Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paradesi Kolam Padi Thaandi Vittathu
Paradesi Kolam Padi Thaandi Vittathu
Paradesi Kolam Padi Thaandi Vittathu
Ebook82 pages30 minutes

Paradesi Kolam Padi Thaandi Vittathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803212
Paradesi Kolam Padi Thaandi Vittathu

Read more from Maharishi

Related to Paradesi Kolam Padi Thaandi Vittathu

Related ebooks

Reviews for Paradesi Kolam Padi Thaandi Vittathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paradesi Kolam Padi Thaandi Vittathu - Maharishi

    http://www.pustaka.co.in

    பரதேசிக் கோலம் படி தாண்டிவிட்டது

    Paradesi Kolam Padi Thaandi Vittathu

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    அவள் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தாள். அவளிடத்தில் அபாரமான ஆங்கிலப் புலமையிருந்தது. தர்க்கரீதியாகவே அணுகுவது அவள் இயல்பு. அவள் மேற்கொள்கிற எல்லாம் காரியங்களுக்கும் அவளைப் பொறுத்த வரையும் ஒரு நவீன வியாக்யானம் உண்டு.

    இதை இப்படிச் செய்யாதே என்று சொன்னால் அப்படிச் செய்தால் என்ன? என்று வாதிடுவது அவளுடைய பழக்கம். இந்தப் பழக்கத்தால் குடும்பத்தில் பலருடைய வெறுப்புக்கும் பிறகு அருவெறுப்புக்கும் ஆளாகியுமிருக்கிறாள். ஆரம்ப நாட்களில் இம்மாதிரி குணங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராதவர்கள் பின்பு அதுவே அவள் குணம் என்று ஆன பின்பு ரொம்பவும் சங்கடப்பட்டார்கள்.

    தன் இளைய சகோதரியின் திருமணத்திற்கு புரோகிதர்கள் கூடாது என்று அவள் கூறியதை யாரும் கேட்கவில்லை. அவள் நமது திருமண முறையின் எல்லா சம்பிரதாயங்களையும் அப்பட்டமாக எதிர்த்து நின்றபோது வீட்டில் எதிர்பாராத குழப்பம் உண்டாகி விட்டது.

    தங்கை தேவி மேல் உயிரையே வைத்திருப்பவள்.

    அஸ்வனி என் கல்யாணத்தில் இம்மாதிரி தேவையற்ற சர்ச்சைகள் அவசியம் தானா! ஏதோ ரொம்பவும் முன்போக்கானவள். நம் குடும்பத்தில் இது எவ்வித பாதிப்பையும் உண்டாக்கி விடப்போவதில்லை. என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் என்னுடைய அநுமானம் எவ்வளவு தவறு என்பதை இப்பொழுது தான் உணர்கிறேன். உன் கொள்கைகளை நீ எவ்வளவு தீவிரமாக வளர்த்துக் கொண்டிருக்கிறாய்...

    ஆமாம் தேவி நான் தீவிரமாகத்தான் இருக்கிறேன். ஊருக்கு உபதேசம் செய்வது இருக்கட்டும் முதலில் உன் தீவிர முற்போக்குக் கொள்கைகளை உன் வீட்டில் இருப்பவர்களுக்குக் கூறு அவர்களை கடைபிடிக்க வைத்து வெற்றி அடைந்த பின் மற்றவர்களுக்குக் கூறு என்கிறார்கள்.

    உன் கல்யாணப்பத்திரிகையில் போட்டிருக்கிறாயே ஸ்ரீராம ஜெயம், திருப்பதி, பத்மாவதி சமேத வெங்கடாஜலபதிதுணை...என்றெல்லாம் படித்து விட்டு என்னை எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள். என்ன? உதயாதி நாழிகை...லக்கினத்தில்...அஸ்வினி ரொம்பவும் ஆவேசத்துடன் பேசினாள்.

    நோ...அஸ்வினி...நமது வாழ்க்கையின் அர்த்தங்களே அது தான். நமது எல்லாவித வாழ்க்கை அநுஷ்டானங்ளும் வரையறுக்கப்பட்ட சாஸ்த்திர எல்லைக்குள் அடங்கியவை. அதை அதிலிருந்து எடுத்து விட்டால் அங்கே வெறுமை தான் மிஞ்சும். நீ நினைக்கிற முற்போக்கு இருக்கலாம். ஆனால் உள்ளார்ந்த உற்சாகம் செழுமை எல்லாம் போய் விடும்.

    நமது சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் எல்லாம் நாமாக விரும்பி அணிகிற உடை போன்றது. அதை எவ்வளவுக்கவ்வளவு விரும்பி கவனமாக அணிகிறோமே. அந்த அளவு நமக்குத் தான் அழகு. அதை விட்டு விட்டால் நாம் வெறும் நிர்வாண மனிதர்கள் தான்.

    தேவி இப்படிச் சொன்னவுடன் அஸ்வினி கை கொட்டி ஆர்ப்பாட்டமாக நகைத்தாள். உன் விளக்கம் ரொம்ப கவர்ச்சிகரமாக இருக்கிறது. ஆனால் இம்மாதிரி கவர்ச்சிகரமான வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு அலுத்து விட்டது.

    இப்பொழுது நீ என்ன செய்ய வேண்டு மென்கிறாய்.

    எந்த விதமான சடங்குகளுமில்லாமல் உன் திருமணம் நடப்பதாக இருந்தால் நான் உன் திருமணத்திற்கு இருப்பேன். இல்லையென்றால் நான் உன் திருமணத்திற்கு இருக்க மாட்டேன் போய் விடுவேன்...

    "வேண்டாம் உன் திருமணத்தை உன் இஷ்டம் போல நடத்திக் கொள், என் இஷ்டத்தில் தலையிடாதே-சகோதரி கெஞ்சினாள்.

    "என் கல்யாணமா! பார்த்துக் கொண்டேயிரு... என்னை விரும்புகிறவர் கையால் என் கழுத்தில் தாலியைக் கூட ஏற்கமாட்டேன். நாங்கள் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக விரும்புவோம். ஒரு மனமொத்த கூட்டு வாழ்க்கை ஒப்பந்தம்... அவ்வளவுதான் எங்கள் திருமணம்...

    Enjoying the preview?
    Page 1 of 1