Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karuppu Neruppu!
Karuppu Neruppu!
Karuppu Neruppu!
Ebook127 pages1 hour

Karuppu Neruppu!

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100402933
Karuppu Neruppu!

Read more from Rajesh Kumar

Related to Karuppu Neruppu!

Related ebooks

Reviews for Karuppu Neruppu!

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karuppu Neruppu! - Rajesh Kumar

    www.pustaka.co.in

    கறுப்பு நெருப்பு!

    Karupu Neruppu!

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For other books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கறுப்பு நெருப்பு!

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    கறுப்பு நெருப்பு!

    1

    வியக்க வைக்கும் விஞ்ஞானம்:

    50 ஆண்டுகளுக்கு முன்பு வரை கார் என்பது ஒரு பெரிய பணக்காரரின் அடையாளம். ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. நடுத்தர குடும்பங்கள் கூட ஒரு காரை வாங்கி உபயோகப் படுத்துகிற காலகட்டம் இது. காரை எடுத்துக் கொண்டு ஷாப்பிங் செய்யச் சென்றால் பார்க்கிங் செய்ய இயலாத நிலைமை. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்குக் காரணம் கார்கள்தான் என்பதை உணர்ந்து கொண்ட டெல்லி அரசு ஒற்றைப்படை எண்ணுள்ள கார்களை ஒரு நாளிலும், இரட்டைப் படை எண்ணுள்ள கார்களை அடுத்த நாளிலும் பயன்படுத்த வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் நாளடைவில் இதுவும் பயன்தரப் போவது இல்லை. இதை முன்கூட்டியே உணர்ந்து கொண்ட சீனாவும் ஜப்பானும் இப்போதே குட்டி விமானங்களைப் போல் பறக்கும் கார்களைத் தயாரிக்க ஆரம்பித்து விட்டன.

    50 ஆண்டுகள் கழித்து வானத்தை ஒருவர் அண்ணாந்து பார்க்கும்போது நூற்றுக்கணக்கான கார்கள் விண்வெளியில் பறந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.

    விவேக்கும் விஷ்ணுவும் அந்த வியாழக்கிழமையின் விடியற்காலை வேளையில் பீச் ரோட்டில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள்.

    சென்னையின் கிழக்குத் திசை தக்காளி நிறத்தில் தெரிய, சூரியப் பிரசவம் எந்த விநாடியும் நிகழக்கூடிய சாத்தியத்தில் வானம் இருந்தது. கோடிக்கணக்கான பணத்தில் 'டர்ன் ஓவர்' செய்யும் ஐ.டி. கம்பெனிகளின் எம்.டி.க்கள் ஜாக்கிங் சூட்டில் வழுக்கைத் தலைகளை ஆட்டியபடி பிசினஸ் பேசிக் கொண்டே நடந்தார்கள்.

    பீட்சா, பர்கர் சாப்பிட்டு தேவையில்லாத இடங்களில் சதையை வளர்த்து வைத்து இருந்த இளம் பெண்கள் மூச்சிரைக்க எதிர்ப்பட்டு கடந்து நடந்து போனார்கள்.

    விவேக் விஷ்ணுவை வியப்பாய்ப் பார்த்தான்.

    ''விஷ்ணு!''

    ''பாஸ்.'',

    ''உனக்கு என்னடா ஆச்சு?''

    ''ஏன்…?''

    ''எதிர்ல உனக்கு வேண்டப்பட்டவங்களெல்லாம் போய்ட்டு இருக்காங்க. நீ பாட்டுக்குக் கண்டுக்காமே வர்றே…?''

    ''அடப் போங்க பாஸ்… எல்லாமே மாயா… மாயா…. சாயா…. சாயா…''

    ''அட… இந்த ஞானம் எப்பயிருந்து?''

    விஷ்ணு பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு சொன்னான். ''பாஸ்! நேத்து ராத்திரி கூகுளில் போய் ஒரு விஷயத்தைத் தேடிக்கிட்டு இருக்கும்போது 'அன் எண்ட் டு திஸ் எர்த்' என்கிற ஒரு ஆர்ட்டிக்கிளை படிச்சேன்.''

    ''நீ அது மாதிரியான ‘சைட்' பக்கமெல்லாம் போக மாட்டியே…?''

    ''இதான் பாஸ் உங்ககிட்ட எனக்குப் பிடிக்காத ஒண்ணு. கடந்த ஒரு மாச காலமாய் நான் உங்க லெவலுக்கு வர்றதுக்காக ஐம்புலன்களையும் அடக்கிட்டு கூகுள்ல போய் ரொம்ப நேரம் குளிச்சு அறிவுபூர்வமான விஷயங்களைத் தேடித் தேடி…!''

    ''சரி… சரி… நீ படிச்ச ஆர்ட்டிக்களோட டைட்டில் என்ன?''

    ''அன் எண்ட் டு திஸ் எர்த்.''

    ''அந்த ஆர்ட்டிக்கிள் என்ன சொல்லுது?''

