Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gopura Kalasangal
Gopura Kalasangal
Gopura Kalasangal
Ebook303 pages2 hours

Gopura Kalasangal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703179
Gopura Kalasangal

Read more from Vidya Subramaniam

Related to Gopura Kalasangal

Related ebooks

Reviews for Gopura Kalasangal

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gopura Kalasangal - Vidya Subramaniam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கோபுர கலசங்கள்

    Gopura Kalasangal

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 1

    எட்டு மணி பாசஞ்சர் நின்ற வேகத்தில் புறப்பட்டுப் போய்விட்டது. அரவிந்தனைத் தேடி அலைந்த சூர்யாவின் கண்கள் ஏமாற்றத்தோடு வாடியது. அரவிந்தன் எந்த பெட்டியிலிருந்தும் இறங்கவில்லை. நேற்றே வந்துவிடுவதாக கூறியிருந்தவன் இன்று இரவு வரை வரவில்லையென்றால் என்ன காரணம்? அத்தனை பேரும் அவன் வரவுக்காகக் காத்திருக்கிறார்கள். அத்தனை உறவுகளும் வந்தாகிவிட்டது முக்கியமாக வரவேண்டியவனை இன்னும் காணவில்லை.

    நேற்று காலை முதல் ரயிலடிக்கு வருவதும் போவதுமாக இருக்கிறான் சூர்யா. ஒவ்வொரு முறையும் என்ன சூர்யா இன்னும் மாப்பிள்ளை வரவில்லையா என்று கேட்டுக் குடைகிறார்கள். வேலை அதிகமோ என்னவோ அடுத்த வண்டிக்கு வந்துவிடுவான் கண்டிப்பாக என்று சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டது சூர்யாவுக்கு. விடிந்தால் கல்யாணம். மாப்பிள்ளையை இன்னும் காணவில்லை.

    அரவிந்தனுக்கு எதிலும் விளையாட்டுதான் பள்ளிப் பருவத்திலிருந்தே இப்படித்தான். கடைசி நேரம்தான் எல்லாம். பரீட்சை வரை புத்தகத்தை பிரிக்கக்கூட மாட்டான். முதல் நாள் அலட்சியமாக புரட்டிப் பார்ப்பான். நீ உருப்படறாப்பல தெரியல என்ற அம்மாவின் ஆசீர்வாதத்தோடு பரீட்சைக்குப் புறப்படுவான். ஆனால் மாயாஜாலமோ என்று நினைக்கும்படியாக அவன் மதிப்பெண்கள் இருக்கும். படிக்காமயே எப்படிடா இவ்ளோ மார்க் வாங்கின? என்று அனைவரும் வியப்பார்கள். காப்பி அடிச்சயா என்று ரகசியமாகக் கேட்பான் சூர்யா.

    ரங்காச்சாரி மாஸ்டர் இருக்கற இடத்துல காப்பி அடிக்க முடியுமா சூர்யா?

    உண்மைதான் எல்லோருக்கும் இரண்டு கண்கள் என்றால் ரங்காச்சாரி சாருக்கு ஆயிரம் கண்கள். ஒரு சிங்கம் மாதிரி சுற்றி சுற்றி வந்து மேற்பார்வை பார்க்கும் ஹாலில் கேள்வித்தாள்கூட காற்றில் சலசலக்க அஞ்சும்.

    அப்புறம் எப்டிடா…? நீ படிக்கறாப்பலயே தெரியறதில்லை. நான் விழுந்து விழுந்து படிச்சும் அறுபதைத் தாண்ட முடியல.

    கிளாஸ்ல கவனி. காதால் கேட்டு புத்தில பதிஞ்சு வெச்சுக்க. விழுந்து விழுந்து படிச்சா மார்க்கு பேப்பர்ல வராது நெத்திலதான் வரும் அரவிந்தன் நமுட்டு சிரிப்போடு சொல்வான்.

    படிப்பு என்றில்லை. ஒரு சினிமா போனால்கூட மூன்றாவது மணி அடித்து பேர் போடும் போதுதான் உள்ளே நுழைந்து இருட்டில் சூர்யா குரல் கொடுக்க நிதானமாக வந்து அமர்வான்.

