Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Kiligal
Kaadhal Kiligal
Kaadhal Kiligal
Ebook112 pages55 minutes

Kaadhal Kiligal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703147
Kaadhal Kiligal

Read more from Vidya Subramaniam

Related to Kaadhal Kiligal

Related ebooks

Reviews for Kaadhal Kiligal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Kiligal - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    காதல் கிளிகள்

    Kaadhal Kiligal

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    எம். டி.வியில் ரிக்கி மார்ட்டின் மரியா பாடலை அட்டகாசமாகப் பாடிக் கொண்டிருக்க, அசோக் தானும் உடல் நெளிந்து ஆடியபடியே டிரஸ் பண்ணிக் கொண்டிருந்தான். டிசம்பர் மாதத்தின் கடைசி இரவுக்கு மிகுந்த கோலாகலமாய் விடை கொடுத்துவிட்டு புத்தாண்டை வர வேற்கும் உற்சாக மூடில் நண்பர்களோடு நட்சத்திர ஓட்டலுக்குச் செல்வதற்காகக் கிளம்பிக் கொண்டிருந்தான்.

    சரியாக ஏழு மணிக்கு ஹோட்டலில் இருக்க வேண்டும் போகும் வழியில் நண்பர்கள் மூன்று பேரையும் அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தான். விலை உயர்ந்த ஜீன்ஸும், டி-ஷர்ட்டும் அணிந்து ஷாம்பு குளியலில் பறந்த முடியைச் சரியான முறையில் பறக்கவிட்டு, மேல் நாட்டு சென்ட்டை ஸ்ப்ரே செய்து கொண்டான்.

    தன் தோற்றத்தில் திருப்தி அடைந்ததும் பீரோ திறந்து தன் கிரெடிட் கார்டை எடுத்துப் பர்ஸில் வைத்துப் பாண்ட் பாக்கெட்டில் பர்ஸை வைத்துக்கொண்டு கூலிங் கிளாஸை அணிந்து கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். வீட்டை பூட்டிவிட்டு காரில் ஏறி அமர்ந்தான்.

    அசோக் ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ஃட்வேர் என்ஜினியராக இருப்பவன். சென்னையில் தனியாக வீடு எடுத்து வேலை நிமித்தம் தனித்திருக்கிறான். அப்பா பணக்காரர். கோவையில் அவருக்கு வியாபாரம். அம்மா, தங்கை எல்லோருமே கோவையில் இருக்க, அசோக்கிற்காகவே சென்னையில் ஒரு வீடும், காரும் வாங்கிக் கொடுத்திருந்தார் அப்பா. அவனுக்குச் சமைத்துப் போட தூரத்து உறவு என்ற முறையில் ஐம்பது வயது மனிதர் ஒருவரையும் ஏற்பாடு செய்திருந்தார்.

    காரை, சரத் வீட்டு வாசலில் நிறுத்தி ஹாரனை இரண்டு முறை அழுத்தினான். ஜன்னல் வழியே கை நீட்டி ஹாய் என்று கத்தின சரத், பால்ய பருவத்திலிருந்து இவன் தோழன். பிளஸ் டூ வரை ஊட்டி கான்வென்ட்டில் ஒன்றாகப் படித்தவன். பிரபலமான மருந்து கம்பெனியில் சேல்ஸ் ரெப்பாக இருப்பவன். குடும்பத்தின் கடைசி செல்லப் பிள்ளை.

    சரத் விசிலடித்தபடி வந்து வண்டியில் ஏறினான். ரை ரைட்... என்றான்.

    "உதைச்சேன்னா.! அசோக் சிரித்தபடி வண்டியைக் கிளப்பினான். மற்ற இரு நண்பர்களையும் வழியில் ஏற்றிக் கொண்டு நகரின் மையத்திலிருந்த அந்த நட்சத்திர ஹோட்டலுக்குப் போனான். புத்தாண்டை வரவேற்கும் முனைப் பில் ஹோட்டல் வண்ண விளக்குகளோடு மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருந்தது. கல்லூரி மாணவிகளும் மேல் மட்டத்து இளைஞர்கள், பெண்கள், குடும்பமாய் வந்திருந்தவர்கள் என்று கூட்டம் வர்ண மயமாய், குதூகலமாய் இருந்தது. ஆட்டமும், பாட்டமும் அமர்க்களப்பட்டது. இளமையின் உற்சாகத் துள்ளலும், ஷாம்பெயின் பாட்டில்கள் திறக்கப்படும் ஓசையுமாகப் புத்தாண்டு வரவேற்பு உச்சக்கட்ட உற்சாகத்தை அடைந்து கொண்டிருந்தது. அசோக்கும் அவன் நண்பர்களும் கிடாரும், டிரம்ஸுக்கும் ஏற்றபடி தாள லயத்தோடு ஆட, கூட்டம் கை தட்டி. ஆரவாரம் செய்தது. சரியாய்ப் பன்னிரண்டு மணிக்கு ஒரு பெரும் உற்சாகக் கூப்பாடும் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் சப்தமும் விண்ணைப் பிளந்தது. ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்து சொல்லிக் கொண்டார்கள். இரண்டு மணியாயிற்று. அசோக்கும் அவன் நண்பர்களும் புறப்பட.

