Aasai Ther
()
About this ebook
Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.
Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.
Read more from Anuradha Ramanan
Mouna Kanavu Rating: 5 out of 5 stars5/5Nanaindha Iravugal Rating: 5 out of 5 stars5/5Moga Mazhai Rating: 5 out of 5 stars5/5Nilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Ulley Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsVaadagaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsMullodu Oru Mayiliragu Rating: 5 out of 5 stars5/5Koondu Nila Rating: 0 out of 5 stars0 ratingsSalanam Rating: 0 out of 5 stars0 ratingsVettai Maan Rating: 0 out of 5 stars0 ratingsPournami Nilavu Rating: 4 out of 5 stars4/5Neeyum Naanum Oru Veedum Rating: 0 out of 5 stars0 ratingsPoovodum Pottodum Rating: 0 out of 5 stars0 ratingsSonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5Puthusai Potta Kolam Rating: 4 out of 5 stars4/5Thendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Anna Rating: 5 out of 5 stars5/5Uravu Ondru Vendum Rating: 5 out of 5 stars5/5Iruttil Oru Yuddham! Rating: 3 out of 5 stars3/5Vera Vazhi Theriyale... Rating: 5 out of 5 stars5/5Nila Sandhippu Rating: 5 out of 5 stars5/5Chinna Chirusugal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikka… Kaathiru Rating: 0 out of 5 stars0 ratingsMegathile Methaidu Rating: 0 out of 5 stars0 ratingsSumai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikkum Bothimaram Rating: 0 out of 5 stars0 ratingsMana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Sirai Rating: 3 out of 5 stars3/5Mogam Ennum Naadakam Rating: 0 out of 5 stars0 ratingsNee En Poonchiragu Rating: 5 out of 5 stars5/5
Related to Aasai Ther
Related ebooks
Kathavugal Marupadiyum Thirakkalam Rating: 0 out of 5 stars0 ratingsThottathellam Penn Rating: 0 out of 5 stars0 ratingsKaakitha Medai Rating: 0 out of 5 stars0 ratingsNaalaikku Neramillai... Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaga Uma Rating: 3 out of 5 stars3/5Mom From India Rating: 0 out of 5 stars0 ratingsSonthamena Nee Irunthal… Rating: 0 out of 5 stars0 ratingsYaaradhu? Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalil Nee Oru Kaviyam Rating: 0 out of 5 stars0 ratingsMannil Neendhum Meengal Rating: 0 out of 5 stars0 ratingsEppodhum Nee! Rating: 2 out of 5 stars2/5Mana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsSandhiya Kaalathu Salanangal Rating: 3 out of 5 stars3/5Pathinooravathu Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsVilagava Pazhaginom? Rating: 0 out of 5 stars0 ratingsDhanam Rating: 0 out of 5 stars0 ratingsParuva Vayasum... Paal Manasum... Rating: 5 out of 5 stars5/5Mazhaikaala Malligaigal Rating: 0 out of 5 stars0 ratingsNitham Oru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsVeliyorathil Oru Vellai Poo Rating: 0 out of 5 stars0 ratingsMeeravin Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsNadaimurai Kaaviyam Rating: 5 out of 5 stars5/5Thendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Gangaikarai Pookkal Rating: 5 out of 5 stars5/5Neruppuden Uravu Rating: 0 out of 5 stars0 ratingsSaayatha Bommaigal Rating: 5 out of 5 stars5/5Nizhalukku Yengum Marangal Rating: 5 out of 5 stars5/5Vasanthathai Nokki... Rating: 5 out of 5 stars5/5Chinna Chirusugal Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru Rating: 3 out of 5 stars3/5
Reviews for Aasai Ther
0 ratings0 reviews
Book preview
Aasai Ther - Anuradha Ramanan
http://www.pustaka.co.in
ஆசை தேர்
Aasai Ther
Author:
அனுராதா ரமணன்
Anuradha Ramanan
For more books
http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
முன்னுரை
பிரியமான வாசகர்களுக்கு.
வணக்கம். நலம். நலம் தானே?
இந்த 'ஆசைதேரி'ன் ஊர்வலம் கொஞ்சம் வித்தியாசமானது. தேரை வடம்கட்டி இழுப்பவர்கள் கதாநாயகன் அரவிந்தனும், கதாநாயகி பவித்ராவும் மட்டுமல்ல. தேரின் அச்சாணியாக அனிதா மற்றும் அகிலாண்டம், தருமன், சாந்தமூர்த்தி, சிகாமணி இப்படி பலபேர்.
