Sirikkatha Manamum Sirikkum
()
About this ebook
Read more from Bakkiyam Ramasamy
Bakkiyam Ramasamyin 100 Suvaiyana Nagaichuvai Kathaigal Rating: 5 out of 5 stars5/5Mamanar Kathaigal Rating: 5 out of 5 stars5/5Come on Appusamy Come on Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Africa Azhagiyum Rating: 5 out of 5 stars5/5Appusamyin Colour TV Rating: 0 out of 5 stars0 ratingsMarumagal Rajyathil... Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Padam Edukkirar Rating: 0 out of 5 stars0 ratingsHuman Bomb Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Thairiyasami Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Paritchai Ezhuthukirar! Rating: 0 out of 5 stars0 ratingsKoondukkul Appusami Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsMahabalipurathil Marupadi Narasimma Pallavan Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAadhaar Attaiyum Appusamiyum Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsAppusami 80 Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKurunkatturaigal Moolam En Aanmeega Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Azhagi Pottiyum Rating: 0 out of 5 stars0 ratings'Ink'eetham Therinthavara Neegal? Rating: 0 out of 5 stars0 ratingsAndha 37 Varudangal Rating: 0 out of 5 stars0 ratingsNaanaa Ponathum Thaanaa Vandhathum Rating: 0 out of 5 stars0 ratingsAakasavaniyil Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsAugust Thiyagi Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsSundakkai Sithar Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Varisu Thedukirar Rating: 0 out of 5 stars0 ratingsAppusamiyin Thaali Bakkiyam Rating: 0 out of 5 stars0 ratingsDabbaji Bansleyudan Appusami Rating: 0 out of 5 stars0 ratingsSeethobadesam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Sirikkatha Manamum Sirikkum
Related ebooks
Berovin Pinnal Rating: 0 out of 5 stars0 ratingsPaper Padikkum Erumbu Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Paravai Rating: 0 out of 5 stars0 ratingsArusuvai Rating: 0 out of 5 stars0 ratingsKadakadanu padinga.. kalakalanu siringa.. Rating: 0 out of 5 stars0 ratingsSi(ri)thralaya Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Sirikkalame... Rating: 0 out of 5 stars0 ratingsUtharayanam Rating: 0 out of 5 stars0 ratingsBhoomikku Kidaitha Puthayal Rating: 0 out of 5 stars0 ratingsBoogola Rambai Rating: 0 out of 5 stars0 ratingsKural Inithu Rating: 0 out of 5 stars0 ratingsVanthaanga Jeichaanga… Rating: 0 out of 5 stars0 ratingsPen Paathal Oru Pethal Rating: 0 out of 5 stars0 ratingsAnnachi vs Annachi Rating: 0 out of 5 stars0 ratingsThamasha Varigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsAnuradha Ramananin Sirukathaigal - Collection 3 Rating: 0 out of 5 stars0 ratingsChapparam Thokki Rating: 0 out of 5 stars0 ratingsSirikka Vaikkum Kurumbana Kutty Kadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsSugamana Sumaigal Rating: 0 out of 5 stars0 ratingsBrindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5Ithu Yengal Bharatham Rating: 0 out of 5 stars0 ratingsUlagam Enbathu... Rating: 0 out of 5 stars0 ratingsSirukathaigal Patriya Sinthanai Chitharalgal Rating: 0 out of 5 stars0 ratingsCherryblossomum Innum Sila Pookkalum Rating: 0 out of 5 stars0 ratingsVelai Paduthum Paadu Rating: 0 out of 5 stars0 ratingsVari Variyaga Siri Rating: 0 out of 5 stars0 ratingsOru Murai Sollividu Rating: 5 out of 5 stars5/5Ellam Income Mayam Rating: 0 out of 5 stars0 ratingsSethu Banthanam Rating: 0 out of 5 stars0 ratingsEngey Antha Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Sirikkatha Manamum Sirikkum
0 ratings0 reviews
Book preview
Sirikkatha Manamum Sirikkum - Bakkiyam Ramasamy
https://www.pustaka.co.in
சிரிக்காத மனமும் சிரிக்கும்
சிறுகதைகள்
Sirikkatha Manamum Sirikkum
Sirukathaigal
Author:
பாக்கியம் ராமசாமி
Bakkiyam Ramasamy
For more books
https://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
நண்பரைப் பற்றி…
அணிந்துரை
1. அடியே, கொஞ்சம் சும்மா இரு!
