Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaduthasi
Kaduthasi
Kaduthasi
Ebook132 pages1 hour

Kaduthasi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603194
Kaduthasi

Read more from Devibala

Related to Kaduthasi

Related ebooks

Reviews for Kaduthasi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaduthasi - Devibala

    http://www.pustaka.co.in

    கடுதாசி

    Kaduthasi

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    மாலை ஆறு மணிக்கு கோயிலுக்குள் இருந்தாள் ஆண்டாள். அன்று பிரதோஷ நாள். சனிப் பிரதோஷம் வேறு! கூட்டம் எக்கச்சக்கமாக இருந்தது! சிவனுக்கும், நந்திக்கும் வழிபாடுகள் சிரத்தையாக நடந்து கொண்டிருக்க, ஆண்டாள் முக்கிய இடத்தில் வந்து உட்கார்ந்தாள். அந்தக் கோயிலுக்கு தினசரி வரும் பெண்மணி ஆண்டாள்! அதனால் அங்குள்ள எல்லாருக்கும் ஆண்டாளை நன்றாகத் தெரியும்!

    அந்த கோயில் ஒட்டி ஒரு கடை உண்டு! பெட்டிக் கடை மாதிரி சின்னதாக இருக்கும். அதற்குள் உலகமே இருக்கும்! வெளிப்பக்கம் கடை! உள்ளே ஆண்டாள் வீடு!

    அது அவளது சொந்த வீடல்ல. கோயில் நிலத்தில் கட்டப்பட்ட வீடு! 99 வருஷங்கள் லீஸ் என்றெல்லாம் சொல்வார்கள். ஆண்டாளின் தாத்தா காலத்து வீடு!

    அப்பா - அம்மா வாழ்ந்து இப்போது ஆண்டாளின் வசம்!

    அதை விற்க முடியாது! வாழும் வரை யாரும் கேள்வி கேட்பதில்லை! நீளமாக அடுத்த தெருக் கோடி வரை இருக்கும் வீடு!

    அதன் முன் பக்கத்தை கடையாக மாற்றி விட்டாள் ஆண்டாள். அங்கு சிகரெட் வெற்றிலை பாக்கு - கோயிலுக்கான சகல பூஜை சாதனங்களும் கிடைக்கும். அபிஷேகம் நடத்த பொருட்கள், அலங்கார ஆடைகள் - தவிர ஊறுகாய், அப்பளம், சிப்ஸ் - சமயத்தில் பிரசாத பொட்டலங்கள்.

    ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோலில் கிடைக்காதது கூட ஆண்டாள் கடையில் கிடைக்கும்!

    அதற்கு லீவும் இல்லை!

    ஞாயிறும் வியாபாரம் உண்டு!

    பெரும்பாலும் கடையில் ஆண்டாள் தான் இருப்பாள்!

    அல்லது அவளது வாழாவெட்டி தங்கை! தினசரி, வார, இதழ்களும் விற்பனைக்கு உண்டு!

    கணிசமான வியாபாரம் சமயத்தில் காலை நேரத்தில் இட்லி, பூரி, பொங்கலும் உண்டு!

    கோயில் பணிகளையும் ஆண்டாள் செய்து தருவாள்.

    பிரதோஷ தரிசனம் முடிந்து கோயில் மண்டபத்தில் வந்து உட்கார,

    ஆண்டாலு!

    என்னை செண்பகம்? ஊருக்குப் போயிட்டு எப்ப வந்த!

    நேத்துதான்!

    கல்யாணமெல்லாம் நல்லா நடந்ததா! உன் நாத்தனார் பொண்ணாச்சே! உனக்கு என்ன குடுத்தாங்க!

    ஒரு புடவை கூட தரலை ஆண்டாலு! வெறும் சோறுதான்! அவ தரமாட்டா!

    இதுக்கா ரயில் டிக்கெட் செலவழிச்சிட்டு போனே!

    விடுவேனா! அதை கறந்து வாங்கிட்டேனே! எப்படியோ போ! நீ கடைக்கு சொந்தக்காரி! வாடகை இல்லாத கோயில் வீடு! நல்ல வரும்படி! நான் உன்னை மாதிரியா?

    வயிறு எரிஞ்சு சாகாதே!

    சரி விடு! முக்கிய சங்கதி சொல்லத்தான் வந்தேன்!

    என்னா?

    எங்க ஊர்ப் பொண்ணு இங்கே சென்னைல இருக்கு! உத்யோகம் பாக்குது! பேங்க் உத்யோகம். மாசம் நாப்பதாயிரம் சம்பளம். கிளி மாதிரி அழகா இருக்கும்! உன் மகனுக்குப் பாக்கறியா?

    ஆண்டாள் பேசவில்லை!

    என்ன பேசலை? உன் பிள்ளைக்கு இருபத்தி ஒன்பது வயசாகுது! முப்பதைத் தொட்டுட்டா கிழவன்னு சொல்லிடுவாங்க! முன்பக்கம் முடி ஏறிட்டே போகுது! வழுக்கைனு சொல்லுவாங்க!

    ஏய்! வாயை மூடு! என் பிள்ளையோட வயசை, வாலிபத்தை விமர்சனம் பண்ண நீ யாரு! வாயை கிழிச்சிடுவேன், ஜாக்ரதை!

    ஆண்டாலு! சண்டை போடாதே! ஏற்கனவே ஊர்ல தாறு - மாறா பேசறாங்க! புருஷனை மதிக்காதவ ஆண்டாலு! புள்ளைக்கும் ஒரு கல்யாணத்தை நடத்தாம, அவன் சம்பளப் பணத்தையெல்லாம் சுருட்டறானு பேசறாங்க!

