Androru Naal
3/5
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Atchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Nadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Chinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsUnakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsThandanai Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 5 out of 5 stars5/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsVeezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Udal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsMadhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Thennangkaatru Rating: 5 out of 5 stars5/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Engirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsPurusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Garudan Rating: 5 out of 5 stars5/5Kaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Vetti Vergal Rating: 5 out of 5 stars5/5Santhana Malargal Rating: 5 out of 5 stars5/5Shyamala... Rating: 5 out of 5 stars5/5
Related to Androru Naal
Related ebooks
Nilavai Thedum Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsInimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Nenjil Unthan Ninaive Rating: 1 out of 5 stars1/5Poomaalaiye Thol Serava Rating: 3 out of 5 stars3/5Inbangal Ilavasam Rating: 4 out of 5 stars4/5Anbil Thilaitha Uravu… Rating: 4 out of 5 stars4/5Udal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Suriyan Theyumo? Rating: 0 out of 5 stars0 ratingsEnnul Nee Pathitha Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsEnathu Kavithai Neethan... Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Neethane Un Uyir Naanthane Rating: 1 out of 5 stars1/5Oomai Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsUdhaya Geetham Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Nilavey... Rating: 5 out of 5 stars5/5Maaya Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsPaarthirunthaal Varuven Vennilaviley... Rating: 0 out of 5 stars0 ratingsUravai Thedum Paravai Rating: 5 out of 5 stars5/5Meettatha Veenai Rating: 5 out of 5 stars5/5Nesam Marakavillai Nenjam! Rating: 0 out of 5 stars0 ratingsUyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Thoda Thoda Thodarum Rating: 5 out of 5 stars5/5Ennuyire... Rating: 5 out of 5 stars5/5Vasantha Kaala Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsThedinen Vanthathu Rating: 5 out of 5 stars5/5Engey Enathu Kavithai? Rating: 0 out of 5 stars0 ratingsPurusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsThanthu Vitten Ennai Rating: 5 out of 5 stars5/5Kadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Veezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Ullam Kavar Kalvan! Rating: 5 out of 5 stars5/5
Reviews for Androru Naal
2 ratings0 reviews
Book preview
Androru Naal - Vidya Subramaniam
https://www.pustaka.co.in
அன்றொரு நாள்
Androru Naal
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidya Subramaniam
For more books
https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 1
காதுக்கருகில் அலாரம் பெரிசாய் அலற, தூக்கிவாரிப்போட எழுந்து உட்கார்ந்த சரசுவைப் பார்த்து மற்ற இருவரும் நகைத்தனர்.
கொழுப்பா…? எதுக்குடி என்னை எழுப்பறீங்க? லீவுதானே இன்னிக்கு!
மறுபடியும் இழுத்துப் போர்த்திக்கொண்டு படுக்க முயன்றவளை, இழுத்து உட்கார வைத்தாள் சுகந்தி.
கண்ணை மூடிட்டு அப்டியே எழுந்து வா.
எதுக்கு?
வா சொல்றேன்.
சுகந்தி அவளை நடத்தியழைத்துச் செல்ல, சுப்ரியா பூஜையறைக்கு ஓடினாள்.
ம். இப்ப கண்ணைத் திற.
சுகந்தி சொன்னதும் கண்ணைத் திறந்தாள். விழிகள் விரிந்தன. முகம் மலர்ந்தது. எதிரில் பெரிய கண்ணாடிக்கு முன் தட்டுத் தட்டாய்ப் பழங்களும், காய்களும் பருப்பு வகைகளும், பலாப்பழமும், வாழைப் பழங்களும், குலையோடு தேங்காயும், கொத்தோடு மாங்காயும் ஆபரணப் பெட்டியில் தங்கத்தோடு வெள்ளி, முத்து வகையறாக்களும் வைக்கப்பட்டிருக்க, கண்ணாடிக்கு முன் ஸ்ரீகிருஷ்ண விக்ரகம் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
துளசி மாலையின் மணம் மெலிதாய் அறையில் நிரம்பியிருந்தது. வெள்ளி விளக்குகளில் தங்கச்சுடராய் தீபம் எரிய, அதன் சுடரில் ஸ்ரீகிருஷ்ணன் அழகாய்ப் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
சரசு உட்கார்ந்து கண்ணாடியில் விஷுக்கனி கண்டாள். வெள்ளிக்காசுகளையும், தங்கக் காசுகளையும் நவரத்ன மோதிரத்தையும் எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள், விழுந்து நமஸ்கரித்துவிட்டு எழுந்தாள். தங்கைகளைப் பார்த்துச் சிரித்தாள்.
