Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Andha Poonai
Andha Poonai
Andha Poonai
Ebook75 pages28 minutes

Andha Poonai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803099
Andha Poonai

Read more from Maharishi

Related to Andha Poonai

Related ebooks

Reviews for Andha Poonai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Andha Poonai - Maharishi

    http://www.pustaka.co.in

    அந்தப் பூனை

    Andha Poonai

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அந்த தேசியமய வங்கியின் அன்றைய அலுவல்கள் தொடங்க இன்னும் சில நிமிஷங்களே இருந்தன.

    ஜன சந்தடியும், வியாபார நிறுவனங்களும் மிக அருகில் ரயில்வே நிலையமும் உள்ள அப்பகுதியில் அதுதான் மிக உயர்ந்த நான்கு மாடிக்கட்டிடம்.

    இரண்டாவது தளத்தில் வங்கி இருந்தது.

    இரண்டாவது தளத்தில் முழுமையாக வியாபித்திருந்தது அது. நகரின் பல கிளைகள் கொண்ட அந்த வங்கியின் தலைமைக் காரியாலயம் கூட அதுதான்.

    மற்றவற்றை ஒப்பிடும்போது அது ஒரு கரன்ஸி கடல்.

    நிறைய ஊழியர்கள், தலைமை அதிகாரி. கணக்கு அதிகாரி.. இப்படி ரகவாரியாக உண்டு.

    பாதுகாப்பு பெட்டக வசதி உண்டு என்கிற வாசகம் தேசியமொழியிலும், ஆங்கிலத்திலும், பிராந்திய மொழியிலும் எழுதப்பட்டு வெளியே பளிச்சென தெரியும்படி இருந்தது.

    மாடிப்படி தவிர லிஃப்ட் வசதியுள்ள பணக்கார வங்கி.

    அந்த ராட்சஷ கட்டிடம் அந்த வங்கியின் பெயரிலேயே இருந்தது.

    பெயர் சௌகரியத்திற்காகவும், குறிப்பிட்ட ஒரு வங்கி என்று கூறாமல் தப்பிக்கவுமாக நாம் அதற்கோர் பெயர் வைக்கவேண்டுமே.

    எனவே

    அதன்பெயர் தேசிய வங்கி என்று சொல்லிக் கொள்ளலாம்.

    காலை ஒன்பது மணி.

    வங்கியின் முகப்பில் ஊழியர்களின் கூட்டம் மணிக்கதவின்தாள் திறப்பிற்காக காத்திருந்தார்கள்.

    அரட்டைகள் எரியும் அரசியல் உள்ளூர் பிரச்னைகள் கிசுகிசுக்கள் உதட்டோடு உதடு வைத்து உறிஞ்சி எடுக்கிற முத்தக்காட்சிகளை எடுக்க ஆரம்பித்துவிட்ட சினிமா செய்திகள். வெறும் 'திகில்' நாவல்களில் திசை திரும்பி திரும்பி வர மறுக்கும் தமிழ்நாவல்போக்கு...

    இன்றைய வாசகர்களின் மன வக்கிரம்.

    இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு நடுவே நடைபெறும் கல்கத்தா கிரிக்கெட்...

    மணியோசை கேட்டது.

    வங்கியின் கதவு திறக்கப்பட்டது. எல்லா வகையான பேச்சுகளும், மூடிவைத்த புத்தகமாக வெளியே தேங்கிவிட ஊழியர்கள் பேச்சுக்களை சிறிது குறைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள்.

    வாடிக்கையாளர்கள் தாராளமாகப் புழங்கும்படி உள்ள மிகப்பெரிய நடைபாதை வராண்டாவை சுத்தம் செய்துவிட்டு பணிப்பெண் வெளியேறிக் கொண்டிருந்தாள்.

    வாடிக்கையாளர்கள் உட்காரும் இடமும் அதுதான் என்பதால் சுவரோரத்தில் வரிசையாக நைலான் நாற்காலிகள். ஒருவர் ஒருவராக அமரக்கூடிய நிறைய மர சோபாக்கள்?

    எதிரே வரிசையாக கவுண்ட்டர்கள் துவாரத்தின் வழியே தெரியும் ஊழியர்கள் முகம். அருகில் அவர்கள் பணிக்கும் பகுதிகளின் பெயர்.

    சேவிங்ஸ், கரண்ட்அக்கவுண்ட், பில்ஸ், ஃபிக்ஸட் டெபாசிட், டிராஃப்ட்...

    வங்கி திறந்தவுடன் சில நிமிஷங்கள் பிரைவேட் டாக். மானேஜர் உள்ளே நுழைந்தவுடன் அதுவும் நின்றுவிட்டது.

    அவரவர் பணிகளை கவனிக்க கவுண்ட்டர்களில் பிரசன்னமாகிவிட்டார்கள்.

    முக்கியமான பகுதியை கவனிக்கும் கோபியின் இடம் காலியாக இருந்தது.

    கோபி வங்கியின் தபால் அலுவல்களை கவனிக்கிறவன் அவனுக்குத் தெரியாமல் அந்த வங்கியின் செய்திகள் ஏதும் வெளியேறவும் உள்ளே வரவும் முடியாது.

    தபால்களை கரண்ட் செய்வது, சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்புவது. வெளியேறும் தபால்களை உரியவர்களுக்கு அனுப்புவது. என்று ஆரம்பித்து வங்கி நிர்வாக சம்பந்தப்பட்ட தஸ்தாவேஜுகள் அனைத்தும் அவன் பொறுப்பு.

    எல்லாப் பகுதிகளிலும் அவன் பயிற்சி முடிந்து இப்பொழுது சில ஆண்டுகளாக அந்த நிர்வாகப் பகுதியின் முக்கியப் பொறுப்பிலிருக்கிறான்.

    அவன் எல்லோருக்கும் முன்பாகவே வந்து தபால்களை உடைத்து சீலிட்டு எல்லா பகுதி தபால்களையும் பிரித்து அடுக்கி மானேஜரின் கையெழுத்துக்கு வைத்து பின் அவற்றை கீழ்நிலை ஊழியர்கள் மூலம் அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பிவிடுவான். எனவே வங்கி திறந்தவுடன் எல்லோரும் அவன் மேஜையைச் சூழ்ந்து கொண்டு தங்கள் பகுதிக்கான முக்கிய

    Enjoying the preview?
    Page 1 of 1