Andhi Varum Neram
5/5
()
About this ebook
'அந்தி வரும் நேரம்' நாவல் 'கண்மணி'யில் வெளி வந்து எனக்குப் பெரும் புகழ் பெற்றுத் தந்தது. தென்மேற்குப் பருவக்காற்று வீசும் 'தேனி’யில் தான் நான் படித்து வளர்ந்தேன். தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளை... கதைக்குரிய களமாக்கி உள்ளேன்.
சொத்துக்காக நிறம் மாறிய சொந்தங்களை உதறிவிட்டு அனாதையாக அகதிபோல் அடைக்கலம் தேடி ஓடுகின்றாள் கதாநாயகி கவுரி. கண்ணியத்தின் மொத்த இருப்பிடமான கதாநாயகன் கைலாஷ்... முத்துப்பாண்டி, மருது, மரகதம், சொக்கலிங்கம் தம்பதியினர் போன்ற கதாபாத்திரங்கள் பசுமரத்தாணி போல் உங்களது நெஞ்சங்களில் பதிந்து போவார்கள்.
Read more from Lakshmi Praba
Engey En Jeevaney..? Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthaal Rating: 5 out of 5 stars5/5Maaya Kangal Rating: 5 out of 5 stars5/5Ennuyir Neethaney…! Rating: 5 out of 5 stars5/5Ennalum Un Pon Vaanam Naan... Rating: 5 out of 5 stars5/5Unnai Virumbinen Uyire.. Rating: 5 out of 5 stars5/5Ullam Rendum Ondru Rating: 5 out of 5 stars5/5Pathu Maatha Bandham Rating: 0 out of 5 stars0 ratingsEnna Vilai Azhage…? Rating: 5 out of 5 stars5/5Nenjam Irandin Sangamam Rating: 5 out of 5 stars5/5Thirumagal Thedi Vandhaal… Rating: 5 out of 5 stars5/5Kaana Vendum Seekiram...! Rating: 5 out of 5 stars5/5Maavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsVaa Vaa Vasandhame Rating: 4 out of 5 stars4/5Agnip Pravesam Rating: 5 out of 5 stars5/5Aagaya gangai Rating: 5 out of 5 stars5/5Unakkaagavey Naan Vazhgiren Rating: 5 out of 5 stars5/5Dinam Dinam Valarpirai Rating: 0 out of 5 stars0 ratingsChithirame…. Senthen Mazhaiye Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5Athisayam Adhu Rakasiyam Rating: 0 out of 5 stars0 ratingsSorgathiley Idhu Mudivaanathu Rating: 5 out of 5 stars5/5Vaa... Pon Mayile Rating: 5 out of 5 stars5/5Devan Thantha Veenai... Rating: 0 out of 5 stars0 ratingsNaan Undhan Poomalai Rating: 5 out of 5 stars5/5Idhayam Muzhuthum Unathu Vaasam...! Rating: 5 out of 5 stars5/5Idhayamellam Un Ninaivu Rating: 0 out of 5 stars0 ratingsNaan Unai Neenga Maatten Rating: 5 out of 5 stars5/5
Related to Andhi Varum Neram
Related ebooks
Ullangal Ondragi... Rating: 0 out of 5 stars0 ratingsThavamindri Kidaitha Varame Rating: 0 out of 5 stars0 ratingsVaa Vaa Vasandhame Rating: 4 out of 5 stars4/5Kangal Sollum Kavithai Rating: 5 out of 5 stars5/5Devathai Vaazhum Veedu! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Sadugudu Rating: 5 out of 5 stars5/5Idhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Vaarayo... Vennilave... Rating: 5 out of 5 stars5/5Orey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5Nee Sooriyan, Naan Thamarai Rating: 5 out of 5 stars5/5Udhaya Geetham Rating: 0 out of 5 stars0 ratingsAthisayam Adhu Rakasiyam Rating: 0 out of 5 stars0 ratingsMinmini Poochikal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Enbathu Mayavalai Rating: 