Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pani Vizhum Malarvanam!
Pani Vizhum Malarvanam!
Pani Vizhum Malarvanam!
Ebook364 pages3 hours

Pani Vizhum Malarvanam!

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Got “Izanthamilaringnar” award from Bharathiyar Manavar Tamil Mandram at 2001. Participating in Children’s Science Congress Conference in 2003. Submit Project in National Children’s Science Congress in 2003 under the title “ FOOD SYSTEMS – Towards Nutrition for all". Got 1st prize in Zone Level Drawing Competition by Temple Jaycees in 2005. District Level 2nd Prize in Tamil Poem Writing in 2006. Medical Transcription Training Academy’s EXCELLENCE AWARD Shield in 2007. District Level Prize in Tamil Short Story Writing in 40th National Library week Function.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110502983
Pani Vizhum Malarvanam!

Read more from Shrijo

Related to Pani Vizhum Malarvanam!

Related ebooks

Reviews for Pani Vizhum Malarvanam!

Rating: 3.8181818181818183 out of 5 stars
4/5

11 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pani Vizhum Malarvanam! - Shrijo

    http://www.pustaka.co.in

    பனி விழும் மலர்வனம்!

    Pani Vilum Malarvanam!

    Author:

    ஸ்ரீஜோ

    Shrijo

    For more books

    http://www.pustaka.co.in/home/author/shrijo-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் – 10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் – 16

    அத்தியாயம் – 17

    அத்தியாயம் – 18

    அத்தியாயம் – 19

    அத்தியாயம் – 20

    அத்தியாயம் – 21

    அத்தியாயம் – 22

    அத்தியாயம் – 23

    அத்தியாயம் – 25

    அத்தியாயம் – 1

    மாங்கல்யம்

    தந்துனானே மம ஜீவன

    ஹேதுனா

    கண்டே பத்னாமி சுபாகே

    சஞ்சீவ சரத சதம்!

    என்று ஐயர் மந்திரம் ஓத, சுற்றமும், ஊரும் அட்சதை தூவி ஆசிர்வதிக்க, அருளரசு அனிக்காவின் கழுத்தில் தாலி கட்டி மங்கள வடிவமாகத் திகழும் பெண்ணே உன்னுடன் துவங்கும் இல்லற வாழ்வு எனக்கு நன்றாக அமைய வேண்டும். என் இல்லறத் துணையாக, அனைத்து சுக துக்கங்களிலும் பங்கேற்று, நிறைந்த யோகத்துடன் நீ என்னுடன்  நூற்றாண்டு காலம் வாழ்க என்று அக்னி சாட்சியாக, ஆண்டவன் சாட்சியாக, ஊரில் உள்ள மக்கள் சாட்சியாக அனிக்காவைத் தன்னில் சரிபாதியாக்கிக் கொண்டான்.

    திருமணத்திற்கே உரிய கேலிப்பேச்சுகளும், கிண்டல்களும் இல்லாமல், கெட்டி மேளச்சத்ததை தவிர எவ்வித சத்தங்களும் இல்லாமல் மண்டபமே அமைதியாக இருந்தது.

    புயலடித்து ஓய்ந்தது போன்ற தோற்றத்தில் இருந்த மண்டபத்தில், அனைவர் முகத்திலும் புன்னகைக்கு பதில், ஒரு இறுக்கமே பரவிக்கிடந்தது.

    அது மணப்பெண் மற்றும் மணமகன் முகத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த சந்தனந்தையும், குங்குமத்தையும் பொண்ணுக்கும், மாங்கல்யத்துக்கும்  வைச்சுவிடுங்கோ என்று ஐயர் அடுத்த சடங்கிற்கு செல்ல,

    அவர் சொற்படி அனிக்காவின் நெற்றியிலும், மாங்கல்யத்திலும் வைத்துவிட்டான்.

    அடுத்து என்று ஐயர் ஆரம்பிக்க,

    ஒரு நிமிஷம் சாமி என்று இடையிட்டது, நம்முடைய அருளரசே தான்.

    வா என்று அனிக்காவின் கரம் பற்றி மனையில் இருந்து எழுப்பியவன், அவளை இழுத்துக்கொண்டு திருமண மண்டபத்தின் வாயிலை நோக்கிச் சென்றான்.

