Ippadiye Oru Vazhkkai
By Maharishi
()
About this ebook
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.
இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.
தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.
தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.
Read more from Maharishi
Panisuvar Rating: 0 out of 5 stars0 ratingsKanneer Thuliyil Kadalosai Rating: 0 out of 5 stars0 ratingsKaandhamunai Rating: 0 out of 5 stars0 ratingsBhadrakali Rating: 0 out of 5 stars0 ratingsTharaiyil Piditha Meen Rating: 0 out of 5 stars0 ratingsSpatikam Rating: 0 out of 5 stars0 ratingsPattu Kudai Rating: 0 out of 5 stars0 ratingsParvaiyile Sevaganai..! Rating: 0 out of 5 stars0 ratingsIraval Karu Rating: 0 out of 5 stars0 ratingsVilayada Vanthaval Rating: 0 out of 5 stars0 ratingsEera Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsThulasi Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Yengiyavargal Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Parisu Rating: 0 out of 5 stars0 ratingsMaanilam Enna Vilai? Rating: 0 out of 5 stars0 ratingsManam Oru Bridhavanam Rating: 0 out of 5 stars0 ratingsSooriya Paathai Rating: 0 out of 5 stars0 ratingsVaanathu Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsMuthukal Pathu Rating: 0 out of 5 stars0 ratingsAthuvaraiyil Kanchana Rating: 0 out of 5 stars0 ratingsKalaintha Suruthi Rating: 0 out of 5 stars0 ratingsEera Pudavai Rating: 3 out of 5 stars3/5Neruppu Kozhi Rating: 0 out of 5 stars0 ratingsKadalora Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsVeera Sudhandhiram! Rating: 0 out of 5 stars0 ratingsGarudanai Kaditha Paambu Rating: 0 out of 5 stars0 ratingsKaatril Mithantha Padagu Rating: 0 out of 5 stars0 ratingsNinaivugal Unnoduthan... Rating: 0 out of 5 stars0 ratingsKanavodu Sila Naatkal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ippadiye Oru Vazhkkai
Related ebooks
Kaathirukkirean! Rating: 0 out of 5 stars0 ratingsShurthi Bethangal Rating: 0 out of 5 stars0 ratingsManaveli Kalaignan Rating: 0 out of 5 stars0 ratingsOru Manithan Oru Veedu Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsVizhuthugal Rating: 5 out of 5 stars5/5Unmaiyin Darisanam Rating: 0 out of 5 stars0 ratingsOru Manithan Oru Veedu Oru Ulagam Rating: 4 out of 5 stars4/5Jodi Sera Aasai Rating: 0 out of 5 stars0 ratingsThodarkathai Rating: 0 out of 5 stars0 ratingsSolladi Sivasakthi Rating: 5 out of 5 stars5/5Kavithaiyai Meeri Nindru Rating: 0 out of 5 stars0 ratingsIlakkiya Muthukkal 20 Rating: 0 out of 5 stars0 ratingsKari Kodugal Rating: 0 out of 5 stars0 ratingsAnalai Kaayum Ambuligal Rating: 5 out of 5 stars5/5Putru Rating: 0 out of 5 stars0 ratingsPralayam Rating: 5 out of 5 stars5/5Oru Muraithan Varum Rating: 0 out of 5 stars0 ratingsThanjai Prakaashukku Ezhuthappatta Kadithangal Rating: 0 out of 5 stars0 ratingsAvan, Aval, Avargal Rating: 0 out of 5 stars0 ratingsParisukkup Po! Rating: 0 out of 5 stars0 ratingsEnna Thavam Seitheno! Rating: 0 out of 5 stars0 ratingsUdan Rating: 0 out of 5 stars0 ratingsSriman Sudarsanam Rating: 1 out of 5 stars1/5154 கிலோபைட் Rating: 4 out of 5 stars4/5Kuvigam Kadaisi Pakkam Rating: 0 out of 5 stars0 ratingsKilai Nila Rating: 0 out of 5 stars0 ratingsKai Vilangu Rating: 4 out of 5 stars4/5Ranga Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsArul Vaakku Rating: 0 out of 5 stars0 ratingsEppadi Kolvenadi Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ippadiye Oru Vazhkkai
0 ratings0 reviews
Book preview
Ippadiye Oru Vazhkkai - Maharishi
http://www.pustaka.co.in
இப்படியே ஒரு வாழ்க்கை
Ippadiye Oru Vazhkkai
Author:
மகரிஷி
Maharishi
For more books
http://www.pustaka.co.in/home/author/maharishi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பேரன்புடையீர்,
வணக்கம், நலம் தானே நமது மாத இதழான 'ஆலயம்' தோன்றி பத்தாண்டுகள் கடந்து அது தனது பதினோராவது வயதுக் கல்லை தொடவிருக்கிறது என்பதை ஆலயம் இதழுடன் நீண்ட நாட்களாக இலக்கியத் தொடர்பு வைத்துள்ள தாங்கள் அறிவீர்கள். தங்கள் எழுத்தை பிரசுரிப்பதன் மூலம் ஆலயம் இதழ் எவ்வளவு சிறப்புற்றுத் திகழ்கிறதோ அதேபோல உங்கள் எழுத்துக்களைப் பிரசுரித்து அதை வாசிக்கும் வாசகர்களின் மனதில் இந்தப் பரஸ்பர எழுத்துப் பரிவர்த்தனை மூலம் தாங்களும் சிறப்பினைப் பெற்றுள்ளீர்கள் என்பதை மறுக்கமாட்டீர்கள். இந்த இலக்கிய கொடுக்கல் வாங்கலே நமது நட்பின் பாலம்.
