Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanneer Pugai
Kanneer Pugai
Kanneer Pugai
Ebook45 pages17 minutes

Kanneer Pugai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803167
Kanneer Pugai

Read more from Maharishi

Related to Kanneer Pugai

Related ebooks

Reviews for Kanneer Pugai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanneer Pugai - Maharishi

    http://www.pustaka.co.in

    கண்ணீர்ப் புகை

    Kanneer Pugai

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    நீங்க பேசறது கொஞ்சங்கூட நல்லா இல்லே. அவர் செய்யறதை நல்லா தெரிஞ்சுக்கிட்டு அதை அங்கீகரிச்சுக்கிட்டு, கண்டும், காணாம இருக்கணும்னு ஓர் 'அட்ஜஸ்ட்மெண்ட்' பற்றி பேசறீங்களே... அது உங்களுக்கு அசிங்கமா தெரியலை. நாலு காசு சம்பாதிச்சாலும் கவுரவமா மத்தவங்க மதிக்கறமாதிரி இருந்தாத்தாம்பா நல்லது.

    நல்லபடியா செஞ்சுகிட்டு இருந்த வேலையை தொலச்சுக்கிட்டான். அது அவனோட போறாதகாலம். நல்லவேலையா ஒண்ணை தேடிக்கலாம். சின்னக் கொளந்தையா.

    "சினிமாவிலே சேர்த்து விடறாறாம் சினிமாவிலே. இவரோட படிப்புக்கு இவரோட நிலைக்கு இதெல்லாம் சரிதானா... எனக்கு எவ்வளவு அவமானமா இருந்துச்சு தெரியுமா? அந்தப் பொண்ணு இவர நடு ரோட்டிலே மறிச்சுக் கேக்குது. இவரு திருதிருன்னு முளிக்கறாறு. நீ யாரும்மா. இவரு உன்னையும் சினிமாவிலே, ட்ராமாலே சேர்த்து விடறேன்னு எதுனாச்சும் சொன்னாரா? அப்படின்னு கேக்கறா. என்னங்க இதெல்லாம் நடு வீதியிலே, இந்தப் பொண்ணு யாரு? இவ சொல்றதெல்லாம் நிஜம் தானா! அப்படின்னு கேக்கறேன். இவரு என்னோட கையை தரதரன்னு பிடிச்சு இழுத்துக்கிட்டு நடக்கறாறு. நான்தான் உண்மையைத் தெரிஞ்சுக்கணும்னு அவர் பிடியை உதறிக்கிட்டு அந்த பொண்ணுகிட்டே வந்து விலாசத்தைக் கொடுத்து அங்கேவா எல்லாம் விவரமா கேட்டுக்கலாம். ஒரு ஆண்பிள்ளையை இப்படி நடுரோட்டிலே மறிச்சு கேக்கறது நாகரிகமில்லேன்னேன்... அவதான் வந்தாளே! நீயும்தானே அவ சொன்னதைக் கேட்டியே. இவர் வெளியிலே என்ன செஞ்சுகிட்டு இருக்கார்ங்கறது தெரிஞ்சுகிட்டில்ல. அந்தப் பொண்ணு பேரு என்ன சொன்னா சுகுமாரியா? அவகிட்டே இவரு ஐந்நூறு ரூபா வரையிலே வாங்கி ஏமாத்தியிருக்காரு. இதப்போல இன்னும் ரெண்டு மூணு பொண்ணாம். நாலைந்து வாலிபர்களும் இதில் உண்டாம்.

    "அந்தப் பொண்ணை வீட்டுக்கு ஏன் வரவழைச்சேன்னு சண்டை பிடிக்கறார். இவரோட லட்சணம் புரிஞ்சு போச்சேன்னு... அவரு வெளியிலே என்ன வேணா செய்வாராம்.

    Enjoying the preview?
    Page 1 of 1