    அவன் பின்னால் வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்த ஆட்கள் சிலர் வேகமாக ஓடினர்.

    அங்கு தயாராக நின்று கொண்டு இருந்த இன்னோவாவின் கதவைத் திறந்து அவளை உள்ளேத் தள்ளியவன், தானும் ஏறி அமர்ந்தான்.

    அவன் அமர்ந்த அடுத்த நொடி கார் புறப்பட, அவனைப் பின்பற்றி இன்னும் சில கார்கள் செல்ல ஆரம்பித்தன.

    அவர்கள் கார் செல்வதையே வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றார் அனிக்காவின் தந்தை மேகநாதன்.

    கார் சேலத்தில் இருந்து பொள்ளாச்சியை நோக்கிப் பயணிக்க, அருளரசோ கோபத்தில் அமர்ந்திருந்தான்.

    தம்பி என்று அவர்களுக்கு முன்னால் இருந்த, அவனுடைய அப்பாவின் உயிர் நண்பர் சிங்காரம் அழைத்தார்.

    சொல்லுங்க மாமா

    தம்பி போற வழில நல்ல ஹோட்டலா பார்த்து சாப்பிட்டுடுவோம், அப்புறம் பாப்பாக்கு துணி எடுத்துகிட்டுப் போவோம்

    சரி மாமா என்றவன் ஜன்னலுக்கு வெளியே பார்வையைப் பதிக்க, அனிக்காவோ மூடிய கண்களில் நீர் வழிய அமர்ந்திருந்தாள்.

    சில நிமிட பயணத்திற்குப் பின்பு, சேலம் - கோவை பைபாஸ் சாலையில் இருந்த ஒரு உயர்ரக ஓட்டலின் முன் வண்டி நின்றது. வண்டி நின்ற சத்தத்தில் கண் திறந்த அனிக்கா, அனைவரும் இறங்குவதைப் பார்த்துக் கொண்டே வெளியே பார்த்தாள்.

    வண்டி ஒரு ஹோட்டலின் முன் நின்று இருந்தது. இறங்கு அனி என்ற அருளரசுவின் குரல் அவன் பால் திரும்பச் செய்தது.

    அவளுக்காக டோரை திறந்து வைத்துக்கொண்டு நின்று கொண்டு இருந்தான்.

    மெல்லக் காரில் இருந்து, அவள் இறங்க, அதற்கு முன்பே அனைவரும் ஹோட்டலின் உள்ளே சென்று இருந்தனர்.

    அவள் சுற்றிலும் பார்வையை ஓட்டுவதை உணர்ந்தவன், எல்லாரும் உள்ள போய்ட்டாங்க என்று பதில் சொல்லிவிட்டு, அவள் கரம் பற்றி உள்ளே அழைத்துச் சென்றான்.

    சிங்காரமும் டிரைவரும் அமர்ந்திருந்த, டேபிளின் எதிர்புறத்தில் இருவரும் சென்று அமர்ந்தனர்.

    நீங்க ஆர்டர் பண்ணிட்டீங்களா மாமா?

    பண்ணிட்டோம் தம்பி

    அனி உனக்கு என்ன வேணும்?

    அவளோ என்ன சொல்வதென்றே தெரியாமல் விழிக்க, உன்னைத்தான் கேட்கிறேன். உனக்கு என்ன வேணும்? என்று இன்னொரு முறை அழுத்திக் கேட்டான்.

    எனக்கு ஒரு ரோஸ்ட் போதும் என்றவள், ஹோட்டலை சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.

    பில்லிங்கில் ஒரு பெண் அமர்ந்திருக்க, வேகமாக எழுந்தவள் அவளை நோக்கிப் போக, என்னவென்று தெரியாமல் அருளும் எழுந்தான். அவளிடம் பேசியவள், அந்த பெண் கை காட்டிய திசையில் செல்ல, அருளும் பின்னாலேயே சென்றான்.

    அவள் ரெஸ்ட்ரூம் செல்வதைப் பார்த்தவன், அவள் வரும் வரை வெளியே அவளுக்காகக் காத்திருந்தான்.

    சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவளைப் பார்க்க, முகம் கழுவி இருந்தாள், ஈரம் அப்படியே இருக்க, வெளியேறியவள், அவனைப் பார்த்ததும் ஒரு நொடி திகைத்து நின்றாள்.