    பிக்னிக் செல்வதாக இருந்தாலும் கடைசி வினாடியில்தான் நகர ஆரம்பிக்கும் ரயிலில் ஓடி வந்து ஏறுவான்.

    ஏண்டா இப்டியெல்லாம் இருக்க ஒரு அஞ்சு நிமிஷம் முன்னால் வந்து ஏறினா உன் கௌரவம் குறைந்துவிடுமா? சூர்யா எரிந்து விழுவான்.

    வர வழில ஒரு அக்ஸிடென்ட் சூர்யா சின்ன பையன். யாரும் கிட்ட நெருங்கல உயிர் இருந்துச்சு. அப்டியே விட்டா போய்டும்னு பயந்து ஆஸ்பத்திரில சேர்த்து போலீஸ்க்கு பதில் சொல்லிட்டு வரேன். அரவிந்தனின் குரலில் கவலை இருக்கும். ஓடும் வண்டியில் பாட்டும் கூத்தும் அலறிய சத்தத்திலும் சம்மணமிட்டு அமர்ந்து கண்மூடி அந்த பையன் பிழைக்க வேண்டும் என்று பிரார்த்திப்பவன்,

    தன் கல்யாணத்திற்கு வரும் விஷயத்தில்கூட தாமதப்படுத்தி அனைவரையும் கவலைகொள்ளச் செய்கிறான் போலும்.

    ரயிலடியிலிருந்து சூர்யா புறப்பட்டான். இனி அடுத்த வண்டி நள்ளிரவு ஒரு மணிக்குதான் அரவிந்தன் வந்து சேரும் வரை ஒவ்வொரு வண்டி வரும்போதும் ரயிலடிக்கு வந்தே ஆக வேண்டும்.

    சூர்யா பிளாட்பாரத்தில் நடந்து தண்டவாளம் கடந்து ஸ்டேஷனுக்கு வெளியில் வந்து ஊரை நோக்கி மண் பாதையில் நடந்தான்.

    நினைவு தெரிந்த நாள் முதல் அரவிந்தனும் அவனும் கால்தேய நடந்த பாதை இது; ஓடிய, விளையாடிய மண் இது.

    ‘மழலைப் பருவமும், பள்ளிப்பருவமும் போய்விட்டாலும் அந்த நினைவுகள்…! லேசில் மறந்துவிடக் கூடியவையா…?’ எத்தனை எத்தனை கூத்துகள். எவ்வளவு பேசியிருப்பார்கள்!

    சூர்யாவின் குடும்பம் மிகுந்த ஆச்சாரமிக்க தீட்சதர் குடும்பம். அக்ரஹாரத்தில் காலம் காலமாக வசித்து வரும் குடும்பம். அரவிந்தனின் குடும்பம் அக்ரஹாரத்திற்கு குடி வரும்போது அரவிந்தன் அவள் தாயின் வயிற்றில் மூன்று மாத கருவாக இருந்தான். சூர்யா வீட்டிற்கு அடுத்த வீடு. சூர்யாவும் தன் தாயின் கர்ப்பத்தில் ஐந்து மாத சிசுவாகத்தான் இருந்தான்.

    அடுத்த வீட்டுக்கு குடி வந்திருப்பதும் கர்ப்பிணிப் பெண் என்ற பரிவு சூர்யாவின் பாட்டிக்கு ஏற்பட்டது. அரவிந்தனின் அம்மா கற்பகத்தின் அழகும் அமைதியும், இனிமையான குணமும் எளிதில் அவள்மீது அனைவருக்கும் பிடிப்பு ஏற்படச் செய்தது.

    எங்காத்து மீனாட்சிக்குன்னு காரசாரமா அடை தட்டினேன். நீயும் அவளாட்டம்தானே இந்தா சாப்டு என்றபடி சுடச்சுட அடையும் அவியலும் கற்பகத்தின் முன் நீட்டப்படும்.

    அடுத்த நாள் அரவிந்தனின் பாட்டி மீனாட்சிக்கு ஏதேனும் கொடுத்தனுப்புவாள்.