4 out of 5 stars4/5Ithu Enna Mayamo? Rating: 5 out of 5 stars5/5Enna Vilai Azhage…? Rating: 5 out of 5 stars5/5Unakkaagavey Naan Vazhgiren Rating: 5 out of 5 stars5/5Ezhiloviyam Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaanathu Vennilavu Rating: 5 out of 5 stars5/5Thedi Vandha Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Tharum Megam Rating: 5 out of 5 stars5/5Pala Naal Kanave! Rating: 0 out of 5 stars0 ratingsThottil Sugam Rating: 5 out of 5 stars5/5Anbin Vizhiyil Rating: 0 out of 5 stars0 ratingsEllaik Kodukal Rating: 5 out of 5 stars5/5Idhayam Idam Maarumaa...? Rating: 0 out of 5 stars0 ratingsEnnavale...! Rating: 5 out of 5 stars5/5Siragai Thedum Sittu Kuruvi Rating: 5 out of 5 stars5/5Kankalukku Sonthamillai Rating: 5 out of 5 stars5/5Vasantha Kaala Paravaigal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Andhi Varum Neram
1 rating0 reviews
Book preview
Andhi Varum Neram - Lakshmi Praba
http://www.pustaka.co.in
அந்தி வரும் நேரம்
Andhi Varum Neram
Author:
லட்சுமி பிரபா
Lakshmi Praba
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
முன்னுரை
பிரியமுள்ள வாசகர்களுக்கு,
வணக்கம். நலம்... நலம் தானே? திரு. அருண் அவர்கள் மூலமாய்... இந்தப் புதிய நாவல் மூலம் நாம் மீண்டும் சந்திக்கிறோம்.
இரண்டு நாவல்களை சிறந்த முறையில் வெளியிட்டுள்ள அருண் பதிப்பகத்தாருக்கும், திரு. அருண் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
'அந்தி வரும் நேரம்' நாவல் 'கண்மணி'யில் வெளி வந்து எனக்குப் பெரும் புகழ் பெற்றுத் தந்தது. தென்மேற்குப் பருவக்காற்று வீசும் 'தேனி’யில் தான் நான் படித்து வளர்ந்தேன். தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளை... கதைக்குரிய களமாக்கி உள்ளேன்.
சொத்துக்காக நிறம் மாறிய சொந்தங்களை உதறிவிட்டு அனாதையாக அகதிபோல் அடைக்கலம் தேடி ஓடுகின்றாள் கதாநாயகி கவுரி. கண்ணியத்தின் மொத்த இருப்பிடமான கதாநாயகன் கைலாஷ்... முத்துப்பாண்டி, மருது, மரகதம், சொக்கலிங்கம் தம்பதியினர் போன்ற கதாபாத்திரங்கள் பசுமரத்தாணி போல் உங்களது நெஞ்சங்களில் பதிந்து போவார்கள்.
'உயிரும் உனக்காக...' இது எனது நான்காவது நாவல் 'ராணி முத்து' மூலமாக வெளிவந்து, வாசகர்களிடமிருந்து அமோக வரவேற்பையும், ஏகோபித்த பாராட்டுக்களையும் பெற்றுத் தந்து என்னை உயர்த்திய நாவல்.
அழகான காதல் கதையுடன் பின்னிப் பிணைந்த அருமையான குடும்பச் சித்திரம் இது! உங்களை அடிக்கடி சந்திக்க வேண்டும் என்பதே என் ஆசை... நான் வளர வாழ்த்துங்கள்.
உங்கள் சகோதரி
லட்சுமி பிரபா
***
1
முல்லை ஆறு சலசலவென்று பாய்ந்தோடிக் கொண்டிருந்தது.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேலென்ற வயல்வெளிகள். தென்னந்தோப்பும், மாந்தோப்பும், திராட்சை தோட்டங்களும், பூந்தோட்டங்களும் செழிப்புடன் கண்களை வசீகரித்தன.
இத்தனை செழுமைக்கும் பசுமைக்கும் 'நான்தான் காரணமாக்கும்' என்று கட்டியங் கூறாத குறையாக... இரு கரைகளையும் தொட்டு நுரை பொங்கப் பிரவாகம் எடுத்தது முல்லை ஆறு!
தேனி மாவட்டத்தில்... எண்ணற்ற கிராமங்களை செழுமைப்படுத்தி கர்வமாய் பிரவாகித்த முல்லை ஆற்றங்கரையில் அமைந்த 'வீரபாண்டி' கிராமம் தனி சோபையுடன் மிளிர்ந்தது என்றால் அது மிகையல்ல...!
