Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Muthukal Pathu
Muthukal Pathu
Muthukal Pathu
Ebook147 pages51 minutes

Muthukal Pathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803137
Muthukal Pathu

Read more from Maharishi

Related to Muthukal Pathu

Related ebooks

Reviews for Muthukal Pathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Muthukal Pathu - Maharishi

    http://www.pustaka.co.in

    முத்துகள் பத்து

    Muthukal Pathu

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1.தர்மத்தின் குரல்

    2.பிரசன்னா கண்ணன்

    3.வெளியே ஒரு கைதி

    4.அவர்களுக்காக

    5.விமர்சகன்

    6.ஈர்ப்பு

    7.வாங்க பேசுவோம்...

    8.தொண்டன்

    9.கங்கையில் தேடு...

    10.உடம்பு

    1.தர்மத்தின் குரல்

    தனக்கு ஏற்பட்டிருக்கிற பிரச்னையை எண்ணிப் பார்த்தபோது வேதாசலத்துக்கு மலைப்புத் தட்டியது. இந்த இக்கட்டிலிருந்து எப்படி மீண்டு வருவது?

    யாரிடம் போய்க் கேட்பது? யார் கொடுப்பார்கள்? சாதாரண தொகையாக இருந்தால்கூட யாரிடமேனும் கேட்டு வாங்கிச் சரிசெய்யலாம். ஐநூறு ரூபாய் வேண்டுமே.

    மலைப்பின் நிழலடியில் மூச்சுத் திணறினார் வேதாசலம்.

    என்ன யோசனை? ராசிபுரம் செட்டியார் சொன்னது தானே? கேள்வியைக் கேட்டுவிட்டு நின்ற மனைவி அம்முவைப் பார்த்தான். பார்வை முகத்தை விட்டுக் கழுத்துக்கு இறங்கியது. வெறுமையோடிய அந்த இடத்தில் தாலிச் சரட்டை தவிர வேறொன்றுமில்லை. அலுப்போடும் வேதனையோடும் பதிலொன்றும் கூறாமல் கட்டிலைவிட்டு எழுந்தார். கதவின் மேல் போட்டிருந்த துண்டை எடுத்து மேலே போட்டுக் கொண்டு வெளியே புறப்பட்டார்.

    தேவையின் அவசியத்தையும், அவசரத்தையும் உணர்ந்து இவ்வளவு சீக்கிரத்தில் நமக்கு யார் உதவப்போகிறார்கள்?

    அவரைப் பொறுத்தவரையில் அவர் இந்த மாதிரி இக்கட்டில் மாட்டிக் கொண்டதில்லை. மனைவியின் கழுத்தில் சரம் சரமாகத் தங்க நகைகள் கிடந்த போது அவருடைய அவசரங்கள் எல்லாம் எந்தவிதத் தடங்கலு மில்லாமல் நிறைவேற்றப்பட்டன.

    எல்லாம் குடும்பத்துக்குத் தானே. பாவம் அவர் தமக்கென என்ன செய்து கொண்டார்? எப்பொழுதும் அவருக்கு தன் தேவைகளைவிடத் தம் குடும்பத்தின் தேவை தானே என்றுமே முக்கியமாகப் பட்டிருக்கிறது. அதிலே அவருக்கு ஒரு நிறைவு. குடும்பத்தின் தேவை நிறைவெய்தி விட்டால் அவர் ஆத்மா நிறைந்துவிடுமே. பிறர் நிறைவைக் கண்டு நிறைகிற நெஞ்சம் அது.

    அவருக்கு இப்பொழுது ஓர் இக்கட்டு. ஐந்நூறு ரூபாய் வேண்டும்.

    அதை உடனே தேடியாக வேண்டும். இல்லையென்றால் பத்து பவுன் நகையை இழக்க வேண்டியதுதான். செட்டியார் வீட்டில் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். இதைப் பாருங்க, ஐயரே. பொதன்கிழமை நாங்க போறோம். இதோட உங்களுக்கு ஆயிரம் வாட்டி சொல்லியாச்சு. மூணு மாசமாக சொல்றேன். அப்புறம் செட்டியாரு நகையைத் தூக்கிட்டுப் போயிட்டாருன்னு பேசப்படாது. உங்க கஷ்டத்தைப் பார்த்துத்தான் வட்டி தள்ளி அசலை மட்டும் கொடுத்துட்டு நகையை வாங்கிக்கிடுங்க என்கிறேன்.

