Vizhakolam
By Maharishi
()
About this ebook
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.
இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.
தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.
தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.
Read more from Maharishi
Ippadiye Oru Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsSpatikam Rating: 0 out of 5 stars0 ratingsAndha Poonai Rating: 0 out of 5 stars0 ratingsPadi Paranthaval Rating: 0 out of 5 stars0 ratingsVensangu Rating: 0 out of 5 stars0 ratingsMaanasa Rating: 0 out of 5 stars0 ratingsManthira Pushpam Rating: 0 out of 5 stars0 ratingsKanneer Thuliyil Kadalosai Rating: 0 out of 5 stars0 ratingsBhadrakali Rating: 0 out of 5 stars0 ratingsMara Seeppu Rating: 0 out of 5 stars0 ratingsSabthapathi Rating: 0 out of 5 stars0 ratingsPoo Potta Thaavani Rating: 0 out of 5 stars0 ratingsSakkaram Ini Suzhalum Rating: 0 out of 5 stars0 ratingsParadesi Kolam Padi Thaandi Vittathu Rating: 0 out of 5 stars0 ratingsKaandhamunai Rating: 0 out of 5 stars0 ratingsSakkara Vandi Rating: 0 out of 5 stars0 ratingsEera Pudavai Rating: 3 out of 5 stars3/5Eera Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsThulasi Rating: 0 out of 5 stars0 ratingsVazhndhu Kattuvom Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsMuthukal Pathu Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Rating: 0 out of 5 stars0 ratingsKalaintha Suruthi Rating: 0 out of 5 stars0 ratingsSooriya Paathai Rating: 0 out of 5 stars0 ratingsManam Kavarndhavan Rating: 0 out of 5 stars0 ratingsManam Oru Bridhavanam Rating: 0 out of 5 stars0 ratingsAthuvaraiyil Kanchana Rating: 0 out of 5 stars0 ratingsTharaiyil Piditha Meen Rating: 0 out of 5 stars0 ratingsVeera Sudhandhiram! Rating: 0 out of 5 stars0 ratingsJothi Vanthu Piranthal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vizhakolam
Related ebooks
Aravinthin Arputha Thiyagam Rating: 0 out of 5 stars0 ratingsVaanmathiye Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsYeidhavanai Thedi... Rating: 5 out of 5 stars5/5Brindhavanamum Premakumaranum Rating: 5 out of 5 stars5/5Last Warning Rating: 0 out of 5 stars0 ratingsAdharmathai Veezhthidu! Dharmathai Kaathidu!! Rating: 0 out of 5 stars0 ratingsPournami Nilavu Rating: 4 out of 5 stars4/5Uyir Nee..! Udal Naan..! Rating: 0 out of 5 stars0 ratingsVithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Kann Varaintha Oviyamey! Rating: 0 out of 5 stars0 ratingsVaramaga Nee Varavendum Rating: 5 out of 5 stars5/5Patharathey Bharath Rating: 5 out of 5 stars5/5Ilaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5Puthu Vasantham Thedi Varum Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire... Nee Enge! Rating: 0 out of 5 stars0 ratingsUn Thol Sera Aasaithan Rating: 0 out of 5 stars0 ratingsஉன் தோள் சேர ஆசைதான்! Rating: 0 out of 5 stars0 ratingsAmmavukku Oru Veedu Rating: 5 out of 5 stars5/5Manithan Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalagi Kasindhu Kanneer Malgi Rating: 5 out of 5 stars5/5Sathyavin Sapatham! Rating: 0 out of 5 stars0 ratingsVanitha Rating: 0 out of 5 stars0 ratingsSirippin Mitcham Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Yengiyavargal Rating: 0 out of 5 stars0 ratingsEera Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Jwalai Rating: 0 out of 5 stars0 ratingsNagaraa Nodigal Rating: 0 out of 5 stars0 ratingsAkkaraiyil Ore Anniya Paravai... Rating: 0 out of 5 stars0 ratingsYaarai Kolai Seyyanum? Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vizhakolam
0 ratings0 reviews
Book preview
Vizhakolam - Maharishi
http://www.pustaka.co.in
விழாக்கோலம்
Vizhakolam
Author:
மகரிஷி
Maharishi
For more books
http://www.pustaka.co.in/home/author/maharishi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
1
தினகரன் தன் ஃபைலில் மூழ்கியிருந்தான்.