    அப்புறம்?

    ஐநூறு, ஆயிரம் ரூபாய் இருபது லட்சத்துக்கு வச்சிருந்தியாமே! கேள்விப்பட்டேன்!

    நீ உதை வாங்காம போக மாட்டியா?

    இதப்பாரு! நீ கோவப்பட்டாலும், உன் மேல அக்கறை உள்ளவ நான்! அதனால பேசறேன்! உன் பையனுக்கு நீயா கல்யாணம் நடத்தலைனா, அவனா எவளையாவது இழுத்துட்டு வந்து நிக்கப் போறான்!

    அடிங்க...! ஆண்டாள் எழுந்து விட்டாள்.

    எம்புள்ளை வாகிசன் நான் கிழிச்ச கோட்டைத் தாண்டமாட்டான். புரியுதா?

    சரி! அப்படியே இருக்கட்டும். நீயே ஒரு நல்ல பெண்ணாப் பார்த்து கட்டி வையேன்!

    பாக்காமலா இருக்கேன்! மனம் போல அமையலையே?

    என்ன மாதிரி வேணும்? சொல்லு!

    நீ புரோக்கராடீ? எம்புள்ளைக்கு என்ன வேணும்னு எனக்குத் தெரியாதா?

    அந்தந்த காலத்துல அதது நடக்கணும்! நீ மூணு புள்ளைங்களை பெத்தே! ஆசை எல்லாருக்கும் இருக்குமில்லை?

    வேலைக்குப் போற பொண்ணு சரிப்படாது! தலைல ஏறும்! வீட்டோட கிடக்கட்டும்!

    உம்புள்ளைக்கு லட்ச ரூபா வருமானமா! சாதாரண கவர்மென்ட் ஆபிஸ்ல முப்பது ரூபா வருமா? உன் கடைலதானே குடும்பம் நடக்குது? அவனும் வேலைக்குச் சேர்ந்து ரெண்டு வருஷம் தானே ஆகுது?

    அதுக்குத்தான் வீட்டோட இருக்கற பொண்ணு வேணும்னு சொல்றேன்!

    அதாவது உனக்கு அடிமையா இருக்கணும்! நீ சொல்றதைக் கேக்கணும்!

    எந்திரிச்சு போடி! கோயில்ல வச்சு கொலைகாரி ஆக்காதே! ஆண்டாள் வீட்டுக்கு வந்து விட்டாள். கடை மூடும் நேரம் இரவு பத்துமணி! கோயில் எட்டரைக்கே மூடி விடுவார்கள்.

    வாகிசன் ஏழரைக்கு வீட்டுக்கு வந்தான்!

    அம்மா, பசிக்குது!

    போய்க் குளிச்சிட்டு, கோயில்ல காலை வச்சிட்டுவா! பிரதோஷ நாள்!

    சரிம்மா!

    கோயிலுக்கு போய் விட்டு வந்தான்!

    ராத்திரி என்னம்மா சாப்பிட?

    சோத்தை வச்சிட்டேன்பா! ஒரு துவையல் அறைச்சு, அப்பளத்தை சுட்டுப் போடறேன்!

    சரிம்மா! அப்பா வரலையா?

    நாய்க்கு பேரு பட்டு குஞ்சலம்? அப்பானு நீ ஒருத்தன்தான் கூப்பிடணும். அந்த ஆளால என்னடா உபயோகம்?

    உறக்கப் பேசாதேம்மா!

    என்னடா பயம்? அந்த ஆள் ஒரு தண்டச் சோறுனு இந்த ஊருக்கே தெரியும்!

    இதை ஆண்டாள் சொல்லும் போது, அவள் கணவன் என்ற பேரோடு ஏராளமான அவமானங்களை தினந்தோறும் சுமக்கும் சுகுமாரன் உள்ளே நுழைந்தார்!

    ஆண்டாலுக்கு அவரைப் பார்த்ததுமே பற்றி எரிந்தது.

    வாகி! நீ வா! சோத்தை வைக்கறேன்!

    அவர் முகம் கழுவிக் கொண்டு உள்ளே வந்தார்.

    அந்த ஆளையும் வரச் சொல்லு! தனியா உபசரிக்கணுமா?

    வாப்பா!

    வேண்டாம்!

    சாப்பிடாம படுக்காதேப்பா!

    அடேய்! அந்த ஆள் பசியோட படுக்க மாட்டார்டா! இன்னிக்கு பிரதோஷம் - கோயில் பிரசாத்துல ரெண்டு தொன்னை உள்ளே போயிருக்கும். ஓசிச் சோத்துல ஒடம்பை வளர்க்க ஆசைப்படறவங்க இங்கே பயிற்சி எடுத்துக்கலாம்!

    சுகுமாரன் எதுவும் பேசவில்லை!

    பின்பக்கம் கிணற்றை ஒட்டி படிக்கட்டுகள் மேலே போகும்! அதில் ஏறிப் போனால், மொட்டைமாடி!

    காற்று பிரமாதமாக வரும். கோபுர தரிசனம் என்றும் உண்டு!

    கோயிலை ஒட்டி வீடு கட்டினா விளங்காது! யாரோ சொல்ல,

    "அதெல்லாம் இல்லை! கோபுரத்தை விட நம்மவீடு அதிக

    Enjoying the preview?
    Page 1 of 1