2. அரிசியும் சவரனும் ஒண்ணு, அறியாதவன் வாயில் மண்ணு
3. அய்யாவும் அவரைக்காயும்
4. பைத்தியமாகிவிட்டால் ஸெல் தொலையாது!
5. தர்மசங்கடங்கள்!
6. தோசை வெட்கமறியாது…
7. காந்தி தாத்தா எல்லி?
8. ஜட்டி சுட்டதடா கை விட்டதடா!
9. கன்னத்தில் ‘கிள்ளு’ விட்டால்…
10. வீட்டுக்கு ஒரு மைத்துனி வளர்ப்போம்!
11. மாத்தி யோசியுங்கள்!
12. நான்தான் பேசறேன்!
13. நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களா?
14. நேரில் வந்து கூப்பிடறது…
15. நித்யானந்தம் என்றாலே…
16. ஓடு கணவா, ஓடு!
17. பயமுறுத்துவோர் சங்கம் பராக்!
18. பிறன்மனை ரகசியம்!
19. ரிஸப்ஷனா? லேட்டாகப் போங்கள்!
20. சலூன் வைத்தியம்!
21. சர்வாதிகார சாவிக் கொத்து!
22. ஷாக் அடிக்கும் விருந்தாளிகள்!
23. என்னை எதிர்த்த மகாராஜாக்கள்!
24. தாளி பாக்கியம்!
25. வாழ்க வளவளவுடன்!
26. காலை வலிபரப்புச் செய்திகள்!
27. குஒசீகுகபிக
நண்பரைப் பற்றி…
பாக்கியம் ராமசாமி என்றும் அறியப்படும் ஜ.ரா. சுந்தரேசன் எனக்கு ஐம்பது ஆண்டுகளாகப் பரிச்சயம். ஆனால் அவ்வளவு ஆண்டுகளும் அவர் என் மீது நட்பும் கொண்டிருந்தார் என்று 1980ல்தான் தெரியவந்தது. அன்று அவர் ஓர் இதழின் பொறுப்பாசிரியர்களில் ஒருவராக இருந்தார். அப்பத்திரிக்கையில் ஒரு புகைப்படம், ஒரு வரிக்காகத் தவமிருந்தவர்கள் ஏராளம். அவ்வளவு செல்வாக்குடைய பத்திரிகையின் முக்கிய அங்கமாக இருந்தாலும் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களில் ஒருவனாக இருந்த என்னிடம் அவர் வைத்திருந்த அன்பும் மதிப்பும் எனக்கு மிகுந்த பெருமையளித்தது. அவருடைய வலிமை என்றும் ஒரே சீரான மனோபாவம் கொண்டிருப்பதுதான். அதனால்தான் அவர் வருடக்கணக்கில் ‘அப்புசாமி, சீதாப்பாட்டி’ கதைகூட சுவாரசியம் குன்றாது எழுத இயலுகிறது. இன்று ஒரு புது நூல். இதில் உள்ளவை சிறுகதை - கட்டுரை எல்லையில் இருப்பவை. சுந்தரேசனின் வழக்கமும் இயல்புமான நகைச்சுவை கொண்டவை. இது ஓர் அசாத்தியமான சாதனை. அவர் என்னைச் சில வார்த்தைகள் எழுதச் சொன்னது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்நூலில் உள்ள புன்சிரிப்பு எல்லா வாசகரையும் கவரும்.
சென்னை
2011
மிக்க அன்புடன்
அசோகமித்திரன்
அணிந்துரை
கலைமாமணி, பேராசிரியர், முனைவர்
கு. ஞானசம்பந்தன், எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்டி., டி.ஜிடி., டிஜே.,
தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை - 625 009
தலைவர், நகைச்சுவை மன்றம், மதுரை.
தமிழகத்தின் மிகச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களுள் ஒருவராக, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக இன்றைக்கும் எழுதிக்கொண்டிருக்கும் திரு. பாக்கியம் இராமசாமி அவர்களின் இலட்சக்கணக்கான இரசிகர்களில் நானும் ஒருவன்.
