Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Enbathu Ethuvarai?
Kaadhal Enbathu Ethuvarai?
Kaadhal Enbathu Ethuvarai?
Ebook121 pages1 hour

Kaadhal Enbathu Ethuvarai?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during the last four decades with her works that reflect an awareness on social issues, a special sensitivity to social problems, and a commitment to set people thinking.

She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.

As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.

'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580101803058
Kaadhal Enbathu Ethuvarai?

Read more from Sivasankari

Related to Kaadhal Enbathu Ethuvarai?

Related ebooks

Reviews for Kaadhal Enbathu Ethuvarai?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Enbathu Ethuvarai? - Sivasankari

    http://www.pustaka.co.in

    காதல் என்பது எதுவரை?

    Kaadhal Enbathu Ethuvarai?

    Author:

    சிவசங்கரி

    Sivasankari

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    கதவை உதைத்துத் திறந்து கொண்டு, மொட்டைமாடியில் காலடி வைத்தபோது, விடியாத காலைநேரத்துத் தென்றல் முகத்தையும் உடம்பையும் காதலியின் முந்தானை போல ஸ்பர்சித்து, சிலிர்ப்பைத் தந்தது. குட்டைச்சுவரின் மேல், கையோடு கொண்டு போயிருந்த புஸ்தகங்களை வைத்தவன், மூச்சை நீளமாக இழுத்து வெளியிட்டான்.

    விடிகாலையில், படுக்கையின் கதகதப்பைப் பிரிந்து, விழிப்பது தான் சிரமமான காரியம். பல்லைக் கடித்துக் கொண்டு எழுந்து விட்டால், பிறகு அந்த அமைதி, தனிமை எல்லாமே அலாதி சுகம்தான்... இனிமைதான்.

    படிக்கப்போகும் பிள்ளைக்காக, அம்மா இவனுக்கு முன்னாலேயே கண்விழித்து, அக்கறையோடு கலந்து தந்திருந்த காபியின் சூட்டை இன்னமும் வயிற்றுக்குள் உணர முடிந்தது.

    குணசந்திரன் இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி, உடம்பின் சுறுசுறுப்பைக் கூட்டுவதுபோல இப்படியும் அப்படியும் சுழற்றினான். ஒருபக்கம் சாம்பல்நிறப் போர்வையோடும், கிழக்கு திசையில் லேசான ஆரஞ்சு பூச்சோடும் காணப்பட்ட வானக் கரையில், ஒரே ஒரு நட்சத்திரம் மட்டும் பிடிவாதமாகக் கண் சிமிட்டியது அவனது சந்தோஷத்தை அதிகப்படுத்தியது. இன்னும் அரைமணி போனால், தெரு சுத்தமாக விழித்துக்கொண்டு விடும். அப்புறம், போவோர் வருவோரின் சந்தடியும், குழந்தைகளின் அழுகையும், காய்கறிக்காரர்களின் கூச்சலுமாய் தெரு அமளிபடத் துவங்கிவிடும். அதுவரை இந்த நிசப்தம் நீடிக்கும். அலுமினியத் தொட்டி போன்ற பாத்திரத்தில் பால் பாக்கெட்டுகளை நிறைத்துக்கொண்டு செல்லும் கிழவியாலும், சைக்கிளை நிறுத்தி வீட்டுக்கு வீடு தினசரியை எறிந்துவிட்டுப் போகும் பையனாலும் இந்த அமைதிக்குப் பெரும் குந்தகம் விளைவிக்க முடிவதில்லை.

    'இந்தியப் பொருளாதாரம்' என்ற புஸ்தகத்தைக் கையிலெடுத்த குணசந்திரன், மேலும் கீழுமாக நடந்தவாறு அதைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தான். இறுதித் தேர்வுக்கு இன்னும் சரியாக மூன்று மாசங்களே இருக்கின்றன. பொறுப்பாகப் படித்து, முதல்வகுப்பில் தேறினால்தான், அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடியாவது மேற்படிப்புக்காக எம்.காம். வகுப்பில் சேர்வது சாத்தியமாகும். இல்லாது போனால், 'ஆமாண்டா, நீ படிச்சுக் கிழிக்கற லட்சணத்துக்கு அது வேற கேக்குதாக்கும்! வீண் தண்டச்செலவு! நடக்கற பேச்சாப் பேசு...' என்று ஒரேயடியாகக் கோழி அமுக்குகிற மாதிரிதட்டி உட்கார்த்திவிடுவார்.

    நாகலிங்கத்திற்கு, அதுதான் குணசந்திரனின் அப்பாவுக்கு, 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்பதில் நம்பிக்கை அதிகம். அவரைச் சொல்லி குற்றமில்லை... மனிதர் சரியான கிராமத்துக் கட்டை. பத்து வயசில் நிலத்தில் இறங்கி வேலைபார்க்கத்துவங்கி, மண்ணையே தெய்வமாக மதித்து வாழ்பவர். பரம்பரையாக விவசாயம்தான் தொழில். படப்பைக்கு அருகில் பதினைந்து ஏக்கரா நிலத்தை வைத்துக்கொண்டு, பருவம் பார்த்துப் பயிர் செய்து, வருஷத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் போல இன்றைக்கும் வருமானம் ஈட்டும் உழைப்பாளி. அவரிடம் போய், 'பி.காம்., எம்.காம். படித்து, பொருளாதார நிபுணராகி, அரசாங்கத்திலோ வங்கியிலோ வேலைபார்த்து, கை நிறைய சம்பாதித்துக் காட்டுகிறேன்' என்றால், எப்படி ஏற்றுக் கொள்வார்!

