Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mega Chithirangal
Mega Chithirangal
Mega Chithirangal
Ebook168 pages1 hour

Mega Chithirangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803199
Mega Chithirangal

Read more from Maharishi

Related to Mega Chithirangal

Related ebooks

Reviews for Mega Chithirangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mega Chithirangal - Maharishi

    http://www.pustaka.co.in

    மேகச் சித்திரங்கள்

    Mega Chithirangal

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    டெல்லிக்கு அவன் சேலத்திலிருந்து ஓர் இண்டர்வியூவுக்கு வந்தான்.

    இரவல் பேண்ட், இரவல் சட்டை, இரவல் கோட், டை, இவைகளை அணிந்துகொண்டு ஒரு பெரிய ஏற்றுமதி இறக்குமதி கம்பெனியின் ஹாலில் உட்கார்ந்திருந்தபோது அங்கே அவனைப்போல ஏராளமான பேர்கள் உட்கார்ந்திருந்தார்கள். இளம் வயது ஆண்களும், பெண்களுமாக ஒரு பெரிய மகாநாடே நடத்தக்கூடிய அளவுக்கு கூட்டமிருந்தது.

    சேலத்து வீதிகளில் அலைந்து கொண்டிருந்தபோது அவனுக்கு ஒரு நான்கு முழ வேஷ்டியும், அரைக்கை சட்டையும் போதுமானதாகவும் திருப்தியாகவும் இருந்தது என்பதைவிட அதுதான் அவனிடமிருந்தது. அவனை யாரும் அங்கே இதற்காக கேலி செய்யவில்லை.

    ஆனால் இங்கே, இவ்வளவு இரவல் உடைகளை மேலே அணிந்து கொண்டிருந்த போதிலும் அவனுக்கு அது பொருத்தமாக இல்லை.

    அவனைப் பார்த்தவரெல்லாம் தனக்குள் நகைத்துக் கொண்டனர்.

    அதே சிரிப்புதான், பேட்டிக்காக அவன் பெரிய ஹாலுக்குள் நுழைந்தபோதும் ஏற்பட்டது.

    முதல் அப்பியரன்ஸிலேயே அவன் ஐம்பது மார்க்குகளை இழந்து விட்டான்.

    பாவம்!

    வெளிப்பகட்டோ, வெளியே தெரியும் பலவீனங்களை மறைத்துக்கொள்ளும் சாதுர்யமோ இல்லாதவன்.

    என்றாலும்...

    கேள்விகளுக்கு அவன் மிகச் சிறந்த முறையில் பதில் அளித்து அவர்களைத் திக்குமுக்காட வைத்தான்.

    அவன் பேட்டியை முடித்துக் கொண்டு எழுந்திருக்கும் போது கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்த அதிகாரிகளில் ஒருவர் அவனைப் பார்த்துக் கேட்டார்.

    நீ கட்டிக் கொண்டிருக்கும் அந்த 'டை'யைப் பார்த்தாயா, திரும்பியிருக்கிறது. அதைச் சரி செய்து கொள்ள உனக்கு யாருமே உதவவில்லையா?

    அவன் தரையை குனிந்து பார்த்துக்கொண்டே வெட்கத்துடன் சொன்னான்.

    டையின் முன்புறம் கிழிந்திருக்கிறது. அதோடு, நான் அணிந்திருக்கும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நண்பனுடையது. கோட் ஒரு நண்பன் கொடுத்தான். பேண்ட் மற்ற நண்பனுடையது, சட்டை வேறொருவனுடையது...

    ஹாலில் மீண்டும் சிரிப்பு.

    உங்களுக்கு நாங்கள் பிறகு தெரிவிக்கிறோம். கேள்விகளுக்கு மிகச் சிறந்த முறையில் பதில் அளித்தீர்கள்… நீங்கள் போகலாம்.

    அவன் வெளியே வந்து விட்டான்.

    அவர்களிடமிருந்து பதில் வரவில்லை.

    கடன் வாங்கி செலவழித்துக் கொண்டு டெல்லிக்கு வந்துவிட்டு வேலையற்ற வெறும் மனிதனாக மீண்டும் சேலம் போக அவனுக்குப் பயமாக இருந்தது. வெட்கமாகவும் இருந்தது. போனவுடன் கடன் வாங்கிக் கொண்டு வந்த முன்னூறு ரூபாயை உடனே தந்தாக வேண்டும். அதோடு இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருப்பது.

    அவனுடைய இன்றைய ஏழ்மை நிலையில் வேலையொரு இன்றியமையாத தேவையாக இருந்தது. இரவல் உடையுடன் கடன் வாங்கிக் கொண்டு வந்த பணத்துடன் டெல்லியில் பத்து தினங்கள் சுற்றினான்.

