Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tharaiyil Piditha Meen
Tharaiyil Piditha Meen
Tharaiyil Piditha Meen
Ebook99 pages38 minutes

Tharaiyil Piditha Meen

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803142
Tharaiyil Piditha Meen

Read more from Maharishi

Related to Tharaiyil Piditha Meen

Related ebooks

Reviews for Tharaiyil Piditha Meen

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tharaiyil Piditha Meen - Maharishi

    http://www.pustaka.co.in

    தரையில் பிடித்த மீன்

    Tharaiyil Piditha Meen

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    வெளிப்புறமாக நின்றுகொண்டே அவன் தன் கையில் பிரித்து வைத்திருந்த விலாசக் கடிதத்தை உட்புறம் நின்ற பெண்ணிடம் கொடுத்து விட்டு நின்றான்.

    நான்கு வரிகளே கொண்ட அந்த விலாசத்தை இவள் என்ன இவ்வளவுநேரம் படிக்கிறாள்? ஒருவேளை விலாசம் ஆங்கிலத்தில் இருப்பதால், ஆங்கிலம் தெரியாது என்பதை வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ள வெட்கப்பட்டுக் கொண்டு தயங்குகிறாளோ என்று எண்ணமிட்டபடி வெளியே நின்ற சதாசிவம் மீண்டும் அவளைப் பார்த்தான். இயல்பான அவனது சபலகுணமும், அக்கம்பக்கத்தில் யாருமில்லாத தனிமைச் சூழ்நிலையும், உட்புறம் ரொம்பவும் பின் தள்ளித் தெரியும் வீட்டையும், எதிர் சாரியில் வீடுகள் இல்லாததால் தன் செய்கை வேறு யாராலும் காணப்படப் போவதில்லை என்பதையும் ஒருமுறைக்குப் பலமுறை எண்ணிப் பார்த்துக்கொண்ட சதாசிவம், அப் பெண்ணை தைரியமாக, வேகமாகப் பார்த்தான். ஒரு பார்வையிலேயே கவர்ந்து இழுக்கும் ஓர் சோபை அவளிடத்தில் காணப்பட்ட அதே காரணம்தான் அத் தனிமை, அவனுக்கு அதிக பலத்தையும் தரக் காரணமாக அமைந்தது.

    அது மட்டும்தானா?

    கேட்டுக்கு உட்புறம் நிற்கும் அப்பெண் அப்பொழுதுதான் தூங்கி எழுந்துவந்த மாதிரி நின்றாள். தலை ரொம்பவும் கலைந்து தொங்கியது. நடுநெற்றியில் காணப்பட்ட குங்குமப்பொட்டுகூட, அங்கே அழிந்து வெறும் சிகப்புச் சுவடு மட்டுமே தெரிந்தது. தோள்பட்டையின் ஒருபுறம் ரவிக்கை நகர்ந்திருக்க, மார்பை மறைக்கும் துணி பூராவும் நெகிழ்ந்து மாலையாகத் தொங்கியது.

    அக் கவர்ச்சிகரமான அலங்கோலத்தைவிட்டு அவனது நயனங்கள் நகரத் தயங்கின. தான் இப்படி அவளைப் பார்ப்பதை அவள் பார்த்துவிடப் போகிறாளே என்பதற்கு ஒரு செயற்கைத்தரமான அசம்பாவிதமாக அதை மாற்ற, பார்வையை வேறெங்கோ திருப்புவதும் பின்பு அவளைக் கவனிப்பதுமாக நின்றவன் அவள் அக் கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போதே அதில் உள்ள விலாசத்தை அவனும் கூறினான்.

    அப்பொழுதுதான் அவன் கவனித்தான், கேட்டுக்கு உட்பக்கம் நிற்கும் பெண், தான் கொடுத்த விலாசத்தைத் தலைகீழாகப் பிடித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை.

    லேசான அதிர்ச்சியோடு சந்தேகமும் மனத்தில் உருவெடுக்கக் கையை உட்பக்கம் நீட்டி அவளிடமிருந்து அக்காகிதத்தை பிடுங்குவது போலவும் இல்லாமல், வாங்குவது போலவும் இல்லாமல் ரொம்ப நாசூக்காக திரும்பப் பெற முயன்றபோது, அவள் அவன் கையைப் பற்றிக்கொண்டு நாசமாப்போறவனே! போறபோது என்னோட நெக்லஸையும் எடுத்துண்டு போய்ட்டு ஏமாத்தவா பார்க்க்றே... கடங்காரா... தூ... அவன் சட்டை மேல் அவள் துப்பிய எச்சல் வந்து விழுந்து உறுஞ்சிக்கொண்டது.