கல்லூரி மாணவர்களிடையே காதல் என்பது சாதாரண சராசரியான சம்பவங்கள் தான். உண்மையான காதலும் உண்டு. காதல் போன்ற பிரமையும் உண்டு. அனேகமாய் பின்னால் சொன்னது தான் நிறைய.
என்னுடைய கதையின் நாயகனும் காதலிக்கிறான் - அவனது சொந்த அத்தை மகள் பவித்ராவை. ஆனால் அவனுடன் படிக்கும் அனிதாவோ அவனை மிகத் தீவிரமாக காதலிக்கிறாள். அரசியலில் பெரும்புள்ளியான சாந்தமூர்த்தியின் ஒரே மகள் அனிதா. இதே சாந்த மூர்த்தியின் கட்சியில் பலவருட காலங்களாக தீவிரத் தொண்டராக இருப்பவர் தான் அரவிந்தனின் தந்தை ஆட்டோடிரைவர் தருமர். எதிர்கட்சித் தொண்டனாகவும், தருமனின் மைத்துனனாகவும், பவித்ராவின் தந்தையுமான சிகாமணி.
அக்கா புருஷனின் ஆதரவில் வளர்ந்து, இன்று எதிர் துருவத்தில் போய் நின்று சிகாமணி அலட்டுவதும், சாந்தமூர்த்தி தன் பணபலத்தால் மகளின் காதலை அப்படியே முறித்துப்போட நினைப்பதுவும், உண்மையான விசுவாசியான தருமன், தலைவரின் போக்கு கண்டு மனம் வெதும்பிப் போவதும், என் கற்பனையில் கோர்த்த மணிகள்தான் என்றாலும் நடைமுறை வாழ்க்கையில் பார்த்த மணிகள்தான்.
இன்றைய வாழ்க்கையில் அரசியல் எந்த அளவுக்கு சாதாரண பாமரரின் வாழ்க்கையில் கூட புகுந்து விளையாடுகிறது என்பதை நான் சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அரசியல் அந்தஸ்து உள்ளவர்கள் நினைத்தால் பிச்சைக்காரன் மந்திரி ஆகலாம். மந்திரி செல்லாக்காசாகலாம். குடும்பமும், காதலும் இவர்களைப் பொறுத்தவரையில் அரசியல் சதுரங்கத்துக்கு உதவும் பகடைக்காய்கள்.
இங்கே பதவிமோகம் என்று வந்து விட்டால் மனைவி, மகள் என்கிற பாசமெல்லாம் கிடையாது.
அதே சமயத்தில் அன்பு, இரக்கம், கனிவு, பாசம், பண்பு இவை போன்ற - நமது வாழ்க்கையிலிருந்து வழக்கொழிந்து போன சொற்கள் - ஏழைகளின் இல்லங்களில் இன்னமும் இருப்பது தான் வியப்புக்குரிய விஷயம்.
பவித்ரா அப்படிப்பட்டவள் தான். அன்பாக இருப்பதற்கும், தன்னைச் சுற்றியுள்ள சேரி மக்களிடம் பரிவாக இருப்பதற்கும் அவள் எந்தப் பள்ளிக் கூடத்திலும் படிக்கவில்லை. ஆதலால் தான் அவளுக்கு காதலை விடவும் மக்களின் அன்றாடத் தேவைகள் புரிந்திருந்தது.
சாதாரணமாய் கோயிலின் பெரிய தேர்கள் ஓடும் போது அலையென மக்கள் திரள்வார்கள். தேரோட்டத்திற்கு முன்பே தெருவில் உள்ள மேடுபள்ளங்களை செப்பனிடுவார்கள். (ஓட்டம் தடைப்பட்டு விடக் கூடாதல்லவா.) தேரின் அசைவு அதில் கட்டியுள்ள வெண்கல மணிகளின் கிணுகிணுத்த சிரிப்பில் ஒரு பெண்ணின் கால் கொலுசு, கைவளையல் போல துள்ளித் தளும்பும். தளும்பி ஒலிக்கும்.
அந்த நாதத்துடன், தேருக்கு முன்னால் வரும் வேத கோஷங்களும் சேர, வடம் கட்டி இழுப்பவர்களை உற்சாகப்படுத்த தெருவின் இருமருங்கிலுமுள்ள மாடி வீடுகளிலிருந்து தண்ணீர் குடங்கள் பன்னீர் விசிறலாய் வீச...