    இந்த முறையானும் பிள்ளை பிறக்கணும். ஏற்கனவே ரெண்டு பெண் பிறந்தாச்சு. மீனாட்சியின் மாமியார் கவலைப்படுவாள். கொள்ளியிட பிள்ளைக்கு ஒரு பிள்ளை வேண்டுமே என்ற கவலை.

    எங்க கற்பகத்துக்கு ஏற்கனவே ரெண்டு பிள்ளை இருக்கு. இது பொண்ணா பொறந்தா பொட்டிட்டு மையிட்டு ஃபிராக் போட்டு பூ வெச்சு கொலுசு போட்டு அழகு பார்க்கலாம். ஆசைக்கு ஒரு பொண் வேணுமே."

    அப்பொ எங்காத்துல பொண்ணும் உங்காத்துல பிள்ளையும் பிறந்தா பேசாம மாத்திண்டுடுவோம் என்ன சொல்றேள்…?

    மத்தியான வேளைகளில் பூத்தொடுத்தபடியே அரட்டை நீளும். பேச்சு முழுக்க உள்ளிருக்கும் குழந்தை பற்றிதான். அவரவர் விருப்பப்படியேதான் குழந்தை பிறக்க வேண்டும் என்பது மனித ஆசை. சிலர் ஆசை ஈடேறும். சிலருடையது நிராசையாகும். மீனாட்சிக்கு அவர்கள் விருப்பப்படியே அழகான ஆண் குழந்தை பிறக்க கோடி சூர்ய பிரகாசம்டி குழந்தைக்கு. சூர்யான்னு பேர் வைச்சுடுவோம். பாட்டி குழந்தையை கண்கொள்ளா மகிழ்ச்சியோடு பார்த்தாள்.

    அதற்கு இரண்டு மாதத்திற்குப் பிறகு கற்பகத்திற்கு அரவிந்தன் பிறந்தான்.

    இதுவும் பிள்ளையா…? என்று சலித்துக் கொண்டாள் கற்பகத்தின் மாமியார். ஆனாலும் குழந்தையை வெறுக்க முடியுமா? செக்கச்செவேலென்று தலை நிறைய கருகருவென்று முடியோடு லட்டு மாதிரி கொள்ளை அழகோடு இருந்தான் அரவிந்தன்.

    வீட்டுக்கு கடைசி என்பதால் இருவருமே மிகச் செல்லமாகவே வளர்ந்தார்கள்.

    ஓரே பள்ளியில் சேர்க்கப்பட்டார்கள் தாமிரவருணியில் மீன் குஞ்சு மாதிரி நீந்திப் பழகினார்கள். தெருப்புழுதியெல்லாம் இவர்கள்மேல்தானா என்று பெற்றவர்கள் திட்டும் வரைக்கும் தெருவில் அத்தனை விளையாட்டும் விளையாடினார்கள்.

    ஆரம்பத்தில் அடுத்த வீட்டுக்காரர்கள் என்றிருந்த நிலை மாறி மீனாட்சியின் ஒன்றுவிட்ட அண்ணாவுக்கு கற்பகத்தின் நாத்தனாரை கல்யாணம் பண்ணிக் கொடுத்த பிறகு ஒன்றுக்குள் ஒன்று உறவாகிவிட நெருக்கம் கூடியது. ஆயினும் உறவு மீறிய நட்பே மேலோங்கி இருந்தது. உறவுக்கு பாலமாய் அமைந்த அந்த கல்யாணத்தில் ஐந்து வயது சூரியாவும் அரவிந்தனும்தான் வாசலில் பன்னீர் தெளித்து சந்தனம் கொடுத்து அனைவரையும் வரவேற்றது.

    ஏண்டா ஆளுக்கொரு பாவாடை சொக்கா போட்டுண்டு நிக்கறதுதானே ஏதோ ஒரு தூரத்து உறவு கேலி செய்துவிட்டுச் சென்றது.

    சூர்யாவின் அக்காக்கள் பன்னீர் சொம்பை பிடுங்க வந்தார்கள்.

