Sithargal Raajyam
5/5
()
About this ebook
He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Read more from Indira Soundarajan
Kannip Parunthu Rating: 5 out of 5 stars5/5Asura Jathagam Rating: 5 out of 5 stars5/5Rajathanthiran Rating: 5 out of 5 stars5/5Sivaragasiyam Rating: 5 out of 5 stars5/5Pei... Pisasu... Bootham Rating: 4 out of 5 stars4/5Aranmanai Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Chidambara Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Dhinam Oru Uyir! Rating: 5 out of 5 stars5/5Thiruvannamalai Rating: 3 out of 5 stars3/5Sivam Rating: 4 out of 5 stars4/5Manam Oru Marmadesam Rating: 5 out of 5 stars5/5Nandhi Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Ezhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Thottathellam Pon Rating: 5 out of 5 stars5/5Mandhira Vaasal Rating: 5 out of 5 stars5/5Yandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Maayamaai Silar Rating: 5 out of 5 stars5/5Oru April Puthisaali Rating: 5 out of 5 stars5/5Kannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Aval Oru Savithri Rating: 5 out of 5 stars5/5Kaatthiruntha Naagam Rating: 5 out of 5 stars5/5Markazhi Roja Rating: 5 out of 5 stars5/5Mandhira Valai Rating: 5 out of 5 stars5/5Kaatru… Kaatru... Uyir Rating: 3 out of 5 stars3/5Thirakkathey Aabathu Rating: 5 out of 5 stars5/5Nooravathu Kadathal Rating: 5 out of 5 stars5/5Kannigal Ezhu Per Rating: 4 out of 5 stars4/5Sathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Naga Vanam Rating: 5 out of 5 stars5/5
Related to Sithargal Raajyam
Related ebooks
Aanandha Thaandavam Rating: 5 out of 5 stars5/5Mahadeva Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Maanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Kalachakram Rating: 5 out of 5 stars5/5Athirshtakkaatru Rating: 5 out of 5 stars5/5Kanbathellam Unmai Rating: 5 out of 5 stars5/5Maha Periyavar Part-2 Rating: 0 out of 5 stars0 ratingsSivakamiyin Sabatham - 4 Rating: 5 out of 5 stars5/5Maaya Nilavu Rating: 5 out of 5 stars5/5Chandhira Sekaram! Rating: 0 out of 5 stars0 ratingsNooru Kodi Roopai Vairam Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Valai Rating: 5 out of 5 stars5/5Thiruppugal Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Rating: 5 out of 5 stars5/5Nandhipurathu Naayagi - Chapter 21 Rating: 4 out of 5 stars4/5Oru April Puthisaali Rating: 5 out of 5 stars5/5Chanakya Neeti In Tamil Rating: 3 out of 5 stars3/5Sidhargal Pithargala? Rating: 0 out of 5 stars0 ratingsKannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Aranmanai Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Rudhra Veenai - Part 1 Rating: 5 out of 5 stars5/5Oodathey Karuppu Rating: 5 out of 5 stars5/5Thittivaasal Marmam Rating: 5 out of 5 stars5/5Anthapuram Pogathey, Arinjaya! Rating: 2 out of 5 stars2/5Koodalazhahi - Part 1 Rating: 5 out of 5 stars5/5Maha Periyavar Rating: 4 out of 5 stars4/5Uyiril Kalandha Uravey… Rating: 1 out of 5 stars1/5Thulli Varukuthu Vel Rating: 0 out of 5 stars0 ratingsKulothungan Sabatham Rating: 4 out of 5 stars4/5Mohini Illam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Sithargal Raajyam
1 rating0 reviews
Book preview
Sithargal Raajyam - Indira Soundarajan
http://www.pustaka.co.in
சித்தர்கள் ராஜியம்
Sithargal Raajyam
Author:
இந்திரா செளந்தர்ராஜன்
Indira Soundarajan
For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. சுந்தரானந்தர்
2. இடைக்காடர்
3. மச்சமுனி
4. கோரக்கர், பிரம்மமுனி
5. போகர்
6. கருவூரார்
7. திருமூலர்
8. காலாங்கி நாதர்
9. பாம்பாட்டி சித்தர்
10. தேரையர்
11. கொங்கணர்
12. சிவவாக்கியர்
13. புலிப்பாணி சித்தர்
14. அகப்பேய் சித்தர்
15. யாக்கோபு சித்தர்
16. பிராந்தர்
17. பட்டினத்தார்
18. சட்டை முனி
1
சுந்தரானந்தர்
'ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
- சிவவாக்கியர்
கல்யானைக்கு கரும்பு கொடுத்த சுந்தரானந்த சித்தர் பற்றி அறியும் முன், அவர் வாழ்ந்த காலம் பற்றியும், அவ்வேளையில் மதுரையை ஆட்சி புரிந்த அபிஷேக பாண்டிய மன்னன் பற்றியும் அறிந்து கொள்ளவேண்டியது அவசியம்.