    செட்டியார் குடும்பம் ஊரை விட்டுப் போகிறது. அங்கே அடகு வைத்திருக்கும் பத்து பவுன் நகைகளைத் திருப்பியாக வேண்டும்.

    நெற்றியில் அரும்பிய வியர்வையைத் துண்டால் ஒற்றி எடுத்தார். இரண்டு சாரி வீடுகளையும் மாறிமாறிப் பார்த்தார். எந்த வீட்டினுள் நுழைந்தால் பணம் பெயரும். அவ்வளவு நெருக்கமானவர்களை இங்கே யார் இருக்கிறார்கள்? நெருங்கியவர்கள் என்று நினைக்கிற இரண்டொருவருடைய நிலை அவருக்குத் தெரியும். கேட்ட மாத்திரத்தில் 'இந்தா, உன் முடையைத் தீர்த்துக்கொண்டு பிறகு கொடு' என்று சொல்லக்கூடிய அளவுக்கு 'பலம்' பெற்றவர்கள் அல்லர்.

    மிராசு சுப்புசேஷன் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தார் வேதாசலம். தூரத்தில் வரும்போதே மிராசு சுப்பு சேஷன் வீட்டிலிருந்து வெளியே வந்து மேற்கே போய்க் கொண்டிருந்தார்.

    சேஷனிடம் கேட்கலாம். அவரிடம் எப்பொழுதும் பணமிருக்கும். நல்ல ஸ்திரமான இடரில்லாது வாழும் மனிதராயிற்றே.

    வேதாசலம் மனத்தில் எண்ணம் ஒரு முதிர்ச்சியை அடையாத நிலையில், கால்கள் அவரை நோக்கி இழுத்தன. மனத்தின் இழுப்பைத் தானே கால்கள் செயல்படுத்துகின்றன!

    சுப்புசேஷன் எங்கே போகிறார்? கொஞ்சம் தயக்கம், அரைகுறையாக எழுந்த நம்பிக்கையின் வேகம் இவைகளோடு அவரை நெருங்குகிற தறுவாயில் அவர் ஊர் எல்லையைக் கடந்து தம் காட்டுக் கொட்டகைக்குள் நுழைந்தார்.

    விஷயம் பேசச் சரியான தனிமைதான். அதோடு அவரிடம் இதற்கு முன் இந்த மாதிரி விஷயங்களுக்கு அணுகியதேயில்லை. நல்ல பழக்கம் உண்டு. ஆத்மார்த்தமானப் பேசும் சந்தர்ப்பங்களும் உண்டு. குடும்ப விவகாரம் ஊர்ப் பொது விஷயங்களைப் பற்றி என்று எத்தனையோ சந்தர்ப்பங்கள் அவர்களைக் கூட்டி வைத்திருக்கின்றன.

    சுப்புஷேசன் காட்டுக் கொட்டகைக்குள் மறைந்தவுடன் மெதுவாக வேதாசலம் உள்ளே நுழைந்தார்.

    நமஸ்காரம்.

    நமஸ்காரம் வாங்கோ... எங்கே இவ்வள தூரம்..?

    சும்மாத் தான். உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்

    உட்காருங்கோ.. தாம் உட்கார்ந்திருந்த கட்டிலைக் காண்பித்தார் சுப்புசேஷையர்.

    வேதாசலம் அமர்ந்தார். வினயமாக முறையில் வருகிற ஆரம்ப உரைகள் அவர் மனத்திலே நம்பிக்கையை இலேசாக வளரவிட்டன.

    தயக்கப்பட வேண்டிய நிலை ஏற்படவில்லை வேதாசலத்துக்கு. அரைகுறையாக இருந்த முதிர்ச்சிபெற்ற சிந்தனையெல்லாம் முடிவு பெற்றுவிட்ட நிலையில்தான் சுப்பு சேஷையரிடம் கேட்டுவிடுவோம் என்ற தீர்மானத்துக்கு அவருடைய அவசரம் அவரைப் பிடரியைப் பிடித்துத் தள்ளிக் கொண்டிருந்தபோது கொஞ்ச நஞ்சமிருந்த தயக்கமும் போய்விட்டது.