    பன்னீர் சொம்பைத் தர முடியாது என்று அரவிந்தன் அவர்களோடு ஒற்றைக்கு நின்றான். பெரியவர்கள் வந்து சமாதானப்படுத்தி பெண்களை உள்ளே அழைத்துச் செல்ல வெற்றி பெற்றுவிட்ட மகிழ்ச்சியில் பன்னீரை இன்னும் வேகமாக தெளித்தார்கள்.

    அந்த கல்யாணம் முடிந்த ஒரு வருடம் கழித்து கற்பகத்தின் நாத்தனார் பிரசவத்திற்காக பிறந்த வீடு வந்தாள். கை நிறைய கண்ணாடி வளையல்கள் குலுங்க மருதாணியிட்டு சிவந்த பாதங்களோடு லேசான பெருமூச்சுசோடு கர்ப்பச் சுமையோடு வளைய வந்த அத்தையை வியப்போடு பார்ப்பான் அரவிந்தன். அந்த நிலையில் அத்தை மிக அழகாக இருப்பதாகத் தோன்றியது அவனுக்கு.

    அம்மா அத்தை ரொம்ப அழகாய்ட்டாளே எப்படி…?

    அம்மா மட்டுமல்ல எல்லோருமே சிரிப்பார்கள். தாய்மை தரும் அழகு அது என்று சொன்னால் அவனுக்கு புரியுமா…?

    வெற்றிலைச் சிவப்பு படிந்த உதடுகளோடு அத்தை அவனை அணைத்துக்கொள்வாள். அவன் உடம்பு அவள் மேடிட்ட வயிற்றில் படும்போது அவனுக்கு ஏதோ செய்யும். ஏதோ ஒரு அசைவை அவன் மேனி உணரும்.

    உள்ள என்ன அத்தை அசையுது…?

    பாப்பா… குட்டிப் பாப்பா…

    பாப்பாவா… எப்படி… உள்ள போச்சு?

    இப்டித்தான். அத்தை அடுத்த வெற்றிலையை மடித்துப் போட்டு மென்று விழுங்க அரவிந்தன் முகம் பயத்தில் நடுங்கும்.

    அப்டின்னா பாப்பாக்கு ரத்தம் வராதா…?

    வராது…

    பாப்பா செத்துடாதா?

    ம்ஹீம்…

    பாப்பா எப்டி வெளில வரும்?

    வரும் பாரேன்.

    எப்பொ?

    இன்னும் ரெண்டு மாசத்துல.

    அரவிந்தன் அந்த ரெண்டு மாசமும் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தான். அத்தையின் வயிற்றிலிருந்து வரப்போகும் குழந்தையைக் காண துடியாய்த்துடித்துக் கொண்டிருந்தான்.

    தீபாவளிக்கு பதினைந்து நாளிருக்கையில் அத்தைக்கு ஒரு நாள் மாலையில் வலி கண்டது. மருத்துவச்சியை அழைத்து வர அப்பா ஓடினார். உள்ளறையில் அத்தை படுக்க வைக்கப்பட பாட்டி வெந்நீர் போட்டாள். அம்மா அத்தையின் அருகிலேயே இருந்தாள். அத்தை விட்டுவிட்டு அலறின அலறல் அரவிந்தனை என்னவோ செய்தது.

    உள்ளே ஒரு போராட்டமே நடப்பது போலிருந்தது. அத்தையின் கூக்குரல் அம்மாவின் ஆறுதல் குரல் பாட்டியின் இப்ப ஆய்டும் கொஞ்சம் பொறுத்துக்கோடி பெண்ணே என்ற குரல் மருத்துவச்சியின் சத்தம் என்று கலவையாய் வெளிப்பட ஆண்கள் அனைவரும் அறைக்கு வெளியே கவலையும் ஆவலுமாய் நடந்து கொண்டிருந்தார்கள்.

    இரவு எட்டரை மணிக்கு அந்த புதுக்குரல் மிக சன்னமாய் ஒலிக்க அனைவர் முகமும் மலர்ந்தது.

    பாட்டி வெளியில் ஓடி வந்தாள், கிட்டு சரஸ்வதிக்கு பொண் குழந்தை என்றாள். அப்பாவின் முகம் மலர்ந்தது.

