Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadakadanu padinga.. kalakalanu siringa..
Kadakadanu padinga.. kalakalanu siringa..
Kadakadanu padinga.. kalakalanu siringa..
Ebook183 pages1 hour

Kadakadanu padinga.. kalakalanu siringa..

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112303158
Kadakadanu padinga.. kalakalanu siringa..

Read more from Bakkiyam Ramasamy

Related to Kadakadanu padinga.. kalakalanu siringa..

Related ebooks

Related categories

Reviews for Kadakadanu padinga.. kalakalanu siringa..

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadakadanu padinga.. kalakalanu siringa.. - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    கடகடன்னு படிங்க.. கலகலன்னு சிரிங்க..

    Kadakadannu Padinga.. Kalakalannu Siringa..

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. புகழ் ஒரு மயக்கம்

    2. வீட்டை விட்டு ஓடாமல் இருக்க வழி (சுந்தரத்தை அதட்டிய சுந்தரம்)

    3. அழுக்கு சாமியார் மர்மம்

    4. எடக்கு மடக்கு... எண்ணெய் கிண்ணம்! (எடக்கு மடக்கும் ஓர் அம்மனும்)

    5. வீட்டுக்குள் ஒரு சாமியா(ரிணி)ர்

    6. ரிடர்ன் கிஃப்ட்டுகள்! (தானம் நிதானம்)

    7. கோடை விசிறி (கோடையிலே இளைப்பாற)

    8. திருடன் கோவில்

    9. மடி தடவாத சோறு

    10. அது, இது, எது?

    11. அது என்ன மந்திரம்?

    12. திருதராஷ்டிரனின் பிள்ளைகள்

    13. ஒரு அப்பாவின் பதில் (இப்படிக்கு அப்பா!)

    14. வேதத்துக்கு எச்சில் உண்டா?

    15. மேஜை செய்த மேஜிக்

    16. ஈஸி இல்லாத ஈஷி

    17. கோப்பையில் ஒரு பாடம்

    18. ருத்ராட்சக் கிளி

    19. புதிய பிச்சைக்காரர்கள்

    20. நானா, தானா, வேணா

    21. அடே! வடையா! வடையா!

    22. சும்மா சொல்லக்கூடாது பாவம்!

    23. தங்கக் கோவிலின் சக்கர நாற்காலி (தத்துவ நாற்காலி)

    24. உள்ளத்தில் கள்ள உள்ளம்

    25. அவசரத்துக்கு யார் வருவார்கள்?

    26. தம்பட்ட தம்பதி!

    27. ஜபம் செய்ய இடமில்லை!

    28. ஆழ்வார் தந்த (அழுக்கு) உருண்டை

    29. பிரம்மா வாங்காத வாழைப் பழம்!

    30. பணக்காரக் கொழுப்பு

    31. வெல்லத்தை வெல்வது எப்படி?

    32. இரண்டு பாட்டில் தண்ணீர் (தண்ணீர் கடவுள்)

    33. அமாவாசையில் அட்டகாசம்

    34. தொட்டார் கீழோர், தொடாதார் மேலோரா?

    35. எல்லாம் தேவுடு செயல்

    36. எது அவன்? எது நான்?

    37. ஒரு மல்கோவாவும் இரு நண்பர்களும்

    38. ஒரு கண்கொத்திப் பாம்பின் கதை

    39. பிரிக்கப்படாத ஞானம்

    40. குண்டுமாமணிகளுக்கு ஒரு கும்பிடு!

    41. மாடியில் என் பெயர் என்ன?

    42. முள்ளும் சொல்லாதோ கவி?

    43. டி-ஷர்ட் விவகாரம்

    சீதாப்பாட்டி - அப்புசாமி புகழ்

    பாக்கியம் ராமசாமி

    (ஜ.ரா.சுந்தரேசன்)

    நிகழ்ச்சிகள் யாவும் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றன

    ஒவியக்கவிஞர் அமுதபாரதி

    பாக்கியம் ராமசாமியின் 100 சுவையான நகைச்சுவைக் கதைகள்' என்கிற தலைப்பில் 720 பக்கங்களில், ஒரு பெருநூலாகத் தந்த பெரியவர் (வயதிலும்) திரு. பாக்கியம் ராமசாமி அவர்களின் அடுத்த நூலாகிய இந்த நூலுக்கும் என்னுரையை எழுதுகிற பாக்கியம் எனக்கு வாய்த்ததில் மிகுந்த பெருமிதமாய் இருக்கிறது... ஆமாம், முந்திய நூலிலும் என்னுரை இடங்கொண்டுள்ளது.

    பூனையின் வயிற்றில் எது பிறந்தாலும்

    அது எலியைப் பிடிக்கும்

    என்னும் சொற்றொடர்க்கிணங்க, பாக்கியம் ராமசாமி அவர்கள் எதை எழுதினாலும் பேசினாலும் அவற்றில் இயல்பாகவே அவர்தம் நகைச்சுவை மேலோங்கியிருக்கும். நகைச்சுவை அவருடன் பிறப்பு!