இன்னும் சற்று முன் சென்று, பாண்டியப் பேரரசு எவ்வாறு தோன்றியது என்பதைப் பார்த்துவிடுவதும், சுந்தரானந்த சித்தரை நாம் தெள்ளத் தெளிய, அறிந்து கொள்வதற்கு துணை செய்யும்.
தேவர்களின் தலைவன் இந்திரன் என்பதை அறிவோம். இந்திரன் என்றாலே வெள்ளை யானையாகிய ஐராவதமும், அவனது அற்புத ஆயுதமான வஜ்ராயுதமும் தான் அனைவர் நினைவிலும் முந்தும். தொட்டுத் தொட்டுச் சென்றால், இந்திரனுக்கு மாப்பிள்ளை முருகன் என்பதும், இவன் மகளாகிய தெய்வானையைத் தான் முருகன் மணந்தான் என்பதும் விரிவுபடும்.
ஆஞ்சனேய மூர்த்தியின் வீங்கிய தாடைக்குக் காரணமும் இந்திரன்தான். இவன் வீசி எறிந்த வஜ்ராயுதம் பட்டுத்தான் அனுமந்தராயனுக்கு அப்படியானது.
இப்படி இந்திரன் குறித்து நிறைய சிந்தித்துக்கொண்டே செல்லலாம். இவையெல்லாம் துவாபரயுகத்து விஷயங்கள்.
தேவர்குலத் தலைவனான இந்திரனுக்கு அவ்வப்போது சோதனைகள் ஏற்படுவது மிகமிக சகஜம். அப்படித்தான் ஒருமுறை குருபகவானிடம் மோத நேரிட்டு சாபத்திற் குள்ளாகும் நடுநிலை இந்திரனுக்கு ஏற்பட்டது.
சாபத்திற்கு ஒரே பரிகாரம் 'சிவபூஜை' என்றாகிவிட்டது மகாதேவ அனுக்ரகம் மட்டுமே இந்திரனைக் கடைத்தேற்ற இயலும் என்றாகிவிட, இந்திரனும் கடுந்தவம் புரிந்தான்.
தவத்திற்கு உருகுவதில், தவசீலர்களுக்காக ஓடிவருவதில் ஈசன் என்றுமே ஒரு அவசரக்காரன், இந்திரனையும் ஓடிவந்து ஆட்கொண்டான். இந்திரன் தவம் புரிந்ததும் இறைவன் அவனை ஆட்கொண்டதும் கடம்பவனமாகிய மதுரையில் தான் நிகழ்ந்தது.
ஆட்கொண்ட இறைவன் உன் தேவப்பேரரசு போல இம் மண்ணிலும் ஒரு மானுடப் பேரரசு விரிவடையட்டும். உனது பாண்டித்யத்தால் உருவாகப்போகும் இப்பேரரசும் பாண்டியப் பேரரசாகட்டும்
என்று கூறி அருளிச் செய்திட்டார்.
ஏற்பட்டது பாண்டியர் காலம்.
இந்திரனே குலசேகர பாண்டியனாக, அதாவது மனித குலத் தைச் சேர்ந்த பாண்டித்யமுள்ள அரசனாக ஆகி, மதுரைக்குள் மணலூர் எனும் இடத்தில் அரண்மனை கண்டு, கடம்பவன க்ஷேத்திரமாகிய மாமதுரையை ஆளத் தொடங்கினான். இவன் வம்சா வழியில் அடுத்து வந்தவன் மலயத்துவச பாண்டியன். அடுத்தவன், சுந்தர பாண்டியன். அதற்கும் அடுத்தவன், வீரபாண்டியன். ஐந்தாவதாய் வந்தவன் உக்கிரப் பெருவழுதி. ஆறாவதாய் வந்தவன்தான் அபிஷேக பாண்டியன்.
