Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kowsalya!
Kowsalya!
Kowsalya!
Ebook92 pages39 minutes

Kowsalya!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603129
Kowsalya!

Read more from Devibala

Related to Kowsalya!

Related ebooks

Reviews for Kowsalya!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kowsalya! - Devibala

    http://www.pustaka.co.in

    கௌசல்யா!

    Kowsalya!

    Author:

    தேவிபாலா

    Devibala
    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    முன் குறிப்பு:

    உடல் கொழுப்பை நீக்க சாறு வழிகளும், மருத்துவங்களும் இங்கே உண்டு! பலனும் கிடைக்கலாம். மனக்கொழுப்பை, புத்திக் கொழுப்பை, திமிரைப் போக்க இங்கே மருத்துவம் உண்டா? அதுதான் இந்தக் கதை!

    1

    கௌசல்யா – வயது 54 – இந்தக் கதையின் நாயகியா அல்லது வில்லியா என்பதைப் படித்து முடித்த பிறகு நீங்கள் சொல்லலாம்.

    சாதாரண ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்துத் தலைவி. பட்டதாரி! வேலைக்குப் போயிருக்கலாம். போகவில்லை.

    நான் எதுக்கு வேலைக்குப் போகணும்? படிச்சிட்டா, உடனே போய் சம்பாதிக்கணுமா?

    முதல் கேள்வியில் கொழுப்பு தொடங்கி விட்டது!

    ஏன்டீ? உன்னைவிட குறைச்சலா படிச்சவங்க வேலைக்குப் போகும்போது, நீயும் உத்யோகம் பார்த்து நாலு காசு கொண்டு வந்தா, குடும்பத்துக்கும் உதவி இல்லையா? அம்மா ஜானகி கேட்க,

    இதுக்குத்தான் நான் வேலைக்குப் போகலை!

    புரியலை!

    இந்த வீட்ல அப்பா அரசாங்க உத்யோகம், தம்பி ஸ்கூல் டீச்சர்! 2 சம்பளம் வருது! நான் ஒரே பொண்ணு! எதுக்கு வேலை பார்க்கணும்? என்னைப் படிக்க வச்சிடீங்க! கல்யாணம் செஞ்சு குடுக்கறது உங்க கடமைதானே?

    ஏன்டீ! உங்கப்பாவுக்கு வீட்டுக்கடன் உட்பட நிறைய கடன்கள் இருக்கு! தம்பி இப்பத்தான் தலை தூக்கியிருக்கான். நீயும் 2 வருஷங்கள் சம்பாதிச்சா, உன்னைக் கட்டிக் குடுக்க சுலபமா இருக்குமில்லயா?

    எதுக்கு! என் பணத்தை சேமிச்சு, எனக்கே கல்யாணம் நடத்த நீங்க எதுக்கு? பெத்தவங்கனு எதுக்கு இருக்கீங்க? பொம்பள வேலைக்குப் போகத் தொடங்கிட்டா, கொத்தைமைதான்! ஒரு வருஷம் சம்பளம் கமிட் ஆயிட்டா, விட்டுடுவீங்களா? ஜாதகம் அது இதுன்னு சாக்கு சொல்லி, தாலிய தள்ளிப் போடுவிங்க! பணத்தை விட மனசு வராது! பல பெண்கள் முதிர்கன்னிகளா கழுத்துல தாலி ஏறாம அலைய, பெத்தவங்களோட பேராசைதானே காரணம்? நானும் அந்த வலைல சிக்கணுமா? மாட்டேனே! நான் புத்திசாலி!

    ஏண்டீ! வாய்ல விஷம் கொட்டுது!

    இது விஷமில்லைம்மா! தற்காப்பு!

    உன் கால்ல நிக்கனும்னு உனக்குத் தோணலையா?

    அப்பன், சகோதரன், புருஷன் எல்லாரையும் சோம்பேறியாக்கறதே பொம்பிளதான்! புரியுதா! வரன் பாருங்க!

    இது பிறந்த வீட்டுக் கொழுப்பு!

    பிறந்த முதலே பிடிவாதம், முன்கோபம், திமிர் எல்லாம் கௌசிக்கு அதிகம் தான் நினைத்தது நடந்தாக வேண்டும் என்ற கேட்ட குணம் தலை விரித்திடும்!

    சண்டை என்றால் அல்வா சாப்பிடுவது போல!

    சளைக்க மாட்டாள்.

    அப்பா, அம்மா என யாருக்குமே மரியாதை இல்லை! சண்டை என்று வந்துவிட்டால், தான் ஜெயித்துவிட வேண்டும்!

    அப்பா, தம்பி எல்லாம் கோபப்பட்டு, கூச்சலிட்டு, ஊரைக் கூட்டு, மானத்துக்கு பயந்து அடங்கி விட்டார்கள்

    அம்மா ஜானகி மட்டும் போராடத் தயங்கவில்லை.

    வரன் பார்க்கத் தொடங்க, பல பேர் வேலைக்குப் போகும் பெண்களைக் கேட்டார்கள். தட்டிப் போயிற்று!

    பாஸ்கரன் வந்து மாட்டிக் கொண்டார். நல்ல, கண்ணியமான குடும்பம் பணத்தைவிட மனிதர்களை மதிப்பவர்கள்.

    தனியார் நிறுவனத்தில் அதிகாரி – சகோதரிகள் மூவர். ஒரு தங்கை – இரண்டு அக்கா – தங்கைக்கு மட்டும் கல்யாணம் ஆகவில்லை!

    கௌசி பார்க்க லட்சணமாக இருப்பாள்.

    ஜாதகமும் பொருந்தி விட்டது! இவளையும் பிடித்துவிட, கல்யாணம் முடிவாகி விட்டது!

    அவர்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை! பேராசையே இல்லாத குடும்பம்!

    ஆனால் இவள் விடவில்லை.

    பெற்றவர்களிடம் நகை, துணி, பாத்திரங்கள் என அழிச்சாட்டியம் செய்து, அப்பாவும் ஒரே மகள் என்பதால் கடன் வாங்கி, நன்றாகவே கல்யாணத்தை நடத்தினார்கள்.

    ஊரே மெச்சும்படி நடந்ததது!

    அப்பா, தம்பிக்கு ஏராளமான கடன் சுமை!

    இவள் புகுந்த வீட்டுக்குப் போன ஒரே வாரத்தில் தன் கொழுப்பை அரங்கேற்றத் தொடங்கி விட்டாள்.

    எந்த வேலையும் செய்ய மாட்டாள்.

    மாமியார் கேட்கவில்லை!

    வீட்டில் செல்லமாக வளர்ந்த பெண் என விட்டு விட்டாள்! கௌசி துரும்பைக் கிள்ளிப் போடமாட்டாள்!

    அவள் போன பிறகு பாஸ்கரனுக்கு முதல் சம்பளம் வந்தபோதே பறித்து

    Enjoying the preview?
    Page 1 of 1