    உனக்கு இடைல வண்டியை நிறுத்தனும்ன்னா என்கிட்ட சொல்லு. நாம வீட்டுக்கு போக ரொம்ப நேரம் ஆகும் சரியா?

    ம்ம் என்றவள் அவனைக் கடக்க,

    இரு டவல் எடுத்து தரேன் என்று அவன் காரை நோக்கிப் போக,

    வேண்டாம் என்றவள் அவர்கள் டேபிளை நோக்கிச் சென்றாள். அங்கிருந்த டிஸ்யூவை எடுத்து முகம் துடைத்தவள், வந்திருந்த தோசையை சாப்பிட ஆயத்தமானாள். அவளைப் பின் தொடர்ந்து வந்தவனும் அமைதியாக உணவருந்த ஆரம்பித்தான்.

    நடந்த நிகழ்வுகளுக்கு, பசி என்ற உணர்வே அனிக்காவிற்கு இல்லை, முன்தினம் கடைசியாக என்ன? எப்போது சாப்பிட்டாள், என்றும் நினைவில் இல்லை. கடமைக்கு இரண்டு வாய் தின்றவள் உணவை கையிலேயே வைத்துக்கொண்டு தட்டை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தாள்.

    வேற எதாச்சும் சொல்லட்டுமா அனி? என்ற அருளின் குரலில் திடுக்கிட்டு திரும்பியவள், வேண்டாம் என்பதாய் தலை மட்டும் அசைத்தாள்.

    அனைவரும் சாப்பிட்டு எழ, அவர்களும் எழுந்தனர். அனைவரும் காரில் ஏற, அனியை காரில் அமரச் செய்துவிட்டு அருள் பக்கத்தில் இருந்த பேக்கரியில் சென்று அவளுக்குச் சிலத் தின்பண்டங்கள் வாங்கி வந்து கொடுத்தான்.

    அதனை இருவருக்கும் இடையில் வைத்தவள் அதன் பின் தொடவே இல்லை.

    அருளாக இரண்டு முறை பேச்சுக் குடுத்தும், அவள் தலையசைப்புடனே நிறுத்திக்கொண்டாள்.

    அருளும் வீட்டிற்கு போய் பேசிக்கொள்ளலாம் என்று அமைதியாகிவிட்டான்.

    அடுத்து அவளுக்கு உடை எடுக்கும் போதும் அவள் ஆர்வம் காட்டவில்லை. அவளுக்கு உடைகளைத் தானே தேர்வு செய்தவன், இதுக்கு மேட்சிங், பிளவுஸ், உனக்கு வேண்டிய மத்த டிரெஸ் நீ தான் பார்த்து செலக்ட் செய்யணும், என்ன வேணுமோ வாங்கிக்கோ, எவ்வளவு வேணுமோ வாங்கிக்கோ. நாம நினைச்ச நேரத்துக்கு வாங்கற மாதிரி நம்ம ஊர் இல்ல. இங்கத்தான் வரணும், புரியுதா! என்றவன், சற்று தள்ளி புடைவைகளை பார்வையிட, அவள் அத்தியாவசிய உடைகள் வாங்கச் சென்றாள்.

    அங்கேயே ஒரு பெரிய டைலரை அணுகி, உடைகளைத் தைக்க அளவு கொடுத்துவிட்டு, மதிய உணவையும் பெயருக்கு முடித்து, அவளுக்கு தேவையானா சோப்பு, கிரீம் உள்ளிட்டவற்றை வாங்க அடுத்த கடைக்குச் சென்றனர்.

    இவர்களும் இன்னும் இரு வண்டிகளும் மட்டுமே இருக்க, மற்றவர்கள் முன்பே கிளம்பி இருந்தனர்.

    அந்த இரு வண்டியில் இருந்தவர்களிடம், உடைகளை வாங்கி வரப் பணித்து, இவர்கள் ஊருக்குக் கிளம்பினர்.

    எதுவுமே சாப்பிடாமல், பெயருக்கு கொறித்துவிட்டு, அலைச்சலும் சேர, உடல் சோர்வில் அனிக்கா உறங்க ஆரம்பித்தாள்.

