Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thunai Thedum Paravai
Thunai Thedum Paravai
Thunai Thedum Paravai
Ebook86 pages32 minutes

Thunai Thedum Paravai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114203135
Thunai Thedum Paravai

Read more from Hamsa Dhanagopal

Related to Thunai Thedum Paravai

Related ebooks

Reviews for Thunai Thedum Paravai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thunai Thedum Paravai - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    துணை தேடும் பறவை

    Thunai Thedum Paravai

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    மீனா என்கிற மீனலோச்சனியை பங்கஜத்திற்குப் பிடித்திருந்தது. சொந்த தம்பி மகளான மீனா பி.எஸ்ஸி படித்திருந்தாள். பங்கஜம் எதிர்பார்த்தபடி எந்த உத்தியோகத்திற்கும் போகவில்லை. உத்தியோகம் பார்க்கும் பெண், மாமியாரை மதிக்க மாட்டாள். எல்லா வேலைகளும் மாமியாரே செய்ய வேண்டும் என்பது பங்கஜத்தின் கணிப்பு.

    ஒருவேளை மீனா வேலைக்குப் போய் இருந்தால் அவள் தன் மகன் ரவிக்கு வேறு இடத்தில் பெண் பார்த்திருப்பாள். அதில் எந்தவித வேறுபாடும் இல்லை. ஆனால் அவள் தம்பி வடிவேலுவுக்கோ அக்காள் தன் மகள் என்பதால்தான் மருமகளாக்கிக் கொள்ளப் பார்க்கிறாள் என்கிற எண்ணம்.

    இது பங்கஜத்திற்கும் தெரியும் நினைத்துவிட்டுப் போகட்டுமே, காசா பணமா என அவள் தன் தம்பியின் நினைப்பைக் கலைக்கவில்லை. மீனாவை தன் மகனுக்கு அவள் தேர்ந்தெடுத்தற்கு முக்கிய காரணம் அவள் தாய் மரகதம்.

    மரகதம் வாய் இல்லாத பூச்சி என்றே சொல்ல வேண்டும். திருமணம் ஆகி வந்ததிலிருந்து மரகதம் அதிர்ந்து பேசிக் கேட்டதேயில்லை பங்கஜம். எதிலும் தன் தம்பியின் கையே ஓங்கி இருப்பதும் அவள் அறிந்தது தான்.

    மரகதம் தான் உண்டு, அடுப்படி உண்டு என இருப்பாள். பங்கஜம் போகும் போது உபசரிப்பு பலப்படும். சுகம் என்ன என்பதே தெரியாதவள் போல நடத்து கொள்வாள் மரகதம்.

    'நூலைப்போல சேலை தாயைப் போல பிள்ளை' என்பதில் அசையாத நம்பிக்கை பங்கஜத்திற்கு. மகனுக்கு மனைவி வரப்போகிறாள் என்பதைவிட தனக்கு நல்லதொரு வேலைக்காரி கிடைக்க வேண்டும் என்பதில் அவளுக்கு உள்ளுக்குள் ஆசை அதிகம்.

    அவள் மகன் ரவி பாங்கில் வேலை பார்த்தான். கை நிறைய சம்பளம். சமீபத்தில் பாங்கு முழுவதும் கம்ப்யூட்டர் மயமானபோது அதற்காக டிரெயினிங் மூன்று மாதம் போய் வந்தான். சொந்த வீடுகள் இருந்தன. அவள் கணவன் வசதியுடன் வாழவைத்துவிட்டுத்தான் போய்ச் சேர்ந்திருந்தார்.

    மகனைப் படிக்க வைப்பதிலோ வேலைக்கோ அவள் அதிகம் மெனஜ்கெடவில்லை. வீட்டின் பின்புறத்தில் சின்னச் சின்ன போர்ஷன்களாய் ஆறு கட்டி விட்டிருந்தார் அவள் கணவர். வாடகையே ஆறாயிரத்திற்குப் பக்கமாய் வந்தது. போதாத குறைக்கு அவர்கள் குடியிருந்த வீடு விசாலமாய் இரண்டு படுக்கையறையைக் கொண்டது. மொட்டை மாடி; அதில் சின்னதாய் ஒரு அறை. அதைக்கூட வாடகைக்கு விடலாம். வசதி வேண்டும் என வைத்திருந்தாள் பங்கஜம்.

    ''பங்கஜம் பெண் கேட்டு போனபோது விவரம் அறியாமல் சாதாரணமாய்தான் வரவேற்றார் வடிவேலு. தனியார் நிறுவனம் ஒன்றில் மானேஜராய் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். ஓய்வூதியமாய் வந்த பணம் மூன்று லட்சத்தையும் நிதி நிறுவனம் ஒன்றில் போட்டு வைத்திருந்தார். அதில் வரும் மாத வட்டியில் வீட்டு நிர்வாகம் ஓடிற்று. அது இல்லாமல் தனியார் நிறுவனம் ஒன்றில் அவ்வப்போது கணக்குகளைச் சரி பார்த்து வந்தார். அதில் கொஞ்சம் வருமானம் வந்தது."

    பங்கஜம் நல்ல நாள் பார்த்து வந்து பெண் கேட்பாள் என்று அவர் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

    வடிவேலு, எனக்குத்தான் சுத்தி வளைச்சு பேசத் தெரியாதுன்னு உனக்குத் தெரியுமே. மீனாவை என் மகன் ரவிக்குப் பெண் கேட்டு வந்திருக்கேன் வடிவேலு. உன் எண்ணத்தைச் சொல்லணும். அப்படியே உன் பொண்டாட்டி எண்ணத்தையும் நான் தெரிஞ்சுக்கணும்.

    பங்கஜத்துக்குக் காபி கலந்து வந்து வைத்த மரகதம் பூரிப்புடன் சிரித்து சுவரோரம் போய் நின்று கணவனின் முகத்தையும் பங்கஜத்தையும் மாறி மாறிப் பார்த்தாள்.

    "என்னக்கா இப்படி கேட்டுட்டே. நானே கேட்கலாம்னு. நீ வசதியோட இருக்கிறே. எங்க வசதியப் பத்தி உனக்குத் தெரியும். ஏதோ பொண்ணு கல்யாணத்துக்குன்னு நாலு காசு சேர்த்து வச்சிருக்கேன். அதைத் தவிர என்கிட்ட ஏது பணம். நீ இப்படி கேட்டதும் என் காதாலேயே

    Enjoying the preview?
    Page 1 of 1