Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyirin Marupakkam
Uyirin Marupakkam
Uyirin Marupakkam
Ebook93 pages58 minutes

Uyirin Marupakkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100703072
Uyirin Marupakkam

Read more from Indira Soundarajan

Related to Uyirin Marupakkam

Related ebooks

Related categories

Reviews for Uyirin Marupakkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyirin Marupakkam - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    உயிரின் மறுபக்கம்

    Uyirin Marupakkam

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    ஒவ்வொரு உயிரும் இருவித தேகங்களால் ஆனது. ஒண்ணு திடரூபம். இன்னொண்ணு சூட்சும ரூபம். இதில் திடரூபம் இயங்க சூட்சும ரூபத்தின் ஒத்துழைப்பு தேவை. ஆனால் சூட்சும ரூபம் இயங்க திடரூபம் தேவையில்லை . இந்த சூட்சும ரூபத்தை கல்பயோக பயிற்சியால் உடம்பில் இருந்து பிரிக்கலாம். பிரித்து எடுத்து அமெரிக்காவை ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்து திரும்ப நமது உடலுக்குள்ளும் நுழைந்து கொள்ளலாம். விக்ரமாதித்தன் காலத்தில் இதில் வித்தகர்கள் பலர் இருந்தனர்.

    ‘ரசிக ரஞ்சனி' வார இதழ் அலுவலகத்தில் எடிட்டோரியல் மீட்டிங் ஆரம்பமாகியிருந்தது. வட்டமேஜை. ஒன்பது நற்காலிகள்! சப் எடிட்டர்கள் நான்கு பேர். ரிப்போர்ட்டர்கள் நான்குபேர். நடுவில் திவ்ய ஸ்வரூபத்தோடு எடிட்டர் வீரபாரதி வரும் வாரத்திற்கான முதல் தேவை பற்றித்தான் பேச்சு எழும்பியது. தலையங்கம் வழக்கம் போல எடிட்டர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    கார்கிலுக்கு உதவுவதாக வேண்டுகோள் வைக்கவேண்டும்! டும் உம் அடுத்து...?

    போய்க் கொண்டிருக்கும் ஒரு தொடர்கதை ரொம்ப அறுப்பதாக வந்திருக்கும் வாசகர் கருத்து பற்றி பேச்சு எழும்பியது.

    அந்த ரைட்டரை கூப்டு முடிச்சுக்க சொல்லுங்க என்று அதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் எடிட்டர் வீரபாரதி.

    அப்புறம் ஒரு பழம் பெரும் நடிகையின் பேட்டி அவர் இப்போது சாப்பாட்டுக்கு படும் கஷ்டம் பற்றி லேசாக ஆரம்பித்தார் ஒரு சப் எடிட்டர்.

    சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஜென்மங்களில் பல லட்சம் பேர் இருக்க நடிகைக்கு மட்டுமென்ன முக்கியத்துவம் தூக்கி உடப்பில் போடுங்க என்றார் பதிலுக்கு இன்னொரு சப் எடிட்டர். வீரபாரதியிடம் ஆமோதிப்புப் பார்வை.

    வீரப்பன் பற்றி பேச்சே இல்லையே என்றார் ஒருவர். என்ன செய்யலாம்...? காட்டுக்குப் போய் நலம் விசாரிச்சு வந்து ஒரு நாலுவாரம் பரபரப்போடு எதையாவது எழுதலாமா என்று கேட்டார் இன்னொருவர்.

    நடுவில் எதுவும் பேசாமல் உம்மென்றிருந்தான் ஸ்ரீநாத். பிரதம துணை ஆசிரியர். வீரபாரதிக்கு பிறகு அவர்தான் அந்த சீட்டுக்கு என்பது நேற்று வரை நிலவிய நிஜம். இன்று அதை அசைத்துப் பார்க்க ஒருவன் வந்துவிட்டான். அதுவும் வேறு ஒரு பத்திரிகையிலிருந்து பெயர் ஜான்சன்.

    ஆச்சரியம் ஜான்சன்கூட பேசாமல் உட்கார்ந்திருந்தான். வீரபாரதி கவனித்துவிட்டு கேட்டார்.

    என்ன ஜான்சன் உங்க ஸ்பெஷல் சஜெஷன் ஏதாவது உண்டா?

    எல்லாரும் பேசி முடிக்கட்டும் சார்... ஒற்றை வரியில்

    பதில்.

    ஸ்ரீநாத் நீங்க...?

    நான் கார்கிலுக்கு நேரா போய் வந்து உணர்ச்சி பூர்வமா ஒரு கட்டுரை எழுதலாம்னு நினைக்கறேன் சார்...

    நல்ல ஐடியா... வேற...?

    சர்க்குலேஷன் ட்ராப் ஆறத பத்தி கொஞ்சம் யோசிக்கணும் சார்.

    என்ன காரணம்னு நினைக்கறீங்க?

    படிக்கறவங்கள்லாம் பாக்கறவங்களா மாறிக்கிட்டு வராங்க சார். ஐ மீன்… டி.வி. நம்ம வாசகனை தன் வசப்படுத்திகிட்டு வருது. அதுல இருந்து வாசகனை மீட்கணும்.

    எப்படி?

    அந்த மீடியால பாக்க முடியாத ஒண்ணை, அந்த மீடியா மூலமா கிடைக்க முடியாத ஒண்ணை நாம பண்ணனும்?

    அதுதான் என்ன?

    த்ரில்லா... இன்ட்ரஸ்டிங்கா எதாவது?

    என்ன எதாவது அட்வைன்சர் சமாசாரமா...

    அது கூட கொஞ்சம் பழசு. அதத் தாண்டி புதுசா ஒண்ணு...

    என்னன்னு சொல்லுங்களேன்...

    நம்ம புத்தகம் வாங்கற வாசகனுக்கு அவனோட பிரச்சினை ஒண்ணை தீர்த்து வைக்கறதுன்னு...

    - ஒரு சப் எடிட்டர் சொன்ன மறுநொடி க்ளுக்கென்று சிரிப்பு வந்துவிட்டது ஜான்சனுக்கு. சொன்னவருக்கும் மூக்கில் குத்து வாங்கியதுபோல ஒரு வேதனை.

    ஜான்சன் சிரிச்சதுக்கு காரணம்?-வீரபாரதி நறுக்கினார்.

    பின்ன என்ன சார்... வாசகனோட பிரச்சினைகள் எப்படிப்பட்டதுன்னு தெரியாம தீர்த்து வைக்கறோம்னா எப்படி? ஒருத்தன் வந்து எம்பொண்டாட்டி இன்னொருத் தனோட ஓடிட்டான்னுவான், இன்னொருத்தன் எனக்கு பத்துலட்ச ரூபா கடன்னுவான்...

    யூ ஆல் ரைட்... எப்படிப்பட்ட பிரச்சினைகளை தீக்கறதுன்னு ஒரு வரைமுறை வேணும்...

    நாம யாரோட பிரச்சினையையும் தீர்த்து வைக்க முடியாது சார். நமக்கே ஆயிரம் பிரச்சினை... அதை தீத்துக்க தானே இந்த மீட்டிங்.

    நோ... நாம் ஒரு மீடியாவுல இருக்கோம். நம்ம சக்தி நமக்குத்தெரியணும் முதல்ல. நாம் மனசு வெச்சா என்னென்னவோ பண்ணலாம்.

    "என்னென்னவோன்னா அதான்

    Enjoying the preview?
    Page 1 of 1