இன்று நாம் காணும் பலநூறு சித்த புருஷர்களுக்கு வழி கோலியவன் இவன்தான் என்றால் மிகையில்லை.
அபிஷேக பாண்டியன் காலத்திற்கு முன்வரை ரிஷிகள், முனிவர்கள், தவசிகள் என்று யோகியர்கள் பலவாறு அழைக்கப்பட்டனர்.
சித்தர்கள் என்கிற திருநாமவரிசையும், எதற்கும் கட்டுப்படாத, எதிலும் அடங்காத, எதிலும் அடக்க முடியாத ஆகமமாயும், ஆகம் மற்றும், ஆத்திகச் சுடராகவும், நாத்திகமும் கொண்டவர் போலும், அன்றிலிருந்து இன்றுவரை அறிய இயலாத, புரிந்து கொள்ள முடியாத தன்மைகளுடைய சித்தர்கள் வரிசை தோன்றியதெல்லாம் இந்த அபிஷேக பாண்டியன் காலத்திற்குப் பிறகுதான்.
இறைவனால் இந்திரன் மூலம் தோற்றுவிக்கப்பட்ட பாண்டியப் பரம்பரையிலும் ஒவ்வொரு பாண்டிய மன்னனிடமும் ஒரு திருவிளையாடல் கண்டுள்ளான் அந்த ஈசன். துவாபரயுகத்தின் ஆண்டுக்கணக்கே விசித்ரமானது. இன்றைய நம் பார்வைக்கு ஆச்சரியமூட்டுவது. அதன்படி முதல் பாண்டியனான குலசேகர பாண்டியன் 1400 வருஷம் கடம்பவனத்து ராஜாவாகத் திகழ்ந்திருக்கிறான். அடுத்து மலையத்துவசன். இவன் வயிற்றுப் பெண்தான் நமக்கெல்லாம் தாயான மீனாட்சி. இறைவன், அன்னையைக் கைப்பிடிக்க வந்த சமயம் நிகழ்த்திய திருவிளையாடல்கள் இவன் காலத்தில்தான் நிகழ்ந்தன. அடுத்து சுந்தரபாண்டியன். இவன் காலத்தில்தான் வெள்ளியம்பலக் கூத்து நிகழ்ந்தது. குண்டோதரனுக்குச் சோறு போட்டதெல்லாமும் கூட இவன் காலத்திலேதான் என்கிறது அபிதான சிந்தாமணி. ஆதாரத் திற்கு திருவிளையாடல் புராணத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறது.
திருவிளையாடல் புராண வரிசையில் அபிஷேக பாண்டியன் காலத்திலும் பல அற்புதங்கள் இறைவனால் நிகழ்த்தப்பட்டன. அதில் முக்கியமானது முடிசூட்டிக்கொள்ள தங்கமுடியும் அதில் மாணிக்கமும் இல்லாமல் அபிஷேக பாண்டியன் தவித்த போது, அவனுக்கு மாணிக்கம் விற்றது. பின் வருணன் வற்றாது பொழிந்து உருவாக்கிய கடலை வற்றச் செய்தது. என்று ஏராளமான லீலைகள்.
அவைகளெல்லாம் இன்று அதிசயக்கதைகளாய், அளக்க இயலாதவைகளாய் மட்டுமே இருக்க, அந்த நாளில் நிகழ்த்திய ஒரு பிரதான திருவிளையாட்டுச் செயலே, இன்றளவும் நாம் காணும் சித்த புருஷர்கள் பலருக்கும் அடிநாதமாய் உள்ளது.
சித்தன் என்கிற வார்த்தை மட்டுமல்ல; இந்தப் பூமண்ட லத்தில் முதல் சித்தன் தோன்றியதும் அன்றுதான்.