    இன்னும் சொல்லப்போனால், நாகலிங்கத்திற்கு பையனை கோயமுத்தூர் விவசாயக் கல்லூரிக்கு அனுப்பி, தேர்ச்சிபெற வைத்து, நூதன முறைகளைக் கையாண்டு, தன் நிலத்தில் அமோக விளைச்சலைக் காட்டி, உற்றார் சுற்றாரை 'அடேங்கப்பா!' என்று மூக்கில் விரலை வைக்கச் செய்யவேண்டும் என்பதுதான் கழுத்துவரையில் இருந்த ஆசை. ஆனால், பிள்ளை கேட்கவில்லை.சட்டமாக மறுத்துவிட்டான். அதனால், அவன் விருப்பத்துக்கு பி.காம். படிக்க அனுமதித்தாலும், படிப்பை முடித்த பிறகு பரம்பரைத் தொழிலில்தான் கவனத்தைச் செலுத்தவேண்டுமென்று திட்டவட்டமாக முதலிலேயே சொல்லிவிட்டார்.

    உன்னை என்ன சாதாரணக்கூலியாள் மாதிரி சேத்துல எறங்கி உழவா சொல்றேன்? நடவு, அறுப்பு எல்லாத்தையும் மேல்பார்வை பாரு... வேணும்னா, உன் படிப்புக்கு ஏத்ததா ஒரு உர, பூச்சி மருந்து ஏஜென்சி எடுத்து கடை நடத்து! இதுல வராத வருமானத்தையா, நீ ஆசைப்படற படிப்பு குடுத்துடப்போவுது? கேப்பார் பேச்சக் கேட்டு கண்ட யோசனைகளை வளர்த்துக்காம, உருப்படியா வாழ்க்கை அமையற வழியப்பாரு... ஆமா, சொல்லிட்டேன்!

    அப்பாவின் கண்டிப்பு ஊர்ப்பிரசித்தம். முரண்டினால், அது அதிகமாகும். குணசந்திரனுக்குத் தெரியும். இப்போதைக்கு பி.காம். படிப்புக்கு அனுமதித்ததே பெரிசு. மூன்று வருஷங்கள் கழித்து, தேவையானால் அப்போது மோதிக்கொள்ளலாமென்று பேசாமல் இருந்துவிட்டான்.

    நாலு தலைமுறையாக வாழ்ந்துவந்த படப்பை கிராம் வீட்டை விட்டுவிட்டு, இவன் படிப்பு வசதிக்காகதாம்பரத்தில் ஒரு வீட்டை வாங்கிக்கொண்டு குடிபெயரச் சம்மதித்தவர், கெஞ்சி, கொஞ்சி, அழும்பு செய்தால், மனசு மாறாமல் போய்விடுவாரா என்ன? குணசந்திரனுக்கு நம்பிக்கை இருந்தது.

    ஆனால், மூன்றாமாண்டில் காலடி எடுத்துவைத்த நாளிலிருந்தே, படிப்ப முடிச்ச கையோட பையனுக்கு கால்கட்டையும் போட்டுட வேண்டியதுதான்! உங்கண்ணனதயாரா இருக்கும்படி இப்பவேசமயம் கிடைக்கறப்ப அரசல்புரசலா சொல்லிவை, சரசு... என்று அம்மாவிடம் சொல்ல, அவளும் மதுராந்தகத்தில் வசதியாய் வாழும் அண்ணனிடம் பேச, நீங்க எப்ப'ம்முனு சொன்னாலும், நாங்க ரெடிதான்! பாப்பா பொறந்த அன்னிக்கே, அவ குணாவுக்குத்தான்னு தீர்மானமாயிடுச்சே! நல்ல காரியத்த எதுக்கு ஒத்திப்போடணும்? என்று மாமாவும் அவுட்டுச் சிரிப்போடு கூற... மொத்தத்தில் குணசந்திரனுக்கு மேற்படிப்போடு இதைத்தடுப்பதையும் எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்கிற கலக்கம் எழாமலில்லை.

    பாப்பா என்கிற மீனாட்சி, மதுராந்தகம் மாமாவின் கடைக்குட்டி. இரண்டு பிள்ளைகளுக்குப் பிறகு பிறந்த அபூர்வப் பெண். எட்டாவதில் ஃபெயில் ஆன பிறகு, 'எனக்குப் படிக்கப் பிடிக்கல' என்று வீட்டோடு இருந்துவிட்டாள். பார்க்கவும் ரொம்ப சுமார் ரகம். ஆனாலும், சமையல், இதர காரியங்களில் வெகு சுட்டி. இதோடு, கையில் லட்ச ரூபாய்ப் பணம், ஐம்பது பவுன் நகை, மாப்பிள்ளைக்கு ஸ்கூட்டர் வகையறா என்கிற சீர்வரிசைகளோடு வரக் காத்திருப்பவள்.

    பெற்றவர்களைப் பொறுத்தவரை, இத்தனை பிளஸ் பாயிண்டுகள் இருந்தாலும், ஏனோ பாப்பாவை மணப்பதை குணசந்திரனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

    அவனுக்கென்று ஒரு கனவு இருக்கிறது. பெரிய படிப்பு படித்து,

    Enjoying the preview?
    Page 1 of 1