    அரவிந்தன் உள்ளே ஓடப் போனான்.இருடா இப்ப போகப்படாது பாட்டி அவனை இழுத்து அப்பாவிடம் ஒப்படைத்துவிட்டு வெந்நீரோடு மறுபடியும் உள்ளே போனாள்.

    சற்று நேரத்தில் வெள்ளைத் துணி ஒன்றில் குளித்து சிவந்த உடம்போடு. அந்த சின்னஞ்சிறு சிசுவை ஏந்தி வந்தாள் கற்பகம்.

    குழந்தையை அனைவருக்கும் காட்டினாள். அவள் கையில் ரோஜாப்பூ மாதிரி மலர்ந்து நெளிந்த அந்த பெண் குழந்தையை விழி விரியப் பார்த்தான் அரவிந்தன். பார்த்துக்கொண்டே இருந்தான். அந்த க்ஷணம். அந்த குழந்தைமேல் அவன் கொண்ட பாசம் பின்னால் மிக அழுத்தமான காதலாக மாறப் போகிறதென்று அவனே அறியாத மழலைப் பருவத்தில் இருந்தான் அவன்.

    பாப்பா அழகார்க்கு அத்தை.

    அப்டியா உனக்குத்தான் அந்த பாப்பா.

    அத்தை நமுட்டு சிரிப்போடு சொல்ல அந்தச் சிரிப்பு மற்றவர்க்கும் பரவ அதன் அர்த்தம் புரியாமலே அரவிந்தனும் சிரித்தான்.

    அத்தியாயம் 2

    என்னடா சூர்யா தனியா வர…? இன்னுமா வரல அரவிந்தன்…? கிட்டு மாமாவின் குரலில் கவலை இருந்தது.

    வந்துடுவான் மாமா புறப்படற நேரத்துல என்ன அசெளகர்யமோ…?

    ஒரு போன் வேணா போட்டு கேட்டுடேன் புறப்பட்டாச்சான்னு.

    வந்துடுவான். கவலைப்படாதீங்கோ.

    ம். என்ன பிள்ளையோ. கொஞ்சமானம் பொறுப்பு வேண்டாமோ…?

    அவனுக்குத் தெரியாதா மாமா? வந்துடுவான்.

    நீ எதுக்கும் போன் போட்டு விசாரி.

    ஆகட்டும் சூர்யா யோசனையோடு உள்ளே போனான். சத்திரத்தில்தான் கல்யாணம் என்றாலும் வீட்டு வாசலிலும் வாழை மரம் கட்டி பெரியதாய் கோலம் போட்டிருந்தது. சில உறவுகள் வீட்டிலும் படுத்திருந்தனர். நெருங்கின உறவுகளின் முகத்தில் கவலை. தூரத்து உறவுகளுக்கோ ஜானவாசத்துக்கு வந்து சேராத மாப்பிள்ளை விஷயம் வெறும் வாய்க்கு அவலாக மாறியிருந்தது. குசுகுசுவென்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

    கிணற்றடிக்கு வந்து வாளியை இறக்கி நீர் இழுத்து குளித்தான் சூர்யா. சில்லென்ற நீர் மேனியெங்கும் வழிந்து இறங்கியது.

    ஏண்டா சூரி வரயா கிணத்துக்குள்ள இறங்கி குளிக்கலாம். அரவிந்தன் மிகச் சாதாரணமாக கேட்க சூர்யா அயர்ந்து போனான்.

    உள்ள முனிஸ்வரன் இருக்குடா பாவி. இறங்கப்படாதுன்னு பாட்டி சொல்லியிருக்கா!

    இறங்கினா…?

    பிடிச்சுண்டுடுமாம்.

    அப்டியா… அப்பொ நா அந்த முனிஸ்வரனைப் பிடிச்சுண்டு வரேன் பார்! அரவிந்தன் கிணற்றுக்குள் லாவகமாக இறங்க மேலேயிருந்து சூர்யா அலறினான்.

    டேய் வேணாம்டா… அய்யோ பாட்டி அரவிந்தன் கிணத்துல இறங்கிட்டான்!

    டேய் தத்தி சூரி! கத்தித் தொலைக்காதே! நீயும் இறங்கி வா. முனியும் இல்ல கினியும் இல்ல.

