Maanilam Enna Vilai?
By Maharishi
()
About this ebook
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.
இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.
தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.
தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.
Read more from Maharishi
Spatikam Rating: 0 out of 5 stars0 ratingsBhuvana Oru Kelvikuri Rating: 0 out of 5 stars0 ratingsKanneer Thuliyil Kadalosai Rating: 0 out of 5 stars0 ratingsBhadrakali Rating: 0 out of 5 stars0 ratingsAthuvaraiyil Kanchana Rating: 0 out of 5 stars0 ratingsThattaamaalai Rating: 0 out of 5 stars0 ratingsIppadiye Oru Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsSooriya Paathai Rating: 0 out of 5 stars0 ratingsKoodu Sellum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsOosi Munai Rating: 0 out of 5 stars0 ratingsKanavodu Sila Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsVittil Rating: 0 out of 5 stars0 ratingsPadi Paranthaval Rating: 0 out of 5 stars0 ratingsMara Seeppu Rating: 0 out of 5 stars0 ratingsEera Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsEera Pudavai Rating: 3 out of 5 stars3/5Vizhakolam Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Yengiyavargal Rating: 0 out of 5 stars0 ratingsAdharam Madhuram Rating: 0 out of 5 stars0 ratingsPanisuvar Rating: 0 out of 5 stars0 ratingsManam Oru Bridhavanam Rating: 0 out of 5 stars0 ratingsThulasi Rating: 0 out of 5 stars0 ratingsSabthapathi Rating: 0 out of 5 stars0 ratingsYaagam Rating: 0 out of 5 stars0 ratingsParvaiyile Sevaganai..! Rating: 0 out of 5 stars0 ratingsKadalora Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsIraval Karu Rating: 0 out of 5 stars0 ratingsTharangini Rating: 0 out of 5 stars0 ratingsMuthukal Pathu Rating: 0 out of 5 stars0 ratingsAndha Poonai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Maanilam Enna Vilai?
Related ebooks
Kaadhal – Sila Kaatchigal Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Kiliye... Rating: 0 out of 5 stars0 ratingsThuduppillatha Padagugal Rating: 0 out of 5 stars0 ratingsVellikizhamai Vidiyumvelai Rating: 5 out of 5 stars5/5வெள்ளிக்கிழமை விடியும் வேளை Rating: 0 out of 5 stars0 ratingsVanavil Virpavan Rating: 5 out of 5 stars5/5Kandharva Veenaigal Rating: 5 out of 5 stars5/5Uyiraith Thirudathey Rating: 0 out of 5 stars0 ratingsNooravathu Kadathal Rating: 5 out of 5 stars5/5Ini Avan Iranthavan Rating: 0 out of 5 stars0 ratingsAnge Naan Nalama? Rating: 0 out of 5 stars0 ratingsKannai Nambathey Rating: 3 out of 5 stars3/5கண்ணை நம்பாதே Rating: 0 out of 5 stars0 ratingsKuberasamy Rating: 0 out of 5 stars0 ratingsSollathey Sei! Rating: 5 out of 5 stars5/5Virpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Vaasalvarai Vandhaval Rating: 0 out of 5 stars0 ratingsBharath Rajyam Rating: 5 out of 5 stars5/5Niram Maarum Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsPookalin Mozhi Puriyalaye? Rating: 0 out of 5 stars0 ratingsPani Iravil Pullveliyil Rating: 3 out of 5 stars3/5Pulip Pori Rating: 0 out of 5 stars0 ratingsAbaayam! Thodu! Rating: 5 out of 5 stars5/5Aa...! Rating: 0 out of 5 stars0 ratingsBombay Panthayam Rating: 0 out of 5 stars0 ratingsVetrik Kudhirai Rating: 0 out of 5 stars0 ratingsRajini Raajyam Rating: 0 out of 5 stars0 ratingsOru Eastman Nira Kolai Rating: 0 out of 5 stars0 ratingsKathi Mel Payanam Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Mannavaney Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Maanilam Enna Vilai?
0 ratings0 reviews
Book preview
Maanilam Enna Vilai? - Maharishi
http://www.pustaka.co.in
மாநிலம் என்ன விலை
Maanilam Enna Vilai
Author:
மகரிஷி
Maharishi
For more books
http://www.pustaka.co.in/home/author/maharishi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
1
சவாரி ஏதுமில்லாததால் தனக்கோடி தன் சட்டையைக் கழற்றி ஸ்டியரிங் வீல் மேல் காற்றாட போட்டுவிட்டு, கதவுக்கு வெளியே கால் தெரியும்படி படுத்திருந்தான்.
பிரும்மாண்டமான வாத நாராயண மரநிழல். தாள் பூராவும் சவாரி இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. அந்த நிழலுக்காகவும் காற்றுக்காகவுமே, அங்கேயே பொழுதை ஓட்டிவிடலாம்....
அப்படி இருந்துவிட்டால், சட்டைப்பையில் மாலை நேரத்தில் அழுக்கடைந்த ஐந்துகளும், பத்துகளும் எப்படி வரும்?
