Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mudiyatha Thodarkathai
Mudiyatha Thodarkathai
Mudiyatha Thodarkathai
Ebook108 pages37 minutes

Mudiyatha Thodarkathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த சமூகத்தில் தாழ்வு மனப்பான்மை, சந்தேகம், பொறாமை, குற்ற உணர்ச்சி ஆகிய 4 குணங்களும் அடியோடு களையப்பட வேண்டியவையாகும். இந்தக் குணம் ஆண் - பெண்களுக்கு இருக்கவே கூடாது. குறிப்பாக ஆண்களுக்கு இவை நான்கும் ஆகவே ஆகாத குணங்கள்.

தாழ்வு மனப்பான்மை... மனிதனை அடி மட்டத்துக்குத் தள்ளிவிடும். சந்தேகம் என்பது புற்று நோயைவிடக் கொடியது. பொறாமை... மனிதனின் வளர்ச்சியைப் பாதிக்கும். குற்ற உணர்ச்சி... நம் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திவிடும்.

இந்த நான்கு குணங்களையும் விட்டொழித்தால்தான் அமைதியும், நிம்மதியும் பிறக்கும். இந்தக் கதையின் முடிவில் இதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

படியுங்கள்... அமைதியும், நிம்மதியும் பெறுங்கள்!

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603131
Mudiyatha Thodarkathai

Read more from Devibala

Related to Mudiyatha Thodarkathai

Related ebooks

Reviews for Mudiyatha Thodarkathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mudiyatha Thodarkathai - Devibala

    http://www.pustaka.co.in

    முடியாத தொடர்கதை

    Mudiyatha Thodarkathai

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    முன்னுரை...

    இந்த சமூகத்தில் தாழ்வு மனப்பான்மை, சந்தேகம், பொறாமை, குற்ற உணர்ச்சி ஆகிய 4 குணங்களும் அடியோடு களையப்பட வேண்டியவையாகும். இந்தக் குணம் ஆண் - பெண்களுக்கு இருக்கவே கூடாது. குறிப்பாக ஆண்களுக்கு இவை நான்கும் ஆகவே ஆகாத குணங்கள்.

    தாழ்வு மனப்பான்மை... மனிதனை அடி மட்டத்துக்குத் தள்ளிவிடும். சந்தேகம் என்பது புற்று நோயைவிடக் கொடியது. பொறாமை... மனிதனின் வளர்ச்சியைப் பாதிக்கும். குற்ற உணர்ச்சி... நம் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திவிடும்.

    இந்த நான்கு குணங்களையும் விட்டொழித்தால்தான் அமைதியும், நிம்மதியும் பிறக்கும். இந்தக் கதையின் முடிவில் இதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

    படியுங்கள்... அமைதியும், நிம்மதியும் பெறுங்கள்!

    - இப்படிக்கு...

    தேவிபாலா

    ***

    1

    ரெண்டுல ஒரு முடிவை இன்னிக்கு நீங்க எடுத்தாகணும்! - வள்ளியின் குரல் ஓங்கி ஒலித்தது.

    என்ன முடிவு? - ஏற்கெனவே சின்னக் குரலில் பேசும் கிருஷ்ணசாமி, இன்னமும் குரலைத் தழைத்துக்கொண்டான்.

    என்ன சம்பளம் உங்களுக்கு...?

    என்னைவிட உனக்குத்தான் அதிகம் தெரியுமே?

    கேட்ட கேள்விக்கு பதில்!

    பிடித்தம் போக... இருபதாயிரத்து சொச்சம்.

    நம்ம வீட்ல சம்பாதிக்கிறது நீங்க ஒருத்தர். ஆனா, ஒக்காந்து சாப்பிடுறது மொத்தம் ஏழு பேர். தாங்குமா...?

    ஷ்... மெதுவாகப் பேசு!

    ஏன்... எதுக்கு மெதுவாகப் பேசணும்? நாலு பேர் காதுல விழட்டும். தனக்கா புரியலைனா... மத்தவங்க சொல்லித்தான் புரிய வைக்கணும்.

    என்ன வேணுங்கறே? யாரை விட முடியும்? என்னைப் பெத்தவங்களை விட்ற முடியுமா?

    ....................

    சுதர்சன் என் தம்பி. அவனைத்தான் போகச் சொல்ல முடியுமா?

    இதோ பாருங்க... உங்க அப்பா உத்தியோகம் பார்த்தார் இல்லையா?

    பின்ன நாங்கள்லாம் எப்படி வளர்ந்தோம்?

    உங்களுக்காக என்ன செஞ்சார்?