முதல் சித்தனாகவே தோன்றியதும் அந்த ஈசன்தான்
ஒன்றான அவன், உருவில் சிவசக்தி எனும் இரண்டாகி, நன்றான செம்மொழியில் மூன்றாகி, வேதங்களில் நான்காகி, பூதங்களில் ஐந்தாகி, சுவைகளில் ஆறாகி, சுரமாகிய மொழி யதில் ஏழாகி, திசைகளில் எட்டாகி, ரசங்களில் ஒன்பதனான அந்த ஈசன், பித்தன், பேயன், ருத்ரன், கபாலன், சடை யாண்டி, பிச்சாண்டி, அகோரன், அனன்தன் என்று எண்ணற்ற பெயர்களுக்குள் பொருந்தியவன். ஆனால் அவன் சித்தனாகியது திருவிளையாடல் புராணப்படியும், பாண்டியர் மரபின்படியும் இந்திரனால் தொடங்கப்பெற்றது, அபிஷேக பாண்டியன் காலத்தில்தான்.
அவனை சித்தனாக்கியதில் அபிஷேக பாண்டியனுக்கும் ஒரு பெரும் பங்குண்டு.
காரணங்களில்லாமல் காரியங்கள் ஏது? அதிலும் சிவ லீலை என்பது சிகரங்கள் கடந்தது.
நீண்ட காலப் பெருவெளியில் மனிதக்கூட்டம் வாழ்ந்து செல்லும் நாட்களில், மாறாத ஒன்றான மாற்றங்களைக் கண்டு கண்டு மாயவாழ்க்கைக்குள் உழலும்போது பெரிதான தெல்லாம் சிறிதாகவும், சிறிதானதெல்லாம் பெரிதாகவும் தெரியும் என்பது அந்த சிவத்துக்குத் தெரியும்.
அப்போது, ஒரு சாரரையாவது கெளரவித்து வழிநடத்த சிலராவது வேண்டுமே?
அவர்கள் சிலர்தான் - ஆனாலும் சீலர்கள்.
சீலர்களே சித்தர்கள்!
சரி, முதல் சித்தனாய் சிவபெருமான் மதுரையம்பதி வரவும், சித்துக்கள் புரியவும் எது காரணமாய் இருந்தது என்று பார்ப்போமா?
அபிஷேக பாண்டியன் அந்த நாளில் அடிக்கடி பொருளா தாரச் சிக்கலில் விழுந்தபடி இருந்தான். அவன் மகுடம் தரிக்க வேண்டிய வேளையில் அதில் மாணிக்கம் இல்லை. அரசர் களின் மகுடத்தில் நவரத்னக் கற்கள் மின்னித் திளைக்கும். உள்ளபடியே அவைகள் கற்கள் மாத்திரமல்ல; கோள்கள். ஒன்பது கோள்களை சிரத்தையாக சிரம் மீது தாங்கி, அந்த கோள்களின் கதிர்கள் அரசனுக்குள் ஊடுருவிப்பாய்ந்து அவனுக்கு நல்லவழியைக் காட்ட வேண்டும்.
நல்ல மதி,
நல்ல கதி,
நல்ல நிதி,
நல்ல விதி
எனும் நான்கும் அரசர்க்கு அவசியம். ஏனென்றால், அவன் சிரித்தால் தேசமே சிரிக்கும்; அவன் அழுதாலோ தேசமே அழுமே?
குடிமக்களுக்காக, அவர்களின் நலனுக்காக வாழ்கின்றவன் தானே அரசன்? எனவே. அவனிடம் நவரத்தினங்களாகிய நவநிதிகள் இருந்தே தீரவேண்டும். எந்த அரசனின் கஜானா நிரம்பி வழிகிறதோ, அந்த அரசனின் நாட்டில் மகிழ்வும், நலங்களும் கூட நிரம்பி வழியும். நிரம்பி வழிந்தால்தானே நலத்திட்டங்கள் தீட்ட முடியும். அதைச் செயல்படுத்தவும் முடியும்?
அதிலும் இயற்கை, ஊறுகள் செய்யும்போது மக்களுக்கு நிழலாக நிற்கவேண்டியது அரசனின் செயல்.
அபிஷேக பாண்டியின் காலத்திலும் இயற்கைதான் அதிகம் அவனைச் சோதித்தது.
இயற்கையை விட்டுச் சோதிக்கச் சொன்னவனும் நமது இறைவன்தான். ஒருமுறை பெய்து கெடுத்தால், மறுமுறை காய்ந்து கெடுக்கும்.,
அபிஷேகபாண்டியன் இயற்கைச் சீற்றத்தை எப்படி எதிர் கொள்ளப் போகிறான் என்று நோக்கியபடியே இருந்தான் இறைவன்.
