Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unmaiyai Sonnavan
Unmaiyai Sonnavan
Unmaiyai Sonnavan
Ebook172 pages1 hour

Unmaiyai Sonnavan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803143
Unmaiyai Sonnavan

Read more from Maharishi

Related to Unmaiyai Sonnavan

Related ebooks

Reviews for Unmaiyai Sonnavan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unmaiyai Sonnavan - Maharishi

    http://www.pustaka.co.in

    உண்மையைச் சொன்னவன்

    Unmaiyai Sonnavan

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    அவன் அந்த ரயில்வே நிலையத்திற்கு வெளியே உட்கார்ந்திருந்தான்.

    எதிரே ரயில்வே லனையொட்டியுள்ள பட்டை பட்டையான கிராதிகள். அதற்குள் குறுக்காக ரயில்வே லைன். கூட்ஸ் ஷண்டிங் நடந்து கொண்டிருந்தது. காலி வாகன் ஒன்றை பின்னுக்குத் தள்ளி விட்டு விட்டு இன்ஜின் ஓரிடத்தில் நின்ற போது, வாகன் மட்டும் நெடுந்தூரம் ஓடி, மற்றொரு வேகன் மேல் மோதிக் கொண்ட போது பெரும் சப்தம் கேட்டது.

    தான் உட்கார்ந்திருந்த மிகப் பெரிய கரிய மணற் பரப்பில் முழங்கால் குத்திட்டு அதில் கைகளை சங்கிலி போல பிணைத்துக் கொண்டிருந்தான்.

    எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வடக்குப் பக்கத்திலிருந்து வேகமாக ஸ்டேஷனுக்குள் நுழைந்து கொண்டிருந்தது.

    கிராதிகள் அகற்றப்பட்டு இடைவெளி உண்டாக்கப் பட்ட இடத்தின் வழியாக ரயில்வே ஸ்டேஷனை விட்டு சிலர் வெளியே வந்து கொண்டு இருந்தார்கள்.

    மாலை மங்கி விட்டது.

    அவனது உள்ளம் போல, தன்னை சுற்றியொரு கருமை அடர்ந்திருப்பதை அவன் பார்த்தான்.

    எரிந்து போன இன்ஜின் கரிகளையும், கரிச் சாம்பல்களையும் குவிக்கும் இடம் அது. எங்கிலும் கரியும் சாம்பலும் குவியல் குவியலாக காட்சியளித்தன.

    அந்தி மங்கிக் கொண்டு வருகிற அந்த நேரத்திலும் கூட அங்கு குவிக்கப்பட்டிருந்த சாம்பல் குப்பையில் ஸ்லம் சிறுவர்கள் கும்பலாக உட்கார்ந்து சிறு கரிகளை பொறுக்கி சேர்த்துக் கொண்டு இருந்தனர்.

    இப்படிச் சேர்க்கும் இந்தக் கரிகளை இவர்கள் நடமாடும் லாண்டிரிகாரர்களுக்கு கொடுப்பார்கள்.

    சில சிறிய டீக்கடைகளுக்கும் கொடுப்பார்கள். காசு சம்பாதிக்கிறார்கள்.

    வாழ்க்கையில் தான் இவர்களுக்கு எவ்வளவு நம்பிக்கை!

    கங்காதரனின் மனம் வெறுமையில் வேதனைப்பட்டது.

    நன்றாக இருட்டி விட்டது. தூள் கரிகளை பொறுக்கிக் கொண்டிருந்த சிறுவர் கூட்டம் போய் விட்டது.

    அதில்,

    தனியே விடப்பட்ட சிறுவன் ஒருவன் முன்ணே போய் விட்ட யாரையோ கந்தவேலு......... கந்தவேலு........ என்று அழைப்பது காதில் விழுந்தது.

    கந்தவேலு..........

    கந்தவேலு..........

    அந்தப் பெயர் அந்தக் கரிச்சாம்பல் மேடு வியாபித்த இடம் பூராவும் எதிரொலிப்பது போல இருந்தது. அந்தச் சிறுவன் அவனுக்கு சொந்தமான ஏதோ ஒரு கந்த வேலைக் கூவி அழைக்கிறான்.... அவன், கூப்பிடு தூரத்தில் தான் போகிறான். இவன் இன்னும் சற்று சப்தம் போட்டு கூப்பிட்டாலும், அல்லது வேகமாக ஒடினாலும் அவனுடைய கந்தவேலுவை பிடித்து விடலாம்.

    ஆனால் என் கந்தவேலுவை இனி யாராலும் பிடிக்க முடியாது.

    கந்தவேலுவை மட்டுமா!

    ரோஜா மணியைக் கூடத்தான்......

    அவன் உதடுகள் துடித்தன. கண்களில் கண்ணீர் வழிந்து கன்னத்தின் வழியே ஓடியது.

