Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilavum Nee Thane
Nilavum Nee Thane
Nilavum Nee Thane
Ebook110 pages56 minutes

Nilavum Nee Thane

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703225
Nilavum Nee Thane

Read more from Vidya Subramaniam

Related to Nilavum Nee Thane

Related ebooks

Reviews for Nilavum Nee Thane

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilavum Nee Thane - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    நிலவும் நீ தானே

    Nilavum Nee Thane

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    காதல் திருமணமா? பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணமா? இது தான் பட்டி மன்ற தலைப்பு தமிழ்த்துறை பேராசிரியர் சொன்னதும், வகுப்பறையில் சந்தோஷக் கூச்சல் எழும்பியது.

    நாளைக்கு பேர் குடுத்துடுங்க, யார் யார் எந்த அணியில் பேசப் போறீங்கன்னு. பேராசிரியர் வகுப்பை முடித்துக் கொண்டு போக, மாணவிகள் அணி அணியாய்ப் பிரிந்து காரசாரமாக விவாதித்தார்கள். வழக்கமாய் பட்டி மன்றத்தில் மடை திறந்தாற்போல் பேசுபவர்களைச் சுற்றிக் கொண்டு எந்த அணிக்கு பேசப்போகிறார்கள் என்று கேட்டார்கள்.

    ஏய் வாசவி... என்னடி டிஸைட் பண்ணின நீ? அரேன்ஜ்டு மாரேஜா லவ் மேரேஜா? தோழி கேட்க வாசவி பதில் சொல்லாமல் நடந்தாள்.

    செம தலைப்புயா..! வெளுத்து கட்டிடலாம்! நீ லவ் மேரேஜே பேசு. நீ எது பேசினாலும் ஜெயிப்ப. பட்டி மன்றத்துல உன்னை பீட் பண்ண யாரால முடியும்? ரஞ்சினி சொல்ல வாசவி தலையாட்டினாள்.

    ம்ஹூம் அரேன்ஜ்ட் மேரேஜ் பக்கம் தான் பேசப் போறேன்.

    ஏய் அதுல ஜாஸ்தி ஹோப் இருக்காதுப்பா காலம் மாறிப் போச்சு. இப்ப லவ் தான் ஜெயிக்கும்

    அதெல்லாம் இல்ல. பேசற விதத்துல பேசினா வெற்றி நமக்கு தான். நா அரேன்ஜ்டு மேரேஜுக்கு தான் பேசப்போறேன். வாசவி உறுதியாக சொன்னாள். மறு நாள் பெயர் கொடுத்து விட்டு இன்னும் யார் யார் எதற்கு பெயர் கொடுத்திருக்கிறார்கள் என்று விசாரித்தாள். முக்கியமாக பவித்ரா எதற்கு பெயர் கொடுத்திருக்கிறாள் என்று கேட்டாள். பவித்ரா காதல் திருமணத்தின் பக்கம் நின்று பேசப் போவதாக அறிந்ததும் மகிழ்ந்தாள். தனக்கு சரியான போட்டி பவித்ரா தான். அவள் எதிரணியில் இருந்தால் தான் களைகட்டும். நல்ல காலம் எதிரணியில் தான் இருக்கிறாள்.

    வாசவி உற்சாகத்தோடு தனக்கு தேவையான விஷயங்களை பல புத்தகங்களிலிலிருந்தும், சினிமா பாடல் வரிகளிலிருந்தும் சேகரித்து குறிப்பெடுத்து எழுதிக் கொண்டாள். தனிமையில் மனதிற்குள் நிறைய பேசிப் பார்த்துக் கொண்டாள். சத்தமாய் பேசிப் பார்த்துக் கொள்ள வீடு அனுமதிக்காது. அப்பாவுக்கு சத்தமாய் பேசினால் பிடிக்காது. அவர் இருந்தால் வீட்டில் மயான அமைதி தான் இருக்கும். அம்மா அவருக்கு சரியான ஒத்து ஊதும் கருவி. அவர் போடும் துரும்பைக் கூட தாண்ட மாட்டாள் அந்த வீட்டில் எல்லோரும் அவரை மதிக்க வேண்டும் என்பது தான் அவளுடைய முக்கியமான கட்டளை. மீறியவர்களுக்கு அதற்குத் தகுந்தாற்போல் தண்டனை உண்டு. ஒரு வேளை காப்பி முதல் ஒரு நாள் முழுக்க பட்டினி போடுவது வரை, தண்டனை மாறுபடும். அண்ணா பிரபு ஒரு உம்மணாமூஞ்சி. அம்மா பிள்ளை, அம்மா சொல் தான் அவனுக்கு வேதவாக்கு. அப்பா என்றால் படு பயம். அம்மா மூலம் தான் அவரிடம் பேசுவான். எப்படியோ அவனும் படித்து வங்கி ஒன்றில் அவனுக்கும் வேலை கிடைத்து விட்டது. ஆயிரக்கணக்கில் கை நிறைய சம்பளம் வாங்கினாலும் இன்னமும் பயந்தாங் கொள்ளிதான்.