    நா மாட்டேன்.

    உள்ளே அரவிந்தன் சுகமாய் நீச்சலடித்து குளிக்க மேலிருந்து சூர்யா பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

    தாமிரவருணில் நீந்திக் குளிக்கல…? அந்த மாதிரிதான் வாடா!.

    அது சரி தாமிரவருணி இவ்ளோ ஆழத்துலயா இருக்கு…? இது கிணறுடா…!

    பயந்தாங் கொள்ளி…!

    ஏண்டா சூர்யா யாரோட பேசிண்டிருக்க கிணத்தடில?

    பாட்டியின் குரல் பின்னால் கேட்க சூர்யா திரும்பினான். பாட்டியையும், உள்ளே குளிக்கும் அரவிந்தனையும் பார்த்தான்.

    ஒண்ணுல்ல பாட்டி குனிஞ்சு கத்தினா எதிரொலிக்கறது. அதான் கத்திப் பேசினேன்.

    சரி சரி குளிச்சது போதும் உள்ள வா அந்தி சாயறது. முனிஸ்வரன் பிடிச்சுக்கும்.

    உள்ளே அரவிந்தன் ஹாஹாவென்று ஒரு மாதிரி சிரிக்க பாட்டியே பயந்து போனாள்.

    நா சொல்லல…? முனி வரும்னு. உள்ள வாடா கடங்காரா பேரனை இழுத்துக் கொண்டு உள்ளே ஓடினாள். சூர்யாவுக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டான்.

    சற்று கழித்து அவன் கிணற்றடிக்குச் சென்றபோது, தலை துவட்டிக் கொண்டிருந்த அரவிந்தனுக்கருகில் மற்றொரு உருவம் நின்றிருந்தது.

    ஆனந்தி!

    பட்டுப் பாவாடை புரள ரெட்டைப் பின்னலோடு நின்றிருந்தாள். சூர்யாவைப் பார்த்ததும் அழகு காட்டினாள். பன்னிரண்டு வயதுக்கு படு அழகுப் பெண்.

    நீ எப்போடி வந்த…?

    ஆங் வந்தேன்…! இப்படித்தான் உன் சிநேகிதனை கிணத்துல புடிச்சு தள்றதா…...? பாட்டிட்ட சொல்லவா?

    என்னடி சொல்ற…?

    பார்த்தயா அம்மாஞ்சி! உன்னைப் பிடிச்சு தள்றதையும் தள்ளிட்டு ஒண்ணுந்தெரியாத மாதிரி பேசறதை.

    அரவிந்தன் நமுட்டு சிரிப்பு சிரித்தான்.போனாப் போகட்டும் ஆனந்தி விட்டுடு விளையாட்டா தள்ளிட்டான். இல்லடா…?

    ஓஹோ… எல்லாம் உன் புருடாவா? மகா பொல்லாதவன்டா நீ…

    இன்னோரு முறை எங்க அம்மாஞ்சிய ஏதாவது பண்ணின… அப்பறம் பார்… நீ வா அம்மாஞ்சி ஆனந்தி கொலுசு சப்திக்க பட்டுப்பாவாடை மின்ன அரவிந்தனை இழுத்துக் கொண்டு சென்றாள்.

    எஸ் எஸ் எல் சி முடிந்த பிறகு இருவரையும் பட்டணத்துக்கு அனுப்ப வேண்டும் என்று முடிவெடுத்தபோது அதே ஆனந்தி அழுத அழுகை ஏற்கனவே சிவந்த முகம் அழுது இன்னும் ரத்தமாய்ச் சிவந்திருந்தது.

    அம்மாஞ்சி நீ போக வேண்டாம்.

    போகாட்டா அவன் எப்டி படிச்சு முன்னுக்கு வருவான்?

    எதுக்கு முன்னுக்கு வரணும். பின்னாடியே இருந்துட்டு போறது.

    நன்னார்க்கு…! பின்னாடியே இருந்தா பின்னாடி உனக்கு ஒரு பின்னுகூட வாங்கித் தர முடியாது.

    ஆனந்தி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு போனாள்.