    பாவிப் பெண்ணே! என் வாழ்வை இப்படி பாலைவனமாக மாற்றி விட்டு போயிட்டியேடி.

    அப்படி என்னடி பெரிய சோதனை வந்து விட்டது. நமக்கு........

    ஏழு வயதுப் பையனையும், உன்னுடன் அழைத்துக் கொண்டு ஒரேடியடியாப் போயிட்டியே!

    உனக்கு அந்த எண்ணம் வந்திருந்தா, நீ மட்டும் போயிருக்கலாமே மகனையும் கூடவே கூட்டிகிட்டு போய்ச் சேர்ந்திட்டியே!

    அப்படி என்ன ஊர் உலகத்திலே இல்லாத அவமானம் நேர்ந்து விட்டது.

    என் மேல் உனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை.

    நான் உன்னை வாழ வைப்பேன், உன் மகனை வாழ வைப்பேன் என்கிற நம்பிக்கை உனக்கு இல்லை.

    என்னையொரு மனிதனாகவே நீ நினைக்கவில்லை.

    இத்தனையாண்டுகள் என்னுடன் வாழ்ந்திருக்கிறயே!

    நான் முன் கோபி தான். கோபக்காரன் தான். சில சமயம் நான் பைத்தியம் போல ஆகி விடுவது உண்மைதான்.

    இவையெல்லாம் ஒரு சராசரி மனிதனிடம் காணப்படுகிற இயல்பான குணங்கள். என்றே நீ எடுத்துக் கொண்டிருக்கலாம்.

    அதற்காக இவ்வளவு பெரிய தண்டனையா!

    அதுவும் இவ்வளவு பெரிய இரட்டை தண்டனையா!

    ரயில்வே நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயில் ஒன்று தெற்கு நோக்கிப் புறப்பட்டு போய்க் கொண்டிருந்தது.

    ரோஜாமணி.......

    ரோஜாமணி, நான் ஏன் தினம் தினம் இங்கே வந்து உட்காருகிறேன் தெரியுமா!

    அதோ, அந்த சாலைகள் கூடும் இடத்தில் ரயில்வே லைனுக்குக் கீழே ஒரு சுரங்கப் பாதைக்கு அருகில் ஒரு விளக்குக் கம்பம் இருக்கிறதே அதையே ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறேன் தெரியுமா!

    ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இங்கே இந்த கரிச் சாம்பல் மேட்டில் உட்கார்ந்து விட்டுப் போகவில்லை என்றால் இரவு எனக்கு தூக்கமே வருவதில்லை ஏன் தெரியுமா!

    ஆவியாக நீங்க இரண்டு பேரும் இங்கேயே தான் சுத்திகிட்டு இருப்பீங்க. உங்க பிரிவு தாங்காம நான் வந்து தினம் உட்காருவதை நீங்க பார்க்கணும் என்பதற்காகத் தான்....

    ரோஜாமணி... ரோஜாமணி... புறப்பட எழுந்த கங்காதரன் அப்படியே நிலை குலைந்து சாம்பல் மேட்டில் சாய்ந்தான்.........

    அவன் மனமெங்கிலும் அசாத்தியமான குழப்பம் குடி புகுந்து கொண்டது. மீண்டும் மீண்டும் ஒரே நினைவு. மீண்டும் ஒரே காட்சி.

    வேகமாக ரயில் ஒன்று நிலையத்தினுள் நுழைகிறது...

    அரை நிக்கரும் சட்டையும் அணிந்த ஆறு வயது சிறுவனொருவனை இழுத்துக்கொண்டு ஒரு பெண் வேகமாக வரும் ரயில் முன் பாய்கிறாள்.......

    ஐயோ, கந்தவேலு.....

    தனிமையில் அலறுகிறான்.

    சாம்பல் மேட்டில் உருளுகிறான், உடம்பெல்லாம் சாம்பல் கரி.

    இப்படி செய்து விட்டு வந்து நிற்கிறீர்களே! இது உங்களுக்கே நல்லா இருக்கா. உங்க படிப்பு என்ன. உத்தியோகம் என்ன. உங்க கவுரவம் என்ன!

    தலைவிரி கோலமாய், உடுப்புகள் தாறுமாறாக பிய்ந்திருக்க, உள்ளே நுழைந்த கணவன் கங்காதரனைப் பார்த்துப் பதட்டமடைந்த ரோஜாமணி பீதியுடன் கேட்டாள்.

    அவன் பதில் ஒன்றும் சொல்லாமல் சுவர் பக்கம் திரும்பி தன் உடுப்புகளை களைந்து கொண்டிருந்தான்.

    அந்த அயோக்கிய ராஸ்கல், நேத்திக்கு ரெக்ரூட் ஆனபய, என்னப் பார்த்து ஒனக்கு அறிவு இருக்கான்னு கேட்டுட்டான். குறைந்த பட்சம் என் சர்வீஸிக்காவது மரியாதை கொடுத்திருக்கலாம் இல்லையா, எனக்கு மேலே அவன் பெரிய உத்தியோகஸ்தன் தான். இல்லேங்கலே அதுக்காக அப்படி அவன் கேட்கலாமா! என்றான் ஆத்திரம் அடங்காமல்.