    அவனுக்கு உடனடியாக தேவைகள் என்று சில விஷயங்கள் இருந்தன.

    அவன் இயல்பிலே ரொம்ப சங்கோஜி. பயந்த சுபாவம் உள்ளவன் என்று சொல்ல முடியாது. அசட்டுத் தைரியம் அவனிடம் நிறையவே உண்டு. அத்தியாவசிய தேவை என்று வருகிறபோது வெட்கத்தை விட்டு வெளிப்படையாக கேட்கும் குணமும் உண்டு. இந்தக் குணம் தற்சமயம் அவனுக்கு உதவியது.

    டெல்லிக்கு இண்டர்வியூவிற்கு வந்து வேலை கிடைக்காது என்கிற நிலை ஏற்பட்டபின், அவன் கையில் உள்ள சொற்பமான தொகை அவனை இன்னும் ஒரு வாரம் மட்டுமே டெல்லியில் சுற்ற அனுமதியளித்தது.

    அதன் பிறகு.

    கைப் பெட்டியுடன் அவன் அந்த மாலைப் பொழுதில் நடைபாதையில் மெதுவாகப் போய்க் கொண்டிருந்த போதுதான்...

    டெர்லின், டெரிகாட்டன், பாலிஸ்டர் துணிகளை அம்பாஸிடர் கார் ஒன்றில் கொண்டு வந்து, பின்புற டிக்கியை திறந்து அதன் உயரத்திற்கு ஒரு வியாபார மேடையை அமைத்துக் கொண்டிருந்தவன் அருகில் வந்து நின்றான்.

    நான் இங்கே ஒரு இண்டர்வியூவிற்காக வந்தேன். வேலை கிடைக்கவில்லை. உங்களுடைய இந்த நடைபாதை வியாபாரக் கடையில் எனக்கொரு வேலை கொடுத்தால்...

    பெட்டிகளைத் திறந்து துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தவன் பாஸ்கரைப் பார்த்தான்.

    எடுத்த எடுப்பில் அவன் கேட்டான்.

    எந்த ஊர்?

    மதராஸி?

    என்ன படிச்சிருக்கே?

    பி. எஸ்ஸி.

    அவன் விழிகள் அகண்டன.

    இங்கிலீஷ் சரளமா வருமா?

    வரும்!

    ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய் தரேன். மாலை நான்கு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரையிலே கடை போடுவோம். நான் ஹிந்தியில் துணிகளைப் பற்றிச் சொல்வதை நீ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சப்தம் போட்டு சொல்ல வேண்டும். முடியுமா? என்று கேட்டான் அந்த நடைபாதை வியாபாரி.

    முடியும்.

    உன் பேர் என்ன?

    பாஸ்கர்.

    சென்னையில் எங்கே இருக்கே?

    சேலம்...

    திருட்டு புரட்டு இல்லாம இருக்கணும், மோசம் செஞ்சுட்டு போனா நான் சும்மா விடமாட்டேன் என்று சற்று அதட்டலாகச் சொன்னான்.

    என்னை நம்பலாம்.

    நம்பறேன்!

    டிபன் சாப்பிட்டியா?

    இல்லை...

    கையிலே இருக்கிற பெட்டியைக் காருக்குள்ளே வை. துணிகளை எல்லாம் வெளியே போட்டுட்டு, டிபனுக்குப் போகலாம். அப்புறம் நம்ப வியாபாரம் என்று சொல்லி பாஸ்கரை அழைத்துச் சென்றான்.

    உலகத்தில் மிகச் சிறந்த பிரஜையாக அவனை நினைத்தான் பாஸ்கர். இவன் இவ்வளவு பித்தலாட்டக்காரர்களுக்கு நடுவில் வாழ்கிறவன், நல்லவனாகத் தெரிகிறானே!

    பெட்டியில் அடுக்கடுக்காக வைத்திருந்த துணிகளை பரப்பி வெளியே போட்டுவிட்டு பாஸ்கருடன் டிபனுக்கு சென்றான். அவன் கடைபரப்பியுள்ள நடைபாதையிலேயே ஹோட்டல் இருந்தது.

    வேணுங்கறது சாப்பிடு... தாராள மனத்தோடு சொன்னான் வியாபாரி.

    எனக்கு இங்கே இருக்கிற டிபன் வகைகளின் பெயர்கள் எதுவுமே தெரியவில்லை. எனக்கும் சேர்த்து நீயே சொல்லி விடு. எதுவாக இருந்தாலும் வெஜிடேரியன்தான் என்றான் பாஸ்கர்.

    அடக் கண்றாவியே, இதை முன்னாடியே சொல்லக் கூடாது. இது நான்வெஜிடேரியன் ஹோட்டலாச்சே. சரி பரவாயில்லை. வெஜிடேரியன் டிபனும் கிடைக்கும். தைரியமாகச் சாப்பிடு...

