Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irumbu Thottam
Irumbu Thottam
Irumbu Thottam
Ebook91 pages49 minutes

Irumbu Thottam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Reader reviews:

இரும்புத்தோட்டம் மனதை உருக்கி எடுத்தது, தொழிலாளர் படும் துயரத்தை அப்படியே படம் பிடித்துள்ளீர்கள். அங்கு உள்ள ஊஈழல் மற்றும் அதிகார மமதையும் கதையில் நன்கு வெளிப்பட்டுள்ளது. பாராட்டுகள்.
- ஜேம்ஸ் சாமி, திருப்பத்தூர்.

ஒரு தொழிற்சாலை கதையான இதைப்போல நெசவாளர்கள், பனியன் தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் போன்றோரின் வாழ்க்கையை சித்திரிக்கும் கதையையும் எழுதுவீர்களா?
- ராமசாமி, திருப்பூர்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100703102
Irumbu Thottam

Read more from Indira Soundarajan

Related to Irumbu Thottam

Related ebooks

Reviews for Irumbu Thottam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irumbu Thottam - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    இரும்புத் தோட்டம்

    Irumbu Thottam

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    சமர்ப்பணம்!

    என்னை எழுத்துத்துறைக்கு

    இழுத்தும் - நெறிப்படுத்தியும்

    விட்ட குருநாதர்

    நாவலாசிரியர்

    மகரிஷி

    அவர்களுக்கு...

    -இந்திரா செளந்தர்ராஜன்

    வாசகர் கடிதங்கள்!

    குபேரசாமி... சரியான சாமிதான். முடிவு நச்சென்று இருந்தது.

    திவாகர், மதுரை

    நாலுவாரத் தொடரில் குபேரசாமி தனிரகம். மதுரை மண்ணின் வாசனை கமகமத்தது. சாட்டையால் அடிப்பது போல வரிகள் பல அமைந்திருந்தன பாராட்டுகள்.

    சந்தானம், ஸ்ரீரங்கம்

    இந்திராஜி...!

    குபேரசாமியை படித்தேன். கலக்கிவிட்டீர்கள். தனித் தன்மையான எழுத்து. ஜமாயுங்கள்.

    சுமதி ராகவன், சென்னை-17

    லாட்டரிச் சீட்டின் பின்புலத்தில் இப்படியும் ஒரு நிலையா? கதையை படித்த போது அது இன்று எத்தனை ஏழைகள் வாழ்வில் எல்லாம் விளையாடியிருக்கிறதோ. என்கிற கவலையை தவிர்க்க முடியவில்லை.

    கே.ராமச்சந்திரராவ், கிருஷ்ணகிரி

    இரும்புத்தோட்டம் மனதை உருக்கி எடுத்தது, தொழிலாளர் படும் துயரத்தை அப்படியே படம் பிடித்துள்ளீர்கள். அங்கு உள்ள ஊஈழல் மற்றும் அதிகார மமதையும் கதையில் நன்கு வெளிப்பட்டுள்ளது. பாராட்டுகள்.

    ஜேம்ஸ் சாமி, திருப்பத்தூர்.

    ஒரு தொழிற்சாலை கதையான இதைப்போல நெசவாளர்கள், பனியன் தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் போன்றோரின் வாழ்க்கையை சித்திரிக்கும் கதையையும் எழுதுவீர்களா?

    ராமசாமி, திருப்பூர்

    உயிரின் மறுபக்கத்தை ஒரு மூச்சில் படித்து முடித்தேன். முடிவை மறுக்கவும் முடியவில்லை- ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை.

    அதேசமயம் நடுநிலை வகிக்கிறேன் என்று நீங்கள் பயந்து போய் விட்டதும் தெரிந்தது. இறுதியாக கேட்கிறேன். ஆவிகள் இருக்கிறது என்று கூறியுள்ளீர்களா இல்லை என்றா?

    உஷாராம், ஓசூர்.

