Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ivarthan, Konjam Kavani...
Ivarthan, Konjam Kavani...
Ivarthan, Konjam Kavani...
Ebook174 pages1 hour

Ivarthan, Konjam Kavani...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தனக்குத் துரோகம் செய்துவிட்ட லட்சுமியையும் வைத்யநாதனையும் சேர்த்து வைக்கும் வேதவல்லி, தனது தாய்க்குத் துரோகம் செய்தவள் என்பது தெரிந்தும், விஐயத்தைத் தனது தாயாகவே ஏற்றுக் கொள்ளும் வித்யா இவர்களின் மனப்பக்குவம் லட்சத்தில் ஒருவருக்குத்தான் வரும்.

18 அத்தியாயங்களும் விறுவிறுப்பாக இருக்கிறது

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110003087
Ivarthan, Konjam Kavani...

Read more from Anuradha Ramanan

Related to Ivarthan, Konjam Kavani...

Related ebooks

Reviews for Ivarthan, Konjam Kavani...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ivarthan, Konjam Kavani... - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    இவர்தான், கொஞ்சம் கவனி...

    Ivarthan, Konjam Kavani…

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    வரவேற்பு

    மனதை நெகிழ வைத்த 'அனுராதா ரமணன்' என் நெஞ்சில் உயர்ந்து விட்டார். இந்த நாவல் வாசகர்கள் மத்தியில் - குறிப்பாக குடும்பப் பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.

    கொச்சி திருமதி. ராஜேஸ்வரி கருணாநிதி

    இக் கதையில் விலாசினியின் (கதா பாத்திரம்) பாதிப்புகள் அதிகம் இருக்கும் என எண்ணினேன். அவ்வாறு இல்லையென்றாலும் கதையின் முடிவில் விவேக்கின் (கதாபாத்திரம்) விவேகமான, வேடிக்கையான பேச்சும் விலாசினியின் விவரமான எதிர்ப் பேச்சும் விறு விறுப்பூட்டியது.

    மொகப்பேர் பா. செல்வபாரதி

    'வி' (V) எழுத்தில் அனேக பாத்திரங்களைப் படைத்து வெற்றி பெற்றுத் திகழும் இவர் நல்ல எழுத்தாளர்களின் வரிசையில் 'இவர் தான் (அதிகம்) 'கவனி'க்கப்பட வேண்டியவரே.'

    மதுரை மா. ரா. விசுவநாதன்

    தனக்குத் துரோகம் செய்துவிட்ட லட்சுமியையும் வைத்யநாதனையும் சேர்த்து வைக்கும் வேதவல்லி, தனது தாய்க்குத் துரோகம் செய்தவள் என்பது தெரிந்தும், விஐயத்தைத் தனது தாயாகவே ஏற்றுக் கொள்ளும் வித்யா இவர்களின் மனப்பக்குவம் லட்சத்தில் ஒருவருக்குத்தான் வரும்.

    தஞ்சாவூர் வெ. முருகானந்தம்

    18 அத்தியாயங்களும் விறுவிறுப்பாக இருந்தன.

    தூத்துக்குடி-2 என். சம்பத்

    'இவர் தான் கொஞ்சம் கவனி' குடும்ப நாவல் தொடருக்குக் 'குங்கும் மாய்' திகழ்ந்தது லதாவின் சித்திரம்.

    தேங்கல்வாரை ஆர். கருணாகரன்

    1

    விலாசினி கண் கொட்டாமல் அப்பாவையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

    ஆஜானுபாகு. நல்ல சந்தன நிறமாக இருந்து, காலப்போக்கில் கொஞ்சம் நிறம் மாறி கோதுமைத்தவிடான நிறம் பெரிய முகம். இரண்டு தாமரை இதழ்களை எடுத்து ஒட்ட வைத்தாற் போன்ற கண்கள். அதில் எப்போதும் மெல்லிய சிவப்பு ரேகைகள் ஓடும் அப்பா, அம்மாவை சந்தோஷமாகப் பார்க்கும் தருணங்களில் இந்த சிவப்பு இன்னும் ஒரு மாத்திரை கூடுவது போல் தோற்ற மளிக்கும். மேல் நோக்கி சீவிய கிராப்பில் ஒற்றை நரை கூட இல்லாமல் இயற்கையாய் மினுக்கும் கறுப்பு-அவரது வயதைச் சுலபமாய் கணிக்க முடியாமல் தடுமாற வைக்கும்.

    அப்பா பெயர் வைத்தியநாதன். பெரிய நிறுவனம் ஒன்றின் மிகப் பெரிய பதவியில் இருப்பவர்.

    இருபத்தியிரண்டு வயசு விலாசினிக்கு அப்பா ஒரு ஆதர்ச புருஷன். நல்ல சினேகிதன். மொத்தமான ஆண்பிள்ளைத் தனத்துக்கு, மானசீகமாய் அவள் கொடுத்திருக்கும் உருவம்

    அவளுக்கு அம்மாவை விடவும் அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும். பதினைந்து வயசு வரையில், அப்பாவின் மடியில் ஏறி குதித்திருக்கிறாள். இன்னமும் அப்படிக் குதிக்க ஆசைதான். அம்மா விஜயம்தான் சண்டைக்கு வருவாள்.