இன்னிக்கு விஷுன்னு கூட ஞாபகமில்ல. கேலண்டர்ல ரெட் லெட்டர் டேன்னு தெரிஞ்சுது. லீவுன்னதும் ஒரு சந்தோஷம். நிம்மதியா தூங்கலாமேன்னு தோணிச்சு. நேத்தே சொல்லக்கூடாது விஷுன்னு.
சரசு தன் கைப்பையிலிருந்து பர்ஸ் எடுத்து தங்கைகளுக்கு ஆளுக்கு நூறு ரூபாய் கனிநோட்டமாகக் கொடுத்தாள்,
எப்பொ எழுந்து விஷுக்கனி வெச்சீங்க?
மூணு மணி இருக்கும்.
சரி, போய் கொஞ்ச நேரம் தூங்கறதுன்னா தூங்குங்க. நா குளிச்சுட்டு வந்து பாயசம் வெச்சு சமைக்கறேன்.
இனி தூக்கம் வராது. நாங்களும் உனக்கு ஹெல்ப் பண்றோம்.
சரஸ்வதி குளித்து வந்தாள். மற்ற இருவரும் ஏற்கெனவே குளித்திருந்தனர்.
என்ன பாயசம் வெக்கப் போறே?
வெக்கறேன். சாப்ட்டுட்டு நல்லார்க்கான்னு சொல்லு. முதல்ல அந்த தேங்காயைத் துருவி பால் எடு. முதல் பாலைத் தனியா எடுத்து வை.
பிரதமனா?
தெரியுதில்ல? அப்பறம் என்ன கேள்வி?
சரஸ்வதி கடையிலிருந்து வாங்கிய அரிசி மாவில் செய்த அடைகளை குக்கரில் வேகவிட்டு எடுத்தாள். அதோடு வெல்லமிட்டு கொதி வந்ததும் பலாப்பழத்தை அரைத்து கலந்து சுருளக் கிண்டி, தேங்காய்ப் பாலை ஊற்றினாள். கடைசியாக முதல் பாலை விட்டு இறக்கியதும் வாசனை ஊரைக் கூட்டியது. அவியலும், ஓலனும் சாம்பாரும், ரசமும், வடையுமாக விருந்துச் சமையல் அமர்க்களப்பட்டது.
வருடத்திற்கொருமுறைதான், அதுவும் விஷுவன்று மட்டும்தான் இப்படிச் சமைக்க முடிந்தது. அம்மா கார்த்தியாயினிக்கு விஷுப் பண்டிகை என்றால் மிகவும் பிடிக்கும்.
கேரளத்தில் கொல்லம் மாவட்டத்தின் ஒரு காயல் கரையோரக் கிராமத்தில் தான் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வாசம். தமிழ்தான் தாய்மொழி என்றாலும் அப்பாவுக்கு போஸ்டல் டிபார்ட்மெண்ட்டில் வேலை…
முதல் போஸ்டிங்கே கேரளத்தில்தான். காயலின் கரையோர இயற்கையெழில் கொஞ்சும் கிராமத்து போஸ்டாபீஸில் பணியில் சேரும்போது கல்யாணமாகவில்லை. காயலும், அதன் கரையோரப் பசுமையும், அதில் மிதந்து சென்ற படகு வீடுகளின் அழகும் மனிதர்களின் இயற்கையை ஒட்டிய வாழ்வும், வெகுளித்தனமும் பிடித்துப் போக, மாறுதலுக்கு முயற்சிக்காமல் அங்கேயே ஆனந்தமாக ஐக்கியமாகிவிட்டார்.