    அவள் முகத்தைப் பார்த்த அருளுக்கோ, அவன் மீதே அவனுக்கு கோபம் வந்தது. பால் நிலா முகம், ஒளியிழந்து, களையிழந்து காணப்பட்டது.

    அத்தியாயம் – 2

    ஒரு வழியாக மாலை ஆறு மணி அளவில் கார் மலர்வனம் என்ற பெயரைத் தாங்கி இருந்த காம்பவுண்டிற்குள் நுழைந்தது.

    பொள்ளாச்சியை அடுத்துள்ள கிருஷ்ண ஏரியை ஒட்டி அமைந்துள்ள சுற்றுவட்டார கிராமங்களில் ஒன்றில் தான் மலர்வனம் உள்ளது.

    ஊர் எல்லையை நெருங்கும் போதே, அனிக்காவை அருள் எழுப்பி இருந்தான்.

    கார், ஒரு பெரிய மாளிகை முன்பு நிற்க, இருவரும் அதில் இருந்து இறங்கினர்.

    வண்டியில் இருந்து இறங்கும் போதே அனிக்காவிற்கு தலை சுற்றியது. மெல்லச் சமாளித்து நின்றவளைத் தன்னுடன் சேர்த்தணைத்து நின்ற அருள் வீட்டு வாசலை நோக்கி அவளையும் உடன் நடத்திச் சென்றான்.

    அங்கு இருந்த பெண்கள் ஆலம் சுற்றி முடித்து இருவரையும் உள்ளே விட்டனர், அவளை பூஜை அறையில் விளக்கேற்ற வைத்து, ஹாலில் அமர வைத்து இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்தனர்.

    தம்பி, இன்னிக்கே மத்த சடங்குக்கு நேரம் குறிச்சாச்சு. ஏற்பாட்டை பார்க்கனும் என்று சிங்காரம் சொல்ல,

    அதில் ஒரு திடுக்கிடலோடு அனிக்கா அருளை நிமிர்ந்து பார்த்தாள்.

    அவனோ அவருக்கு, நொடி கூட தாமதிக்காமல் சரி மாமா! பாருங்க என்று பதில்  சொல்லிவிட்டு, உள்ளே திரும்பி, அத்தை என்று குரல் கொடுத்தான்.

    என்ன தம்பி? என்று வந்தவர், சிங்காரத்தின் மனைவி ராஜம்.

    அனி காலைல இருந்து ஒன்னும் சாப்பிடலை. முதல்ல அவளை சாப்பிட வைங்க என்று அவன் சொல்லும் போதே, காரில் இருந்த பார்சல் அனைத்தும் வீட்டிற்குள் வந்தது.

    கொண்டு வந்து என் ரூம்ல வைங்க என்று சொல்லிக்கொண்டே அவன் மாடியேற பொருட்களை கொண்டு வந்தவர்களும் அவன் பின் சென்றனர்.

    ராஜம், வாம்மா என்று அழைத்துச் சென்று அவளைக் கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தார்.

    அடுத்த சில நிமிடங்களில், அவளை குளிக்கச் சொல்லி, வெண்பட்டு கட்டி, அதற்கு ஏற்ப நகைகள் அணிவித்து, தலை அலங்காரத்தைக் களைந்து எளிமையாக்கி, மல்லிகைச் சரங்களைத் தலை நிறைய சூடி தயார் செய்து, அருளுடன் இரவு உணவு அருந்த அழைத்து வந்தார்.

    குனிந்த தலை நிமிராமல் உணவருந்திய அனியை அருள் ஓரக்கண்ணால் பார்துக்கொண்டே உணவருந்தினான்.

    இருவரையும், பூஜை அறையில் நமஸ்கரிக்க வைத்த ராஜம், நீங்க மேல போங்க தம்பி என்று சொல்லி அவனை அனுப்பி வைத்துவிட்டு, அனியை அழைத்துச் சென்று அறிவுரைகள் சொல்ல ஆரம்பித்தார்.

    அவர் சொன்னதை, கேட்டும் கேட்காமலும் தலையாட்டி வைத்தவளை திருஷ்டி கழித்தவர், மேனகா என்று குரல் கொடுத்தார்.

    வரேன் அத்தை என்று வந்த மேனகா ராஜத்தின் மருமகள்.