    அப்பா எதிரில் கூட நிற்க மாட்டான். சம்பள கவரை அவரிடம் கொடுத்து விட்டு செலவுக்கு கைகட்டி நிற்பான். அவனுக்கு அடுத்து பிறந்த அக்கா, ஜெயந்திக்கு நாலு மாதம் முன்பு தான் கல்யாணமாயிற்று. அப்பா பார்த்து நடத்தின கல்யாணம்தான். பம்பாயில் ஜெயந்தி மிகவும் சந்தோஷமாக இருப்பதாக கடி தங்கள் கூறுகின்றன.

    பிரபுவுக்கும் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பாங்க் வேலை என்பதால் நிறைய கேட்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. அப்பா என்ன நினைக்கிறாரோ அது அவருக்கே வெளிச்சம். நிறைய ஜாதகங்கள் பிரபுவுக்கு வந்து கொண்டிருக்கிறது. அப்பா வெற்றிலை மென்றபடி தானே பொருத்தம் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒன்று பிடித்தால் ஒன்று பிடிக்கவில்லையென்று. இதுவரை அவருக்கு திருப்தியான வரன் எதுவும் கூடி வரவில்லை. இதையெல்லாம் வைத்து அவரை பொல்லாதவர் என்றோ முரடர் என்றோ கூறிவிட முடியாது. அவருடைய சுபாவம் அப்படியே தவிர தன் கடமைகளிலிருந்து அவர் நழுவிய தில்லை.

    தன் குழந்தைகளுக்கு எந்த குறையும் வைத்ததில்லை. எல்லோரையுமே நன்கு படிக்க வைத்தார். படிப்புக்காக செலவழிக்க முகம் சுளிக்கவே மாட்டார். அதே நேரம் ஒரு ராணுவ அதிகாரியைப்போல் இருந்தார். எதிலும் ஒரு டிஸிப்ளின் வேண்டும். நேரப்படி நடக்க வேண்டும். ஐந்து மணிக்கு எழுந்து விடவேண்டும் வேலைக்கோ பள்ளிக்கோ அனாவசியமாக லீவு எடுக்கக் கூடாது. வீடும் உடைகளும் சுத்தமாக இருக்க வேண்டும். பொருட்கள் அதனதன் இடத்தில் இருக்க வேண்டும். சினிமா மோகம் கூடாது. கண்ட பத்திரிகையும் படிக்கக் கூடாது. சினிமா பாட்டு கூட அதிகம் கேட்கக் கூடாது. டிவியில் கூட அவர் பார்க்கும் நிகழ்ச்சியைத்தான் எல்லோரும் பார்க்க வேண்டும். இரவு ஏழரைக்கெல்லாம் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து விட வேண்டும். எட்டரைக்கு விளக்கணைத்து படுத்து விட வேண்டும்.

    இந்த ஒழுங்கு முறையில் துளி தவறினாலும் அவர் பார்வையாலேயே சுட்டெரித்து விடுவார். அந்த பார்வையை எதிர்கொள்ள யாருக்கும் அங்கே தைரியமும் கிடையாது. பரிட்சை சமயம் என்றால் மட்டும் மேஜை விளக்கில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் படிக்கலாம். அப்பாவின் இந்த கட்டுப்பாட்டுக்கு ஓரளவு எல்லோருமே பழகி விட்டார்கள். அண்ணாவையும் அக்காவையும் விட வாசவிக்கு படிப்பு தவிர நிறைய விஷயங்களில் ஈடுபாடு இருந்தது. பேச்சுப் போட்டிகளில் பள்ளியில் நிறைய பரிசு

    Enjoying the preview?
    Page 1 of 1