    எப்பொழுதாவது அம்மாவுக்கு உதவியாக சமையலறையில் பச்சை மிளகாயை நறுக்கிக்கொண்டே, சேப்பங் கிழங்கைத் தோல் உரித்துக்கொண்டே, அவள் கேட்பாள்:

    அம்மா, அப்பாவோட அழகு, வேற எந்த ஆம்பிளைக்கும் கிடையாது இல்லே?

    விஜயம் சிரித்துக் கொண்டே சொல்வாள்:

    நாளைக்கு உன் புருஷன் வந்ததுக்கு அப்புறம் அதைத் தீர்மானிக்கணும்.

    விலாசினியின் மனசுக்குள், முதல் நாள் இவளுடன் பேசி, சிரித்து, சண்டை போட்டு, நாய் குட்டி மாதிரி கட்டிப் புரண்டு பிறாண்டிய விவேக் வந்து நிற்பான்.

    விவேக்-

    இவளுடன் சேர்ந்து கல்லூரியில் ஃபிசிக்ஸ்ஸும், கடற்கரையில் காதலும் படிப்பவன்.

    நல்ல உயரம்தான். ஆனால் இன்னும் கொஞ்சம் பூசினாற் போல் சதை போட்டால் பரவாயில்லை என்கிற ரகத்தில் சேர்க்கலாம்.

    இவன் பெருக்க வேண்டும் என்பதற்காகவே விலாசினி தன் டிபன் பாக்சில் முட்டை ஆம்லெட்டும், முந்திரி கேக்கும் எடுத்துப் போகிறாள். ஒரு வருட ஊட்டச்சத்தில் கன்னம் மட்டும் மெலிசாய் உப்ப ஆரம்பித்திருக்கிறது...

    விலாஸ்... சிக்கன், மட்டன் சாப்பிட்டா பெருத்துடுவாங்களாம்...

    யார் சொன்னது...?

    நம்ம கிளாஸ் உன்னி மேரி சொன்னா...

    அவ கிட்ட உனக்கு என்ன பேச்சு?

    அய்யய்யே- பேச்... பேச்சு என்ன... அதுவும் அவ கிட்ட போய்... அன்னிக்கு அவ பாய் ஃபிரண்டு பட்டாபிகிட்ட சொல்லிட்டிருந்தா...கேட்டேன்...சொன்னேம்பா...அவ்ளதான்...

    நிஜமா அவ்ளதானா...

    ச்சீ... சத்தியமா... உங்க அப்பராணை... ஏய்... ஏய்... என்ன செய்யப் போறே இப்ப... எதுவானாலும் சொல்லிட்டுச் செய்...

    அவன், தனது வலது கன்ன ஓரமாய் மையமிடும் அவளது சித்திர இதழ்களைப் பார்த்து, பயத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டு அலறுவான்:

    ஏய் மெதுவா...

    மெதுவாத்தான்.

    இப்ப அப்படித்தான் சொல்லுவே. அப்புறம் அழுத்திக் கடிச்சிடுவே...

    மாட்டேன்...

    முடியாது. எனக்கு உன்மேல நம்பிக்கை இல்லே. எதுக்கும் துளியூண்டு சத்தியம் பண்ணிக் கொடு.

    என்னன்னு...

    முத்தம் கொடுக்கற சாக்குல, மீசை நுனியைப் பல்லாலே கடிச்சு இழுக்க மாட்டேன்னு...

    உங்கப்பராணை மாட்டேன்டா.

    ஏயேய்... என்ன மரியாதை தேயுது... உன்னை எல்லாம் மன்னார்குடியில இருக்கற என் பாட்டிகிட்டயோ, திப்பிராஜபுரத்துல இருக்கற எங்க அத்தைகிட்டயோ கொண்டு விடணும். இந்தக் கண்ணுல விரலை நுழைச்சு, அந்தக் கண் வழியா எடுப்பா...

    அவள் அடிக்கடி அப்பாவையும், விவேக்கையும் ஒப்பிட்டுப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொள்வதுண்டு.

    அப்பா சிங்கம். விவேக் கன்றுகுட்டி.

    பல சமயங்களில் இந்த அப்பாவின் மதிப்பு! அம்மாவுக்குத் தெரியவே இல்லையோ என்கிற ஆதங்கம். கழுத்துமட்டும் கொப்புளிக்கும்.

    அது எப்படித்தான் இந்த அம்மாவுக்குப் போய் இப்படி ஒரு புருஷன் கிடைத்தாரோ...

    அம்மாவும் அழகிதான். மாநிறமானாலும் செதுக்கினாற் போல கண்ணும் மூக்கும்... பல் வரிசை மாத்திரம் இன்னும் கொஞ்சம் உள்ளடங்கி இருந்திருக்கலாம். கொஞ்சம் தான். அதிகமில்லை- அதுகூட இவர்களுக்கு கல்யாணம் ஆனப் புதுசில் அப்பா, அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்திருந்தால் சரியாகி இருக்கும் என்றே தோன்றுகிறது விலாசனிக்கு. அப்பாவின் திடகாத்திரத்திற்கு முன் அம்மா கொடி. பூங்கொடி.