    ஏதோ சில டிபன் வந்தன, சாப்பிட்டனர். இரண்டு டீ வரவழைத்துக் குடித்தனர்.

    அந்த வியாபாரியின் பெயர் சந்தோஷ்குமார் என்று தெரிந்து கொண்டான் பாஸ்கர். அந்த நடைபாதை துணி வியாபாரியுடன் தன் முதல்நாள் வேலையைத் தொடர நடை பாதைக்கு வந்து விட்டான்.

    உனக்கு ஹிந்தி தெரியவில்லையே என்று யோசிக்காதே. நான் ஹிந்தியில் துணிகளைப் பற்றிக் கூறுவேன். நீ, இந்தா இதை அப்படியே ஆங்கிலத்தில் மனப்பாடம் செய்து நான் நிறுத்தியவுடன் சப்தம் போட்டு சொல்லு. ஹிந்திக்கும் ஆங்கில மொழி பெயர்ப்புக்கும் ஒற்றுமையிருக்க வேண்டுமென்பதில்லை என்று கூறிவிட்டு பத்து பதினைந்து தனித்தனி வரிகளாக ஆங்கிலத்தில் எழுதி பாஸ்கரிடம் கொடுத்தான்.

    முதல்நாள் வியாபாரத்தில் அவன் பங்கு ரொம்ப உதவியாக இருந்தது என்று இரவு பதினொரு மணிக்கு வியாபாரத்தை முடித்துக் கொண்டபோது சந்தோஷ்குமார் கூறினான்.

    எங்கே தங்கியிருக்கே?

    எங்கேயும் தங்கியிருக்கலே, ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம்...!

    அடப்பாவி! இனிமே நீ எங்கேயும் போகவேண்டாம். என்னுடனேயே இருக்கலாம். நாங்க ஒரு பத்து பதினைந்து வியாபாரிங்கே ஓரிடத்தில் டென்ட் போட்டுக்கிட்டு தங்கியிருக்கோம். என் கூடவே நீயும் இருக்கலாம். தங்கிக்க...

    அவன் குடியிருப்புப் பிரச்சினை சுலபமாகத் தீர்ந்துவிட்டது.

    ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு இடம். ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொருவிதமான வர்ணனை.

    இது பிறகு பாஸ்கருக்கு பழக்கமாகி விட்டது. துணிகளைப் பற்றி அவனே அளக்க ஆரம்பித்து விட்டான். ஹிந்தியில் சந்தோஷ்குமார் சொல்வதைவிட ஆங்கிலத்தில் பாஸ்கர் அதிக நேரம் வர்ணித்தான்.

    சந்தோஷ்குமாருக்கு இது ரொம்பவும் பிடித்துப் போய் விட்டது. இவனால் அவன் தினச் சம்பளத்தில் இரண்டு ரூபாய் அதிகமாகத் தந்தான். சாப்பாடு அவனுடன், டிபன் காபி அவனுடன். அவனே தன்னுடைய சில உடைகளை கொடுத்து போட்டுக்கொள்ள வைத்தான். சந்தோஷ்குமார் செய்யும், இச்சிறுசிறு உதவிகளால் பாஸ்கருக்கு தன்னைச் சூழ்ந்துள்ள எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டதாக ஒரு பிரமை அடிக்கடி உண்டானது.

    பாவம் அவன் மனம் ரொம்ப சின்ன மனம்.

    அதிகமான ஆசைகளை வளர்த்துக்கொள்ளத் தெரியாத அப்பாவி.

    சந்தோஷ்குமார் மாலையிலிருந்து இரவு கடையை கட்டுவதற்குள் ஐநூறுக்கும் குறைவில்லாமல் வியாபாரம் செய்தான். எல்லா செலவுக்கும் போக மாதச் சராசரியில் நாள் ஒன்றுக்கு ஐம்பது ரூபாய்க்குக் குறைவில்லாமல் கிடைக்கிறது என்று கூறினான்.

    துணிகளின் தரத்தைப் பற்றி அவன் கூறுவது எல்லாம் அவன் கடைபரப்பியவுடன் அவனைச் சுற்றி நிற்பார்களே அவர்களிடம் மட்டும்தான். டெர்லின், டெரிகாட் துணிகளில் வட்டமாக பெட்ரோலை நனைத்து அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நிற்கிறவர்களிடம் காட்டி அந்த இடத்தில் தீப்பெட்டியை உரசி நெருப்பு வைக்கச் சொல்லுவான். பெட்ரோல் இருக்கும்வரை நெருப்பு

    Enjoying the preview?
    Page 1 of 1