Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Amma!
Amma!
Amma!
Ebook88 pages45 minutes

Amma!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603115
Amma!

Read more from Devibala

Related to Amma!

Related ebooks

Reviews for Amma!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Amma! - Devibala

    http://www.pustaka.co.in

    அம்மா!

    Amma!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    காலை எழுந்து பல் தேய்த்து குளிக்க வரும் போதே தலை சுற்றுவதைப் போல இருந்தது! வியர்த்தது! உடம்பு முழுக்க ஒரு வலி கூடியது!

    சங்கரன் கஷ்டப்பட்டு பொறுத்துக் கொண்டார்.

    வெளியில் சொல்லவில்லை காரணம், அவரது அம்மாவின் திதி! அதை நல்லபடியாக முடித்தாக வேண்டும். எதையும் வெளியில் காட்டிக் கொள்ள முடியாது.

    சங்கரனுக்கு வயது ஐம்பத்தி ரெண்டு! ரெட்டை நாடி உடம்பு! நல்ல பால்கோவா நிறத்துடன் பார்க்க கலையாக இருப்பார். இந்த ஐம்பது கடந்த நிலையிலும், அவரை ரசிக்க ஒரு பெண் பட்டாளமே உண்டு! அதுதான் அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்னை!

    மத்திய அரசாங்க உத்யோகம். கை நிறைய சம்பளம். உயர்ந்த பதவி! அவருக்கு எல்லாமே பால்ய பருவத்தில் சரியாக அமைந்து விட்டது - கல்யாணம் தவிர.

    அப்பா சின்ன வயதில் இறந்து விட்டார்.

    அம்மாதான் சமையல் வேலையில் அடுப்பில் வெந்து கருகி இவரையும், இவரது தங்கைகளையும் ஆளாக்கினாள்.

    இரண்டு தங்கைகளையும் சங்கரன்தான் கல்யாணம் செய்து கொடுத்தார். அம்மா என்றால் உயிர்!

    அம்மா அவருக்கு நல்ல தோழி - ஆலோசகர் - வழிகாட்டி! அவரது சுவாசம்!

    அம்மா நிறைய புத்தகம் படிப்பார்கள். உலக ஞானம் அதிகம். கணவரை இழந்து பிள்ளைகளை ஆளாக்கிய காரணமாக, பிறரது வலி தெரிந்த பெண்மணி. மடிசார் கட்டி, ஆச்சாரமாக வாழ்ந்தவர். ஆனால் சிந்தனையில் எப்போதும் ஒரு புரட்சி இருக்கும். நியாயமான காதலை ஆதரிப்பவர்.

    பெண் விடுதலைக்கு குரல் கொடுத்தவர்.

    ஜாதி, மத பேதம் பார்க்காத பெண்மணி.

    தன் அளவில் பிராமண தர்மங்களை விட மாட்டார். ஆனால் காதலையும் நேசிக்கும் பண்பு! மீனாட்சி மாமி என்றாலே ஒரு தனி மரியாதை உண்டு.

    அன்பு, பாசம், அரவணைப்பு, தெளிந்த சிந்தனை, பொறுமை, நம்பிக்கை என சகலத்தையும், தாய்ப் பாலோடு கலந்து ஊட்டி வளர்த்ததால் சங்கரனுக்கு ஞானம் அதிகம்.

    எல்லாம் சரியாகத்தான் இருந்தது!

    சங்கரனுக்கு கல்யாணம் முடிந்து கோமதி மனைவியாக வரும் வரை!

    கோமதியும் சாதாரண குடும்பத்தில் நாலு பேரோடு பிறந்த பெண்தான். பள்ளிப் படிப்பைத் தாண்டவில்லை. படிப்பு ஏறவில்லை!

    புத்தகப்படிப்பு, இசை, கலை என எதிலும் ஆர்வமில்லை. ஓரளவுக்கு சமைப்பாள். வீட்டு வேலைகளை செய்வாள். ஆனால் குறுகின மனசு! பரந்து விரிந்த சிந்தனை அறவே இல்லை. தொட்டதற்கெல்லாம் சந்தேகம். பிறந்த வீட்டு உறவையே படுத்தி எடுப்பாள். பிடிவாதம், முன் கோபம்

    அதிகம். புரிந்து கொள்ளும் சக்தி அறவே இல்லை.

    அவள் கல்யாணமாகி ஒழிந்தால் போதும் என்று பிறந்த வீடே காத்துக்கிடக்க,

    சங்கரன் வசமாக மாட்டினார்.

    ஜாதகம் பொருந்த, எல்லாமே சரியாக, பார்க்கவும் பழுதில்லாமல் கோமதி இருக்க, முடிவாகி விட்டது.

    மீனாட்சி எதையும் எதிர்பார்க்கவில்லை.

    நீங்க எளிமையா பண்ணுங்கோ! குழந்தைகள் ரெண்டு பேரும் சந்தோஷமாக இருக்கணும்! என் பிள்ளை சங்கரன் சொக்கத் தங்கம். ஒரு ஆணுக்கு இத்தனை நல்ல குணங்கள் இருக்கவே முடியாது! வாழும்போது கோமதி அதைப் புரிஞ்சுப்பா!

    கோமதியை பெற்றவர்கள் பூரித்துப் போனார்கள்.

    சங்கரனின் சகோதரிகள் படபடப்பாக பேச, மீனாட்சி அடக்கி விட்டாள்!

    "வரப் போறவ உங்க ரெண்டு பேருக்கும் மன்னி. எனக்கு அடுத்த ஸ்தானம்! படபடப்பா பேசப்படாது! மரியாதையா நடந்துக்கணும். உங்க இரண்டு பேரையும் கடன உடன வாங்கி கரையேற்றின காரணமாக சங்கரனுக்கு முப்பதை நெருங்கிற நிலைமை!

    பெண்கள் என்று தலையில் தூக்கி வைத்து ஆடமாட்டாள்.

    நியாயம் மட்டுமே பேசத் தெரிந்த பெண்மணி!

    சங்கரன் அரசாங்க வேலை கிடைத்த உடனே, அம்மாவின் சமையல் வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.

    நான் தெம்பா இருக்கேனே. சங்கரா. நானும் உழைச்சா, நாலு காசு வரும் உனக்குத்தானேப்பா உபகாரம்?

    வேண்டாம்மா! நீ பட்ட கஷ்டங்கள் போதும். உன் ருசியான சமையல் இனி நான் மட்டும் சாப்பிட்டா போதும்!

    இதோ கல்யாணம் நிச்சயமாகி விட்டது!

    எட்டு சவரன் நகை

    Enjoying the preview?
    Page 1 of 1