Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iraval Karu
Iraval Karu
Iraval Karu
Ebook145 pages53 minutes

Iraval Karu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நான் முன்பு எழுதிய சிறுகதையின் அகலப்பார்வையே இது. எப்படி இரவல் கரு என்ற சிறுகதையை எழுதி முடித்தபோது என் மனதில் ஓர் அதிருப்தி நிலவியதோ அதே அதிருப்தி இப்பொழுதும் உண்டு. காரணம் இதற்கு மேலும் இதில் நிறைய விஷயங்களைச் சொல்லமுடியும். சொல்லவேண்டுமென்பதால் தான் பிரிதொரு சமயம் இதையே முன்னூறு பக்க நாவலாகவும் நான் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்றாலும் இந்தக் குறைந்த பக்கங்களில் இதை ஓரளவு நிறைவாகச் செய்திருக்கும் திருப்தியுடன் முடித்திருக்கிறேன்.

ஒரு படத்தின் வெற்றிக்கு முழு முதல் ஆதாரமானது கதை. ஒரு நல்ல கதையை வைத்துக்கொண்டுதான் அதாவது கதை என்கிற அஸ்திவாரத்தில்தான் திரைப் படம் என்கிற 'செலுலாய்ட்' மாளிகை கட்டப்படுகிறது. இந்த கூட்டு முயற்சியில் இதுவரை எழுத்தாளனுக்கு அரிய பங்கை அவன் இன்னும் சரியாகவே நிலை நிறுத்திக் கொள்ள முடியவில்லை என்றே தோன்றுகிறது. எழுத்தாளரை மதிக்கிற சில நல்ல இயக்குனர்களும் பட அதிபர்களும் இருக்கிறார்கள். இருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்த மதிப்பு போதாது என்றே தோன்றுகிறது. எனக்கேற்பட்ட பல கசப்பான அனுபவங்கள் கூட இந்த நாவலில் என்னையும் மீறி இடம் பெற்றிருக்கக்கூடும். பல கதைகளை இப்படி பறிகொடுத்த நிலையில் மனம் நொந்துபோன சந்தர்ப்பமும் உண்டு. ஆண்டவன் கோர்ட்டில் அவர்கள் அடைந்த தண்டனைகளையும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன். 'கரு' வை அபகரிப்பவர்களை மாற்ற வேண்டுமென்பதுதான் என் நோக்கமே தவிர அவர்கள் சரிவு அல்ல. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதும் என் நோக்கமல்ல. சினிமா மீடியத்தின் அடிப்படை அம்சமாக திகழும் கதையையும், காதாசிரியரையும் உதாசீனப்படுத்த வேண்டாம் என்பதை இந்த நாவலில் சற்று வித்தியாசமான கோணத்தில் சொல்ல முயன்றிருக்கிறேன். என் போன்ற பல எழுத்தாளர்களின் மனக்குமுறல்கூட இப்படித்தானிருக்கிறது.

- அன்புடன், மகரிஷி
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803112
Iraval Karu

Read more from Maharishi

Related to Iraval Karu

Related ebooks

Reviews for Iraval Karu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iraval Karu - Maharishi

    http://www.pustaka.co.in

    இரவல் கரு

    Iraval Karu

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    முன்னுரை

    படைப்பிலக்கியத்தில் வடிவம் என்பது எல்லைகளற்ற ஒன்று. இதற்கு இவ்வளவுதான் என்று முடிவெடுப்பது கூட அவரவர் எழுத்தின் வேகம், வீச்சு, ஆடி, அகலப்பார்வையை பொறுத்ததாக அமைகிறது. இரவல் கரு என்ற எனது இந்த நாவலும் அதன் ஆரம்ப இலக்குகளை உடைத்துக்கொண்டு இங்கே கொஞ்சம் பெரிய உருவமெடுத்திருக்கிறது. நான் முன்பு எழுதிய சிறுகதையின் அகலப்பார்வையே இது. எப்படி இரவல் கரு என்ற சிறுகதையை எழுதி முடித்தபோது என் மனதில் ஓர் அதிருப்தி நிலவியதோ அதே அதிருப்தி இப்பொழுதும் உண்டு. காரணம் இதற்கு மேலும் இதில் நிறைய விஷயங்களைச் சொல்லமுடியும். சொல்லவேண்டுமென்பதால் தான் பிரிதொரு சமயம் இதையே முன்னூறு பக்க நாவலாகவும் நான் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்றாலும் இந்தக் குறைந்த பக்கங்களில் இதை ஓரளவு நிறைவாகச் செய்திருக்கும் திருப்தியுடன் முடித்திருக்கிறேன்.

    சினிமா என்பது பல கலைஞர்களின் கூட்டு முயற்சியின் வெளிப்பாடுதான்.