    ராவு காலம் எமகண்டம் பார்த்து சூர்யாவும் அரவிந்தனும் சென்னைக்குப் புறப்பட்டார்கள். அவர்களைக் கொண்டுவிட கிட்டு மாமாவும் உடன் புறப்பட்டார்.

    பட்டணத்தில் இருந்த கற்பகத்தின் அண்ணா வீட்டில் தங்குவதற்கு முன் கூட்டியே கடிதம் சென்றுவிட்டது.

    புது ஊர், புது வீடு, கல்லூரி எல்லாமே சூர்யாவைக் கொஞ்சம் தடுமாற வைத்தது. ஆனால் அரவிந்தன் எப்போதும்போல இருந்தான். மொட்டை மாடியில் அவர்களுக்கென்று ஒரு அறை கட்டப்பட்டிருந்தது. நல்ல வெளிச்சம். காற்று. ஜன்னல் வழியாகப் பார்த்தாலே பார்த்தசாரதி கோயில் கோபுரம் பளிச்சென்று தெரிந்தது. மாடியிலேயே சகல வசதிகளும் இருந்தது. சாப்பிட மட்டும் கீழே வந்தால் போதும்.

    எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாம நீங்க படிக்கணும்னு தான் மாமா சிநேகமாக சிரித்தார். சிரிப்பில் மட்டுமில்ல அவர் அழைப்பிலும் சிநேகமிருந்தது. வாங்க பிரண்ட்ஸ் சாப்டலாமா, என்றுதான் அழைப்பார்.

    அரவிந்தனின் அப்பா அவர்களை விட்டுவிட்டு, ஒருவேளை சாப்பிட்டுவிட்டு அடுத்த வண்டியிலேயே ஊருக்குப் போய் விட்டார்.

    என்ன பிரண்ட்ஸ்…? ரூம் செளகர்யமார்க்கா? மாமா ரூமை அவர்களுக்கு காட்டிவிட்டு கேட்டார்.

    அறை சுத்தமாக இருந்தது. இரண்டு கட்டில் மெத்தை, மேஜை நாற்காலி, டேபிள் லாம்ப், எல்லாம் இருவருக்கும் தனித்தனியாக இருந்தது.

    புது இடத்தில் முதல் நாள் இரவு தூக்கம் வரவில்லை சூர்யாவுக்கு, அறையிலிருந்து எழுந்து வந்து திறந்த வெளியில் நின்றான். வளர்பிறையின் பத்தாம் நாள் நிலா பளிச்சென்று ஒளிர்ந்து கொண்டிருக்க பால்கனிச் சுவரை ஒட்டிவழிந்த தென்னங்கீற்றுகளில் நிலவொளிபட்டு அவையும் வெள்ளிபோல் மின்னிக் கொண்டிருந்தது.

    என்னடா தூக்கம் வரலையா?

    நிலாவும், அந்த ஒளியில் மின்னும் இந்த தென்னங்கீற்றும் எவ்ளோ அழகார்க்கு பாரேன் அரவிந்தா.

    கவிதை எழுதலாமா?

    கிண்டலா…?

    ஏய்… நிஜம்மாடா…!

    கவிதை…? எங்கே சொல்லு பார்க்கலாம்…!

    அரவிந்தன் தொண்டை செருமியபடி புருவத்தில் விரல் வைத்து ஒரு வினாடி கண் மூடினான்.

    பெளர்ணமி இரவில்

    பூமியே தங்கம்

    தென்னங்கீற்றுகளுக்கும்

    வெள்ளி முலாம்!

    இல்லாதோர்க்கு இறைவன்

    தரும் பொற்குவியல்!

    இயற்கையை ரசிப்பவன்

    பெரும் பணக்காரன்.

    வாவ்…! என்ன ஆச்சர்யம்…? எப்படா நீ கவிதை பாட ஆரம்பிச்ச…?

    இதான் என் முதல் கவிதை.

    பொய்.

    பொய்யில்லடா. நீ முடியாதுன்ன! நா முடியும்னு முயற்சி பண்ணினேன். எனக்கே ஆச்சர்யம்தான்.

    சூர்யா

    Enjoying the preview?
    Page 1 of 1