    கூட்டிப் போய் விட்டுட்டு வா என்று அவள் கையில் இருந்த பால் சொம்பை வாங்கி அனிக்காவின் கையில் திணித்தார்.

    வாங்க என்று அவளை மேனகா அழைத்துச் சென்றாள்.

    சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்காதிங்க. எனக்கு உங்க மனசு புரியுது. அருளண்ணன கட்டிக்க நீங்க குடுத்து வைச்சு இருக்கனும். தாலி ஏறினாலே புருஷன் தான் இனி எல்லாமே. ஒரே நாள்ல எல்லாமே மாறிடுச்சுன்னு மனசை போட்டுக் குழப்பிகாதிங்க, பழகப் பழக உங்களுக்கே அவரை ரொம்ப பிடிக்கும். தாலி கட்டறதுக்கு முன்னாடி வரை நடந்தத மறந்துடுங்க. இப்ப சந்தோசமா வாழ்க்கையை ஆரம்பிங்க என்று அவள் சொல்லச் சொல்லவே அருளின் அறை வந்திருந்தது.

    புரிஞ்சு நடந்துக்கோங்க. எதையும் மனசுல வைச்சு குழம்பாம, அவர்கிட்டயே கேட்டுடுங்க. பொறுமையா இருங்க என்று சொன்னவள், கதவைத் திறந்து, அவளை உள்ளே விட்டுவிட்டு கீழே இறங்கினாள்.

    அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுத் திரும்பிய அனி, மெல்லக் கண்கள் நிமிர்த்தி அறையைப் பார்வையிட்டாள்.

    மல்லிகைச் சரங்கள் சூழ்ந்த படுக்கையில் உட்கார்ந்து இருந்த அருள் மெல்ல எழுந்து வந்தான்.

    அவன் வர வர, மெல்லப் பின்னால் நகர்ந்தவள், அப்படியே கதவில் சாய்ந்து நின்றாள்.

    அவள் கையில் இருந்த சொம்பை வாங்கி அருகில் இருந்த செல்பில் வைத்தவன், மெல்ல அவளைத் தூக்கிக் கொண்டான்.

    அவன் செயலை சற்றும் எதிர்பார்க்காத அனியோ திகைத்துப் பார்க்க, அவளைக் கட்டிலில் படுக்க வைத்தவன், மெல்ல எழுந்து சென்று விளக்கை அணைத்து விடிவிளக்கைப் போட்டு வந்தான்.

    அவன் வருவதைப் பார்த்து மெல்ல எழுந்து உட்கார்ந்தவளின் அருகே அமர்ந்தவன், அவளைப் படுக்கையில் சாய்த்து, அவள் மீது அவனும் சாய்ந்தான்.

    நெற்றியில் இருந்த நெத்திச்சுட்டியை எடுத்தவன், அவள் உச்சியில் மெல்ல முத்தமிட்டான்.

    அவன் முத்தத்தில் சிலிர்த்து கண்கள் மூடியவளின் கண்களில் முத்தமிட்டு, அவளை முத்தத்தால் மூழ்கடிக்கத் தொடங்கினான்.

    நொடிகள் நிமிடங்களாகிக் கரைய, மூச்சு காற்று வேண்டி அவன் நெஞ்சில் கைவைத்துத் தள்ளி எழுந்தமர்ந்தவளின் முதுகில் எழுந்து, முகம் புதைத்தவன், மெல்ல அவளைத் திருப்பித் தன் நெஞ்சோடு சேர்த்தணைத்தான்.

    படபடவென துடித்த இரண்டு இதயங்களும் மெல்ல நிதானம் அடைய, மெல்ல அவளைப் படுக்கையில் சரித்து, தானும் அவள் மீது சரிந்து, அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.

    அவனிடம் இருந்து விலகிப் படுத்தவளின் மீது ஆவேசமாக படர்ந்தவன், தன்னவளின் பெண்மையை மென்மையாய் தனதாக்க ஆரம்பித்தான்.

    அவனை விட்டு விலகி எழுவதற்கு அவள் செய்த முயற்சிகளைத் தடுத்து, அவள் மறுப்பை மறுத்து, முழுதாய் அவளுக்குள் புதைந்து, அவளையும் தனக்குள் புதைத்துக்கொண்டு, அவளைத் தன்னுடையவளாக்கிக் கொண்டான்.