இத்தனை உபசாரங்கள் செய்தாலும் தேர் நிலைக்கு வந்து சேருவதற்குள் ஒவ்வொரு தெருமுனையிலும் நின்று விடும், தேரை திருப்புவது என்பது லேசான காரியமில்லை. தேர்க்காலில் கட்டை கொடுத்து, கடவுள் நாமத்தைச் சொல்லி கூச்சலிட்டபடி பெருத்த முயற்சியுடன் திருப்ப முயற்சிக்க - தேர் அச்சாணி முணகும். தேரில் அழகுக்காக கட்டியுள்ள தொம்பைகள் குலுங்கும், கூடவே தேரில் தெய்வங்களுக்கு அருகில் அமர்ந்திருக்கும் வைதீகர்களின் தொப்பையும் குலுங்கும், தம்பதி சமேதராய், அழகுப் பதுமைகளாய் வீற்றிருக்கும் தெய்வங்கள் ஒருவரையொருவர் பார்த்து புன்னகை புரிவது போலிருக்கும். அவர்கள் கழுத்து மாலையில் உள்ள பூக்கள் சிதறும்.
யோசித்துப் பாருங்கள்... ஒரு நாள் தேரோட்டம் என்பதில், நமது வாழ்க்கையின் தத்துவமே அடங்கியிருக்கிறது. தம்பதியாய் இருவர் வாழ்க்கைத் தேரில் ஊர்வலம் போகவேண்டுமென்றால் - முன்னதாக அவர்கள் நடந்து வந்தபாதையை செப்பனிடவேண்டும். எத்தனையோ தேர்கள் பெற்றவர்களும், மற்றவர்களும், நண்பர்களும் இந்தத் தேரோட்டம் தடைபடாமலிருக்க - ஆசைத்தேர் ஆங்காங்கு ஸ்தம்பித்து நின்றுவிடாமலிருக்க வடம் கட்டி இழுப்பார்கள். தேர்க்காலில் வேகத்தடை போடுவார்கள். பிறகு நெம்பித்தள்ளுவார்கள். முன்னாலும் பின்னாலுமாய் பாராட்டுவார்கள். பரிகசிப்பார்கள். ஆனால் அத்தனையும் நல்லதுக்காகத்தான் என்பதை உணர்ந்து கொண்டால் தேரில் பவனிவரும் இளம் ஜோடிகளுக்கு என்றைக்குமே ஆனந்தம் தான்.
ஆசை என்பது அளவிடமுடியாத - வேகத்தைக் கொண்டது. அதுவே தேராடும் போது அதற்கு நிதானம் தேவைப்படுகிறது. ஆங்காங்கு நின்று நின்று போக வேண்டியிருக்கிறது. அளவோடு இருக்கும் ஆசைகள் - அழகான தேர்போல!
அரவிந்தனும், பவித்ராவும், அனிதாவும் அவரவர்களது ஆசைத்தேரில் ஊர்வலம் வருகிறார்கள். மற்ற கதாபாத்திரங்கள் தேரை வடம்கட்டி இழுக்கின்றன. வாசகர்களாகிய நீங்கள் தேரோட்டம் தடைபடாமல் இருக்க - தண்ணீர் தெளித்து, பூத்தூவி உற்சாகம் தருவீர்கள் என்று நம்புகிறேன்.
மறுபடியும் உங்களை சந்திக்கும் வரையில்
பிரியமுடன்
அனுராதா ரமணன்
***
1
அசத்திட்டே தலைவா...
கங்கிராஜுலேஷன்ஸ்...
ஏண்டா டேய்... ஒரேயொரு கப்... வேணாம்... ஒரு மெடல்... எங்களுக்காக விட்டுக் கொடுக்கக் கூடாதா...
இனிமே இன்டர்காலேஜ் காம்பிடேஷனுக்குன்னு ஒரு ஸ்டூடெண்ட் கூட, நம்ம காலேஜ் கூட போட்டி போடமாட்டானே... அவனவனைப் பார்த்தியா... துண்டைக் காணும், துணியக் காணும்னு ஓடினதை...
அரவிந்தா... உன்னை எந்த முகூர்த்தத்துலடா உங்க அம்மா பெத்தாங்க...
இவன் ஒருத்தன்... புரியாமல் பேசறான்... பொறந்த முகூர்த்தம் முக்கியமில்லே தம்பி... இவனோட அப்பா, அம்மாவுக்கு சாந்தி முகூர்த்தம் வச்ச தேதி, கிழமை, மாசம்-இதெல்லாம்தான்டா முக்கியம்...