பச்சைப் பசேலென்ற கிராமம் என்பதோடு... ஆற்றங்கரையில் அமைந்த கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவிலும்... வீரபாண்டி கௌமாரி அம்மன் திருக்கோவிலும்... அதற்கு மென்மேலும் சிறப்பு சேர்த்தன.
கண்ணீஸ்வரமுடையார் கோவிலின் படித்துறையைத் தொட்டுத் தழுவிக் கொண்டு சென்ற முல்லையாற்றில் முங்கிக் குளித்துவிட்டு எதிரே அண்ணாந்து பார்த்தாள் கெளரி!
கோவில் கோபுரத்தின் கலசம். இளம் வெயில் பட்டு தகதகவென்று ஜொலித்தது.
கண்களை மூடிக் கரங்களைக் குவித்து தியானித்து விட்டு மெல்லக் கரையேறினாள் கவுரி. கரையோரத்தில் இருந்த பருத்த ஆலமரத்தின் அடி வேரில் அமர்ந்திருந்த தோழி முருகேஸ்வரி, விழிகள் தெறிக்காத குறையாக ஆச்சரியத்துடன் கவுரியை ஏறிட்டாள்.
அடர்ந்த நீண்ட கூந்தலும், அகன்ற கண்களும் கூர் மூக்கும் கொடி போன்ற தேகமும், தந்தத்தைக் கடைந்தாற் போன்ற நிறமுமாய்... கண்களைக் கட்டிப் போட்டாள் கெளரி.
கெளரி! நீ ரொம்ப ரொம்ப வித்தியாசமான பொண்ணுடி! இந்த கிராமத்துலேயே பிறந்து வளர்ந்தவ நீ... ஆறு, குளம், கோவில், தோட்டம், துரவு, வயக்காடு, வாய்க்கால்... இதெல்லாம் உனக்கு அலுக்கவே இல்லையா? எங்களுக்கெல்லாம் பார்த்துப் பார்த்து சலிப்பு தட்டிருச்சு!
இந்த மண்ணுல பிறந்ததுக்கு நாம கொடுத்து வச்சிருக்கணும். மகசூலை அள்ளிக் கொடுக்கிறா நம்ம பூமித்தாய்! மண் மாதாவோட அழகை நான் தினமும் ரசிக்கிறேன். நம்மைப் பெத்த தாயோட முகமும், அன்பும் நமக்கு அலுக்குமா? சலிப்பு தான் தட்டுமா?
முல்லைப்பல் வரிசை தெரிய முறுவலித்தாள் கெளரி.
உன் அளவுக்கு... யாருக்குமே இங்க ரசனை இல்ல போ! எல்லாம் மடச்சாம்பிராணிங்க தான்... இந்த கிராமத்துலே நம்ம மாதிரி வயசுப் பொண்ணுங்க எத்தன பேரு இருக்காளுக... ஒருத்தியாவது விடியக்காத்தால ஆத்துப் பக்கம் தலைவச்சுப் படுக்கிறாளா? தோ... என்னைப் பாரு... ஆத்துல ஒரு முங்கு முங்கினாலே... ஆச்சுப் போச்சுன்னு ஆயிடுது. வீட்டுல அம்மா விளாவி வச்ச வெந்நீர்ல காக்காய் குளியல் தான் போட முடியுது. வசதியான வீட்டுல பிறந்தாலும் பந்தா இல்லாம... பாந்தமா நடந்துக்கிறே! நீ ஒரு தனி ரகம் கெளரி.
உஷ்! என்னைத் தூக்கி வச்சுப் பேசாட்டி உனக்குத் தூக்கம் வராதே! அஞ்சு விரலும் ஒரே மாதிரியா இருக்கு? ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். அதனால... மட்டம் தட்டிப் பேசறதை நிறுத்திக்கோ முருகி.
அதற்குள் அவர்கள் வரப்பு வழியாக நடந்து மாந்தோப்பை எட்டி விட்டிருந்தனர்.
எங்க... மருது மாமாவைக் காணலியே?
கெளரி பார்வையால் துழாவினாள்.