    இந்த நூலிலும் அந்தச் சுவையுடன்தான் நாற்பத்து மூன்று கட்டுரைகளும் தொடங்குகின்றன; ஆனால் அவை முடிவுறுகையில் அற்புதமான கருத்துரைகளோடு நிறைவுகொள்கின்றன.

    எல்லாச் சாலைகளும்

    ரோம் நகர் நோக்கியே

    என்கிற ஆங்கிலச் சொற்றொடர் இப்போது நினைவுக்கு வருகிறது... இதிலுள்ள கட்டுரைகள் அனைத்தும் உயர்ந்த தத்துவங்களை நோக்கியே...

    நகைச்சுவையாய்த் தொடங்குகிற கட்டுரைகள், வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய வளமார்ந்த செய்திகளோடு அமைவதாகப் படைத்திருக்கிற ஆசிரியருக்கு, ஏற்கெனவே கிடைத்துள்ள பாராட்டுக் குவியலில் எனது பாராட்டும் இணைந்து கொள்கிறது.

    'புகழ் என்னும் மயக்கம்' என்னும் முதல் கட்டுரையில் வருகிற 'எளிமை கருப்பசாமி', தான் எளிமையாய் இருப்பதில் எத்துணை எச்சரிக்கையோடு இயங்கினார் என்பதை என்னமாய் நகைச்சுவை ததும்ப எழுதுகிறார் பாக்கியம் ராமசாமி அவர்கள்!

    எளிமையால் தனக்கு நேர்ந்த புகழால், டி.வி. சேனல்களில் தன்னைத் தேடிய கருப்பசாமியை, அவருடைய எட்டு வயதுப் பெயர்த்தி தனது கேள்வியால் வெட்கப்பட வைப்பதை என்னவென்று பாராட்டுவது?

    நீங்க உங்களையே தேடுகிறீங்களாக்கும்... என்ற குழந்தையின் முதல் வாக்கியமே பெருந் தத்துவத்தையல்லவோ முன் வைக்கிறது!

    இரண்டாவது கட்டுரையில், இறுதியாக வருகிற 'கீதோபதேச’த்துக்கான விளக்கக் காட்சியாகட்டும், மூன்றாவது கட்டுரையில் ஸாரூப்யம், ஸாமீப்யம், ஸாலோக்யம், ஸாயுஜ்யம் என்பவை பற்றிய விளக்கங்களாகட்டும், நான்காவது கட்டுரையில் 'எதை, எப்படி, எப்போது, யாருக்குச் செய்யவேண்டும் என்பதை தெய்வத்துக்கு நாம் சொல்லித்தர வேண்டியதில்லை; தனக்கே தனக்கு என்றாலும் அதற்குத் தெரியும், எப்போது அதைச் செய்வது என்று?" எனத் தத்துவார்த்தமாக முடித்திருப்பதாகட்டும்...

    இப்படியே, நாற்பத்து மூன்று கட்டுரைகளையும் பாராட்டிக் கொண்டே போகலாம்...

    நான்காவது கட்டுரையைப் படித்து முடித்தபோது நான் எழுதிய கவிதையே என்முன் வந்து நின்றது:

    ஆனானப்பட்ட சூரியனாயினும்

    அவன்

    அதிகாலையில்தான்

    தலையைக் காட்டுவான்

    நினைவில் கொள்ளுங்கள்

    நிகழ்சிகள் யாவும்

    நிச்சயிக்கப்பட்டிருக்கின்றன!

    உண்மைதானே?

    இந்த என்னுரையை எழுதுகிற இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அவற்றை விளக்கின் பெருகும்...

    இந்த அழகிய நகைச்சுவை கட்டுரைகள் வானதி பதிப்பகம் மூலம் வெளிவருவதில் மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது.

    இப்போதாவது என்னுரையை அளிக்கிற 'பாக்கியம்’ எனக்கும் கிடைத்துவிட்டதே!

    ஓ!

    நிகழ்ச்சிகள் யாவும்

    நிச்சயிக்கப்பட்டிருக்கின்றன...

    அதிகமான அன்புடன்,

    அமுதபாரதி

    அமுதாலயம்,

    3, சிவஞானம் சாலை,

    தி.நகர், சென்னை-17

    அலைபேசி: 9840380063

    ***

    கடகட என்றல்ல... கடகடகடவென்று படித்து முடித்தேன்

    சோம.வள்ளியப்பன்

    குமுதம் 'அரசு'வின் மும்மூர்த்திகளில் ஒருவரான திரு ஜ.ரா. சுந்தரேசன் அவர்களுடைய அப்புசாமி சீதாப்பாட்டி கதைகளையும் தொடர்களையும் பள்ளி மாணவனாக இருந்த நாட்களில் தேடித் தேடிப் படித்தவன் நான்.