ஆலயம் இதழ் பத்தாண்டைக் கடந்து தனது பதினோராவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தருணத்தில் ஒரு சிறப்பு மலர் வெளியிட தீர்மானித்துள்ளோம். அந்த மலரில் தங்கள் எழுத்தோவியமும் இடம் பெற வேண்டுமென்று விரும்புகிறோம்.
சுமார் பத்து பக்கங்களுக்கு மிகாமல் 'நமது பெண்கள்' என்ற தலைப்பில் தரமான கட்டுரையொன்றினை இந்த மாத இறுதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுகிறேன். இதற்கான தங்கள் ஒப்புதலையும், புகைப்படமொன்றையும் உடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மகள் யோகா மேஜைமேல் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனபின் அவர் பிரித்த முதல் கடிதம்.
மேலும் சில கடிதங்கள், இரண்டு திருமண அழைப்பிதழ்கள், சென்னையில் நடைபெறும் இரண்டு இலக்கியக் கூட்டத்திற்கான அழைப்பிதழ்கள், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் மாதந்தோறும் நடத்தும் திறனாய்வுக்கூட்ட அறிவிப்பு...
எல்லாவற்றையும் மேலோட்டமாகப் பிரித்து பார்த்துவிட்டு மேஜைமேல் வைத்தார்.
கைகளை கழுத்துக்குப் பின்னால் கோர்த்து நிமிர்ந்து உட்கார்ந்தார் புருஷோத்தமன்.
இவர் புனைப்பெயர்
உத்தமன்
ஒரு சகலகலா வல்லவர். எதைப்பற்றிக் கேட்டாலும் எழுதத் தெரிந்தவர்.
தன்னை அவர் ஒரு நட்சத்திர எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதில்லை.
பிறர் அப்படிக் கூறுதையும் ஒப்புக்கொள்வதில்லை.
எழுத்தாளர் என்பவன் நடிக, நடிகையர் மாதிரியல்ல.
அவன் சிந்தனையுடன் சம்மந்தப்பட்டவன். அறிவுடன் சம்மந்தப்பட்டவன், ஆழ்கடல் போல் கற்பனை சுரங்கத்துக்குள் சஞ்சரிப்பவன்.
அவன் மின்னி மறையும் நட்சத்திரமல்ல.
அவன் ஒரு மாடினிடோல் அல்ல.
எழுதாமல் இருந்து அபூர்வமாக எப்பொழுதேனும் எழுதினாலும் அந்த எழுத்து நட்சத்திரப் படைப்புதான்.
எழுத்தாளன் வெகு ஜனப்பிரியனாக ஒரு அரசியல்வாதி போல இருக்க முடியாது. அப்படி இருக்கவேண்டிய அவசியமுமில்லை.
அதிகம் விற்பனையாகும் சில லார்ஜஸ்ட்சர்குலேடட்மாகசீன் போல ஜனநாயக முத்திரிரையைக் குத்தி ஒரு எழுத்தாளனைக் கணிப்பது அவருக்கு உடன்பாடான விஷயமில்லை.
அவன் ஒரு எழுத்தாளன்.
இந்த ஒரு சொல்தான் அவனது ராஜமுத்திரை.
அவன் ஒரு உண்மையான எழுத்தாளனாக இருக்கும் பட்சத்தில் அவனை தரம்பிரித்துப் பார்ப்பது சரியில்லை என்பது அவர் கருத்து.
பொழுதுபோக்கு எழுத்து, தரமான எழுத்து என்பது பற்றி மட்டும் அவரிடத்தில் அபிப்ராயபேதமுண்டு.
பொழுதுபோக்கு எழுத்துக்கள் எந்த நேரத்தைப் பிரதிபலிக்கிறதோ அந்த நேரம் கடந்தபின் அது தானாக நசிந்துவிடும். இதற்கு பிரசாரமே தேவையில்லை. நல்ல எழுத்து என்றுமே நிலைத்து நிற்கும்.
நமது பெண்கள்
யாரைப்பற்றி எழுதலாம்? பெண்களைப் பற்றி எழுத விஷயங்களா இல்லை!