    சதாசிவத்தின் சந்தேகம் தெளிந்து ஒரு அனுதாப உணர்வு உதயமானபோது அவன் அப்பெண்ணின் செய்கைக்காக பயமோ, படபடப்போ அடையவில்லை. அவன் எந்தப் பெண்களை எப்படி சமாளிக்கவேண்டுமென்பதில் கைதேர்ந்தவன். அந்தக் கலையில் அவனை அவனது பெங்களூர் நண்பன் ஜோஸப் நன்றாகப் பழக்கிவிட்டிருக்கிறான். நெருக்கடியான வாழ்க்கைக் கட்டுக்கோப்பு, கடைப்பிடிக்க வேண்டிய சில பலவந்த நிபந்தனைகள், இவைகளிலிருந்து அவனுக்கு விடுதலை வாங்கித் தருவது இம்மாதிரி பிஸ்னஸ் கேம்புகள் தான். மதுரை, கோவை, சேலம் என்று வெளியூர் கிளம்பி விட்டால் அந்தந்த இடங்களில் அவனுக்குப் பழக்கமான 'சில' நபர்களை அவனுக்குப் பழக்கமுண்டு. இந்த உத்தியோகத்தில் ஆரம்பத்தில் ஒழுக்கமுள்ளவனாகத்தான் நுழைந்தான் சதாசிவம்.

    அடிப்படை வைராக்கியமில்லாத நிலையில் அவனது ஒழுக்கங்கள் சில பழக்க வழக்கங்களினால் உடைந்து சிதைந்து விட்டன. இந்தச் சிதைவுக்கு மூலகாரணமாக இருந்தவன் அவனது பெங்களூர் நண்பன் ஜோஸப்.

    ஒரு சராசரி மனிதன் தன்னை மறக்கத் தூண்டுகிற இரண்டு சக்திகளுக்கு அங்கே 'மார்கெட்' ரொம்ப சுலபமாக இருந்தது. ஆரம்பகாலக் கட்டத்தில் இருந்த ஒரு அப்பட்டமான பிரும்மச்சாரிக்கே உண்டான பயம், தயக்கம் லேசான மனச்சாட்சியின் நடுக்கம் இவைகள் எல்லாம் காலப்போக்கில் அறுந்துவிட்டன. ஒரு நீண்ட பயணத் திட்டத்தோடு வெளியூர் வந்து தங்கும்போது இவையெல்லாம் ரொம்ப அத்தியாவசியமான தேவை என்பதுபோல உபதேசிக்கப்பட்டபோது நியாயமாவது, அநியாயமாவது மற்றதெல்லாம் எங்கே தெரிகிறது!

    ஒரு விஷயத்தில் இறங்குமுன் இருக்கிற தயக்கம் இறங்கியபின் எங்கேயிருக்கிறது. தயக்கமெல்லாம் நாம் அதில் நம்மைப் பூராவுமாக உட்படுத்திக் கொள்ளாமல் தவிக்கும். வரையில்தானே? நம்மைப் பூராவாக அதில் ஈடுபடுத்திக் கொண்டுவிட்டால், பயம், அர்த்தமற்றதாகவும் தயக்கம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள நாம் போட்டுக் கொள்கிற வேலியாகவும் தோன்றத் தொடங்கிவிடுகிறதே!

    அதன் எல்லை!

    விடுபட்ட நிலைதானே!

    எனவே...

    அந்த எல்லைக் கோட்டை சதாசிவம் தாண்டி எத்தனையோ மைல்கள் வந்துவிட்டான்.

    ஒரு பெண், கொஞ்சம் சித்த சுவாதீனமற்ற நிலை, அழகின் ஆழமான அழுத்தங்கள் பொலிவுடன் பதிவுபெற்ற தோற்றத்தைச் சற்றே திறந்துகாட்டிக் கொண்டு உறவுக்கும் தொடருக்கும் அர்த்தமற்றதான மயக்கத்தில் எதையோ உளறிக்கொண்டு கையைப் பிடித்துக்கொண்டு உள்ளேதான் நிற்கிறாள். அவனது கரம் அவளுடைய தளிர் விரலில் இறுக்கமாகப் பிடிபட்டுக் கொண்டிருக்கிறது. அவன் மனது வைத்தால் அவன் கரத்தை எந்தவிதப்போராட்டமுமின்றி விடுவித்துக் கொண்டுவிடமுடியும் ஆனால் அவன் அதை விரும்பவில்லை.

    ஜட உணர்வுகளோடு நிற்கும் அப் பெண்ணின் உயிர்ப்புள்ள செளந்திரயத்தை, வெட்டவெளியில் நின்று தான் மட்டும் ரஸிப்பதை அவ்வளவு சீக்கிரம் நிறுத்திக்கொள்ள அவன் தயாராக இல்லை.

    அவள்

    Enjoying the preview?
    Page 1 of 1