Thanneer Nila
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsThandanai Rating: 0 out of 5 stars0 ratingsOru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsAtchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Muthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Unakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Nadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Veezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Androru Naal Rating: 3 out of 5 stars3/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Madhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 5 out of 5 stars5/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Chinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsUdal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Engirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Thennangkaatru Rating: 5 out of 5 stars5/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsPurusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Aasai Thee Valarthen Rating: 5 out of 5 stars5/5Ennuyire... Rating: 5 out of 5 stars5/5Shyamala... Rating: 5 out of 5 stars5/5Chinnanchiru Kiliye! Rating: 5 out of 5 stars5/5
Related to Thanneer Nila
Related ebooks
Peiyena Peiyum Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsKadaisiyil Rating: 0 out of 5 stars0 ratingsRadhaiyum Kunti Deviyum Rating: 0 out of 5 stars0 ratingsUchimeethu Vaanidinthu... Rating: 5 out of 5 stars5/5Naan Thedum Jevvanthi Poovithu Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Thazhuvatha Mehangal! Rating: 0 out of 5 stars0 ratingsEnna Solla Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsKutty Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsUyirkoodu Rating: 0 out of 5 stars0 ratingsKaraintha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Nandhavanthil Sila Manitha Pookal Rating: 5 out of 5 stars5/5Karpoora Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsVaanavil Manithargal Rating: 5 out of 5 stars5/5Amma Rating: 5 out of 5 stars5/5Engey Enathu Kavithai? Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Pon Maan Rating: 0 out of 5 stars0 ratingsVetti Verkal Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsSudum Nilavu Sudaatha Sooriyan Rating: 5 out of 5 stars5/5Idhayathukkul Irunthukol… Rating: 2 out of 5 stars2/5Aairam Kaalathu Payir Rating: 5 out of 5 stars5/5Nee Sirithal Naan Siripean Rating: 0 out of 5 stars0 ratingsVallamai Thaaraayo? Rating: 5 out of 5 stars5/5Meendum Oru Seethai Rating: 0 out of 5 stars0 ratingsNilave, Nil! Rating: 5 out of 5 stars5/5Idhayathul Irunthu Kol Rating: 3 out of 5 stars3/5Orey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5Vetkathile Oru Venpura Rating: 5 out of 5 stars5/5
Reviews for Thanneer Nila
0 ratings0 reviews
Book preview
Thanneer Nila - Vidya Subramaniam
http://www.pustaka.co.in
தண்ணீர் நிலா
Thanneer Nila
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidhya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
1
மழை கொட்டு கொட்டென்று கொட்டியது. அடேயப்பா ஸ்படிகம் மாதிரி என்ன ஒரு நீர்...! வாசு வீதிக்கு ஓடி வந்தான். மழை ஊசியாய் உடம்பில் இறங்கியது. வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. எவ்வளவு நீர்...! எல்லாம் வீணாக ஓடிச் சென்று ஏதோ ஒரு சாக்கடையில் சங்கமித்து விடும்.
வாசு ஒவ்வொரு வீட்டுக்கதவையும் தட்டினான்.
மழை பெய்யுது வெளில வாங்க... மழைத் தண்ணியெல்லாம் வீணாப்போக வேண்டாம். வந்து எல்லாத்துலயும் பிடிச்சு வெச்சுக்குங்க.
படபடவென்று ஒவ்வொரு வீட்டுக் கதவாய்த் தட்டினான். ஒரு வீடாவது திறக்கவில்லை. எல்லோரும் மழைக்கு இழுத்துப் போர்த்துக் கொண்டு தூங்குகிறார்கள் போலும்.
எழுந்து வாங்க... தண்ணிக்காக எவ்ளோ கஷ்டப்படறோம். வீணாப் போற தண்ணியைப் பத்தி யாருக்காவது கவலையிருக்கா. எழுந்து வாங்க தண்ணியை சேமிச்சு வைங்க... எழுந்து வாங்க தண்ணியைக் காப்பாத்துங்க.