    தம் இக்கட்டை விவரித்தவர் முடிவில், ராசிபுரம் போய் அந்த நகைகளை உடனே திருப்பிண்டு அதை அப்படியே வேறே இடத்திலே வச்சு உங்க தொகையை நாளைக்குச் சாயங்காலம் நான் திறம்பறச்சே கொண்டுவந்து கொடுத்துடறேன். செட்டியார் வீட்டிலே ஊரைவிட்டுப் போறா. அதான் அவாளுக்கும் அவசரம்..

    சுப்புசேஷையர் இரண்டு நிமிடங்கள் யோசனை செய்தார். இல்லை என்று எடுத்த எடுப்பில் அவரால் சொல்லி விடமுடியாது. அதிலும் வேதாசலத்தைப் போன்ற கண்ணியமானவர்களுக்கு அந்தப் பதில் உகந்ததல்ல. அவருடைய செல்வாக்குக்கும் அது அழகல்ல. அவருடைய யோசனைக்குக் காரணம் பெரிய தொகையாக இருக்கிறதே என்பதுதான். சுலபமாக வேதாசலத்தால் அதைத் திருப்பித் தரமுடியுமா என்பது பற்றித்தான். வெளிப் பார்வையிலேயும் சரி, அந்தத் தெருவில் அவருடைய குடும்ப நிலையைப் பற்றிக் கேள்விப்பட்டதிலேயும் சரி இப்பொழுது அவர் கேட்கின்ற தொகை அவர் சக்திக்கு மீறினதுதான். ஆனால் அவருடை இக்கட்டைப் பார்த்தால் அதை அவ்வளவு சுலபமாக உதாசீனப்படுத்தக் கூடியதாயுமில்லை.

    வேதாசலம் ஏமாற்றுக்காரரல்ல என்பதை அவர் முகம் காட்டியது. அப்பாவித்தனமும் நேர்மையும் அவர் முகத்தில் பதிந்து உருவத்துக்கு ஓர் இரக்கத்தை இயல்பாக உண்டாக்கித் தந்தன.

    பத்து பவுன் நகையா அது?

    ஆமாம், சுவாமிகளே!

    அதை அங்கே மீட்டு எங்கே மறுபடியும் வைக்கப் போறேள்?

    இடம் இனிமேதான் பார்க்கணும். இல்லேன்னா பாங்கு இருக்கு. அதுவுமில்லே, நீங்க சம்மதிச்சா.

    சுப்புசேஷையர் காதைப் பொத்திக் கொண்டார். வேண்டாம், ஐயா! உங்க முடிவுப்படியே செய்யும். அதையெல்லாம் கட்டிக்காக்க என்னாலாகாது. இந்தாங்கோ. பிடியும்... நாளை சாயங்காலம் சொன்ன பிரகாரம் தொகையைச் சுணக்கமில்லாமக் கொண்டு வந்து குடுத்துடுங்கோ. கண்டிப்பா பேசறேனேன்னு வித்தியாசமா நினைக்கக்கூடாது. ரொம்ப அவசரமாச்சேன்னு இதைத் தரேன். இதைப்போல நான் யாருக்கும் கொடுக்கறது இல்லே. நீங்க கேட்ட நேரம் நல்ல நேரம். வேற ஒரு காரியத்துக்காக கொண்டு வந்தேன். உம்மிடம் தரேன்.

    காட்டுக் கொட்டகையில் அவர்கள் இருவரும் தவிர வேறு யாருமில்லை.

    ஓர் அடையாளத்துக்கு ஏதேனும் குறிப்பு எழுதினா ஆட்சேபணையில்லாமல் கையெழுத்துப் போட்டுத் தரேன். நாளைக்கு என்றாலும் ஓர் இதுக்காகவேனும்..

    ஒண்ணும் வேண்டாம். இதை யார்கிட்டேயும் பிரஸ்தாபிக்காதேயும், காதும் காதும் வைச்ச மாதிரி நாளைக்கு இதே இடத்திலே.

    அவசியம் சொன்னபடியே செய்வேன்.

    "சரி, போம்.

    Enjoying the preview?
    Page 1 of 1