    விடியல் நெருங்கும் நேரம் அவளை விடுவித்தவன், மெல்ல அவள் நெற்றியில் முத்தமிட்டு திரும்பிப் படுத்து, கண்கள் கசியப்படுத்து இருந்தவளை இழுத்துத் தன் நெஞ்சில் போட்டுக்கொண்டு சுகமாக உறக்கத்தைத் தொடங்க, அனியோ உறக்கம் தொலைத்து விழித்திருந்தாள்.

    அத்தியாயம் – 3

    வெள்ளி மறைந்து ஞாயிறு மெல்ல எட்டிப் பார்க்க, கதிரவனின் சூரிய ஒளிக்கற்றை மெல்ல அருளின் அறைக்குள் எட்டிப்பார்த்தது.

    இரவு உறங்க தாமதம் ஏற்பட்டதால், எப்பொழுதும் எழும் அந்த அதிகாலை வேலையில் உறங்கிக்கொண்டு இருந்தான் அருளரசு.

    விடிய விடிய உறங்காமல் கிடந்த அனிக்காவின் விழிகளை, அப்பொழுதுதான் தூக்கம் மெல்லத் தழுவத் தொடங்கியது.

    அருளின் நெஞ்சில் சாய்ந்தவாறே, குழப்பமும், வருத்தமும் சூழ இரவெல்லாம் தவித்துக் கிடந்த அனிக்கா மெல்ல உறங்க ஆரம்பித்தாள்.

    முன் தின இரவு, முன்னெச்சரிக்கையாக அருள் அலாரம் வைத்திருக்க, நேரம் தாண்டி உறங்குபவனை மெல்ல எழுப்பியது அலாரம். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்த அருள், அதன் தலையில் தட்டி அதை அடக்கிவிட்டு, தன்னில் பொதிந்து உறங்கும் மனைவியை இறுக்கிக்கொண்டு மீண்டும் உறக்கத்தைத் தொடர ஆரம்பித்தான்.

    ஒன்பது மணி வரை இருவரும் வராமல் இருக்க, வேறு வழியின்றி சிங்காரம் அருளின் தொலைப்பேசியில் அழைத்தார்.

    கண்கள் திறவாமலேயே அதனை அட்டென்ட் செய்து காதில் வைத்தவன், சிங்காரத்தின் குரலில் அடித்துப் பிடித்து எழுந்து உட்கார்ந்தான்.

    சாரி மாமா. அலாரம் வைச்சிருந்தேன், என்னாச்சுன்னு தெரில, அடிக்கல, ஒரு கால் மணி நேரம் மாமா, ரெடியாகி, வரோம் என்று சொன்னவன், சற்று முன் தன் நெஞ்சில் இருந்து கீழே தள்ளிவிட்டு இருந்த அனியைப் பார்த்தான்.

    மெல்ல அவளின் பக்கம் குனிந்து, அவள் இதழ்களில் இதலொற்றியவன், மெல்ல அவளை எழுப்பினான்.

    அனி... அனிக்குட்டி... ஏய் அணில் குட்டி.... எழுந்திரிடி... மணி பத்தாச்சு...

    சலனமே இல்லாமல் அவள் தூங்க, இவளை என்று வாய்க்குள் முனகியவன், அவளை மெல்ல உலுக்கி, எழுப்பி அமரச் செய்தான்.

    ப்ச்... என்ன? என்று அவள் சிணுங்கலோடு கேட்டுக்கொண்டே மீண்டும் படுக்கத் தயாராக,

    ஏய் அனிக்குட்டி... மணியாச்சு... கீழே இருந்து கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க, கொஞ்சம் வா. அப்புறமா வந்து இன்னிக்கு முழுக்க தூங்கு என்று பலவிதமாக சொல்லிப் பார்த்தவன், அவளை எழும் வழியைக் காணாததால் அவளைத் தூக்கிக்கொண்டு குளியலறைக்கு சென்றான்.

    அவன் செயலில் ஒருவாறாக தூக்கம் கலைந்து, அவன் செயல் உணர்ந்து, அவன் கையில் இருந்து இறங்க முயற்சித்தவளை, ஷ்.... என்று குரல் கொடுத்து அடக்கியவன், பாத்டப்பில் தான் இறக்கி விட்டான்.