நீண்ட படகுகளில் காயலில் பிரயாணித்து தபால்களைக் கொண்டு சேர்ப்பது புது அனுபவமாக இருந்தது. கூட்டம் கூட்டமாக வாத்துகள் கரையிலிருந்து நீரில் இறங்கி மிதந்து செல்லும் அழகில் மெய்மறந்து நிற்பார். படகில் போகும்போதும் வரும்போதும் அடிக்கடி ஒரு பெண்ணைச் சந்தித்தார். ஆரம்பப் பள்ளி ஒன்றில் டீச்சராயிருந்தாள் அவள். காட்டன் புடவையும் கையில் குடையும் புத்தகமுமாய் கருத்த கூந்தலும் மினுமினுத்த முகமும் காதுகளில் தங்க ஜிமிக்கியும் நெற்றியில் சந்தனமுமாய் அவளைக் காணக் காண உள்ளே காதலெனும் தீ கொழுந்து விட்டெரியத் துவங்கியது.
மலையாளம் தவிர அவளுக்கு வேறு பாஷை தெரியவில்லை. அவருக்கு மலையாளம் புரிந்த அளவுக்குப் பேச வரவில்லை. இருப்பினும் காதலை வெளிப்படுத்த மொழி எதற்கு?
நாவினால் கூற முடியாததைக் கண்களால் கூற முயன்றார். அவளும் பதிலுக்குக் கண்ணால் பேசினாள்.
காதல் பரஸ்பரம் அறியப்பட்டது. அவர் அவளுக்காக மலையாளம் பழகினார். அவள் அவருக்காக தமிழ் பழகினாள். காதலால் இப்படி ஒரு சௌகர்யம் உண்டு. கற்கும் வலிமையைக் காதலே தந்துவிடும். ஆறு மாதத்தில் அவர் சரளமாய் மலையாளம் பேசினார். அவளுக்கு அந்த அளவுக்கு வராவிட்டாலும், பரவாயில்லை என்கிற அளவுக்குத் தமிழ் கற்றிருந்தாள்.
என்னை எப்போ கல்யாணம் கழிக்கப் போவுது?
கொஞ்சிக் கொஞ்சி ஒரு நாள் கேட்டாள்.
இந்த காயல்ல படகு போகாத நாள் என்னிக்கோ அன்னிக்கு.
அதுசரி, சபரிமலைக்குக் கன்னி சாமி போவாத வர்ஷம் போலாணோ…?
அவள் செல்லமாய் அவன் நெஞ்சில் குத்தியபடி சிணுங்கினாள்.
நான் சீரியஸாய்ட்டு கேட்குன்னதா. எப்பொழா என்ன கல்யாணம் கழிக்கான் போகுன்னது?
அழுகை எட்டிப் பார்த்த குரலில் அவள் மறுபடியும் கேட்க அவர் சிரித்தார்.
நீயே ஒரு நல்ல நாள் பாரு.
அதெப்டி. உங்க வீட்ல சம்மதிக்குமா?
வீடா… அப்டி எதுவும் எனக்கில்ல. நா ஒரு அனாதப்பய. ஏதோ ஆர்ஃபனேஜ்ல வளர்ந்தேன். எப்படியோ படிச்சேன்… என்னென்னமோ பரீட்சை எழுதி பாஸ் பண்ணினேன். இந்த உத்யோகம் கிடைச்சுது. வந்து சேர்ந்துட்டேன். இனிமேத்தான் எனக்குன்னு உறவுகள் உண்டாகணும். ஆமா… உங்க வீட்ல சம்மதிப்பாங்களா? அதைச் சொல்லு.
"என் வீட்ல நானும் வயசான என் அம்மாவும்தான். அக்காவும் அவ புருஷனும் திருச்சூர்ல இருக்காங்க. எங்களோட அவ்வளவா பேச்சுவார்த்தை