    உயிரின் மறுபக்கம்... விறுவிறுப்புக்கு இலக்கணம் எழுதிய நாவல். அதிலும் அந்த lead News இருக்கிறதே டாப் டக்கர். எங்க சாமி புடிக்கறீங்க...

    வா.ரா. சேட், செங்கை.

    அன்புள்ள இந்திரா செளந்தர்ராஜன்!

    வணக்கம்.

    மாத நாவல்களின் மேல் நான் மரியாதை இல்லாதவன். ஆனால் உங்கள் நாவல்கள் சிறப்பாக இருப்பதாக நண்பர்கள் கூறக்கேட்டு மாலைமதி வாங்கி வாசித்தேன். உண்மைதான். ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு அதை விட்டு விலகாமல் கதை சொல்லும் உங்கள் பாணி ஒரு சிறந்த பாணி.

    அத்துடன் உங்கள் கதைக்களம் எல்லா நிலைகளிலும் வித்யாசமாக உள்ளது. படித்து முடித்தபின் நிறைய யோசிக்க வைக்கிறது. மனதை கிள்ளுகிறது.

    உயிரின் மறுபக்கத்தை காண நீங்கள் மேற்கொண்ட முயற்சியும் சூடும் சுவையுமாகவே இருந்தது.

    இப்படிக்கு

    செந்தாமரைக்கண்ணன்

    நாமக்கல்

    1

    பெரிய தொழிற்சாலை அது!

    ஏறத்தாழ ஐம்பது ஏக்கர் விஸ்தீரணம். ஆயிரத்துக்கும் மேல் தொழிலாளர்கள். 'ஆசியப் பிரசித்தம்' என்கிற அந்தஸ்து... எல்லாம் கொண்ட ஒரு இரும்புத் தோட்டம் அது!

    அங்கே பசுமைக்கும் பஞ்சமில்லை. சேர்மன் ராமகிருஷ்ணனின் மனசுக்கு சளைக்காத பசுமை.

    அங்குலத்துக்கு துளி கூடினாலும் வெட்டி எறியப்படும் சீரான புல்வெளி. அகட்டி கிளைபரப்பி எழும்பி நிற்கும் வேப்பமரக்கூட்டம். வாதநாராயண புன்னைகளும் நடுநடுவே...

    கோபுரம் போல் குழாய் மரங்கள். அதில் குபுகுபு புகை.

    தொழிற்சாலைக்கு வெளியே நெளியும் பிரதான தேசிய நெடுஞ்சாலை மேல் யார் போனாலும் வந்தாலும் விழியை விரிக்கவிடும் அந்த இரும்புத் தோட்டம் முன் ஏக்கப் பெருமூச்சுடன் நின்று கொண்டிருக்கிறான். கண்ணன். கையில் வேலையில் சேரச்சொல்லும் ஆர்டர்.

    அவன் பார்வையில் செக்யூரிட்டி கேட்டை தாண்டி நடமாடிக் கொண்டிருக்கும் தொழிலாளர் கூட்டம் தெரிகிறது.

    'காக்கிச் சட்டை-கையில் ஸ்பேனர் செட்-அங்கங்கே கிரீசும், மையும் பரவிய அழுக்குக் கசடு ஆறாக வியர்வை' அந்த கூட்டம் அவன் மனதை நிரடுகிறது.

    அப்பா மணவாளன் முகம் அந்த நிரடலில் முந்துகிறது. அந்த நிறுவனம் தயாரிக்கும் ஒளிமிகுந்த பல்புகளையும், எந்திர உபகரண பாகங்களையும் மிகப் பெருமையோடு கண்ணனிடம் எடுத்துச் சொன்னவர் மணவாளன். 'பளீரென்று நெற்றியில் திருமண் நாமத்துடன் அவர் வேலைக்குப் புறப்படும் அழகே

    Enjoying the preview?
    Page 1 of 1