Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naalai Mudhal Kadhali
Naalai Mudhal Kadhali
Naalai Mudhal Kadhali
Ebook95 pages44 minutes

Naalai Mudhal Kadhali

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603200
Naalai Mudhal Kadhali

Read more from Devibala

Related to Naalai Mudhal Kadhali

Related ebooks

Reviews for Naalai Mudhal Kadhali

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naalai Mudhal Kadhali - Devibala

    http://www.pustaka.co.in

    நாளை முதல் காதலி

    Naalai Mudhal Kadhali

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    விக்னேஷ் என்ற விக்கி ஒரு ஆபிசில் ப்யூன். அவனைவிட அதிகம் படித்த, அழகான கல்யாணியை அவன் விரும்புகிறான். பெரியவர்கள் சம்மதமில்லை. இருவரும் கோயிலில் திருமணம் முடிக்கத் தீர்மானிக்க, கல்யாணிக்கு பெரிய நிறுவனத்தில் உயர் பதவி கிடைக்கிறது. அபார சம்பளம். கம்பெனி வீடு, கார் இத்யாதிகள்.

    தன் தகுதிக்கு விக்கி சரிப்படாது எனக்கூறி கல்யாணி மனம் மாற, அவமானத்தில் அடிபட்ட விக்கி மிருகமாகிறான்.

    ஒருநாள் இரவு கம்பெனியில் கல்யாணி மட்டும் வேலை பார்க்க, அவளைக் கெடுத்து விடுகிறான் விக்கி.

    அந்தக் கான்ட்ராக்ட் மூலம் பல கோடி ரூபாய் லாபம் சேர்மன் சடகோபனுக்குக் கிடைக்க, கல்யாணியை தன் சொந்த மகள்போல நினைக்கிறார்.

    கல்யாணியின் புத்திக் கூர்மையால் வசீகரிக்கப்பட்ட கிரிதர், தன் மகன் ஸ்ரீதருக்கு அவளை மணமுடிக்க விரும்ப, தான் கொடுக்கப்பட்ட விவரத்தை சடகோபனிடம் அவள் கூறுகிறாள். அது ஒரு விபத்து எனக் கூறி, தன் செலவில் கல்யாணம் நடத்த நாள் குறிக்கிறார் சடகோபன்.

    கல்யாண மண்டபத்தில் மாப்பிள்ளைத் தோழனாக விக்கி.

    கல்யாணி சடகோபனிடம் அழ,

    அவர் விக்கியை அழைத்துப் பேச, அவன் கல்யாணத்தைக் கெடுக்க வரவில்லை எனத் தெரிகிறது. கல்யாணம் முடிகிறது.

    கல்யாணத்தில் ஒரு உள்நோக்கம் இருக்கிறது. என்ன அது?

    இன்னும் பரபரப்பான திருப்பங்களுடன்

    இனி...

    ஸ்ரீதரின் தாலி கல்யாணியின் கழுத்தில் ஏறிவிட்டது. மற்ற சடங்குகள் மணமேடையில் நடந்து கொண்டிருக்க, சடகோபன் பம்பரமாகச் சுழன்று, வந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்தார்.

    இம்முறை அவருடன் விக்கியும் இணைந்து கொண்டான்.

    மாலை வரவேற்பும் பிரம்மாண்டமாக நடந்தது.

    இரவு ஒன்பது!

    வரவேற்பு முடிந்து முதலிரவுக்கான அலங்காரம் நடந்து கொண் டிருந்தது.

    சடகோபன் வந்தார்.

    நான் புறப்படட்டா கல்யாணி?

    சார்!

    அப்பாகிட்ட பணத்தோட எல்லாம் ஒப்படைச்சாச்சு. நாளைக்கு கான்ஃபரன்ஸ் இருக்கு. ரெடி பண்ண வேண்டாமா?

    சார்! அந்த தரணி ஏஜன்சிஸ் டெண்டர்...

    அவர் சிரித்தார்.

    இனிமே என் கம்பெனிபற்றி நீ கவலைப்படக் கூடாது. படவும் விட மாட்டாங்க. சந்தோஷமா இரும்மா. மற்றவை அப்புறம். நான் உனக்கு போன் பண்றேன்!

    நான் வந்து உங்களைப் பாக்கறேன் சார்!

    ஆகட்டும்மா! சந்தோஷம் நிறைஞ்சிருக்கட்டும். விட்டுக்குடுத்து ஜெயிக்கப் பாரம்மா, எப்பவும்!

    சரி சார்!

    வாசல் வரை வந்து வழியனுப்பினாள். கூடவே நாதமுனியும், பங்கஜமும்.

    உள்ளே வர, விக்கி புறப்பட்டுக் கொண்டிருந்தான்.

    ஸ்ரீதர் அவளிடம் வந்தான்.

    விக்கி புறப்பட்டாச்சு கல்யாணி!

    நான் வர்றேன்மா! விக்கி கை கூப்பினான்.

    சடகோபன் கூட சேர்ந்து பெண் வீட்டுக்காரனாவே ஆயிட்டான் பார்த்தியா?

    விக்கியும் போய்விட்டான்.

    எந்த விக்கியால் விவகாரம் வரும் என்று கல்யாணி பயந்தாளோ, அந்த விக்கி இத்தனை சாதகமாக மாறுவான் என்று அவளே எதிர்பார்க்கவில்லை.

    பெரியவர்களை நமஸ்கரித்துவிட்டு தனியறைக்குள் நுழைந்தார்கள் இருவரும். ஸ்ரீதரை நமஸ்கரித்தாள்.

    இருக்கட்டும் கல்யாணி!

    அவன் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

    அவளை ஏற இறங்கப் பார்த்தான்.

    கல்யாணிக்கு வெட்கத்தில் முகம் சிவந்துவிட்டது.

    ஏன் அப்படி பார்க்கறீங்க? எனக்கு என்னவோ போலிருக்கு

    முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள்.

    அவள் முகவாயைத் தொட்டு உயர்த்தினான்.

    கல்யாணி!

    ம்!

    நான் ரொம்பப் பெருமைப்படறேன்!

    எதுக்கு?

    ஒரு புத்திசாலியை மனைவியா அடைஞ்சதுக்கு!

    கிண்டலா?

    இல்லை கல்யாணி. நீ என் மனைவியாகக் காரணமே, சடகோபன் கூட நீ அட்டெண்ட் பண்ணின அந்த பிரஸ்மீட்தான்!

    அவள் கூச்சத்துடன் சிரித்தாள்.

    "உன்னால நானும்,

    Enjoying the preview?
    Page 1 of 1