    ஒரு படத்தின் வெற்றிக்கு முழு முதல் ஆதாரமானது கதை. ஒரு நல்ல கதையை வைத்துக்கொண்டுதான் அதாவது கதை என்கிற அஸ்திவாரத்தில்தான் திரைப் படம் என்கிற 'செலுலாய்ட்' மாளிகை கட்டப்படுகிறது. இந்த கூட்டு முயற்சியில் இதுவரை எழுத்தாளனுக்கு அரிய பங்கை அவன் இன்னும் சரியாகவே நிலை நிறுத்திக் கொள்ள முடியவில்லை என்றே தோன்றுகிறது. எழுத்தாளரை மதிக்கிற சில நல்ல இயக்குனர்களும் பட அதிபர்களும் இருக்கிறார்கள். இருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்த மதிப்பு போதாது என்றே தோன்றுகிறது. எனக்கேற்பட்ட பல கசப்பான அனுபவங்கள் கூட இந்த நாவலில் என்னையும் மீறி இடம் பெற்றிருக்கக்கூடும். பல கதைகளை இப்படி பறிகொடுத்த நிலையில் மனம் நொந்துபோன சந்தர்ப்பமும் உண்டு. ஆண்டவன் கோர்ட்டில் அவர்கள் அடைந்த தண்டனைகளையும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன். 'கரு' வை அபகரிப்பவர்களை மாற்ற வேண்டுமென்பதுதான் என் நோக்கமே தவிர அவர்கள் சரிவு அல்ல. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதும் என் நோக்கமல்ல. சினிமா மீடியத்தின் அடிப்படை அம்சமாக திகழும் கதையையும், காதாசிரியரையும் உதாசீனப்படுத்த வேண்டாம் என்பதை இந்த நாவலில் சற்று வித்தியாசமான கோணத்தில் சொல்ல முயன்றிருக்கிறேன். என் போன்ற பல எழுத்தாளர்களின் மனக்குமுறல்கூட இப்படித்தானிருக்கிறது.

    பரஸ்பரம் மதிக்கப்படும்போது பல நல்ல கருத்துக்கள் வர வாய்ப்பிருக்கிறது.

    அன்புடன்,

    மகரிஷி.

    1

    அந்த முதல் பார்வையிலே அவளிடத்தில் ஒரு காந்த ஈர்ப்பு இருந்தது.

    பத்து எக்ஸ்ட்ராக்களுக்கு நடுவே அவள் அழகாக இருந்தாள்.

    ஒரு கதாநாயகியாக உருவாகும் அழகு என்று சொல்ல முடியாது.

    என்றாலும் ஒரு அதீதி முகபாவம். காமிராமேனிடம் சொல்லி சில குளோஸ் அப்களை எடுக்கும்படி கூறினான் மகேஷ்.

    படித்தவள் என்று தெரிந்து கொண்டான். கோஷ்டி கானங்களில் அவள் குரல் எடுப்பாக இருந்ததால் அதில் அவளுக்கு முதலிடம் கிடைத்தது.

    நல்ல குரல் வளம். தமிழ் உச்சரிப்பில் அசாத்திய அழகு-இனிமை.

    அழகு இருந்ததால் சின்னச் சின்ன ரோல்களில் தலைகாட்ட வாய்ப்பு நிறைய வந்தன.

    ஒதுங்கி நிற்கும் சுபாவம், ரொம்பவும் பாதுகாப்பான பழக்க வழக்கங்கள். எப்பொழுதும் எல்லோரிடமும் அதிக கலகலப்பில்லாமலொரு பழக்கம். வேலை முடிந்த அடுத்த விநாடி கண்ணில் படாமல் காணாமற் போய்விடுகிற சுபாவம்.

    மகேஷ் தான் டைரக்ட் செய்யும் ஒரு படத்தில் அவளை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று விரும்பினான்.

    ஏற்கனவே பலமுறை அவளை அவன் பார்த்திருக்கிறான். பேசியிருக்கிறான். டைரக்டர் மகேஷ் அடிக்கடி தன்னுடன் பேச வருகிறார் அடிக்கடி பார்க்கிறார் என்பதே அவளுக்கு ஒருவித கூச்சத்தை உண்டாக்கியிருக்க வேண்டும். அவன் பார்க்கும்போது பெரும்பாலான நேரங்களில் தலையைக் குனிந்து கொண்டுவிடுவாள். அல்லது அவன் கண்ணில் படாதபடி செடிகளுக்கு அப்பால் போய் நின்று விடுவாள்.

    சினிமாவிலே நடிக்க வந்துட்டு இப்படி ஒதுங்கி, ஒதுங்கி நின்னா சரிப்பட்டு வராதும்மா. கொஞ்சம் தாராளமா எல்லோருடனும் சௌஜன்யமா பழக கத்துக்கணும்...