    இன்னும் பத்து நிமிசத்துல கீழ இருக்கனும், ஒழுங்கா சீக்கிரம் குளிச்சு ரெடியாகி வா. என்றவன் வெளியேறிய அடுத்த பத்தாவது நிமிடம், பாத்ரூமில் இருந்த டவலைச் சுற்றிக்கொண்டு அனிக்கா வெளியே வந்தாள்.

    அவள் வந்த அடுத்த நொடி குளியலறைக்குள் புகுந்தவன், அடுத்த பத்தாவது நிமிடம் கீழே சென்றான். அவன் சென்ற பின்பும் மேலும் சில நிமிடங்களைக் கடத்தி, ஒரு பட்டு சேலையை அணிந்து கொண்டு கீழே சென்றாள் அனிக்கா.

    அங்கு அவளுக்காக மேனகா காத்திருந்தாள்.

    யாரோ நேத்து பேய் முழி முழிச்சுக்கிட்டு போனாங்க. இப்ப எழுப்பினா கூட வர மாட்டீங்கரான்கப்பா என்று அவள் அனியை கிண்டல் அடித்தாள்.

    அண்ணி வேண்டாம் என்று அவளிடம் சிவந்த முகத்துடன் சிணுங்கிய அனியை,

    சரி சரி... வந்து விளக்கேத்துங்க... அப்புறம் உங்க கதையை கேட்கிறேன்.. டைம் ஆச்சு... நல்ல நேரம் போய்டும் என்றவாறே அவளை அழைத்துச் சென்று விளக்கேற்ற வைத்தாள்.

    அடுத்து சமையல் அறையில் அவள் கையால், பால் காய்ச்ச வைத்து, பாலை ஊற்றி அனைவருக்கும் கொடுக்க வைத்தாள்.

    ஹாலில் உட்கார்ந்து அனைவருடனும் பேசிக்கொண்டு இருந்த அருள் வெறும் புன்னகையுடன் அவளின் கையில் இருந்த டிரேயில் இருந்து பாலை எடுத்துக்கொண்டான்.

    அன்று காலை உணவும் பொதுவாக பரிமாறப்பட, கேலிப் பேச்சுக்கள் இன்றி அனிக்கா தப்பித்தாள். ஆனால் தனியாக மாட்டும் போது அவளை மேனகா கேலிகளில் ஒருவழியாக்கி இருந்தாள்.

    மேனகா அந்த வீட்டின் பழக்கவழக்கங்களை அவளுக்குத் தெரிந்த மட்டிலும் சொல்ல, அவள் சொல்வதை ஒரு புன்னகையுடன் கேட்டுக்கொண்டாள், அனிக்கா.

    பொதுவாக சில விஷயங்கள் பேசிக்கொண்டு இருந்த சிங்காரம், இறுதியில் சரி தம்பி. குல தெய்வம் கோவில்ல உச்சி கால பூஜைக்கு போய்ட்டு வந்துடுங்க என்றவாறே கிளம்பினார்.

    அனி... என்று ஹாலில் உட்கார்ந்து கொண்டே அருள் குரல் கொடுத்தான்.

    அவன் குரல் கேட்ட மேனகா, உங்களைத்தான் அண்ணா கூப்பிடறார். போங்க என்று சொல்ல,

    அவளும் சமையல் அறையில் இருந்து வெளியே வந்தாள்.

    போயி ரெடி ஆகு. நம்ம குலதெய்வம் கோவிலுக்கு போகனும். மேனகாவை ஹெல்ப்க்கு கூப்பிட்டுக்கோ. சீக்கிரம் கிளம்பனும். டைம் ஆய்டுச்சு என்று சொல்லிவிட்டு, எனக்கு பின்னாடி கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சுட்டு வந்துடறேன் என்று சொல்லிவிட்டு அவள் பதில் கேட்காமலேயே அவன் பின்னால் சென்றுவிட்டான்.

    இருந்த ஒன்றிரண்டு உறவினர்களும், அவளிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டனர்.

    கோவிலுக்கு கொண்டு செல்ல, முன்பே பொருட்கள் எடுத்து வைக்கப்பட்டு இருக்க, அனி ஒருமுறை சரி பார்த்துவிட்டு, காரில் எடுத்துவைக்கச் சொல்லி வேலையாளை அனுப்பிவிட்டு காருக்கு செல்ல, அதே நேரம் அருளும் வந்து சேர்ந்தான். மேனகா இருவரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள்.