வாசு கத்தியபடி ஓட, மழைத்தண்ணீரில் கால் வழுக்கி சத்தத்தோடு விழுந்தான். அய்யோ என்றபடி எழுந்தான். நிஜமாகவே கட்டிலிலிருந்து கீழே விழுந்திருந்தான். ச்சட்... கனவுதானா? அலுத்தபடி எழுந்து மணியைப் பார்த்தவனுக்கு தூக்கி வாரிப் போட்டது.
'காட்...! மணி ஆறா... போச்சுடா...' என்றபடி வேகமாய் கதவு திறந்து பால்கனிக்கு வந்து கீழே தெருவைப் பார்த்தான். தெருமுழுக்க ஈரமாக இருந்தது. தண்ணீர் வண்டி வந்து விட்டுப் போயிருந்தது. நிரம்பிய குடங்களை தெருவாசிகள் சுமந்து சென்று கொண்டிருந்தனர்.
'போச்..! வந்த தண்ணீரை கோட்டை விட்டு விட்டு மழைக் கனவு!' வாசு தொங்கிப் போன முகத்தோடு உள்ளே வந்தான், 'உள்ளே சொட்டுத் தண்ணீர் கிடையாது. பாத்ரூமில் அவசரத் தேவைக்கு முக்கால் பக்கெட் தண்ணீர் இருக்கிறது. சிறிய மண் பானையில் கால் பானை தண்ணீர் உள்ளது. இனி நாளைக் காலை வரையில் இதை வைத்துதான் சமாளிக்க வேண்டும். குளிக்க முடியாது. பொங்கித் தின்ன முடியாது. போகிற வழியில் மெஸ்ஸில் நாலு இட்டிலியை விழுங்கி விட்டு போக வேண்டியது தான்.'
வாசு பாத்ரூம் போய் விட்டு இருக்கும் தண்ணீரில் முகம் கை கால் கழுவிக் கொண்டு வந்து உடை மாற்றிக் கொண்டான். பர்ஸில் அறுபது ரூபாய் பணம் மட்டுமே இருந்தது. 'இதில்தான் இன்னும் ஏழு எட்டு நாள் சமாளிக்க வேண்டும். தண்ணீர் மட்டும் பிடித்திருந்தால் அனாவசியமாய் இன்று மெஸ்ஸில் சாப்பிட வேண்டி வந்திருக்காது.' வாசு பூட்டு சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். எப்போதுதான் இந்த தண்ணீர் பிரச்சனை தீரும் என்று தெரியவில்லை. இப்படி ஒரு தண்ணீர் கஷ்டம் வருமென்று நினைக்கவும் இல்லை. ஆறு மாதம் முன்பு வரை கூட இந்த நடுத்தர வர்க்க குடியிருப்பில் இருக்கும் அடி பம்பில் கார்ப்பரேஷன் தண்ணீர் வந்து கொண்டுதான் இருந்தது. எல்லோருக்கும் பொதுவாக இருந்த மோட்டார் குழாயிலும் ஸ்விச் போட்டு ஓரளவுக்கு போர்வெல் தண்ணீரும் பிடித்துக் கொள்ளலாம். சென்ற வருடம் மழை பொய்த்ததன் பலன், இந்த வருடம் தான் பாதித்தது. முதலில் மோட்டார் குழாயில் தண்ணீர் அளவு குறைந்தது. அதிக நேரம் ஓடினால் காற்று இறங்கி சப்தம் மாறியது. வீட்டுக்காரர் இனி யாரும் மோட்டார் போடக் கூடாது என்று கண்டித்துக் கூறி விட்டார். அதில் தண்ணீர் பிடிக்கும் உரிமையை தன் வீட்டுக்கு மட்டுமே வைத்துக் கொண்டார். அதன் பிறகு