச்சிட்டுப் போனான். அவ்வளவுதான். இன்னிக்கு வரைக்கும் அவனைக் கண்ணால் பார்க்கலை சாமீ.

    திலீபன் தாடையைத் தடவியபடி பாலாவைப் பார்த்துக் கண்ணடிக்கிறான்.

    ஆமா. நீங்க 'லேகா மரணம் ஒரு ஃப்ளாஷ் பேக்' பார்த்தீங்களா?

    அப்படியொரு சினிமாவா? நான் கேள்விப்பட்டதே இல்லையே.

    அம்மாக்காரி, விழிகளை அகலப் பிரிக்கிறாள். திலீப் சிரிக்கிறான்.

    அந்தச் சினிமாக் கதைகூட, இது மாதிரிதான். பரவாயில்லே. நீங்ககூட, அந்தப் புரொடியூஸர் மேல கேஸ் போடலாம். இது என் பொண்ணோட கதையாக்கும்னு.

    திலீப்!

    பாலா மெள்ள அதட்ட, அடுத்த நிமிஷமே அம்மாக்காரி பதறிப் போகிறாள்.

    சாருக்கு நேரமாச்சு போல இருக்கு... பாப்பா, நீ பதம் பிடிம்மா .

    அவள் தொண்டையைச் செருமிக் கொண்டு பாடத் தொடங்குகிறாள்.

    "நாதர் முடி மேலிருக்கும் நாகப் பாம்பே

    நச்சுப் பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே!"

    அம்மாக்காரிதான் பாடுகிறாள். குரல் அத்தனை சுகமில்லை . ஆனால் நடனம் கனகச்சிதமாக இருக்கிறது. உடம்பை வில்லாய் வளைக்கிறாள் அந்தப் பெண்.

    திலீபனின் கவனம்- அந்தச் சின்னப்பெண் மீது இல்லை . தாயார்க்காரியிடம்தான்.

    குரல்தான் கொஞ்சம் கரடு முரடாக இருக்கிறதே தவிரநாற்பது வயசுக்கும் அவள் ஜிங்கென்றுதான் இருந்தாள்.

    ஏய், டான்ஸ் பார்க்கவா அழைச்சுட்டு வந்தே?

    பாலா, மிக ரகசியமான குரலில் சிடுசிடுக்க, அவன் திரும்பிப் பார்த்துச் சிரிக்கிறான்.

    உன் அவசரம் எனக்குப் புரியறது. அதுக்காக-பூவைப் பறிக்கப் போய் முள்ளைக் குத்திக்கப்படாது இல்லே. இந்தா, இந்தப் பாட்டு முடியட்டும். அப்புறம் நீ அந்த உழக்கைக் கூட்டிட்டுப் போய்ப் பேச்சுக் கொடு. நான், அந்த அம்மா கிட்டப் பேசிப் பார்க்கறேன்.

    திலீப், ஒரு கையால் பாட்டுக்குத் தகுந்தபடி தாளம் போட்டுக் கொண்டே, நண்பனிடம் கூறுகிறான்.

    அவனுக்கு 'இந்த' மாதிரி விஷயங்களெல்லாம் அல்வா சாப்பிடுகிற மாதிரி.

    படித்து முடித்துவிட்டுக் கிராமத்தில் உட்கார்ந்து கொண்டு வேறு என்னதான் வெட்டி முறிக்கிற வேலை.

    வேலைக்குப் போய்ச் சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற அவசியமில்லை.

    கிராமத்தைச் சுற்றி, வேலி போட்டாற்போல திலீபனின் தாத்தா காலத்து நிலம் பரந்து கிடக்கிறது. கிராமத்திலேயே பெரிய வீடு இவர்களுடையதுதான்.

    திலீபனின் தாத்தா இரண்டு பெண்டாட்டிகள் போதாதென்று தெருவுக்கு ஒருத்தியை வைப்பாக வைத்திருந்தார்.

    அப்பாக்காரர் அவரளவுக்கு இல்லாவிட்டாலும், ஒரு பெண்டாட்டியும், மாயவரத்தில் 'சின்ன வீடு' ஒன்றும் வைத்திருந்தார். இது தவிர- அந்தக் கிராமத்துக்கும், கிராமத்தை அடுத்துள்ள நகரத்துக்கும் எந்த நாடகக் குழு, நடனக் குழு வந்தாலும் இவரது மேற்பார்வையில் பத்துப் பதினைந்து நாட்களுக்கு உட்கார்ந்து சுகபோஜனம் செய்து விட்டுப் போகும்.

    இந்த மாதிரி வரும் குழுக்களில், கொஞ்சம் எடுப்பாக எவளாவது இருந்துவிட்டால் அவளை முன்னிட்டு அந்தக் குழுவுக்கே ராஜோபசாரம் நடக்கும்.

    அதெல்லாம் தனி பந்தா.

    இந்தச் சரீரம் அமைந்ததே-இது போன்ற சுகானுபவங்களை ரசிக்கத்தான் என்பது போல.

    பெண்டாட்டியிடமே-தஞ்சாவூர் விலைமாதின் அழகைப் பற்றி விஸ்தாரமாய் வர்ணிப்பார். எதிர்த்தாற் போலப் பத்து வயசுப் பாலகனாய்த் திலீபன் உட்கார்ந்திருப்பான்.

    இப்படிப் பேசுவது அசிங்கமென்றோ, அருவருப்புத் தரும் சமாசாரமென்றோ அவரும் நினைத்ததில்லை . அவரது பெண்டாட்டியும் நினைத்ததில்லை.

