Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaandhamunai
Kaandhamunai
Kaandhamunai
Ebook69 pages26 minutes

Kaandhamunai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803139
Kaandhamunai

Read more from Maharishi

Related to Kaandhamunai

Related ebooks

Reviews for Kaandhamunai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaandhamunai - Maharishi

    http://www.pustaka.co.in

    காந்தமுனை

    Kaandhamunai

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    நீ சுந்தரத்தை விவாகம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டாயாமே உண்மைதானா?

    மணி பத்மாவின் பின்புறம் நின்றவண்ணம் கேட்டான் அப்பொழுது பத்மாவின் கையில் 'சகோதரி நிவேத்தை'- யின் வாழ்க்கை வரலாறு ஆங்கிலப் புஸ்தகம் இருந்தது.

    புஸ்தகத்தை மூடி கட்டில்மேல் வைத்தவள் ஆமாம்- என்று சொல்லிக்கொண்டே எழுந்து நின்றாள்.

    அம்மாவிடமும், அப்பாவிடமுமே காரணத்தைச் சொல்லவில்லையாம் என்னிடம் எங்கே சொல்லப் போகிறாய்!

    கவலையோடு வேதனையோடு ஜன்னல் அருகில் வந்து நின்ற பத்மா பச்சைநிற கர்டனை இழுத்து விட்டுவிட்டு அங்கிருந்து வெளியே பார்த்தாள். வயல், அதற்கப்பால் ஏரி, அதைக்கடந்து ஓமலூர் நீண்ட ரஸ்தா எல்லாம் தெரிந்தது. குறுக்கும் நெடுக்குமாக கார்களின் ஓட்டம். ஒன்றையொன்று முந்த வேகமுடன் முயலும் இயந்திர ஊர்திகள்.

    நான் சொன்ன காரணம் அப்பாவையும் அம்மாவையுமே சமாதானப் படுத்தவில்லையே உன்னைமட்டும் சமாதானப் படுத்திவிடுமா?

    காரணம் நியாயமாக இருந்திருக்காது. அவர்கள் திருப்தி அடைந்திருக்கமாட்டார்கள். அதையே என்னிடமும் சொன்னால் நிச்சயமாக சமாதானப் படமாட்டேன்.

    ஜன்னல் அருகில் நின்ற பத்மா மணியைத் திரும்பிப் பார்த்துவிட்டு வேதனையோடு நகைத்தாள்.

    உண்மைக் காரணம் அவ்வளவு சுவைக்காது மணி. அதனால்தான் பொதுப்படையாக நான் அவர்களிடம் எனக்கு இப்பொழுது விவாகம் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.

    பத்மாவையே பார்த்தபடி நின்றவன் அங்கிருந்த பிரம்பு ஸ்டூல் ஒன்றில் அமர்ந்தான்.

    உண்மைக்குக் காரணம் எல்லோருக்கும் தெரியும். அது அவ்வளவு திருப்தியளிக்கக் கூடியதாக இல்லை பத்மா. எனக்கும் காரணம் தெரியும். என்னுடைய அறிவுரையும் இதுதான். வெறும் சோகங்களினால் மட்டும் மனதை நிரப்பிக் கொண்டு அவதியுறுவது அறிவுடைய செய்கை இல்லை. இந்த நிலையை நீ மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்காகத் தான் எல்லோரும் சொல்லுகிறார்கள். நானும் சொல்லுகிறேன். மற்றவர்கள் சொல்லுவதற்குக் கொடுக்கிற மதிப்பைவிட என்னுடைய வார்த்தைகளுக்கு கொஞ்சம் அதிகமான மதிப்புக் கொடுக்க வேண்டுமென்று நான் எதிர் பார்க்கிறேன்.

    ஜன்னல் கட்டையில் திரும்பி உட்கார்ந்த பத்மா நிலம் பார்த்துப் பேசினாள்.

    எல்லாருடைய வார்த்தைகளையும், எப்பொழுதும் ஒரே சீராக மதிக்கிறவள் நான். அதில் உன்னுடைய வார்த்தைகளை கொஞ்சம் அதிக அக்கறையோடு மதிக்கிறேன். ஆனால் என் கல்யாண விஷயத்தில் யாருடைய வார்த்தைகளும் என்னைத் திருப்ப முடியாது மணி.

    சரியான காரணம் சொல்லாத வரையிலே நான் இந்த இடத்தைவிட்டுப் போகமாட்டேன்

    கண்கள் கலங்க நகைத்த பத்மா "இதோ பார் மணி இந்தக் கையைத்தான் அவர் அன்று பிடித்தார். அந்த இன்ப உணர்வின் நினைவுகூட இன்னும் மறையவில்லை! அதோ நீ உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறாயே அதே ஸ்டூலில் நேரம் போனது தெரியாமல் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த காட்சி இன்னும் என் கண்ணைவிட்டு அகல வில்லையே! அவர் எனக்கு எழுதிய காதல் கடிதங்களின் மை கூட உலரவில்லையே மணி! இந்த ஜன்னல் அருகில் வந்து நின்றால் கீழே கேட்டில் அவர் வருகின்ற சைக்கிள் மணியோசையின் ஒலி இன்றும் மெதுவாகக் கேட்கிறதாக நினைக்கிறேனே, இந்த நினைவின் தடத்திலிருந்து மீண்டு வந்தால் தானே மனம் வேறு விஷயத்திற்கு வரும். பழைய நினைவின் எதிரொலிகள் இன்னும் எத்தனையோ மூலைகளிலிருந்தெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கின்றனவே! புற உலகின் ஒலி கேட்காவண்ணம் காதைப் பொத்திக்கொண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1