கார்ப்பரேஷன் பம்ப் தண்ணீர்தான் எல்லோருக்கும். முற்றத்தில் கடிகாரம் வைத்துக் கொண்டு ஆளுக்கு இரண்டு நிமிடம் அடித்துக் கொண்டார்கள். பின்னர் அதுவும் சரிப்படாது போயிற்று தலைக்கு இரண்டு குடம்தான் வந்தது. பிறகு அதுவும் குறைந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் நீர் வரும் நாள் என்றானதும் கெடுபிடி அதிகமாகி விட்டது. ஒற்றுமையாயிருந்த குடித்தனக்காரர்களுக்கிடையில் தண்ணீரால் மனஸ்தாபம் ஏற்பட்டது. இப்போது கார்ப்பரேஷன் பம்ப்பிலும் தண்ணீர் வருவது நின்று விட்டது. தண்ணீர் லாரியின் தயவில் தினமும் ஆளுக்கு நான்கு குடம் தண்ணீர் கிடைத்தது. இது தவிர மேற்கொண்டு தண்ணீர் வேண்டும் என்கிறவர்கள் அடுத்த தெருவில் இருக்கும் பொது போரிங் படிப்பிற்கு தான் சென்று நீர் எடுத்து வர வேண்டும். அந்த தெருவில் எப்போதும் யாராவது ஏழெட்டு குடத்தை வைத்து அடித்துக் கொண்டிருப்பார்கள். அடுத்தடுத்து அடிப்பதற்கும் ஆட்கள் வரிசையில் நின்றிருப்பர். ஆக இரண்டு மணி நேரமாவது அங்கேயே காத்திருந்தால்தான் தண்ணீர் கிடைக்கும். வாசு ஒரே ஒரு ஆளாய் இருந்ததால் தண்ணீர் லாரியில் பிடிக்கிற நாலு பெரிய பிளாஸ்டிக் குடத்தின் தண்ணீரே அவனுக்கு போதுமானதாயிருந்தது. ஒன்று குளிக்க, ஒன்று துவைக்க, ஒன்று சமைக்க, குடிக்க, மற்றொன்று இதர வேலைகளுக்கு என்று சரியாக இருக்கும். இன்று கனவும், கடிகாரமும் காலை வாரி விட்டு விட்டது. ஆக தண்ணீரும் இல்லை, செலவும் வெளியில் என்று ஆகிவிட்டது.
வாசு வீட்டை பூட்டிக் கொண்டு கீழே வந்தான். மூன்று மாடிகளைக் கொண்ட வீடு அது. கீழே வீட்டுக்காரரும், இரண்டு குடித்தனங்களும், முதல் மாடியில் இரண்டு குடித்தனங்களும், இரண்டாவது மாடியிலிருந்த பிரும்மச்சாரிகளுக்கென்றே கட்டப்பட்ட இரு அறைகளில் ஒன்றில் வாசு இருந்தான். ஒரு அறைக்கு இன்னும் ஆள் வராமல் காலியாக இருந்தது. தினம் இரண்டு மாடிக்கு நாலு குடம் தண்ணீரைத் தூக்கிக் கொண்டு ஏற எந்த பிரும்மச்சாரியாலும் முடியாது என்பதால் இன்னும் அந்த அறைக்கு ஆள் கிடைக்கவில்லை போலும் என்ன வாசு தம்பி இன்னிக்கு தண்ணி வேணாம்னு வெச்சுட்டயா...?
வீட்டுக்காரம்மா கேட்க வாசு அலாரம் அடிக்காததை அலுப்போடு சொன்னான்.
"குடத்தை கீழ வெச்சிருந்தா நாங்களாவது யாராவது பிடிச்சு வெச்சிருப்போம் இல்ல..?' வீட்டுக்காரம்மா உள்ளே போய்விட்டாள், அதற்கு மேல் அவனைப் பற்றி கவலைப்பட தனக்கு நேரமில்லை