    ''நாம் வாழற பூமி இதுவரைக்கும் அஞ்சு தடவை அழிஞ்சிருக்காம். இப்போ ஆறாவது தடவையாய் அழிவை நோக்கிப் போய்க்கிட்டு இருக்காம்.''

    ''அந்த ஆர்ட்டிக்கிளை எழுதினது யாரு?''

    ''அமெரிக்காவின் ஸ்டான்போர்டு யூனிவர்ஸிடியின் உயிரியல் ஆராய்ச்சியாளர் பால் எர்லிச்.''

    ''அவர் என்ன சொல்றார்?''

    ''நாம் இப்போ வாழ்ந்துட்டிருக்கிற பூமி இதுவரைக்கும் அஞ்சு தடவை செத்து செத்து உயிர் பிழைச்சிருக்காம். ஒவ்வொரு தடவை அழிவு ஏற்படும்போதும் எறும்பிலிருந்து யானை. வரைக்கும், மக்காச் சோளத்திலிருந்து மனுஷன் வரைக்கும் எல்லா உயிர்களும் அடியோடு காணாமப் போயிடுமாம் அதுக்கப்புறம் பூமி சில நூறு வருஷங்கள் சின்னதாய் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு மறுபடியும் தன்னைப் புதுப்பிச்சுக்கிட்டு உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை எல்.கே.ஜி. யிலிருந்து ஆரம்பிக்குமாம். இதெல்லாம் நம்ப முடியுதா பாஸ்… என்னமா கதை விடறானுங்க!''

    ''அது கதை இல்லடா… நிஜம்…! நம்ம பூமி ஒவ்வொரு ஐயாயிரம் வருஷங்களுக்கும் ஒரு தடவை தன்னைப் புதுப்பிச்சுக்கிட்டு ஒரு புத்துணர்வோடு செயல்பட ஆரம்பிக்குமாம். இதைப் புவியியல் ஆராய்ச்சி நிபுணர்கள் ஆதாரங்களோடு நிரூபிச்சுக் காட்டியிருக்காங்க. முதல் தடவை நடந்த பேரழிவுக்கு சிலூரியன், இரண்டாவது தடவை நடந்த பேரழிவுக்கு டெவோனியன், மூன்றாவது தடவை வந்த பேரழிவுக்குப் பெர்மியன், நாலாவது தடவை நடந்த பேரழிவுக்கு ஜூராசிக், ஐந்தாவது தடவை நடந்த - பேரழிவுக்கு கிரேடியஸ்னு பேரு. டைனோசர் இனம் முற்றிலும் அழிந்து போன யுகம்தான் ஜூராசிக்.

    ''அதை அடிப்படையாய் வெச்சுத்தான் ஜூராசிக் பார்க் சினிமா படம் எடுத்தாங்க. டைனோசர் இனம் அழிந்த வேகத்தைப் போல பல நூறு மடங்கு வேகத்தோடு இன்னிக்கும் பூமியில் பல சின்னஞ்சிறு உயிரினங்கள் அழிஞ்சுட்டு வர்றதாக உயிரியல் ஆய்வாளர் பால் எர்லிச் அபாய அறிவிப்பு கொடுத்து இருக்கார்.''

    பேசிக் கொண்டே போன விவேக் விஷ்ணுவிடம் '' இருந்து எந்தப் பதிலும் வராமல் போகவே விஷ்ணுவின் தோளைத் தட்டிக் கேட்டான்.

    ''என்னடா… பேச்சைக் காணோம்?''

    ''அட… போங்க பாஸ்…! எதையாவது புதுசாச் சொல்லி உங்களை அசர வைக்கலாம்ன்னு பார்த்தா, நான் 'அ’ன்னு ஆரம்பிக்கிறதுக்குள்ளே தமிழ்ல இருக்கிற 247 எழுத்துக்களையும் சொல்லி முடிச்சுடறீங்க. எப்படி பாஸ் உங்களால் இப்படியொரு நடமாடும் என்சைக்ளோ பீடியாவாய் இருக்க முடியுது!''

    விஷ்ணு விழிகளை விரித்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, அவர்களுக்கு வெகு அருகாமையில் கார் ஒன்று வந்து சத்தமில்லாமல் நின்றது.

    'எஸ்கோடா' வகையைச் சேர்ந்த அந்த வெளிர் பச்சை நிறக் காரின் கதவைத் திறந்து கொண்டு டிரைவிங் இருக்கையினின்றும் வெளிப்பட்டாள் அந்தப் பெண்.'' மஞ்சள் நிற சேலை, அதே வண்ண ஜாக்கெட்.

    வயது முப்பதிலிருந்து முப்பத்தைந்துக்குள் இருக்கலாம். அழகாக இருந்தாள். கல்லூரி நாட்களில் இன்னமும் அழகாய் இருந்திருப்பாள் போன்று விஷ்ணுவின் மனசுக்குள் ஓடியது.

    அவள் விவேக்கைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தாள்.

    ''குட் மார்னிங் மிஸ்டர் விவேக்!''

    ''குட் மார்னிங்!''

    ''ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்.

    Enjoying the preview?
    Page 1 of 1