Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thulasi
Thulasi
Thulasi
Ebook85 pages58 minutes

Thulasi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803216
Thulasi

Read more from Maharishi

Related to Thulasi

Related ebooks

Reviews for Thulasi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thulasi - Maharishi

    http://www.pustaka.co.in

    துளசி

    Thulasi

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    1

    இரண்டு பெண் போலீசாருக்கு நடுவில் வந்து கொண்டிருந்தாள்.

    தூரமாக மர நிழலுக்கு அடியில் அந்தப் பெரிய போலீஸ் வேன் வந்து நின்றவுடனேயே, தூரமாக நின்று கொண்டிருந்த கூட்டமொன்று அவர்களை நெருங்கி வந்து கொண்டிருந்தது.

    வேனிலிருந்து இறங்கும் போதே அவள் கைகளை இணைத்த மாதிரி விலங்கு இருந்தது.

    சில பத்திரிகைக்காரர்கள், போட்டோ கிராபர்கள் மேலும் சில முக்கியமானவர்கள்.

    சேலம் செஷன்ஸ் கோர்ட் வளாகத்தில் எப்பொழுதுமே கூட்டம் இருக்கும்.

    இரண்டு பெண் போலீசுக்கு நடுவே துளசி வந்து கொண்டிருந்தாள்.

    புகைப்பட பிளாஷ் லைட்கள் அவள் மேல் படும் போது கண்களைக் கூசியது.

    தூரமாக... ஓரிடத்தில் அவளுடைய தந்தை ஜெகதீசன் நின்று கொண்டிருந்தார். அவர் அருகில் தாங்கிப் பிடித்த வண்ணம் அவள் மூத்த சகோதரன் நாகபூஷணம் நின்றான்.

    அப்பா...

    அவர்கள் கண்கள் கலங்கியிருந்தன.

    அவருக்கு உடம்பு எப்படி இருக்கிறதாம்: பெங்களூரிலிருந்து ஏதும் தகவல் உண்டா?

    மகாதேவனைப் பற்றி தகவல் ஏதும் தெரியவில்லை. டாக்டர்கள் காலை ஆம்புடேட் செய்ய வேண்டுமென்று கூறி விட்டார்கள் என்று போன மாதம் யாரோ சொன்னா.

    அவங்க வீட்டிலே யாருமே இப்போ இங்கே இல்லே. எல்லோரும் பெங்களூர் போயிட்டா.

    காலை எடுக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லக் கூடிய அளவு காயத்தின் தன்மை இருக்கு. எப்படியோ அவர் உயிரோடு நன்றாக இருந்தால் போதும். அது தான் எனக்கு வேண்டும். என்னோட பிரார்த்தனையும் அது தான்.

    உயிரோட இருந்தாத்தானே சிரிக்க முடியும், அழ முடியும், கோபப்பட முடியும், கோவிச்சுக்க முடியும். அதில்லை என்றால் மனுஷன் என்று சொல்லிக்க நமக்கு என்ன இருக்கு!........

    அருகில் அவரைத் தாங்கிப் பிடித்த வண்ணம் அவள் மூத்த சகோதரன் நாகபூஷணம் நின்றான்.

    அப்பா

    அவர்கள் கலங்கியிருந்தனர்.

    இவர்கள் எல்லாருடைய முகத்திலும் காணப்பட்ட அளவற்ற பீதி, இன்னும் கொஞ்ச நேரத்தில் என்னவாகப் போகிறதோ தெரியவில்லை. தீர்ப்பு எப்படி இருக்கப் போகிறதோ!

    அதன்பின் அவள் யாருடனும் ஒன்றும் பேசவில்லை, போலீசாருக்கு நடுவில் நீதிமன்றத்தின் வராண்டாவில் நடந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்தாள்.

    நீதிபதி வேதராமன் தன் தீர்ப்பினைத் தானே படித்து சரி பார்த்துக் கொண்டிருந்தார்.

    குற்றவாளிக் கூண்டில் துளசி வந்து நின்றவுடன் துளசியைப் பார்த்தார்.

    அவர் தீர்ப்பை வாசிக்கப் போகிறார் என்பதற்கு அடையாளமாக நீதிமன்றம் அமைதியில் மூழ்கி இருந்தது.

    இரண்டு ஆள்காட்டி விரல்களையும் நாசியின் மேல் வைத்து வருடிக் கொண்டே நீண்ட நேரம் துளசியைப் பார்த்தவர்.

    பிறகு நிதானமாக தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார். அவர் தீர்ப்பு சுமார் இருத்தேழு பக்கங்கள் அடங்கியதாக இருந்தது.

    "எனவே இங்கே குற்றவாளி கூண்டில் நிற்கும் படித்த பெண்ணான துளசிமேல் சாட்டப்பட்ட குற்றங்களை மிக கவனமாக பரிசீலனை செய்து பார்த்தேன்.

    அவர் இந்தக் கொலையை வேண்டுமென்றே செய்ய வில்லை. திடீரென்று ஏற்பட்ட உணர்ச்சி வேகத்தில் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் அதன் தன்மை உணராமல் அதன் பின் விளைகளைப் பற்றி எண்ணாமல் செய்து விட்டார் என்று அவர் வழக்கறிஞர் விஷ்ணுசர்மா கூறுவதை என்னால் முழுமையாக ஏற்க இயலவில்லை. இந்த கோரமான சம்பவத்திற்கான காரணத்தை டிபன்ஸ் தரப்பு வக்கீல் மதிப்பிற்குரிய விஷ்ணுசர்மா அவர்கள் மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார். அதைப் பார்ப்போம்.

    மகாதேவன் என்கிற பட்டதாரி வாலிபரும், இங்கே குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிக் கூண்டிலே நிற்கும் துளசி என்பரும் காதலர்கள்.

    இவர்கள் காதல் ஞானம், என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஞானசம்பந்தம் என்கிற பட்டதாரி வாலிபனை எரிச்சலூட்டியிருக்கிறது. துளசியை அந்த வாலிபரும் காதலித்திருக்கிறார். ஞானசம்மந்தத்தின் காதலை ஏறகவில்லை.

    உண்மை பூர்வமாகக் காதலித்த வாலிபன் மகாதேவனும் ஒரு பட்டதாரியே. ஆனால் ரொம்பவும் பயந்த சுபாவமுள்ளவர்.

    எனினும் துளசியை காதலிக்க மட்டும் அவரிடம் தைரியம் இருந்திருக்கிறது. ஆச்சரியமான விஷயம் தான்.

    இத்தனைக்கும் மகாதேவன், ஞானசம்மந்தம் ஆகியோரின்

    Enjoying the preview?
    Page 1 of 1