ஆசார்யா சங்கரருக்கும், கர்மவிதானங்களை பிழையில்லாமல் கற்றறிந்த மகா தபஸ்வி மிசிரருக்கும் வேதாந்த சர்ச்சை நடந்தபோது முனிவர் மிசிரரின் மனைவி வேதங்கள் நன்கு உணர்ந்த பாரதிதான் தலைமை தாங்கினாள். சங்கரருக்கும், மகரிஷி மிசிரருக்கும் ஏழுநாட்கள் தர்க்கம் நடந்தது. ஏழுநாட்கள் நடந்த அந்த தத்துவார்த்த சர்ச்சையில் சங்கரர் பக்கமே அதிக நியாயம் இருழுபதை உணர்ந்த தலைமை தாங்கி நடத்திய பாரதி தன் கணவன் என்று கூடப் பாராமல் தத்துவ வாதத்தில் சங்கரரே வென்றார் என்று தீர்ப்புக் கூறினாள். பாரதியின் அசாத்திய வேத சாஸ்த்திர அறிவைக் கண்டு மெய்சிலிர்த்த ஆதி சங்கரர் அந்த ஞானமலரின் வேத அறிவை மதித்து போற்றும் வகையில் தன் பெயருடன் பாரதி என்ற பெயரையும் சேர்த்து பாரதிக்கு சிறப்புச் செய்தார்.
அப்படிப்பட்ட ஞானப்பெண்ணைப்பற்றி எழுதலாம்.
யோகப்பயிற்சியில் கீர்த்தி பெற்ற சிலையை பற்றி எழுதலாம்.
ஆத்மாவை விஞ்ஞானம் என்று கூறிய தன் கணவர் யாக்ஞவல்கியரிடம் ஆன்மா விஞ்ஞானம் என்கிறீர்கள். ஆனால் - அதற்கு உருவம் இல்லை என்று கூறுகிறீர்கள். இரண்டு தத்துவங்களும் ஒன்றுக்கொன்று முரண்படுகிறதே அதைச் சற்று விளக்குங்களேன் என்று எல்லா வேதங்களையும் கற்ற தன் கணவரான தவ சிரேஷ்டர்யாக்ஞவல்கியரிடம் கேள்வி கேட்டு விட்டு.
உலகத்திற்கு எது ஆதாரம் என்ற கேள்விகேட்டு திக்குமுக்காட வைத்த மைத்ரேயியைப் பற்றி எழுதலாம்.
இல்லற வாழ்க்கையைத் துறந்துவிட்டு வாழ்நாள் பூராவும் வேத சாஸ்திரங்களிலும், மானுட மறுமலர்ச்சிக்குமாகவே அர்ப்பணம் செய்த எத்தனையோ பிரம்மவாதினிகள் இருந்திருக்கிறார்களே அவர்களைப்பற்றி எழுதலாம்..
கற்பூரம் நாறுமோ
கமலப்பூ நாறும
திருப்பவளச் செவ்வாய்தான்
தித்தித்திருக்குமோ
மறுப்பொசித்த மாதவன் – தன்
வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கிறேன் சொல்லாழி
வெண் சங்கே.
என்று கண்ணன் தன் வாயில் வைத்து ஊதும் பாஞ்ஜஜன்யம் என்று அழைக்கப்படும் வெண் சங்கைப் பார்த்து கேட்கிறாளே அந்த ஞானமலர் ஆண்டாளைப்பற்றி எழுதலாம்.
புருஷோத்தமனின் சிந்தனையோட்டம் இந்த இடத்தில் தடைபட்டு நின்றது.
நெற்றிக்கு நேராக தவமணி முகத்தை அடைத்துக்கொண்டு நின்றாள்.
"ஏன் என்னைப்பற்றி எழுதக்கூடாதா இதோ இந்த ஐம்பது வயதுக்கார சொல்லேர் உழவர் மேல் என் உயிரையே வைத்திருக்கிறேனே இந்த அன்புக்குக் காரணம் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறேனே!
இது அன்பா அதைக் கடந்த காதலா இவை இரண்டுக்கும் அப்பாற்பட்ட பிரேமையா..."
ஆராய்ந்தால் தெரியுமோ!
ஆராய்ந்து தான் பாருங்களேன் இதில் உள்ள வேதியல் மாற்றங்களைக் கூட ஆராயலாமே.
நேற்று இருந்தது போல் இன்று இருக்க முடியவில்லையே. நேற்று ஒரு உணர்ச்சியின் கொந்தளிப்பு. இன்று வேறு மாதிரியான குறுகுறுப்பு.
வயதில் ஐம்பதுக்கும், முப்பத்தைந்துக்கும் நடுவே ஏதோ பௌதீகக் குழப்பம்...
எழுதித்தான் பாருங்களேன். 'நமது பெண்கள்' என்பது தானே தலைப்பு.
நானும் அந்த 'நமது பெண்களி’ல் அடங்குகிறவள்தானே!
புருஷோத்தமன் தனக்குள் சிரித்துக் கொண்டார்.
மேஜைமேல் தயாராக இருந்த பேப்பரில் நமது பெண்கள் என்று எழுதி கோடிட்டு விட்டு இரண்டு மேல் நிலை கமாக்களுக்கு