    அது என்னவோ, அப்பாவின் இந்தத் தோரணைக்கும், சுத்தமான தோற்றத்துக்கும் அம்மா இன்னும் கொஞ்சம் முயன்று ஈடு கொடுக்கலாம் என்றே தோன்றும் அவளுக்கு.

    அப்பாவின் முகம், காது மடல், கனமான கழுத்துப் பட்டை, ரோமம் அடர்ந்த மார்பு- எல்லாமே- எல்லாமே- அப்பொழுது தான் குளித்து விட்டு வந்தால், போல வெகு சுத்தமாய் இருக்கும்.

    இந்த ஒரு விஷயத்துக்கே விவேக்குக்கும் அவளுக்கும் தினமும் சண்டை வரும்.

    ஏய், குளிச்சியா?

    என்ன நீ... என்னை ரொம்பத்தான் இன்ஸல்ட் பண்றே... பதினஞ்சு நாளைக்கு ஒரு சோப் தீர்ந்து போறதும்மா... மகராசி...

    உன்னை எப்பப் பார்த்தாலும் ஏதோ மண்ணுல புரண்டு சண்டை போட்டுட்டு வந்த மாதிரியே இருக்கே... எங்க அப்பாவைப் பார்த்திருக்கே இல்லை...

    அவருக்கென்னம்மா... ஜி.எம். அட்டாச் பாத்ரூம்... கெய்சர்... ஷவர்... முதுகு தேய்க்க பெண்டாட்டி. என் வீட்டுக்கு வந்து பாரு... ஒரு பக்கெட் தண்ணியில குளிக்கணும். அதுவும் காலையில ஆறு மணிக்குப் போனா - கொஞ்சம் சுதந்திரமா பாட்டு பாடிட்டே குளிக்கலாம். அப்புறம்னா வரிசையா அஞ்சாறு கியூவுல நிற்கும்...

    அப்பாவுக்கு முறம் போன்ற தடித்த உள்ளங்கை. ஆனாலும் மிருதுவாய் ஒரு பெரிய ரோஜாப்பூ போலச் சிவந்து... விரல்களின் ஒவ்வொரு நக நுனியும் 'பளிச்'சென மூன்றாம் பிறை சந்திரன் போல...

    ஆபீஸ் முடிந்து, வீடு வந்து, வெள்ளை வேட்டியும், முண்டா பனியனும் மட்டும் அணிந்து, பால்கனியில் சாய்வு நாற்காலி போட்டு, ஒரு பக்கம் சின்ன ஸ்டூலில் அம்மா பொரித்து வைக்கும் ஜவ்வரிசி வடகமும், கையில் பொன்நிற திரவமுமாய் அவர் உட்கார்ந்திருக்கும்போது பார்க்க வேண்டும்...

    தன் குட்டிகளுக்கு இரையைத் தேடிக் கொடுத்து விட்டு, குகை வாசலில் கம்பீரமாய் அமர்ந்திருக்கும் சிங்கத்தைப்போல...

    இப்படி அவர் உட்கார்ந்திருக்கும் போது விவேக் ஓரிரு முறை பார்த்திருக்கிறான்.

    உங்கப்பா மாதிரி நானும் ஃபாரின் விஸ்கி அடிச்சா வாட்டசாட்டமா, செவசெவன்னு ஆகிடுவேன்...இப்பகூட என்னைக் கேட்டார்...

    என்ன கேட்டார்?

    ஒரு பெக் சாப்பிடேன், மருந்து மாதிரி... அளவா இருந்தா உடம்புக்கு நல்லதுன்னு...

    இதைச் சொல்லி விட்டு அவன் குறும்பாய் கீழ் பார்வை பார்ப்பான்.

    அவள் பேச மாட்டாள். பார்வையாலேயே அவனை பஸ்பமாக்கி விடுவாள்.

    விலாசினிக்குத் தெரிந்து, குறையே கண்டுபிடிக்க முடியாத அப்பாவிடம், குறை என்று சொல்ல வேண்டும்மானால்- இந்த மாலை நேர விவகாரம் தான்.

    அதற்காக அப்பா மொடாக் குடியர் இல்லை. தினசரிப் பழக்கமும் இல்லை... சனிக்கிழமை சாயந்திரங்களில்...

    குடித்து விட்டு தாறுமாறாக நடந்து கொள்ளும் மனிதரும் அவரில்லை.

    அவள் தான் இது போன்ற சமயங்களில் அப்பாவின் பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கிறாளே!

    வைத்தியநாதனுக்கு எதிலுமே ஒரு நேர்த்தி வேண்டும். அழகு வேண்டும். அவர் விஸ்கியுடன் சோடா கலந்து, எண்ணி மூன்று ஐஸ் கட்டிகளைப் போட்டு, நிதானமாக உறிஞ்சுவது கூட அழகுதான்! பல சமயங்களில் விலாசினியே அவருக்கு ஐஸ் எடுத்துப் போடுவதும், நொறுக்குத்

    Enjoying the preview?
    Page 1 of 1