கெளரி! அதோ... அங்கே இருக்காரு பாரு!
முருகேஸ்வரி சுட்டிக்காட்டினாள். அவள் காட்டிய திசையில் பார்வையைப் பதித்தாள் கெளரி.
மருதப்பன் மாமரத்தடியில் குனிந்து சருகுகளில் புதைந்திருந்த பழங்களைத் தேடிப் பொறுக்கி எடுத்துக் கொண்டிருந்தார்.
கால் கொலுசு சப்திக்க அவர்கள் நடந்து அவனை சமீபித்ததும்... புன்னகையுடன் எழுந்தார் மருதப்பன்.
இந்தா கெளரி! அணில் கடிச்ச பழமா பறிச்சிருக்கேன். தேனாட்டம் இனிக்கும்!
ஐந்தாறு பழங்களை அவளிடம் நீட்டினார்.
தேங்க்ஸ் மாமா!
ஹாங்! முருகி! இந்தா சாப்பிடு!
என்றாள் கெளரி.
மருதப்பன் விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்தார். தோழிகள் இருவரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.
மருதப்பன் கெளரியின் வீட்டில் பல வருடங்களாக வேலை செய்பவர். வயது நாற்பத்தெட்டுக்கு மேலிருக்கும். விசுவாசமான தொழிலாளி. கெளரி பிறப்பதற்கு முன்பிருந்தே அவளது வீட்டில் வேலை செய்பவர்.
கெளரியை கண்ணின் இமை போல் பாதுகாப்பவர். அவள் தினமும் ஆற்றங்கரைக்குச் செல்லும்போது நிழல் போல் கூடவே வருவார். அவள் குளித்து விட்டு வரும் வரை மாந்தோப்பில் உலாவிக் கொண்டிருப்பார்.
கெளரியின் குடும்பத்திற்காக தன்னுயிரையே கொடுக்கத் தயங்காதவர்.
கெளரியை அவருக்கு ரொம்பவே பிடிக்கும். தனது வீட்டில் வேலை செய்யும் பணியாள் என்று அவள் என்றுமே கருதியதில்லை வாய் நிறைய 'மருது மாமா' என்று முறை வைத்து அவள் அழைக்கும்போது... பாசத்தில் நெக்குருகிப் போய் விடுவார் மருதப்பன்.
இந்த மாந்தோப்பு கூட கெளரியின் தந்தை சொக்கலிங்கத்திற்கு சொந்தமானது தான்! பத்து நிமிட நடையில்... வீட்டை அடைந்தாள் கெளரி.
வா முருகி! காபி குடிச்சிட்டுப் போ!
உக்கும்! நான் இன்னும் குளிக்கவே இல்லையேடி! அப்புறமா வாரேன்!
சிட்டாகப் பறந்து ஓடினாள்.
அந்தக் காலத்தில் கட்டப்பட்ட பிரமாண்டமான வீடு அது! தேக்கு மரக்கதவுகளும், தூண்களும், கூடத்திலிருந்த பெரிய ஊஞ்சலும் கம்பி போட்ட முற்றமும்... இன்றளவும் பிரமிக்க வைத்தது.
கெளரி... அந்த வீட்டின் ராஜகுமாரி உள்ளே நுழைந்தது தான் தாமதம்! அடுப்பங்கரையிலிருந்து தூபக்காலை ஏந்திக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் ஓடி வந்தாள் காமாட்சி.
வந்து இந்த ஊஞ்சல்லே உட்காரு தாயி! சாம்பிராணி போடறேன். ஈரத்தலையை சீக்கிரமா உலர்த்தணும் கண்ணு! இல்லேன்னா... தலையிலே நீர் கோர்த்து மண்டை வலி வந்துடும் ராசாத்தி!
நான் போட்டுருக்கிற டிரஸ்ஸைப் பாரேன்! வெளியில காத்து அள்ளிக்கிட்டுப் போவுதா... எல்லாமே உலர்ந்திடுச்சு! இரு... வேற டிரஸ்ஸை மாத்திட்டு வந்திடறேன்!
கெளரி சிணுங்கியபடி பேசிவிட்டு தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்.
காமாட்சி தூபக்காலில் சாம்பிராணியைத் தூவியபடி கூடத்தில்