    அரை நூற்றாண்டுக்கும் மேலாக சுவாரஸ்யம் குறையாமல் எழுதிக் கொண்டிருக்கும் 'பாக்யம் ராமசாமி’ திரு. ஜ.ரா.சு அவர்களுடைய 'கடகடன்னு படிங்க கலகலன்னு சிரிங்க' புத்தகத்தை நான் உண்மையில் கடகட என்றல்ல... கடகடகடவென்று படித்து முடித்தேன். சரளத்துக்கும், சுவாரஸ்யத்துக்கும் விறுவிறுப்புக்கும் குறைவேயில்லாத அவரது நடையில் சிறுசிறு கட்டுரைகளாக நாற்பத்தி மூன்று பயனுள்ள தகவல்கள், ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் ஒரு சுலோகம் அல்லது திருக்குறள் அல்லது ஒரு தமிழ்ப்பாடல் என கட்டுரைகளின் அமைப்பு அற்புதமாக இருக்கிறது.

    எல்லாக் கட்டுரைகளும் பயனுள்ளவையாக இருக்கின்றன. 'வீட்டை விட்டு ஓடாமல் இருக்க வழி' என்ற இரண்டாவது கட்டுரையைப் படித்துவிட்டு சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்துவிட்டேன். Self Talk என்பார்கள். Self Control என்பார்கள். இது அதற்கெல்லாம் மேல் Self directed என்று சொல்லலாம். எவ்வளவு பெரிய வழிகாட்டலை எவ்வளவு எளிமையாக சொல்லியிருக்கிறார் ஜ.ரா.சு. என்று வியந்து போனேன்.

    அதே போல 'அதென்ன மந்திரம்?' கட்டுரையில் வரும் புறப்பட்டாச்சே யோசனையும் பிரமாதம். நிம்மதியாக வாழ்வதற்கான வழியை இதைவிட எளிமையாக சொல்ல முடியுமா? என்பது சந்தேகம்தான். 'வேதத்திற்கு எச்சில் உண்டா' என்பது தான் அடடா? எப்படிப்பட்ட கருத்து! மனிதர்களிடையே வேறுபாடு பார்க்கக்கூடாது என்பதை மண்டையில் அடித்துச் சொல்லியது போன்ற உணர்வு தரும் கட்டுரை.

    'மேஜை செய்த மேஜிக்' எனக்கு மிகவும் பிடித்த நானும் அதிகம் யோசிக்கும் விஷயம் பற்றியது. கெட்ட பழக்கங்களில் இருந்து விலக முடியும் என்பதையும் அதற்கு 'மனது' வைக்க வேண்டும் என்பதையும்தான் ஜ.ரா.சு எவ்வளவு அழகாக எழுதுகிறார்!

    'கோப்பையில் ஒரு பாடம்' கட்டுரை இந்தத் தொகுப்பின் மகுடம் என்றே சொல்லலாம். வாவ்! எதற்காக வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் கொடுக்கிறார்கள் என்று ஒரு விளக்கம் வருகிறது. அது ரொம்பப் புதுசு. மிக முக்கியமான வாழ்க்கைச் செய்தி.

    கோப்பையில் ஒரு பாடம் கட்டுரையுடன் போட்டி என்றால் அது, 'ஈசனோடாயினும் ஆசை அறுமின்' கட்டுரைதான். பதவி பட்டங்கள் போன்ற பலவற்றையும் நேசிக்கிற மனிதர்கள் அவசியம் படித்துத் தெளிய வேண்டிய கட்டுரை.

    சும்மா சொல்லக்கூடாது பாவம், ஜ.ரா.சு இந்தப் புத்தகத்தை ரொம்ப நன்றாகவே எழுதியிருக்கிறார் என்று நான் எழுதினால், அது என்ன உணர்ச்சி காரணமாக என்று தெரிந்துவிடும்! 'சும்மா சொல்லக்கூடாது' கட்டுரையில் இதற்கான விளக்கம் இருக்கிறது.

    'இரண்டு பாட்டில் தண்ணீர்' கட்டுரையும் மிகப் பெரிய தத்துவத்தை மிகச் சாதாரணமாக எடுத்துரைக்கிறது. மொத்தத்தில் மிகச்சிறந்த வாசிப்பு அனுபவத்தையும், நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ கடைப்பிடிக்கவேண்டிய அணுகுமுறைகளையும் மிக எளிமையாக, சொல்லுகிற புத்தகமாக இருக்கிறது.

    சோம. வள்ளியப்பன்

    அபிராமபுரம்

    சென்னை -600 018

    22.06.2013

    ***

    1. புகழ் ஒரு மயக்கம்

    புகழுக்கு மயங்காதவர்கள் யாராவது உண்டா? ஒரு ஊரில்

    Enjoying the preview?
    Page 1 of 1