    முகத்தில் எந்தவித மாறுதலுமின்றி, புன்சிரிப்புடன் புருஷனின் அத்தனை பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டிருப்பாள். அந்தப் புன்னகையின் பின்னால் எத்தனை பெரிய எரிமலை ஒளிந்து கொண்டிருந்ததோ.

    இன்றளவும் திலீபனுக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளப் பிரியப்படவும் இல்லை

    தாத்தா, அப்பாவின் வம்ச குணத்தை அப்படியே கொண்டு பிறந்தவன்தான் திலீப்.

    அதற்கென்ன, அப்பா நாடகக்காரிகளின் பின்னால் சுற்றினார் என்றால்-பிள்ளை, சினிமா நடிகைகளின் பின்னால் அலைகிறான். அவ்வளவுதான்.

    கோவையை அடுத்த செழிப்பான கிராமமானதினால், சினிமாக்காரர்கள் அடிக்கடி இந்தக் கிராமத்துக்கு வந்து ஷூட்டிங் வைபவத்தைக் கொண்டாடுவதுண்டு.

    அதற்கெல்லாம் திலீபனின் மாந்தோப்பும், தென்னந்தோப்பும், பசுமை படர்ந்த வயல்வெளிகளும் மிகச் சௌகரியமாக இருக்கும்.

    இப்படி யார் வந்தாலும், தங்குவது திலீபனின் வீட்டில் தான். சினிமாக்காரர்கள் தங்கள் வேலை முடிந்து பட்டணம் திரும்பும் வரையில், இவன் வீட்டில் வடை பாயசத்துடன் விருந்து நடக்கும்.

    அவன் வீட்டின் சுவர் முழுக்க நடிக, நடிகைகளுடன் அவன் எடுத்துக்கொண்ட படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. ஊருக்கு எந்த பெரிய மனிதர் வந்தாலும் முதல் மாலை அவனுடைய தாகத்தான் இருக்கும்.

    இன்று இவனுக்கென மனைவியும் குடும்பமும் இருந்தாலும் அந்தக் கிராமத்தைப் பொறுத்த வரையில் மைனர் திலீபன்தான்.

    இத்தனை கல்யாண குணங்கள் இருந்தாலும், நடுவில் சில பல நல்ல குணங்களும் இல்லாமல் இல்லை.

    எனக்கு மிஞ்சினவர் யாருமில்லை. ஆஹா, ஓஹோ என்று வாய்ச் சவடாலாகப் பேசினாலும், யாரையும் அலட்சியப்படுத்தினதில்லை. புண்படப் பேசினதில்லை. வேலைக்காரர்களிடம் தமாஷாகப் பேசிப் பேசியே வேலை வாங்குவான். ஊரில் நடக்கிற எல்லா நல்லது, பொல்லாததற்கும், 'நான் இருக்கிறேன், நான் இருக்கிறேன்' என்று நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு முன்னுக்கு வருவான். சினேகிதம் என்றால் உயிரையே கொடுப்பான்.

    இல்லாவிட்டால் - இன்று பாலாவுக்காக இந்த வீடு தேடி வந்து, சதிர்க்கச்சேரியை ரசித்துக்கொண்டிருப்பானா...

    அவ்வளவு ஏன்? பாலாவை, சென்னையிலிருந்து கிராமத்துக்கு வரவழைத்ததே இவன்தானே?

    அங்கேயே உட்கார்ந்திருந்தால் உனக்கும் கூடிய சீக்கிரத்தில் பைத்தியம் பிடிச்சுடும். ஒரு மாறுதலுக்காகவாவது இங்கே புறப்பட்டு வா.

    கடிதம் எழுதி, நண்பனை வரவழைத்தது மட்டுமில்லாமல், தற்சமயம் அவனுக்கு எது தேவை என்பதையும் புரிந்து கொண்டு இங்கே அழைத்து வந்திருக்கிறானே.

    சத்தியமாக, பாலாவுக்கு இது மாதிரியான சமாசாரங்களில் விஷய ஞானம் பூஜ்யம்.

    இருபத்தேழு வயசுக்கு - மனசுக்குள் அத்தனை துணிச்சல் வரவில்லை.

    இதோ- இன்று வரையில் ஒரு பெண்ணை அந்தரங்கமாக ஸ்பரிசிப்பது என்பது மிகப் பெரிய காரியமாகத்தான் அவன் வரையில் தோன்றியது.

    ஒரு கல்யாணத்தைச் செய்து கொண்டு அதிகாரபூர்வமாக ஒருத்தியைத் தன்னுடையவளாக ஆக்கிக் கொள்ள வேண்டியது தானே என்று- இவனைப் பற்றிய முழு விவரமும் தெரியாதவர்கள் சொல்வார்கள்.

    ஆனால் - நாம் சொல்லக் கூடாது.

    பாலா, திருட்டு மாங்காயைப் பறிக்கப் போய் அடிப்பட்டவன் இல்லை. சொந்தத் தோட்டத்து மாங்காயைப் பறிக்கப் போய் உதை பட்டவன். அடியென்றால் சும்மா இல்லை. மரண அடி.

    அதெல்லாம் பெரிய கதை.

    இந்தக் கணத்தில் அவன் முன் உள்ள பிரச்சினையே ஒரு பெண்தான்.

    அவள் பேரழகியாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. சுமாராக இருந்தால் போதும். ஆனால் புத்திசாலியாய் இருக்க வேண்டும். அவனது எல்லா ஆசைகளுக்கும் - அந்த

    Enjoying the preview?
    Page 1 of 1