நான் பள்ளியில் படிக்கிற காலங்களில் ‘முகமூடியும்’, ‘இரும்புக்கை மாயாவியும்’, வீரம் மிகுந்த சாகச நாயகர்களாக என்னைக் கவர்ந்தார்கள். பொன்னியின் செல்வனின் ‘வந்தியத் தேவனும்’, ‘ஆழ்வார்க்கடியானும்’, ‘நந்தினி’யும் எப்போதும், இப்போதும்கூட என்னுடன் இருப்பவர்கள்தான். ஆனால் இந்தச் சாகச வீரர்களுக்கு நடுவே அப்புசாமி தாத்தா, சீதாபாட்டி, அரை பிளேடு அருணாசலம், இரசகுண்டு, கீதாபாட்டி போன்ற அபூர்வ மனிதர்களும் எங்களைப் போன்றோர்களைச் சிரிக்க வைத்தார்கள் இரசிக்க வைத்தார்கள். எங்களையும் நகைச்சுவைப் பேச்சாளர்களாய், எழுத்தாளர்களாய் மெருகேற்றினார்கள். இத்தகைய நகைச்சுவைப் பாத்திரங்களைத் தமிழிலக்கிய உலகிற்குப் படைத்துத் தந்த பிரம்மா நமது வணக்கத்திற்குரிய முதுபெரும் படைப்பாளி திரு. பாக்கியம் இராமசாமி அவர்களே ஆவார்கள்.
அணிந்துரைக்கே இவ்வளவு பெரிய முன்னுரையா…? என்று யாரும் கலங்க வேண்டாம். நான், நகைச்சுவையாளனாக வளர்வதற்கு வித்திட்ட பெருமக்களுக்கு நன்றி கூறும் வாய்ப்பு இது நிற்க!
வெகு நாட்கள் கழித்து நான் சத்தம் போட்டுச் சிரித்தது மட்டுமில்லாமல், கூட இருந்தவர்களையும் என்னவோ? ஏதோ? என்று கவலையோடு என்னைப் பார்க்குமாறும் மிரட்டிவிட்டேன்.
‘அடியே கொஞ்சம் சும்மா இரு’ எனும் தலைப்பில் தொடங்கி, ‘குஒசீகுகபிக’ (பயப்படவேண்டாம் தலைப்புதான்) என்பது வரையிலான 27 கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். இந்தக் கட்டுரைகளுக்கு இவர் பெயர் வைத்திருக்கும் அருமைக்காகவே ஒரு ‘சபாஷ்’ போடலாம்.
‘தோசை வெட்கமறியாது’
‘அய்யாவும் அவரைக்காயும்’
‘ஓடு கணவா ஓடு’
‘பிறன்மனை இரகசியம்’
‘வாழ்க வளவளவுடன்’
‘காலை வலிபரப்புச் செய்திகள்’
இந்தத் தலைப்புகளைப் படித்தவுடன் நம்மைப் பற்றிக்கொள்கிற சிரிப்பு, தொடர்ந்து படிக்கப் படிக்கக் குற்றால அருவியாய் மனதுக்குள் மகிழ்ச்சியை, உள்ளத்தில் எழுச்சியை உண்டாக்குகிறது என்பது, இந்நூலைப் படித்த நான் உணர்ந்த உண்மை.
கணவன்மார்களைச் சுறுசுறுப்பாக்க நினைக்கும் மனைவிகளும், அதீத சுறுசுறுப்பால் மனைவிகளைக் கதிகலங்கச் செய்யும் கணவன்மார்களும் (அடியே கொஞ்சம் சும்மா இரு) என்று தொடங்குகிறது, இந்த நகைச்சுவைக் கச்சேரி.
‘அரிசியும் சவரனும் ஒண்ணு’ என்ற கட்டுரையில் கோணிப்பைகளில் (சாக்கு) அரிசியை அளந்து போடும் காட்சியையும், சிந்திய அரிசிமணிகளை மகாலெட்சுமியாய் மதிக்கின்ற அக்காலத்துப் பெரியவர்களையும், அன்றைய விலையையும் இன்றைய விலையையும் ஒப்பிட்ட நிலைகுலைந்து போகிற நம் நிலையையும், அரிசி அளக்கும் திருவிழாவில் அழகாய்ப் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.
ஆங்கில ‘சாருக்கும்’ (Sir) தமிழில் ‘ஐயா’வுக்கும் உள்ள பாரதூரங்களை எடுத்துச் சொல்லி, பட்டினத்தில் எல்லாமே சார்தான் சார். டிரைவர் சார், டெய்லர் சார் எனத் தொடங்கி, சில இடங்களில் அந்த சாரும் ‘ஸேரா’வதைச் சுட்டிக்காட்டி, சென்னைசார், மனைவிசார் என நீட்டிக் கொண்டேபோய் ஐயப்பன் மாலை போட்டவர்கள் எல்லோரையும் ‘சாமி’ என்பதைப் போல எங்கும் சார், எதிலும் சார் எனச் சொல்லி, ‘ஐயா’ அவரைக்காய் ஆன கதையையும் சொல்வது இனிமையான சமூக அங்கதம். அதாவது தமிழில் (Social Satire).