    கேட்டா என்ன உங்க உயரத்திலே ஓர் அடி குறைவாவா போயிட்டீங்க. பெரிய ஆபீஸருங்க ஆத்திரத்திலே எதானும் பேசத்தான் பேசுவாங்க. அதையெல்லாம் அப்பப்ப மறந்துட வேண்டியது தானே! போன மாசம் நீங்க கூடத்தான் உங்களுக்குக் கீழே வேலை செய்யற கான்ஸ்டேபிளை, எதோ அநாகரீகமா திட்டிட்டு அப்புறம் மன்னிப்பு கேட்டுகிட்டீங்க...

    ரோஜாமணி கண்களில் கண்ணீர் வழிய சுவர் ஓரமாக நின்று கொண்டிருந்தாள். இப்படியே நீங்க ஒவ்வொரு மேலதிகாரியிடமும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள், உங்கள் திறமை, உங்கள் சர்வீஸ், உங்கள் குடும்பம் எல்லாத்தையும் மனசிலே வச்சுகிட்டு ஒவ்வொரு தரமும் அதை பெரிது பண்ணாமல் விட்டு விடுகிறார்கள். எல்லோரும் அப்படியே விட்டு விடுவார்களா.

    இந்த சர்கிள் வந்த பின்னாலே இது நாலாவது தடவை!

    இருக்கட்டுமே!

    என்ன இருக்கட்டுமே!

    ஒன்று, இரண்டு, மூன்று கிட்டத்தட்ட நீங்கள் விசாரித்து வாக்குப் பதிவு செய்து கோர்ட்டுக்குப் போன மூன்று வழக்குகளிலும் உங்கள் இலாகா தோல்வி அடைந்திருக்கிறது. நீதிபதி உங்களை. உங்களையென்றால் உங்களை அல்ல. உங்கள் இலாகாவை தன் தீர்ப்பிலேயே வண்மையாகக் குறை கூறியிருக்கிறார் இதையும் நீங்கள் தானே சொன்னீர்கள்...

    சாட்சிகள் சரியில்லை. முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகின்றன. சந்தர்ப்பங்கள் நிரூபிக்கப்படவில்லை. ஸ்டேட்மெண்ட் ஒன்றாகவும், சாட்சிக் கூண்டில் வேறு மாதிரியாகவும் சாட்சிகள் பேசியிருகிரர்கள். போலீஸார் இந்த வழக்கில் போதிய கவனம் செலுத்த வில்லை. இப்படி தீர்ப்பு வந்தா ஆபீஸர்கள் அவர்களுக்குக் கீழே பணி புரிகிறவர்களை கடிந்து கொள்ளாமல் கொஞ்சுவார்களா!

    நகைக் கடையில் சுமார் இரண்டரை லட்ச ரூபாய்க்கு திருட்டுப் போய் எப்படியோ கஷ்டப்பட்டு ஆளைப் பிடித்தீர்கள். வழக்குப் போட்டு நீதி மன்றத்திற்கு போய் வழக்கு நடந்து முடிந்த போது, நிஜ குற்றவாளி, குற்றவாளி என்று நிரூபணமாகாமல் தண்டனையிலிருந்து தப்பி விட்டான்.

    அதையும் நீங்கதான் விசாரணை செய்து உங்க மேலதிகாரிக்கு உதவியா எல்லாம் செய்தீங்க.

    நீங்க அடிப்படையிலே செய்த தவறு வழக்கை பலவீனப் படுத்தி விட்டது.

    அதற்குப் பின்னால் இரண்டு மர்டர் கேஸ்.

    அதையும் உடனிருந்து நீங்கதான் விசாரணை செய்தீங்க.

    அது என்ன ஆச்சு... வேலையிலே அசிரத்தையாகவும், ஒரு ஊழியர் செய்கிற தவறு அந்த இலாகா பூராவையும் பாதிக்கற அளவுக்கு இருந்தா பெரிய அதிகாரிகள் கோபிக்காமல் என்ன செய்வார்கள்!

    அவளுடைய நியாய வாதங்கள் எதையுமே அவன் ஏற்கவில்லை. அவன், தான் செய்தது நியாயம் என்றான். மேலதிகாரியை வசை பாடினான்.

    அவன் வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டான்.

    இதற்குப்பின் இலாகா ரீதியான விசாரணைகள் தொடர்ந்தன.

    அவன் நன்னடத்தைக்கு உத்திர வாதம் கோரியதை அவன் உதாசீனப்படுத்திவிட்டு மேலதிகாரிகளின்

    Enjoying the preview?
    Page 1 of 1