    ஒரு வெளிப்புறப் படப்பிடிப்பின் போது இடை வேளையில் இப்படி சொல்லிக் கொண்டே அவள் அருகில் வந்து உட்கார்ந்தான் மகேஷ். அப்பொழுது அவர்கள் படப்பிடிப்பு சென்னையை அடுத்து தாம்பரம் உட்பகுதியில் நீர்த்தேக்கமுள்ள ஒரு ஏரிக்கரையில் நடந்து கொண் டிருந்தது.

    தனியே ஏரிக்கு வரும் கதாநாயகியிடம் வில்லன் வம்பு செய்கிறான். கதாநாயகியை அவளுடைய கிராமத்துத் தோழிகள் வில்லனிடமிருந்து பாதுகாக்கிற மாதிரி காட்சி.

    இப்படிக் கேட்டுக் கொண்டே தனக்கு மிக அருகில் உரசினாற்போல உட்காரும் மகேஷை புன்னகையுடன் பார்த்துவிட்டு எழுந்து போக நினைத்தாள் திலகம். அவள் கையைப் பிடித்து இழுத்து அவளை உட்கார வைத்தான்.

    நீ நல்லா படிச்ச பொண்ணு ரொம்ப கூச்ச சுபாவ முள்ளவளா இருக்கே. இந்த வேலையை எப்படி தேர்ந்தெடுத்தே.

    வேற ஏதாவது டெக்னீஷியன்களுக்கு உதவியாளரா சேர்த்துவிடறதா எனக்குத் தெரிஞ்சவர் சொன்னார். அவரால அது முடியலேன்னு நினைக்கிறேன். இப்ப இப்படியே இரு. போகப் போக நிலைமையை அனுசரிச்சு ஏதாவது ஏற்பாடு செய்றேன் என்றார். கிடைத்த வாய்ப்பை நழுவவிட வேண்டாம் என்று இருக்கிறேன்.

    யார் உன்னை இத்துறைக்கு அறிமுகப்படுத்தியது

    ஸ்டில்ஸ் மணி.

    ஸ்டில்ஸ் மணியா! மணி என்னிடம் இதுபற்றி ஒண்ணுமே சொல்லலயே. என்னோட இன்னொரு யூனிட்டுக்கு அவர்தான் ஸ்டில்ஸ் கவனிக்கறார்.

    சொன்னார்.

    டெக்னீஷியனாஆகவேண்டுமென்று விரும்புகிறாயே, எப்படிப்பட்ட தொழில் நுட்பத்தில் சேர விரும்பறே...

    கேமரா எடிட்டிங்... இதுல வாய்ப்பு கிடைக்கலேன்னா இரவல் குரல் கொடுக்க விரும்பறேன்.

    "மற்ற இரண்டைவிட மூன்றாவது ரொம்பவும் நல்ல ஜாப். ரிஸ்கே இல்லாத ஜாப், நல்ல ரெமினரேஷன் கிடைக்கும். தொடர்ந்து வேலை கிடைக்கும். மற்றதை விட வாய்ஸ் டப்பிங்ல நீ கவனம் செலுத்தலாம்... நீ என்ன படிச்சிருக்கே.

    பி. ஏ. லிட்ரேச்சர்.

    அப்பா, அம்மா.

    அப்பா இருக்காங்க. ரெண்டு தம்பிங்க இருக்காங்க. இரு தங்கைகள் இருக்காங்க. அவங்களுக்கு கல்யாணமாகி விட்டது. அப்பா எலக்ட்ரிசிடி போர்ட்ல அஸிஸ்டெண்டா இருந்து அஞ்சு வருஷத்துக்கு முன்னால ரிடையர்ட் ஆகி விட்டார். பல இடங்களில் வேலைக்கு முயற்சி பண்ணி பார்த்தேன் ஒண்ணும் சரியா கிடைக்கல...

    நடிக்கறது ஒண்ணும் தப்பில்லே. இதுக்கும் மற்றதுக்கும் உள்ள வித்தியாசம் இது கிளாமர் வேர்ல்ட்… தொழில் ரீதியான அங்கீகாரமில்லாத ஒரு பீல்ட்...

    ஒரு மணி நேர சாப்பாட்டு இடைவேளை முடிந்து விடவே மீண்டும் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாயின.

    திலகத்துடன் பேசிக் கொண்டிருந்த டைரக்டரிடம் ஷாட் பற்றியும், நடிப்புப் பற்றியும் விவரம் தெரிந்து கொள்ள அதில் நடிக்கும் முன்னணி கதாநாயகியும் இன்றைய நம்பர் ஒன் என்று கூறப்படும் கௌதமி வந்தார்.

    ரொம்பவும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி போல ஒன்று நடந்தது. திலகத்தைப் பொருத்தவரையில் அவள் அந்த யூனிட்டில் ஒரு எக்ஸ்ட்ரா மட்டுமே. ஐந்தடி ஆறு அங்குல உயரம், பளிச்சென்ற சிவப்பு, நீளமான தலைமுடி, என்று சொல்ல முடியாது என்றாலும் நல்ல அடர்த்தி.

    Enjoying the preview?
    Page 1 of 1