    நல்லா படிக்க வச்சு, இப்படி சம்பாதிக்கிற அளவுக்கு செஞ்சிருக்காரே! இதைவிட என்ன வேணும்?

    உங்களுக்காக என்ன சொத்து வச்சிருக்கார் உங்க அப்பா?

    என்ன உளறுறே நீ? ஒரு தனி மனுஷனோட 'கம்பெனி’யில முப்பது வருஷமா குப்பைக் கொட்டின அப்பா... தங்கச்சிங்க ரெண்டு பேரைக் கட்டிக் கொடுத்ததே அதிகம். அந்தப் பாரத்தை எனக்கு வச்சாரா? 'பென்ஷன்' கிடையாது. வேற வரவும் இல்லை. வயசும் ஆயாச்சு. எப்படி உழைக்க முடியும்... இந்த வயசுல?

    உங்க தம்பிக்கு வயசாயிடுச்சா? வயசு இருபத்தி அஞ்சு! சம்பாதிக்கத் துப்பில்லையா?

    உள் அறையில் இருந்த அம்மா வெளிப்பட்டாள்.

    வள்ளி! சுதர்சனுக்கு வேலை கிடைக்கலைம்மா. அது அவன் தப்பில்லையே?

    ஏன்... இவர் வயசுப் பசங்களுக்கு ஊர்ல யாருக்கும் வேலை இல்லையோ?

    இப்படியெல்லாம் கேட்டா எப்படீம்மா...? இவனுக்கு 'வேளை' வரலை. அதனால வேலை கிடைக்கல.

    நல்ல வசனமா பேசுங்க. இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. இதோ பாருங்க... ஆள் ஆளுக்கு ஆயிரம் சமாதானம் சொல்லட்டும். நமக்கும் ரெண்டு பெண் குழந்தைங்க. அதுங்களை வீதியில் விட முடியாது. என் நகைகள் எல்லாம் அடமானத்துல...! எத்தனை நாள் பற்றாக்குறை 'பட்ஜெட்'ல குடித்தனம் நடத்த முடியும்? எனக்கு பதில் தெரிஞ்சாகணும்.

    சரி! எனக்கு 'ஆபீசு’க்கு நேரமாச்சு. சாப்பாடு போடு.

    அது ஒண்ணுதான் இந்த வீட்ல ஒழுங்கா நடக்கு.

    உள்ளே வந்து... மகா மட்டமாகச் சமைத்திருந்த சாதம், மிளகு ரசம், சுட்ட அப்பளத்தை வேண்டா வெறுப்பாகப் பரிமாறினாள் அவள்.

    கிருஷ்ணசாமி நொந்து போனான்!

    இன்று சம்பள நாள். மாலையில் பணம் கொண்டு வருவதற்குள் காலையிலேயே சண்டையைத் தொடங்கிவிடுவாள் வள்ளி. இரவு உட்கார்ந்து 'பட்ஜெட்' போடும்போது சண்டை உச்சத்துக்கு வரும்.

    போதாது... இந்த நாளில் ஏழு ஜீவன்களுக்கு இருபதாயிரத்து சொச்சம் போதாதுதான்!

    வள்ளியைச் சொல்லியும் குற்றமில்லை. வாழ வேண்டிய வயதில், மற்றவர்களைப் போல எதையும் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் அவளுக்கு மட்டும் இல்லை. இயல்பாகவே கொஞ்சம் பேராசை கொண்ட மனம். அதிலும், 'தன் பிடியில் எல்லாமே அடங்க வேண்டும்' என்ற ஆணவம் வேறு.

    அடங்கித்தான் போனான் கிருஷ்ணசாமி. இயல்பாகவே கொஞ்சம் அப்பாவியான அவன், வள்ளியின் அதிரடிப் போக்கில் சுத்தமாக தன்னை இழந்து சரணாகதி ஆகிவிட்டான். ஆனால், அவனையும் குறை சொல்ல முடியாது.

    எல்லோரும் கணவன் - குழந்தைகள் என்று தனிக்குடித்தனம் நடத்தும்போது, வள்ளிக்கு மட்டும் அது முடியாமல் போனது இன்னும் ஆத்திரத்தைக் கிளப்பியது. உறவு, நட்பு என்று அவளை ஏகமாய் உசுப்பிவிட... கோபம், வெறியாக மூண்டது.

    கிருஷ்ணசாமி அலுவலகம் புறப்பட... ஆறு, எட்டு வயதான இரண்டு குழந்தைகளையும்

    Enjoying the preview?
    Page 1 of 1