தலைமை காரியாலயத்திற்கும் மற்றும் அது தொடர்பான வேறுகிளை நிறுவனங்களுக்குமாக எழுத வேண்டிய பதில் கடிதங்கள், ரிமைண்டர்கள், குறிப்புகள் என்று ஏராளமாக குவிந்து கிடந்தன.
ஒரு வார விடுப்பில் சென்ற உதவியாளர், போன இடத்திலிருந்து தன் விடுப்பை மேலும் பத்து தினங்களுக்கு நீட்டித்துக் கொள்ளும்படி மிகப் பணிவானதொரு விண்ணப்பத்தை எழுதிப் போட்டு விட்டதால் உடனடியாக கவனிக்க வேண்டிய பணிகளுடன் உடனடியாக பதிலளிக்க வேண்டிய கடிதங்களும் சேர்ந்து விட்டன.
சில கடிதங்களை அந்தந்த பிரிவுகளுக்கு அனுப்பியும் கூட இரண்டு ட்ரேக்களில் கடிதங்கள் நிரம்பி வழிந்தன.
இதற்கு மத்தியில் அம்மாதத்தின் பத்து குரூப் குலுக்கல்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடந்தாக வேண்டும்.
தினகரன் பஸ்ஸரை அழுத்தினான். வேல்முருகன் உள்ளே நுழைந்தான்.
மேனகாவை வரச்சொல்.
அவன் போன பின்பும் கதவு முன்னும் பின்னும் ஆடி, கிட்டத்தட்ட சரியான பொறுத்தலுக்கு வந்து கொண்டிருந்தபோது...
***
நேஷனல் ஃபைனான்சியர்ஸ் தென்னகத்தில் ஏராளமான கடன்காரர்களை நாளுக்கு நாள் உற்பத்தி செய்து கொண்டிருந்தார்கள்.
நேஷனல் ஃபைனான்ஸ்
என்கிற பெயரின் நீளத்தை நாகரீகமாக சுருக்கிஎன் எஃப்
என்று இரண்டு அழகிய நியான் விளக்கில் இரவு பூராவும் டவுனில் நான்கு இடங்களில் எரிந்து கொண்டேயிருக்கும்.
சேலம் நகராட்சிக்கு இந்த நான்கு விளம்பர விளக்குகளுக்காக அவர்கள் மூவாயிரம் வரையில் பணம் கட்டுகிறார்கள். மின்சார வினியோக நிறுவனத்திற்கு அதற்கு மட்டுமே டாரிப் பில் ஐந்நூறு வரை கட்டுகிறார்கள்.
மாலை நேர தினசரிகளிலும் காலைப் பதிப்புகளிலும் உள்ளூர் செய்தித்தாள்களிலும் அதன் விளம்பர இடம் மூன்றாவது பக்கத்தில் இடது கோடியில் கீழே ஒரு கால் பக்கத்தில் இருக்கும்.
இந்தியாவின் படத்தை ஒரு லே அவுட்டாக அமைத்து அதனுள்என்
என்கிற எழுத்தையும்"எஃப்' என்கிற எழுத்தையும் பொருத்தி இந்தியாவையே நேஷனல் ஃபைனான்சி ஆக்கியிருப்பார்கள். இதுதான் அவர்களின் ட்ரேட் மார்க்.
இப்படி இருப்பதை ஆட்சேபித்து சில அரசியல் வாதிகள்கூட சட்ட சபையில் கேள்வியும் கேட்டிருக்கிறார்கள்.