ருசியான உணவைத் தேடிப்போய் ருசித்துச் சாப்பிடுபவர்கள் பலர் உண்டு. அப்படிச் சாப்பிட்ட அல்லது சாப்பிடப்போகிற உணவைப் பற்றி சிலர் சொல்லக் கேட்டால் நம் காதில் இன்பத்தேன் பாயும்; நாவில் நீர் ஊறும். இதில் பாக்கியம் இராமசாமி அவர்கள் சுவையான உணவுப் பிரியர் மட்டுமில்லை, அதைச் சுவைபட தன் எழுத்தில் பரிமாறுகிற வித்தகரும்கூட, அவரே சொல்வது போன்று, ‘பூர்ண சந்திரனே இலையில் இறங்கியது போல’ தோசை அத்தனை அழகு; அதில் உள்ள துவாரங்களை எண்ணிவிடலாம் அத்தனை தெளிவு. தாளித்துக் கொட்டிய தேங்காய்ச் சட்னி, மிளகாய்ப் பொடி, தக்காளிச் சட்னி, கொத்துமல்லித் தொக்கு…’ இதற்கு மேலும் தோசையை ருசிக்க வேண்டுமென்றால் ‘தோசை வெட்கமறியாது’ படித்து ருசியுங்கள்.
உங்கள் வீட்டில் மழலை பேசும் பேரன் இருக்கிறானா? அவன் பேச்சு இருக்கட்டும், அவனைப் பற்றி நீங்கள் ஊரெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் இந்தப் புத்தகத்தில் உள்ள ‘காந்தி தாத்தா எல்லி?’ கட்டுரையைப் படியுங்கள்; பிறகு பேசுவோம்; சிரிப்புக்கு நான் கியாரண்டி. ‘நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களா?’ எனும் கட்டுரையில் வருவது போன்ற நிகழ்ச்சி எங்கள் வாழ்க்கையிலும் நடந்தது. ஓய்வு பெற்ற தமிழாசிரியரான என் தந்தைப் பென்ஷன் வாங்க எங்கள் ஊராகிய சோழவந்தானிலிருந்து முப்பது கிலோமீட்டர் தள்ளி உள்ள நிலக்கோட்டை தாலுகா ஆபீஷ் டிரஷரிக்கு மாதந்தோறும் போய் வரவேண்டும். ஒரு மாதம் போகாமல்விட்டு அடுத்த மாதம் போனபோது அவர் உயிரோடு இருக்கிறாரா? என்று அவரிடமே அதிகாரிகள் குறுக்கு விசாரணை செய்ய, தான் உயிரோடு இருப்பதைத் தானே நிரூபிக்க முடியாத என் தந்தை, உள்ளூர் தாசில்தாரிடம் சான்றிதழ் வாங்கிக் கொண்டுபோன கதை, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாக இருந்தாலும், அதே நிலை இப்போதும் இந்நூலாசிரியரின் வாழ்விலும் தொடர்கிறதே என்பதை எண்ணி அகமகிழ்ந்து போனேன். இப்படி நான் சொல்லிக் கொண்டே போனால், எங்கள் மதுரையில் ஆங்கிலப்படம் மட்டுமே போடுகிற ஒரு தியேட்டரில் நாம் பார்க்கப்போன படம் ஐந்து ரீலாக இருக்க, இடைவேளையில் அறுபத்திநான்கு ரீலில் டிரெய்லர் படம் காட்ட நமக்கு மூலக்கதையே மறந்துபோவதைப் போலாகிவிடும். அதனால் எனது அணிந்துரையை இத்தோடு முடிக்கிறேன். பிறரை மகிழவைக்கும் பணியில் பொன்விழா, பவளவிழாக் கண்ட இந்நாயகரின் இம்மகிழ்ச்சியான எழுத்துப்பணி நூற்றாண்டுவிழாக் காண வாழ்த்துகிறேன். தொடரட்டும் இவர்களின் அரும்பணி, மறையட்டும் மக்களின் கவலைப்பிணி.
மதுரை
02.05.2011
அன்புடன்
(கு. ஞானசம்பந்தன்)