    போலாமா?

    ம்ம் என்பதாய் மெல்லிய தலையசைப்புடன் நிறுத்திக்கொண்டு பின் பக்கம் காரில் ஏறப்போனவளை கரம் பற்றி நிறுத்தியவன், நான் தான் டிரைவ் பண்ண போறேன். முன்னாடி உட்கார் என்று சொல்லிக் கொண்டே அவளை முன் பக்கம் கதவு திறந்து உட்கார வைத்தவன், அடுத்தபக்கம் சென்று காரில் ஏறி, காரை ஸ்டார்ட் செய்து கோவிலை நோக்கி செலுத்தினான்.

    கோவிலில் தம்பதி சமேதராய் சாமி கும்பிட்டு, பிரகாரம் சுற்றி, வருவோர், போவோரிடம் வாழ்த்துக்கள் வாங்கி, ஒரு வழியாக கோவிலில் இருந்து கிளம்ப மணி இரண்டாகி இருந்தது.

    இன்னிக்கு மதியம் நம்ம கல்யாணம் சார்பா, நம்ம தோட்டத்துல விருந்து. நாமலே லேட்டா போறோம்

    ---------------------------------------

    என்னாச்சு மேடத்துக்கு? வாயே திறக்க மாட்டிங்கறீங்க?

    --------------------------------------

    என்னாச்சு அனிக்குட்டி?

    ஒன்னும் இல்ல

    டயர்டா இருக்கா? டோன்ட் வொர்ரி. நாலு மணிக்குள்ள பங்க்சன் முடிஞ்சுடும்

    ----------------------------------------

    நிஜமா... நீ வந்து ரெஸ்ட் எடுக்கலாம் சரியா?

    ---------------------------------------------

    பதில் சொல்லாமல் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்த அனியை பார்த்தவன், மாலை அவளிடம் பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.

    விருந்து நல்லபடியாக முடிந்து, அங்கிருந்தவர்களை அனுப்பிவிட்டு, அவர்கள் வீட்டிற்குத் திரும்ப மாலை ஆறுமணி ஆகி இருந்தது.

    வீட்டிற்குள் நுழைந்ததுமே, அனி செய்த முதல் வேலை, உடை மாற்றிக்கொண்டு படுத்து உறங்க ஆரம்பித்தது தான்.

    இரண்டு நாட்களாக அவளின் அலைச்சலை நன்கு அறிந்தவனாகையால் அருளும் அவள் உறக்கத்தைக் கெடுக்காமல் பார்த்துக்கொண்டான்.

    மறுநாள் காலை அவனுக்கு முன்பாக எழுந்தவள், குளித்து முடித்து, கீழே இறங்கி வந்தாள். தோட்டத்தில் சென்று பூக்கள் பறித்து, அதனை மாலையாகத் தொடுத்து பூஜை அறையில் இருந்த சுவாமி படங்களுக்கு சாற்றினாள்.

    விளக்கேற்றி, கற்பூர தீபமேற்றி கடவுளை கண்கள் மூடி வழிபட்டுக் கொண்டு இருந்தவள், அருகே வந்து நின்ற அருளும் அவளுடன் சேர்ந்து சாமி கும்பிட ஆரம்பித்தான்.

    தரையில் விழுந்து வணங்கியவள், விபூதி, குங்குமம் இட்டுக்கொண்டு அவனுக்கும் தானே வைத்துவிட்டு, சமையலறை நோக்கி நகர்ந்தாள்.

    சில நிமிடங்கள் கழித்து இருவருக்கும் சத்துமாவுக் கஞ்சி எடுத்துகொண்டு வந்தவள் ஹாலில் அருளைக் காணாது தேடினாள்.

    அவள் அருளைத் தேடுவதைக் கண்ட வேலையாள், அம்மா, தம்பி பின் பக்கம் போனாருங்க என்று சொன்னார்.

    சரிண்ணா. நீங்க வேலையை பாருங்க என்றவள், வீட்டின் பின் பக்கம் சென்றாள்.

    "பின் பக்க வாசல்

    Enjoying the preview?
    Page 1 of 1