இவர்கள் வியாபாரம் பொது மக்களுக்கு பொருளும் பணமும் கடன் கொடுப்பது. இதற்கு இந்தியாவின் பெயரை வைத்துக்கொண்டு செய்யவேண்டுமா?
இது ஒரு எம். எல். ஏ வின் கேள்வி.
உடனே மாலையிலும், அதற்கு அடுத்த நாள் காலை ஏடுகளிலும் செய்திகளை இப்படிப் போட்டார்கள்.
பிரபல நேஷனல் ஃபைனான்ஸ் கம்பெனி பற்றி சட்டசபையில் ருசிகரமான விவாதம்
இது ஒரு பத்திரிகையின் தலைப்பு.
நேஷனல் ஃபைனான்ஸ் திவாலா
இது ஒரு பத்திரிகை.
இப்படியொரு ரஸமான சர்ச்சையை கிளப்பிவிட்டுக் கொண்டு அவ்வப்போது சில புரட்சிகரமான புதுப்புதுத் திட்டங்களை பத்திரிகையின் முழுபக்கங்களில் விளம்பரப் படுத்திக் கொண்டு அது வளர்ந்தது.
நாங்கள் உங்கள் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறோம்...
உங்களுக்கு வீடு வேண்டுமா! எங்களை அணுகுங்கள்... உங்களுக்கு சொந்தத்தில் கார் வேண்டுமா... மக்கள் சேவையில் எங்கள் பங்கு மகத்தானது. உங்களிடம் உங்கள் பெண்ணின் விவாகத்திற்கு பணம் இல்லையா!
உடனே நேஷனல் ஃபைனான்ஸை அணுகுங்கள்.
உங்கள் வீட்டுத் திருமணத்தை முடித்து வைத்து தொகையை தவணை முறையில் பெற்றுக் கொள்கிறோம்.
இப்படிப்பட்ட கவர்ச்சியில் யார்தான் மயங்கமாட்டார்கள்!
அவர்களிடம் கவர்ச்சிகரமான விளம்பரம் போலவே செயல்முறைத் திட்டங்களும் இருந்தன.
அந்தக் கம்பெனி, முன்பு பெரிய பெரிய பணக்காரர்களுக்கும், அசையும், அசையா சொத்துக்கள் இருப்பவர்களுக்கு மட்டுமே பொருளுதவி செய்து வந்தது. நடுத்தர வர்க்கம் வரை அவர்கள் தங்கள் தொழிலை பெருக்கவில்லை.
தினகரன் ஒரு பொறுப்புள்ள பதவிக்கு அங்கே வந்த பின்புதான் அதன் வீச்சை இன்னும் அதிகப்படுத்தி விஸ்தரித்தான்,
கடனுதவி என்பதை எல்லோருக்கும் விஸ்தரிக்க வேண்டும். இதில் ஏழை பணக்காரன் வித்தியாசம் பார்க்கக்கூடாது என்று நிர்வாகஸ்தர்கள் கூட்டத்தில் அடிக்கடி எழுந்து பேசி அவர்களை மெதுவாக சம்மதிக்க வைத்தான்.
தினகரன் ஒருசாதாரண கீழ் மத்திய தர வர்க்கத்தினன்.
பொது வாழ்விலும், அன்றாட வாழ்விலும் இந்த கீழ்வர்க்கம் படும் அல்லல் பூராவும் அவனுக்கு அத்துப்படி.
அவர்கள் வாழ்க்கையில் படும் பெரும் அல்லல்களுக்கு அவர்களுடைய பற்றாக்குறையும், குறைந்த வருமானமும் தான் காரணம். தேசப் பொருளாதாரம் அவர்களை ஒருபோதும் திருப்திப்படுத்த போவதில்லை. அவர்கள் மனதில் ஏராளமான கனவுகளை சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் நாணயமற்றவர்கள் என்று நாம் ஒதுக்க முடியாது. நமது வியாபாரத்தை அவர்கள் வாயிற்படி வரையில் நாம் கொண்டு செல்லவேண்டும்.)