    ஆட்டம் பாட்டத்தில் உடம்பு அசதியாகி இருந்தது. இனி வீட்டுக்குப் போய்ப் படுத்தால் அடித்துப் போட்டாற் போல் தூக்கம் வரும்.

    ஏண்டா, அசோக் ஈவினிங் படத்துக்குப் போறோம் இல்ல?

    பின்னே..?

    உனக்கென்ன. நீ தனிக்கட்டை. பகல் முழுக்கத் தூங்கிட்டுப் ஃபிரஷ் ஆய்டுவ. எங்க வீட்டுல சொல்லு. வீடு முழுக்க கெஸ்ட் தூங்கவிடுவாங்கன்ற? பிரசன்னா அலுத்துக் கொண்டான்.

    சும்மா கதை! டேய் அசோக் நீ நம்பறயா? இவன் டபாய்க்கறான். சினிமாவைத் தட்டிக் கழிக்கப் பார்க்கறான். ஏதோ விஷயம் இருக்கு.

    அதெல்லாம் ஒண்ணுமில்லை.

    அ...அ.... நீ இல்லைன்னா விட்ருவோமா? வீடு முழுக்க கெஸ்ட்டுன்ற! அதுல ஏதாவது கலர்ஃபுல் பிகரும் இருக்கணுமே.

    டேய்...

    அதே... அதே...! பாத்தயா... நா சொல்லல! பிரசன்னா கிராப்பாவது சும்மா ஆடறதாவது!

    இதென்னடா பழமொழி?

    இல்ல புது மொழி.

    நண்பர்கள் மாறி மாறிக் கிண்டலடிக்க பிரசன்னாவின் முகம் லேசாய் வெட்கப்பட்டது.

    இப்ப என்னடா சொல்ற... எப்டி கண்டு பிடிச்சேன் பார்த்தாயா? சரத் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டான்.

    ம்... பெரிய கண்டுபிடிப்புத்தான். நோபல் பிரை ஸுக்குச் சிபாரிசு பண்ணிடச் சொல்றேன்.

    நீ ஜமாய்டா கண்ணா... அவனுக்குப் பொறாமை! தனக்கு எந்தப் பிகரும் சிக்கலையேன்னு.

    என் பர்ஸனாலிட்டி பத்தி உங்களுக்குத் தெரியாதுடா. போன வாரம்கூட கஜோல் கிட்டேர்ந்து போன் வந்தது. கட்டினா உன்னைத்தான் கட்டுவேண்டா தீபக்னு அழுவுது.

    கஜோல் யாரு உன் வீட்டைப் பெருக்கித் துடைக்கறாளே அவளா....?

    அறைஞ்சேன்னா..! கஜோல்டா. இந்த தனுஜா இல்ல தனுஜா அவ பொண்ணு...

    யாரு உங்க தாத்தா காலத்துல வீடு பெருக்கிட்டிருந்த அவம்மாவா?....

    ஆமா... இப்ப என்னன்ற? வேலைக்காரி பொண்ணாவது என்னை டாவடிக்கறா. உனக்கு அதுகூட இல்லையே...'

    டேய் டேய் போதும்டா... அறுக்காதீங்க, டேய் தீபக் அடுத்தாப்பல யாரைடா பேட்டி எடுக்கப் போற?

    தபு கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்கேன். எதுக்கு கேக்கற?

    நாங்களும் கூட வரலாமான்னுதான். ஒரு முறையேனும் நீ பேட்டி எடுக்கற அழகைப் பார்க்கலாம்னு தான்.

    ஆளை விடுங்கப்பா, என் வேலைக்கே வேட்டு வெச்சுருவீங்களே என்று கை கூப்பிய தீபக் ஒரு பிரபல ஆங்கில பத்திரிகையின் சினிமா ரிப்போர்ட்டராக இருப்பவன். நிஜமாகவே நல்ல பர்ஸனாலிட்டி உள்ளவன் தான். பிரசன்னா எம். எஸ்.சி பயோ கெமிஸ்டரி படித்து விட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் லேப் அசிஸ்டெண்டாக பணி புரிகிறான். நான்கு பேரும் ஜாலியானவர்கள். நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்கள். ஒரே அலைவரிசையில் சிந்திப்பவர்கள். கிண்டலடித்துக் கொண்டாலும்

    Enjoying the preview?
    Page 1 of 1