அபிஷேக பாண்டியன், நாட்டின் குறைகளை எல்லாம் கவனித்தான். ஓரளவு சீர்செய்தான். ஆனபோதிலும் அவனுள் அற்ப மானிடப் பிறப்பாகப் போய்விட்டோமே என்று ஓர் எண்ணம். தேவருலகமே சிறந்தது. அவர்களெல்லாம் அமுதம் குடித்தவர்கள். அரம்பையர் ஆட்டம் பார்த்துக் கொண்டு அனுதினமும் போகித்திருப்பவர்கள் என்றும் ஒரு முடிவு.
இங்கே அப்படி இருக்க முடிகிறதா? ஏக்கம்!
இப்படி எல்லாம் விசாரத்தில் அபிஷேகப்பாண்டியன் வாழ, அவனைத் தெளிவிக்காது, அவன் சார்ந்த சான்றோர்களும் குழம்ப, இறைவன் ஈசன் முகத்தில் மட்டும் ஒரு மாயப்புன்னகை. உள்ளக் கோயிலுக்குள் இப்படியெல்லாம் குழப்பங்களா? ஊனுடம்பாகிய ஆலயம் பற்றி இவ்வளவு பயமா? உங்கள் சித்தம் தெளிவிக்க ஒரு சித்தனாகவே வந்தால்தான் உங்களுக்கு விளங்கும் என்கிற முடிவோடு, கிட்டத்தட்ட இதே குழப்பங்களுடன் இருந்த ஒருவன் உள்ளுக்குள் புகுகிறது ஈசனின் ஆன்ம ஜோதி... அடுத்து?
சுந்தரானந்தர்
"செங்கலும் கருங்கலும் சிவந்த சாதிலிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர்
உம்பதம் அறிந்து நீர் உம்மைநீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்தநாதர் ஆடல் பாடலாகுமே!"
- சிவவாக்கியர்
நகரங்களில் சிறந்தது காஞ்சி மாநகர் என்பார்கள். அதனினும் சிறந்தது மதுரையம்பதி என்றால், துளியும் மிகை கிடையாது. அதிலும் அபிஷேக பாண்டியனின் காலத்தில் மதுரை நகரம் வடிவிலும் சரி, பொலிவிலும் சரி பூரித்துக் கிடந்தது.
சிறப்புப் பெற்ற மதுரை மாநகரின் வீதிகளில் அறிஞர் சங்கங்கள் நிரம்பியிருந்தன.
குதிரை வீரர்களின் உலாக்களுக்கும், சிவிகைகளின் ஊடு நடைக்கும் நடுவே யாராவது இரண்டு பேர் சந்தித்துக் கொண்டால், அவர்கள் பேசிக் கொள்வது கவிதையாகத்தான் இருக்கும். அதில் குற்றம் காண்பதும் பின் அரண்மனை முற்றம் ஏகுவதும் சாதாரணமாக நடக்கும்.
தமிழ், திருநடனமாடிய நாட்கள் அவை.
ஆயினும், மனித சக்தியின் புதுப்புது பரிமாணங்கள் பற்றி பெரிய ஞானம் யாருக்கும் இல்லை என்றே கூற வேண்டும்.
சோமசந்தரர் ஆலயம் ஏகுபவர்கள் கூட, இறைவனை ஒரு நிகரில்லாத சக்தியாகக் கருதி பொன் கேட்டார்கள், பொருள் கேட்டார்கள். ஒருவர்கூட நிகரில்லாத ஞானத்தைக் கேட்க வில்லை.... கேட்கத் தெரியவில்லை.
இவர்களுக்கெல்லாம் வழிகாட்டுவதற்கென்றே இறைவனும் சோமசுந்தரனாய் ஒரு கட்டிளம் காளை வடிவில் மதுரையம்பதிக்குள் ஒருநாள் நுழைந்தான்.
அவன் திருக்கோலத்தை மதுரைக் கலம்பகம் தொட்டு பரஞ்சோதியடிகளின் கண் வழிக்காண்போமா?
'விபூதிப் பந்தலிட்ட நெற்றி, மையத்தில் குங்குமத்