அவர்களைத் தேடி நாம் போவதில் தவறேயில்லை என்பது தினகரனின் வாதம்.
***
நேஷனல் ஃபைனான்ஸ் கட்டிடம், ஒருபுறம் ராமகிருஷ்ணா மிஷன் சாலையும் மற்றொருபுறம் ராஜாஜி சாலையும் சந்திக்குமிடத்தில் இருந்தது.
சாலையில் இறங்கி நடந்தால், திருப்பத்தில் சக்தி ஃபியூயல், பெட்ரோல் பங்க். எல்லா நேரங்களிலும் தனக்கென சில ரசிகர்களைக் கூட்டி வைத்துக் கொண்டிருக்கும் திருத்தணி முருகன் ஸ்டோர், எல்லா நேரத்திலும் இல்லையென்று கூறாமல் ஏதேனும் சாப்பிடக்கொடுக்கும் சங்கர் காப்பி பார், கெளரி சங்கர் ஹோட்டல்அந்தப் பிராந்தியத்து சிற்றுண்டி தேவையை பூர்த்தி செய்து கொண்டிருந்தது.
எதிரே சின்ன வீதியாக வீரசாவர்க்கர் சாலைசுதர்மா சுப்புவின் வீட்டிலிருந்து தொடங்குகிறது.
கைவளையல் லேசாக சப்திக்க கதவைத் திறந்து கொண்டு மேனகா உள்ளே நுழைந்தாள்.
குட்மார்னிங்.
பெரிய ஃபைல் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்த தினகரன் அவளைப் பார்த்துவிட்டு எதிரே உள்ள ஆசனத்தைக் காட்டினான்.
அவள் உட்கார்ந்தாள்.
வசீகரமான மேனகாவை நிமிர்ந்து பார்த்தான் தினகரன்.
மெல்லிய பூச்சரங்கள் ஓடிய வெளிர் நீல வெள்ளை மென்கா...சோளி...
லாவண்யமான உடம்பு. இவளுக்கு மேனகா என்று யார் பெயர் வைத்திருப்பார்கள். ஒரு இருபத்தைந்து இருபத்தாறு வயதில் இப்படியொருமேனக
மாக வருவாள் என்று எதிர்பார்த்து பெயர் வைத்திருந்தால் அவர்களே மிகச் சிறந்த ஆரூடக்காரர்களாகமிகச் சிறந்த கணிப்பாளர்களாக இருக்க முடியும் என்று பல முறை வியந்து போயிருக்கிறான்.
அவள், தான் வேலை செய்யும் அதிக பொது ஜன தொடர்புள்ள இந்த நிறுவனத்தின் முக்கியத்துவம் உணர்ந்து தன்னை எப்பொழுதும் கவனமாக வெளிக்காட்டிக் கொண்டிருந்தாள்.
மதமதப்பான வளர்ச்சியல்ல அது. ஒல்லியைவிட கொஞ்சம் பிடிப்பான திரேகம்,
மார்பகங்களின் அபூர்வமான வெளிப்பாடுதான் அந்த பூரா உடம்புக்கும் ஒரு சிகரம்.
நடுவாந்திரமான சிவப்பு. இருபுறமும் கேசங்களை கோடு கிழித்தாற்போல சரியவிட்டு படிமனாக வாரிவிட்டுக் கொண்டிருந்தாள். காதில் இரண்டு மெல்லிய தங்க வளையங்கள். நீல நிற சேலைக்கு ஏற்ற மாதிரி நீல நிற லூதியானா. வளையல்கள் ஒரு கைக்கு மட்டும் நான்கு. மற்றொரு கையில் எலெக்ட்ரானிக் ஆட்டோ மெடிக் கேஸியோ.