***
உதவி போலீஸ் அதிகாரி இரண்டாவது சர்க்கில் அங்கே வரிசையாக நிற்கும் டாக்சி அருகில் வந்து டிரைவர் ஆளிடம் ஏதோ விசாரித்துக்கொண்டு இருந்தார்.
முதல் டிரைவரிடம் கேட்கும் போதே செய்தி லீக்காகி பின்புறம் வழியே ஒரு கிளீனர் மூலமாக தனக்கோடியிடம் ஓடியது.
தனக்கோடியண்ணே, உன்ன போலீஸ் தேடுது....
தனக்கோடி நிதானமாக எழுந்தான்.
'எதுக்குடா’
'அதெல்லாம் அப்பால் பேசிக்கலாம், ஜோசப் அண்ணன் கண்ஜாடை காட்டிச்சி.... ஓடியாந்தேன், நீ அப்பால் போயிடு…’
தனக்கோடி வண்டியைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டான்....
***
'இப்ப அவன் எங்கே இருப்பான்?’
'நாலு நாள் முன்னால் ஒரு பார்ட்டி ஹொகேனக்கலுக்கு ட்ரிப் போகனும்னு வந்தாங்க. அப்படியே பெங்களுர் போக வேண்டியிருக்கும்னு சொன்னாங்க. நான் தான் செட்டப் பண்ணிவுட்டேன்’ என்றான் சிகப்பு அம்பாசிடர் ஜோசப்.
'ஜோசப், இந்தக் கதையெல்லாம் வேணாம், கார்த்தால தனக்கோடி சவாரி போனதை நம்ப செவன் நாட் ஒன் பார்த்திருக்காரு. நீ என்னடான்னா தனக்கோடி நாலு நாளா ஊர்லே இல்லேங்கிறமாதிரி கதை ஜோடிக்கிற....’
'அது வந்துங்க....’
'நிறுத்துமேன்.... அந்த ஆளை தானே தேடிக்கிறேன்....’
'முன்னால எனக்கு அந்த பார்ட்டிய கூட்டிக்கிட்டு போனது எந்த டிரைவர்னு தெரியாம இருந்திச்சி. சிமெண்ட் கலர் அம்பாசிடர் டிரைவர், நல்லா விஜய்காந்த் மாதிரி இருந்தான். கொஞ்சம் ரஃப் டைப்தான் சிகப்பா இருந்தான்...... என்று அவங்க சொல்லும் போதே புரிஞ்சுகிட்டேன். இவனாத்தான் இருக்கும்னு…. இத மாதிரி காரியத்துக்கெல்லாம் இவன் தான் போவான். அதுவும் தெரியும்.... சரி அதவுடு. அவன எங்கே இருந்தாலும் புடிச்சு இழுத்துக் கொண்டார முடியும்.... அனா வசியமா விவகாரம் பண்ண வேணாம்னு பாக்கறேன்…சரி, நான் உங்க யூனியன் தலைவரை பார்த்துப் பேசிக்கறேன், சன்னா அவர் காதிலேயும் ஒரு வார்த்தை போட்டு வைச்சுட்டா, நாளைக்கு விவகாரம் பெரிசானாலும் ஆவும்....
உதவி போலீஸ் அதிகாரி தன் ஜீப்பில் ஏறி உட்கார்ந்த போது…
'அதவுடு சார்.... அந்த பார்ட்டியும் நீங்க நினைக்கிது மாதிரியொன்னும்....
'அவங்க எப்படிப்பட்டவங்களா, இருந்தா என்ன? அத பின்னால் பேசிப்போம். மொதல்ல ரிப்போர்ட் வந்திருச்சி. பெரிய அதிகாரி என்னை விசாரிச்சி ரிபோர்ட் அனுப்ப குறிப்பு எழுதி அனுப்பிட்டாரு - உன்னோட ஒத்துழைப்பு கிடைக்கும்னு பார்த்தேன்....
....நான் இதிலே தீவிரமாக இறங்கினா அது ப்ஃளாரப் ஆயிடும், அப்புறம் நீங்க டாக்சி டிரைவர்ங்க வேலை நிறுத்தம், போலீஸ் அதிகாரி கெடுபிடின்னு உள்ளூர் பத்திரிக்கைக்கு செய்தி குடுப்பீங்க.... விஷயம் அப்படித்தான் போவும்னா அதையும் பார்த்துடலாம்....
ஜீப் புறப்பட்டு விட்டது.
நகரில் இந்த இரண்டு மாதத்தில் மூன்று முறை டாக்சி வேலை நிறுத்தங்கள் ஏற்பட்டு விட்டன. எல்லா நேரத்திலும் டாக்சி டிரைவர்கள் மேல் குற்றமிருந்தும்.... அனாவசிமாக போலீஸ் துறையினருக்கும் டாக்சி டிரைவர்களுக்கும். நடுவே கசப்பு உணர்வு உண்டாகி விட்டதால், டாக்சி டிரைவர்கள் விவகாரம் என்றாலே போலீஸ் துறையினர் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தனர்.