நண்பர்கள் அரவிந்தனைச் சுற்றி, கலகலவெனப் பாராட்டுக்களையும், கைக்குலுக்கல்களையும், முத்தங்களையும் பொழிந்து கொண்டிருக்கிறார்கள்... அவனோ கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் பெருமை... இரண்டும் கலந்த கலவையாய் சிரிக்கிறான்..
மாணவிகள் கூட இந்த இளைஞர்களை விலக்கிய படி வந்து - சந்தோஷத்தில் கண்கள் மினுக்க - இவன் கை பற்றி குலுக்கி விட்டுப் போகிறார்கள்.
எங்களுக்கு ரொம்பவும் கர்வமா இருக்கு அரவிந்த்.
ஆமாமா... வீட்டுக்குப் போனதும் திருஷ்டி சுத்திப் போடச் சொல்லு...
கிளிக்கூட்டம் போல - பெண்கள் அவனருகே வந்து, தென்றலாய் நழுவ...
இவளுங்க எப்பவுமே இப்படித்தான்டா... ஒருத்தன் முன்னுக்கு வந்தாத் தாங்காதே இவளுங்களுக்கு...
அட, ஏம்பா... ஏதோ, அவங்களோட மகிழ்ச்சியப் பகிர்ந்துட்டுப் போறாங்க...
முதலில் அலுத்துக்கொண்ட பழனிச்சாமியிடம், தழைந்த குரலில் சொல்கிறான் அரவிந்த்.
பழனிச்சாமி, பல்புகுமார், ஷேக்ஸ்பியர் சீனு, ஜொல்ஸ் ஜெகன்-இவர்களெல்லாரும் அரவிந்தனின் மிக நெருக்கமான சினேகிதர்கள்.
அது சரி; அவனுடன் சினேகமாக இல்லாதவர்கள் கூட இருக்க முடியுமா என்ன...
அந்த முகமும், கண்களும், உயரமும், பருமனும்... எல்லாவற்றுக்கும் மேல் அந்தப் புன்னகையும், எந்த முடிவை எடுத்தாலும் தீர்க்கமாய் சிந்தித்துச் செயலாற்றுவதும்...
பொறியியற் கல்லூரியின் கடைசி வருட மாணவனான அரவிந்தன் - அந்தக் கல்லூரிக்கே பெருமை சேர்த்துத் தருபவன்... பேராசிரியர்கள் கூட, அன்புடன் அழைத்து, தோள் மீது கைபோட்டு அவர்களால் கையாள முடியாத சில மாணவர்களைப் பற்றிப் பேசுவார்கள்.
அரவிந்த். பசுபதின்னு ஒரு ஸ்டூடண்ட்பா... மெகானிகல் தேர்ட் இயர் படிக்கிறான். திடீர்னு 'டல்'லாயிட்டான். ஒழுங்கா காலேஜுக்கு வர்றதில்லை... ஏன், என்ன விஷயம்னு நீ கொஞ்சம் பார்த்துச் சொல்லேன்…
கவனிக்கிறேன் சார்... ஏதோ லவ் ஃபெயிலியர்னு கேள்விப்பட்டேன்...
இந்த வயசுல எதுக்குப்பா அதெல்லாம்... உம்?
அரவிந்தன் இதற்குப் பதிலளிக்க மாட்டான். கை கட்டி, பதவிசாயி நின்று சிரிப்பான்.
ஏம்பா... பதிலே சொல்ல மாட்டேங்கறே.
ஒரு மரியாதைதான் சார் காரணம்.
படவா ராஸ்கல்... நீ இப்படி படு ஸ்மார்ட்டா இருக்கறதுனாலத்தான், ஸ்டூடண்ட்ஸ் - அதுவும் கேர்ள்ஸ் - உன் கிட்ட பைத்தியமா இருக்காங்க போல...
அவன், மறுத்துப் பேசாமல் சிரிப்பான்.
இதுக்கும் சிரிப்புதானா... தெய்விக சிரிப்புடா உனக்கு...
புரபசர் அந்தண்டை நகர்ந்ததும், மறுபடியும் நண்பர்கள் கூட்டம் மொய்க்கும்...
என்னடா சொல்றார்... உன்னோட ரொமான்ஸ் ரகசியங்களைப் பத்தி விசாரிச்சார் போல இருக்கே...
சேச்சே... அதெல்லாம் ஒண்ணுமில்லே...
"நீ ஒண்ணுமில்லையின்னா ஆயிருச்சா... நம்ம