***
ஜங்ஷனில் இருந்து அவன் புறப்பட இருந்தபோது தாமதமாக வந்த எக்ஸ்பிரஸில் அந்த படப்பிடிப்பு குழுவினர் வந்து இறங்கினார்கள்....
எடுத்த எடுப்பில் அவனிடமே வந்து நின்றான். அந்த படப்பிடிப்பு குழுவின் முக்கியமான அந்த ஆள், முகத்தில் தாடையில் ஒரு கொத்து தாடி, ஏதோ கருப்புமை போல் இருந்தது. மீசை என்று சொல்ல முடியாத அளவு முகத்தில், கன்னா பின்னாவென்று ஏதோ உருவமில்லாத உருவம் அச்சடிக்கப்பட்ட சட்டை. பச்சை நிறத்தில் பேண்ட்......
அவன் கையில் பெரிய தோல்பை வைத்திருந்தான்.
'டாக்சி வேணுமே?’
'எங்கே போவணும்’
'நாங்க ஒரு நாலு பேர் இருக்கோம். மொதல்ல ஒரு ஹோட்டல்ல சா ப்பிடனும். பிறகு நாம் மத்த வேலயப்பத்தி பேசிக்கலாம்....’
அந்த ஒட்டு மீசைக்காரன் தனக்கோடியின் மேல் சுவாதீனமாக கையைப்போட்டு அனைத்து அப்பால் அழைத்துச் சென்றான். அப்படி அவன் செய்தது. 'தனக்கும் அந்த டிரைவருக்கும் நெருக்கமான நட்பு உண்டு என்பதை வேறு யாருக்கோ காண்பிக்க வேண்டும்"என்கிற எண்ணத்தில் செய்வது போல இருந்தது.
'நம்ப பார்ட்டிங்களை பிளாட்பாரத்திலே உட்கார வைச்சுட்டு வந்திருக்கேன். பிரதர்.... உன் பேர் என்ன சொன்னே… தனக்கோடி.... தனக்கோடி....நம்ப வேலைய முடிச்சிட்டு ஊர் திரும்பறவரை நீதான் நமக்கு இங்கே உதவியாளராக இருக்கனும்.... உன்னோட ரேட் என்னவோ அதை நீ கேட்டு பைசா சுத்தமா வாங்கிக்க....’ என்று அவனிடம் பேச ஆரம்பித்தவன் அவனிடம் ஒரு சிகரெட்டை நீட்டி விட்டு தானும் ஒன்று எடுத்து பற்ற வைத்துக் கொண்டான்.
அவுட் டோர் ஷீட்டிங் யூனிட் நமக்கு சில பிரத்யேக காட்சிகள் எடுக்கோணும் ரெண்டு எக்ஸ்ட்ராங்கள் இட்டுகினு வந்திருக்கேன். எனக்கு’இங்கே இன்னும் மூணு பேர் வேணும்.... யாரும் வராத இடமா. மலைப்பிரதேசங்களில் நாம் நம் படப்பிடிப்பை வைச்சுக்கலாம் -
'அதுக்கு லொகேஷன் வேணும்’… நாம ரெண்டு பேருமா போய் இடங்கள் பார்த்துட்டு வர்ரோம்… என்ன சொல்றே.... என்பேர் சுசில்குமார் -
தனக்கோடி, சில நிமிஷங்கள் யோசித்தான்.
ஒப்புக்கொண்டு விட்டான்.
ஜங்ஷனை விட்டு அவனுடைய அம்பாசிடர் புறப்படும் போது எல்லோரும் ஒரே காரில் நெருக்கி அடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தனர்.
கண்ணாடி வழியே பின்புறம் பார்த்தான்.
இரண்டு பெண்கள்.... முகமே காட்டியது.... அவர்களுடைய வாழ்க்கை லட்சணங்கள் எப்படிப்பட்டது என்று, அவள் அருகில் உட்கார்ந்திருக்கும் இரண்டு ஆண்களும் அவர்களை எந்த அளவுக்கு நெருக்க வேண்டுமோ. அந்த அளவு நெருக்கி உட்கார்ந்திருந்தனர்.
அருகில் ஒரு ஹோட்டலில் அவர்கள் தங்க ஏற்பாடுகளை செய்து விட்டு அவர்கள் கீழே இறங்க காரின் கதவை திறந்தபோது எல்லோரும் வெளியே சரிந்தார்கள்.
***
சுசில்குமாரை அழைத்துக்கொண்டு மலைமலையாகச் சுற்றிக்காண்பித்தான், தனக்கோடி காண்பித்த பல இடங்களில் மலைத்தொடர் பகுதி அவர்கள் படப்பிடிப்புக்கு தகுந்தமாதிரி இருந்தது.
எந்த மாதிரியான படப்பிடிப்பு என்பது பற்றி சுசீல்குமார் இன்னும் அவனிடம் கூறவில்லை.
'புராணப்படமா....’
'இல்லே’
'இப்பல்லாம் வர்ற மாதிரி